பலஸ்தீன விவகாரம்: நவ.11 இல் அவசரமாக கூடுகிறது அரபு லீக்

0 160

அரபு நாட்டுத் தலை­வர்கள் உச்­சி­மா­நாட்டின் அவ­சர அமர்­வொன்று, நவம்பர் 11 ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. அரபு லீக்கின் இந்த 32 ஆவது அமர்வு சவூதி அரே­பி­யாவின் தலை­மை­யி­லேயே நடை­பெ­ற­வுள்­ளது.

காசா பகு­தியில் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு பற்றி கலந்­து­ரை­யாடும் நோக்­கோடு உச்­சி­மா­நாட்டை நடாத்­து­மாறு பலஸ்தீன் மற்றும் சவூதி அரே­பி­யாவில் இருந்து திங்கட் கிழ­மை­யன்று தலைமைச் செய­லகம் அதி­கா­ரபூர்வ கோரிக்­கையைப் பெற்­ற­தாக அரபு லீக்கின் உதவிச் செய­லாளர் தூதர் ஹொசாம் சகி தெரி­வித்தார்.

கெய்ரோ நகரில் கடந்த ஒக்­டோபர் மாதம் 22 ஆம் திகதி அரபு லீக் உச்சி மாநாடு நடை­பெற்­றதை தொடர்ந்து 20 நாட்­க­ளுக்குப் பிறகு அரபு லீக் நாடுகள் மீண்டும் அவ­ச­ரமாக கூடு­கி­றது.

கெய்­ரோவில் நடை­பெற்ற இவ்­வுச்சி மாநாட்டின் போது இஸ்­ரேல்-­ ஹமாஸ் மோதல் நில­வரம் பர­ப­ரப்­பான விவா­த­மாக இருந்­தது. ஈராக், சைப்ரஸ், ஜோர்டான், சவூதி அரே­பியா, பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இம்­மா­நாட்டில் பங்­கேற்­றன. ஜேர்­மனி மற்றும் ஜப்­பானின் பிர­தி­நி­தி­க­ளுடன் ஐ.நா பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடு­களின் பலஸ்­தீ­னி­யர்­களின் பிர­தி­நி­தி­களும் மாநாட்டில் கலந்து கொண்­டனர்.

அரபு லீக் அவ­சர உச்சி மாநாடு நடை­பெற இருப்­பதன் கார­ண­மாக ரியாத் நகரைச் சூழ பாது­காப்பை பலப்­ப­டுத்­தப்­படும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மற்றும் காசா பகுதியில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கலந்துரையாட வெளியுறவு அமைச்சர்களும் கூடவுள்ளனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.