ஹிஜாஸுக்கு எதிராக பொய் சாட்சியம் கூறினேன்

‍அனைத்தையும் மன்றில் போட்டுடைத்த  அரச சாட்சியாளர் பெளஸான்

0 131

எம்.எப்.அய்னா

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி  ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான  2 ஆவது சாட்­சி­யாளர், புத்­தளம், அல் சுஹை­ரியா மத­ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதி­மன்றில் வழங்­கிய சாட்­சி­யத்தில் குறிப்­பிட்ட விட­யங்கள், பொய்­யா­னது எனவும் அது எதுவும்  நேர­டி­யாக  தன் கண்­களால் காணா­த­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்­டது எனவும் ஒப்­புக்­கொண்டார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை (19) புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்த வழக்கு விசா­ர­ணை­களின் இடையே, இந்த விடயம் பிர­தி­வாதி தரப்பின் சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ளவின் குறுக்கு விசா­ர­ணையின் போது மன்றில்   வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தின தொடர்  தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது  சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு  நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில்   விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது, பிணையில் இருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ்  2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரசா பாட­சாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இந் நிலையில் கடந்த மார்ச்  24, 27, ஜூலை 14ஆம் திக­தி­களில் நடந்த விசா­ர­ணை­களின் போது 2 ஆம் சாட்­சி­யா­ள­ராக அல் சுஹை­ரியா மத­ர­ஸாவின்  முன்னாள் மாண­வ­னான, 19 வய­து­டைய மொஹம்மட் பெளஸான்  சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்த்தார்.

அவ­ரது சாட்­சி­யத்தை அரசின் பிரதி சொல்­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்த‌ நிலையில் முதல் பிர­தி­வாதி சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்­ஸ­வினால் குறுக்கு விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலை­யிலேயே  கடந்த  ஒக்­டோபர் 19 ஆம் திகதி  2 ஆவது பிர­தி­வாதி சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள குறுக்கு விசா­ர­ணை­களை  தொடர்ந்தார்.

கடந்த தவ­ணையின் போது, பாத்­திமா ஜிப்­ரியா, சாரா ஜெஸ்மின் என இரு பெண்கள் மத­ரஸா பாட­சா­லைக்கு வந்த்து போத­னை­களை செய்­த­தாக கூறி­னீர்கள் அல்­லவா? அந்த இரு பெண்கள் மட்­டுமா போதனை செய்ய மத­ர­ஸா­வுக்கு வந்­தார்கள் என சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள  முதல் கேள்­வியை தொடுத்தார்.

அதற்கு பதி­ல­ளித்த சாட்­சி­யாளர், அன்று நான் சொன்­னது பொய். நான் அவர்­களைக் காண­வில்லை  என தெரி­வித்தார்.

ஜிப்­ரியா, சாரா ஜெஸ்மின் ஆகியோர் அங்கு வந்து சில விளை­யாட்­டுக்­களை  சொல்­லிக்­கொ­டுத்­த­தாக கூறி­னீர்கள் அல்­லவா? என மீண்டும் கேட்ட போது, அது உண்மை இல்லை. நான் பொய் கூறினேன் என சாட்­சி­யாளர் மீளவும் பதி­ல­ளித்தார்.

அதன்­பின்னர் பிர­தான சாட்­சி­யத்தில் குறித்த சாட்­சி­யாளர் குறிப்­பிட்ட, அல் சுஹை­ரியா மத்­ர­சா­வுக்கு சஹ்ரான் ஹஸீம் வந்­தமை,  மத்­ர­ஸாவில் புரொ­ஜெக்டர் உத­வி­யுடன் காட்­சிகள்  காண்­பிக்­கப்­பட்­டமை, சஹ்­ரானின் சகோ­தரர் என கரு­தப்­ப‌டும் ரில்வான் அல்­லது ரிஸ்வான் எனும் நபர் வருகை தந்­தமை போன்ற அனைத்து விட­யங்­களும் பொய்­யா­னவை எனவும் தான்  முதல் சாட்­சி­யாளர் மலிக்கின் கூற்­றுப்­படி சில விட­யங்­களை அவ்­வாறு கூறி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

அத்­துடன் சி.ஐ.டி.க்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் கூட தான் பொய் கூறி­ய­தா­கவும், சி.ஐ.டி. அதி­கா­ரிகள் தன்னை கூண்டில் அடைப்­ப­தாக அச்­சு­றுத்­தி­யதால் அதனை தெரி­வித்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

சி.ஐ.டி. விசா­ர­ணையின் போது, சில புகைப்­ப­டங்­களை அவர்கள் காட்­டிய போது, அதில் இருந்­த­வர்­களை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும் அவர்­களின் பெயர்­களை சி.ஐ.டி. அதி­கா­ரி­களே  சொல்லித் தந்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து கூறினார்.

அத்­துடன் கடந்த 2020 மே 12 ஆம் திகதி கோட்டை நீதி­வா­னுக்கு இர­க­சிய வாக்கு மூலம் அளிக்க வேண்டும் என தான் ஒரு போதும்  கோர­வில்லை எனவும் அதற்­கான தேவை தனக்கோ தனது குடும்­பத்­தா­ருக்கோ இருக்­க­வில்லை எனவும்  அது சி.ஐ.டி.யின் தேவைக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்த சாட்­சி­யாளர்,  சி.ஐ.டி.யினர் தனக்­காக  பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வரை ஏற்­பாடு செய்­த­தா­கவும் கூறினார்.

இந்த நிலையில் நீதி­வா­னிடம் வழங்­கிய இர­க­சிய வாக்கு மூலத்தில், சஹ்ரான் மத்­ர­ஸா­வுக்கு வந்­த­தா­கவோ, அவர் கிறிஸ்­த­வர்கள் எமது பள்­ளி­களை அழிக்­கின்­றார்கள் நாம் அவர்­க­ளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று போதனை செய்­த­தா­கவோ, குண்டு வெடிப்பு சார் விடயங்களை ரில்வான் அல்லது ரிஸ்வான்  வருகை தந்து போதனை செய்ததாகவோ, தெரிவிக்காமைக்கான காரணம் அவ்வாறு மத்ரஸாவில் நடக்காமையா? என சட்டத்தரணி சமிந்த அத்துகோரள கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சாட்சியாளர் ஆம், அப்ப‌டி ஒன்றும் நடக்கவில்லை. அதனாலேயே நான் அவற்றை நீதிவானிடம் கூறவில்லை என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.