பலஸ்தீனை இலக்கு வைக்கும் மேற்குலக ஊடகங்களின் கூட்டுப் பிரச்சாரம்.

வலுக்கும் மாற்று ஊடகங்களின் குரல்.

0 165

கலாநிதி. எம்.சீ. ரஸ்மின்

ஒக்­டோபர் 07ஆம் திகதி ஹமாஸின் தாக்­கு­தலைத் தொடர்ந்து வர­லாற்று ரீதி­யாக இஸ்­ரேலில் இன­வெ­றிக்கு முகங்­கொ­டுத்து வந்த பலஸ்­தீன மக்கள் இப்­போது புதிய ஒரு சர்­வ­தேச சவாலை சந்­தித்து வரு­கின்­றனர். அதுதான், ஐரோப்­பிய ஊட­கங்­களும் அர­சாங்­கங்­களும் இஸ்­ரேலின் மிலேச்­ச­னத்தை நியா­யப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்ளும் பக்­கச்­சார்­பான அறிக்­கை­யிடல், இணை­ய­வழிப் பிர­சாரம் (Cyber Propaganda) என்­ப­ன­வாகும்.

தவ­றாக செய்தி கட்­ட­மைத்தல் (Framing), போலிச் செய்­திகள், ஊடகப் பக்­கச்­சார்பு, உண்­மையை திரி­பு­ப­டுத்திக் காட்­டுதல், உண்­மையை திசை­தி­ருப்­புதல் என்­பன பாரி­யள்வில் வெளி­வ­ரு­கின்­றன. ஒரு­புறம் அமெ­ரிக்­காவில் மேற்­கி­ளம்பும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ர­வான யூதர்­களின் குரல், மேற்­கு­லகில் சமூக ஊட­கங்­களில் வலம்­வரும் பலஸ்தீன் மைய ஊடக உரை­யா­டல்­களும் குறிப்­பி­டத்­தக்க அவ­தா­னத்தைப் பெற்று வரு­கின்­றன. எனினும், ஹமாஸின் தாக்­கு­தலை, அதனை உதி­ரி­யான ஒரு சம்­ப­வ­மாகச் சித்­த­ரித்து உண்­மையை திரி­பு­ப­டுத்திக் காட்டும் மேற்­கு­லக ஊட­கங்­களின் ஆதிக்­கத்தை அவற்றால் இது­வரை இல­குவில் ஈடு­கொ­டுக்க முடி­ய­வில்லை.

இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் வெளி­வரும் நூற்­றுக்­க­ணக்­கான சமூக ஊடக நேர்­கா­ணல்கள், அறிக்­கைகள் பெரும்­பாலும் தமிழ் பேசு­கின்ற வாச­கர்­களை உணர்ச்சி வசப்­ப­டுத்தும் போக்­கினை கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், மேற்­கு­லகின் ஊடக ஆதி­பத்­தியம் இவ்­வ­ளவு உணர்ச்சிவசப்­பட்­ட­தாக இல்லை. ஒரு குறிப்­பிட்ட மொழிச் சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­து­வதை விட இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வான பாரிய ராஜ­தந்­திர அலையை உரு­வாக்­கு­வதே இவ­ற்றின் இலக்­காகும்.
எனவே, மேற்­கு­லக பிர­தான நிலை ஊட­கங்­க­ளி­னதும் இணை­ய­வழி ஊட­கங்­க­ளி­னதும் வியா­ப­கத்தை விளங்கிக் கொள்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். 2020ஆம் ஆண்டு வெளி­யான சர்­வ­தேச ஒழுங்­க­மைக்­கப்­பட்ட சமூக ஊட­கங்­களின் கையா­ளுதல் (Global Inventry of Organized Social Media Manipulation) எனும் அறிக்கை பல விட­யங்­களை வெளிச்­சத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளது. இந்த அறிக்­கையை ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கமும் ஒக்ஸ்போர்ட் இணை­யத்­தள நிறு­வ­னமும் வெளி­யிட்­டுள்­ளன. இதன்­படி பல நாடு­களில் இணை­யத்­தள இரா­ணுவ முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. 81 நாடு­களில் அர­சி­யலை மைய­மாகக் கொண்ட பிர­சா­ரங்கள், போலிச் செய்­தி­களைப் பரப்­பு­வ­தற்கு சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றமை தெரி­ய­வந்­துள்­ளது. சமூக வலைத்­தள நிறு­வ­னங்கள் இது தொடர்பில் பல அறி­வு­றுத்­தல்­களை வெளி­யிட்­டுள்­ளன. சுமார் மூன்று இலட்­சத்­துக்கும் அதி­க­மான கணக்­கு­கள் முடக்­கப்பட்டுள்ளன. சுமார் பத்து மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான நிதி அர­சியல் விளம்­ப­ரங்கள் மற்றும் இணை­ய­வழி இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு செல­வி­டப்­பட்டு வரு­வதை வெளிக்­காட்­டி­யுள்­ளன. அதே­வேளை, சுமார் 48 நாடு­களில் இணை­ய­வழி பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான தனியார் நிறு­வ­னங்கள் இயங்கி வரு­கின்­ற­மையும் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. 2018 ஆம் ஆண்­டி­லி­ருந்து சுமார் 65 இற்கும் அதி­க­மான பாரிய தனியார் நிறு­வ­னங்கள் இணை­ய­வழி பிர­சா­ரங்­களை ஒரு வர்த்­தக சேவை­யா­கவே வழங்கி வரு­கின்­றன. இவற்­றுக்கு தகு­தி­யான, இணை­ய­வழி பிர­சார உத்­தி­களை கற்­றுத்­தே­றிய பிர­சா­ரக்­கா­ரர்­களை சேர்ப்­ப­தற்கு மாத்­திரம் 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து சுமார் 10 மில்­லியன் டொலர்கள் செல­வி­டப்­பட்­டுள்­ளன. எனவே இது உலகச் செல்­நெ­றி­யாக இருக்­கின்ற போது இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் எத்­த­கைய பிரச்­சார உத்­தி­களை மேற்­கு­லகை இலக்கு வைத்து மேற்­கொள்ள முடியும் என்­பதை உணர்ந்து கொள்­ளலாம்.

இஸ்­ரே­லிய அர­சாங்கம் ஹமாஸின் பெயரில் பல போலிப் பிர­சா­ரங்­களை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கட்­ட­மைத்து வரு­கின்­றது. த கார்­டியன் ஒரு செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தது. அதில் ஹமாஸ் இயக்­கத்­தினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 21 வயது பிரான்ஸ் – இஸ்­ரே­லிய யுவ­தியின் தாய் செம் (Schem) தனது மகள் கடத்தி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தனது மகளின் உயி­ருக்கு ஆபத்து நடக்­கப்­போ­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பிரான்ஸ் ஜனா­தி­பதி இமா­னுவெல் மெக்­ரோனும் இதனை கண்­டித்தார். இதனைத் தொடர்ந்து அமெ­ரிக்­காவும் பண­யக்­கை­தி­களை விடு­தலை செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்­தது. பிரான்ஸ் வெளி­நாட்­ட­மைச்­சரும் செம் எனும் தாயாரை சந்­தித்து ஆறுதல் கூறினார்.

ஹமாஸ் சுமார் 1200க்கும் அதி­க­மா­ன­வர்­களை கொலை செய்து சுமார் 200 பேரை கைதி­க­ளாக தடுத்து வைத்­த­மையைத் தொடர்ந்து இத்­த­கைய பல செய்­திகள் வெளி­வந்­தன. அத்­தோடு, இஸ்­ரே­லிய இரா­ணுவம் காஸாவின் இயக்­கத்தை முடக்கி, வான்­வெளி தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. காஸாவில் உள்ள சுமார் 5800 பேரின் உயிரைப் பறித்­தது. இரண்டு மில்­லியன் பலஸ்­தீனர்கள் காஸாவில் செல்ல இட­மின்றி, உண்ண உண­வின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இப்­போது மேற்­கு­லகத் தலை­வர்கள் படிப்­ப­டி­யாக யுத்த நிறுத்தம் ஒன்­றுக்­கான அழைப்பை விடுக்­கின்­றனர்.

இதற்­கி­டையில், எக்ஸ் தளத்தின் தர­வு­களின் படி இஸ்­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சு சுமார் 30 இணை­ய­வழி விளம்­ப­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளது. இவற்றை சுமார் நான்கு மில்­லியன் மக்கள் பார்­வை­யிட்­டுள்­ளனர். தர­வு­க­ளின்­படி இவை 25 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களை இலக்கு வைத்து வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அத்­தோடு, பிரசல்ஸ், பரிஸ், மியுனிக், நெதர்­லாந்தின் ஹேக் போன்ற நக­ரங்­களை இலக்­கு­வைத்து வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இந்த விளம்­ப­ரங்கள் யாவும் ஹமாஸை ஒரு மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வாத இயக்­க­மாகக் காட்­டி­யுள்­ளன. ஹமாஸை ஐ.எஸ். இயக்­கத்­துடன் ஒப்­பிட்டுக் காட்­டி­யுள்­ளன. ஹமாஸின் தாக்­கு­தலின் பரி­மா­ணத்தை, வகையை, கொடூ­ரத்தைக் காண்பிக்க முயன்றுள்ளன. எக்ஸ் தளத்தில் வெளி­யான மற்­று­மொரு வீடியோ இவ்­விரு இயங்­கங்­க­ளையும் பொது­மைப்­ப­டுத்திக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. ‘உலகம் ஹமாஸை அழிக்கும்’ என்­ப­தாக வீடியோ முடி­வ­டை­கி­றது.

யூடியுப் தளத்தில் இஸ்­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சு 75 கட்­டணம் செலுத்­தப்­பட்ட விளம்­பர வீடி­யோக்­களை வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வீ­டி­யோக்கள் பிரான்ஸ், ஜேர்­மனி, அமெ­ரிக்கா, ஐக்­கிய இராச்­சியம் ஆகிய நாடு­களை இலக்கு வைத்து வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இவற்றை கூகுளின் வெளிப்­படை அறிக்­கை­யூ­டா­கவும் அறிந்­து­கொள்ள முடியும். இதி­லொரு வீடியோ ‘பாபே­ரி­யர்கள் இதன் பிர­தி­களைக் காண­மாட்­டார்கள், ஆனால் அவர்­களின் பெற்­றோர்கள் கண்­டு­கொள்­வார்கள்’ எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பல வீடி­யோக்­களில் சிறு­வர்­களின், பெண்­களின், யுவ­தி­களின் பரி­த­விப்­புகள் காட்­டப்­பட்­டுள்­ளன..

இத்­த­கைய வீடி­யோக்கள் யாவும் மேற்­கு­ல­கத்தை இலக்கு வைத்து, இஸ்ரேல் தனது யுத்­தத்­தையும் மிலேச்­சத்­த­னத்­தையும் தொடர்­வ­தற்­கான சர்­வ­தேச ஆத­ரவை திரட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. இவ்­வீ­டி­யோக்­களை மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் பார்­வை­யிட்­டுள்­ளனர். இவற்றில் இஸ்ரேல் தனது பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது என்­ப­தையும், தன் தேசத்தின் பாதிக்­கப்­பட்ட மன­நி­லை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­வேளை, இத்­த­கைய கட்­டணம் செலுத்­தப்­பட்ட விளம்­ப­ரங்கள் சமூக வலைத்­தள நிறு­வ­னங்­க­ளுக்கு சிக்­க­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு கூகுள் நிறு­வனம் 30 கட்­டணம் செலுத்­தப்­பட்ட விளம்­ப­ரங்­களை நீக்­கி­யுள்­ளது. இதில் பகடி என்­ன­வென்றால், இவ்­வாறு நீக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட வீடி­யோக்கள் பல இஸ்­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சின் யூடியுப் தளத்தில் சில எச்­ச­ரிக்­கை­க­ளுடன் இன்றும் பார்­வைக்­காக உள்­ளன. இன்றும் எக்ஸ் தளம் இவ்­வீ­டி­யோக்­களை நீக்­கி­ய­தாகத் தெரி­ய­வில்லை. இவ்­வா­றான கட்­டணம் செலுத்­தப்பட்ட விளம்­பர வீடி­யோக்கள் பேஸ்புக், இன்ஸ்­ட­கிராம், லிங்க்டின் மற்றும் டிக்டொக்கில் இடம்­பெ­ற­வில்லை எனத் தெரி­கின்­றது. எனினும், அவையும் போலிச் செய்­தி­களின் விளை­க­ள­மா­கவே உள்­ளன.

இஸ்ரேல் சர்­வ­தேச ஆத­ரவை திரட்டி, வெளி­நாட்டு ஊட­கங்­களில் தன்­மீ­தான கதை­யா­டல்­களை தனக்குச் சார்­பாக திசை திருப்­பு­வ­தற்­கான உத்­தி­யாக இவற்றைச் செய்து வரு­கின்­றது.

இதற்­கி­டையில் மேற்­கு­லகின் ஊடகக் கதை சொல்லல் முறை ஒரு­த­லைப்­பட்­ச­மான, வர­லாற்றை இருட்­ட­டிப்புச் செய்­வ­தாக, ஹமாஸின் தாக்­கு­தலை முன்­னி­றுத்­திய இஸ்­ரே­லிய மக்­களின் பாதிப்­பு­களை மாத்­திரம் மேலோங்கிக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளன. இந்த நிலைப்­பாடு எதிர்ப்­புக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றது. சர்­வ­தேச மாற்று ஊட­கங்கள் இவற்றை நிரா­க­ரித்து வரு­கின்­றன. மேற்­கு­லகின் குறிப்­பாக பெரும்­ப­ாலான பிரிட்டன் ஊட­கங்­களின் செய்திக் கதைகள் யாவும் இஸ்­ரேலின் பக்­கத்தை மாத்­திரம் காட்­டு­வ­தாக உள்­ளன. இஸ்­ரே­லி­யர்­களின் உயிர்கள் பலஸ்­தீ­னர்­களின் உயிர்­களை விட அந்­தஸ்தில் கூடி­ய­தாகக் காட்­டு­கின்­றன.

பிர­பல சீஎன்என் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் பரீட் சக­ரிய்­யாவின் நேர்­கா­ணல்கள் சில­வற்றைப் பார்க்கக் கிடைத்­தது. தன்னை ஒரு நடு­நி­லை­ பேணும் நிகழ்ச்சித் தொகுப்­பா­ள­ராகக் காட்டும் அவர் பலஸ்­தீன மக்­களின் வர­லாற்றுத் துயரை தொட்டும் தொடா­மலும் பேசு­வ­தையும் ஹமாஸின் தாக்­கு­தலை முன்­னி­றுத்தி அச்­சம்­ப­வமே இன்­றைய காஸா மக்­களின் நிலைக்குக் காரணம் எனவும் குறிப்­பிட்டு வரு­கின்றார். இஸ்­ரே­லிய மக்­களின் – குழந்­தை­களின் உயிரை மிலேச்­சத்­த­ன­மாக கொன்று தீர்த்­ததை பாபே­ரி­யர்கள் என்­றுதான் கரு­த­மு­டியும் என்­கின்றார்.

சிறு­வர்­களை பழி தீர்ப்­பதை யாரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அமெ­ரிக்க அதி­பரும் ‘நான் ஒரு­போதும் தலை­வெட்­டப்­பட்ட சிறு­வர்­களின் புகைப்­ப­டங்­களை பார்­வை­யி­டுவேன் என்று நம்­ப­வில்லை’ என்றார். பர­வ­லாக வெளி­யி­டப்­பட்ட இணை­ய­வழி புகைப்­ப­டங்­களின் பிர­தி­ப­லிப்­பாக இது அமை­கின்­றது. எனினும், இது­வரை எந்­த­வொரு தரவுச் சரி­பார்ப்பு நிறு­வ­னமும் (Fact – Checking) இவ்­வீ­டி­யோக்­களின் உண்மைத் தன்மை பற்றி உறு­திப்­ப­டுத்­த­வில்லை. குறிப்­பாக இவை ஹமாஸின் ஆரம்பத் தாக்­குதல் காட்­சிகள் என்­பது இது­வரை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை. ஜேர்­மனி அர­சாங்­கத்தின் ஆத­ரவில் இடம்­பெறும் டிடப்ளிவ் (Deutsche Welle) ஒக்­டோபர் 16ஆம் திகதி வெளி­யிட்ட அறிக்­கையில் ‘இஸ்­ரேலில் குழந்­தைகளை ஹமாஸ் கொன்றதாக வெளி­வரும் செய்­திகள் பல போலி­யா­னவை, சில உண்­மை­யா­னவை’ எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்­கொண்­ட­தாக வெளி­யி­டப்­பட்ட தாக்­குதல் வீடியோக் காட்­சிகள் பல போலி­யா­னவை. இவற்றில் சில 2013ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட Arma 3 எனப்­ப­டு­கின்ற கணணி விளை­யாட்டின் பாகங்­க­ளாகும். இத்­த­கைய பெரும்­பா­லான போலி வீடி­யோக்­கள் எக்ஸ் தளத்­தி­லேயே வெளி­வந்­துள்­ளன. இவற்றில் பல­வற்றை மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் ஏற்­க­னவே பார்­வை­யிட்­டுள்­ளனர். ஆரம்ப தாக்­கு­தல்­களின் போது ஹமாஸ் இயக்­கத்­தினர் பரஸூட் வழி­யாக இஸ்­ரே­லுக்குள் பிர­வே­சிப்­ப­தாக வெளி­யான பல வீடி­யோக்கள் தென்­கொ­ரிய பரஸூட் விபத்­து­களின் போது எடுக்­கப்­பட்­டவை என அறி­யப்­பட்­டுள்­ளன.

துருக்கி ஜனா­தி­பதி எர்­துகான் காஸாவில் இடம்­பெறும் மிரு­கத்­த­ன­மான தாக்­கு­தலை சகல தரப்­பினரும் நிறுத்த வேண்டும். அவ்­வாறு நிறுத்­தா­விட்டால் நாங்கள் அதனை நிறுத்த வேண்­டி­வரும் என்று எக்ஸ் தளத்தில் பதி­விட்­ட­தாக செய்தி வெளி­யா­னது. ஆனால், இதில் வரும் ‘அவ்­வாறு நிறுத்­தா­விட்டால் நாங்கள் அதனை நிறுத்­த­வேண்டி வரும்’ என்­பது திரிபுபடுத்­தப்­பட்­ட­தாகும். ரஸ்ய ஜனா­தி­பதி புட்டின் வரப் போகிறார். கிளம்­பி­விட்டார். ஹமா­ஸையும் காஸா மக்­க­ளையும் ஆத­ரித்து இஸ்­ரே­லி­யர்­களை எச்­ச­ரிக்­கின்றார் என்­ப­தாக வந்த வீடி­யோவும் இத்­த­கைய போலி­யா­ன­தென டி டப்ளியூ செய்தி சேவை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இனி மீண்டும் மேற்­கு­லகின் பிர­தான நிலை ஊட­கங்­களின் பக்­கச்­சார்ப்பு நிலை­பற்றி நோக்­கலாம். கடந்த 10 தினங்­க­ளாக உக்ரேன் மீது ரஷ்யா தொடுக்கும் யுத்­தத்தை சர்­வ­தேசப் போர்க்­குற்றம் எனக் குறிப்­பிடும் பெரும்­பா­லான மேற்கு ஊட­கங்கள் மிலேச்­சத்­த­ன­மாக இஸ்ரேல் நடத்தும் தாக்­கு­தலை அவ்­வாறு அதே கண்­ணோட்­டத்தில் நோக்­க­வில்லை. மாறாக, அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் தலை­வர்கள் குறிப்­பிட்­டது போல சுய பாது­காப்பு நட­வ­டிக்­கை­யா­கவே காட்­டு­கின்­றனர். சில மேற்கு ஊட­கங்கள் சுமார் 70 ஆயிரம் போர்க்­குற்­றங்­களை ரஷ்யா புரிந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டனர். மனித உரி­மை­களை கணித்து எழு­திய பெரும்­பா­லான அத்­த­கைய ஊட­கங்கள் இஸ்­ரேலின் தாக்­கு­தலை பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான தாக்­கு­த­லாக காட்­டி­வ­ரு­கின்­றன. ஹமாஸின் தாக்­கு­த­லுக்கு முன்­பாக இஸ்ரேல் 200 பலஸ்­தீ­னர்­களைக் கொலை செய்­தது. பெரும்­பா­லான மேற்கு ஊட­கங்கள் இதனைக் கண்டு கொள்­ள­வில்லை. அச்­சம்­பவம் சர்­வ­தேச செய்­தி­களில் முக்­கியம் பெற­வில்லை.

காஸாவின் இரண்டு மில்­லியன் மக்கள் மீது இஸ்ரேல் மேற்­கொண்டு வரும் இன­ஒ­ழிப்பு யுத்­தத்தில் இஸ்­ரே­லுக்கு உள்ள பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலை­பற்றி அனே­க­மான மேற்­கு­லக ஊட­கங்கள் கவனம் செலுத்­த­வில்லை. இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு படை­யி­னரில் பூரண பாது­காப்பில் இருக்கும் இஸ்­ரே­லிய மக்கள் அனு­ப­விக்­கின்ற அடிப்­படை உரி­மை மீறல்கள் மற்றும் கடந்த 7 தசாப்­தங்­க­ளாக அனு­ப­விக்­கின்ற பலஸ்­தீ­னி­யர்­களின் இருப்­புக்­கான போராட்­டத்தின் வர­லாறு என்­ப­ன­வற்றை மேற்கு ஊட­கங்கள் மிகவும் சாத­க­மாக இருட்­ட­டிப்புச் செய்­து­ வ­ரு­கின்­றன. மேற்கு ஊட­கங்கள் இப்­பி­ரச்­சி­னையை புல­னாய்வு செய்ய சமத்­து­வ­மான முறையில் தமது வளங்­களைப் பிர­யோ­கிக்­கவும் இல்லை.

சர்­வ­தேச உல­கமும் பிரிட்டன் கால­னித்­து­வமும் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்­து­வந்த பலஸ்­தீன மக்களின் வாழ்விடங்களை இட­மில்­லாமல் செய்­த­மையை சர்­வ­தேச ஊட­கங்கள் செய்­தி­களின் தொடக்கப் புள்­ளி­யாக கொள்­வ­தில்லை. எனினும், இறு­தி­யாக ஹமாஸ் நடத்­திய தாக்­குதல் சம்­ப­வத்­தி­லி­ருந்தே தமது செய்­தி­களை கட்­ட­மைக்­கின்­றன. இஸ்­ரே­லிய கால­னித்­துவ அதி­கா­ரத்தின் காட்டுமிராண்­டித்­தனம் பற்றி எதிர்­வினா தொடுக்­கப்­ப­டு­கின்ற போதேல்லாம் மேற்­கு­லக ஊட­கங்கள் ஹமாஸின் தாக்­கு­தலை ஒரு துரும்­பாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன. பலஸ்­தீ­னி­யர்­களை அடி­மை­க­ளா­கவும் இரத்த வெறி பிடித்­த­வர்­க­ளா­கவும் யூத மக்­களை கொன்ற பழி தீர்க்கும் மூர்க்­கத்­தனம் கொண்­ட­வர்­க­ளா­க­வுமே காட்­டு­கின்­றன.

சில பிரிட்டன் ஊட­கங்கள் 24 மணி நேரத்தில் இரண்டு மில்­லியன் மக்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­லுங்கள் என இஸ்ரேல் குறிப்­பிட்­டதை மனித நேய உணர்­வாகக் காட்­டு­கின்­றன. ஆனால், அது எவ்­வாறு சாத்­தி­யப்­படும் என்­பதை எந்த ஊட­கமும் விளக்­க­வில்லை. இஸ்­ரே­லிய பிர­தமர் நெட்டன் யாஹூவின் பகி­ரங்க போர் பிர­க­ட­னத்தின் பார­தூ­ரத்­தையும் அவ­ரது கருத்­து­க­ளுக்கு ஆத­ர­வாக மேற்­கு­லகில் கிளம்­பிய அரச தலை­வர்­க­ளது நியா­ய­மற்ற ஆத­ர­வையும் பெரும்­பா­லான மேற்­கு­லக ஊட­கங்கள் இனப்­ப­டு­கொ­லைக்­கான பகி­ரங்க அழைப்­பாக கரு­த­வில்லை. ‘‘பழுப்பு நிற உடல்கள் எரிக்கத் தகு­தி­யா­னவை ; வெள்ளை நிற உடல்கள் வாழத் தகு­தி­யா­னவை’’ என்­பதே பெரும்­பா­லான ஊட­கங்­களின் கட்­ட­மைப்­பாக உள்­ளன.

சுமார் 241 போர் மற்றும் இடை­ம­றிக்கும் விமா­னங்­க­ளையும் 153 பயிற்சி விமா­னங்­க­ளையும் சுமார் 170,000 செயலில் உள்ள ஆக்­கி­ர­மிப்பு இரா­ணுவ வீரர்­க­ளையும் கொண்ட உலகில் நான்­கா­வது சக்தி வாய்ந்த பாது­காப்பு பலத்தைக் கொண்ட இஸ்­ரேலை பாதிக்­கப்­பட்ட தரப்­பாக சித்­த­ரிக்­கின்­றமை மேற்­கு­லகின் ஊடக கதை­யாடல் வஞ்­சகத்தை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.
2019ஆம் ஆண்டின் வரவு செலவு திட்­டத்­தின்­படி 20.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைக் கொண்ட இஸ்­ரேலில் ஆக்­கி­ர­மிப்பு படையை தனது கதை­யா­ட­லுக்கு ஏற்ப, ஒரு நலி­வ­டைந்த தேசமான பலஸ்­தீ­னத்தின் அச்­சு­றுத்­த­லுக்கு உட்­பட்ட தேச­மாக காட்­டு­வது மேற்­கு­லகின் ஊடக பாசாங்குத் தனத்­தையே காட்­டு­கின்­றது.

அம்­னெஸ்ரி இன்­டர்­நே­ஷனல் இஸ்­ரேலின் யுத்தக் குற்­றங்­க­ளையும் மனித உரிமை மீறல்­க­ளையும் பதிவு செய்து வரு­கின்­றது. அதன் ஆய்­வாளர் புதேன் ஹசன் ஏபீசி நேரடிச் செய்திச் சேவைக்கு வழங்­கிய நேர்­காணலில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்றார்.

‘காஸா­வி­லி­ருந்து பலஸ்­தீ­னி­யர்­களை வெளி­யேறச் சொல்­வது எந்த விதத்­திலும் சாத்­தி­ய­மான ஒன்­றல்ல. ஒரு மாத­மா­னாலும் அதனைச் செய்ய முடி­யாது. பெண்கள், சிறு­வர்கள், வயோ­தி­பர்கள், நோய்­வாய்ப்­பட்­ட­வர்கள் தெற்கை நோக்கிச் செல்­வது சாத்­தி­யப்­ப­டாது. பலஸ்­தீ­னி­யர்கள் மீண்டும் திரும்பி வர முடி­யுமா எனும் உத்­த­ர­வா­த­மில்­லாத ஒரு பய­ணத்தை மேற்­கொள்ள வேண்­டு­வது நிய­ய­மற்­றது’’ என்றார்.

சீஎன்என் செய்­தி­யா­ளரை எதிர்த்துப் பேசிய எகிப்து நாட்டு இணை­யத்­தள நிகழ்ச்சித் தயா­ரிப்­பாளர் ரஹ்மா செய்ன் கேட்கும் சில கேள்­விகள் அவ­தா­னத்­துக்­கு­ரி­யன. ‘‘உங்கள் வெளி­நாட்டுக் கொள்கை எங்கே? சுதந்­திரப் பேச்சை ஆத­ரிக்கும் உங்கள் நாட்டின் மெள­னமே எம் மீதான ஆக்­கி­ர­மிப்­பாகும். அரபு தேசத்தை தவ­றாக பிர­தி­நி­தித்­துவம் செய்யும் உங்­க­ளால்தான் இந்த நிலை. நீங்கள் தான் கதை­யா­டலை கையில் வைத்­தி­ருக்­கின்­றீர்கள். நீங்கள் தான் ஐ.நா.வின் சொந்­தக்­காரர். நீங்கள் தான் ஹொலி­வூட்டின் சொந்­தக்­காரர். நீங்­கள்தான் ஊது­கு­ழல்­களை வைத்­தி­ருக்­கின்­றீர்கள். இவற்றில் எங்கள் குரல் எங்கே?’’ என்­பது அவ­ரது கேள்­வி­க­ளாகும்.

மேற்­கு­லக ஊட­கங்­களின் மற்­று­மொரு போக்கு இஸ்­ரேலின் இன வெறித் தாக்­கு­தல்­களை, இன அழிப்பை, மற்றும் யுத்த மீறல்­களை ஹமாசின் தாக்­கு­தல்­க­ளுடன் சமப்­ப­டுத்தி பேசுவதாகும். அவர்கள் தவறிழைத்­து­விட்­டார்கள். அவர்கள் செய்­ததும் தப்பு – இவர்கள் செய்­ததும் தப்பு என்­பது இவர்­க­ளது நிலைப்­பாடு. சம­நி­லை­யா­ளர்கள், புற­வ­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் எனக் கருதும் பலர் இந்த நோக்கு நிலையைக் கொண்­ட­வர்கள். இது மிகவும் நீதியை , சமா­தா­னத்தை, பலஸ்­தீ­னர்­களின் உரி­மையை, அவர்­க­ளது போராட்­டங்­களின் மதிப்பை அசட்டை செய்யும் ஒரு நிலைப்­பா­டாகும். இத­னா­லேயே பீபீசி, சீஎன்என், ஸ்கைநியுஸ் போன்ற ஊட­கங்கள் பிரிட்­ட­னுக்­கான பலஸ்­தீ­னியத் தூது­வரை நேர்­கண்ட போதெல்லாம் கேட்ட முதன்­மை­யான கேள்வி நீங்கள் ஹமாசின் தாக்­கு­தலை நிரா­க­ரிக்­கின்­றீர்­களா என்­ப­தாகும்.

அக்­கேள்­விக்கு பலஸ்­தீனத் தூதுவர் ஹூஷாம் சம்லத் வழங்­கிய பதில் மேற்கு ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய சாட்­டை­ய­டி­யா­கவும் துவே­ச-­, ஆ­திக்­க-­மூர்க்கம் கொண்ட காலனித்­துவ ஊட­கங்­களை எவ்­வாறு அப­க­ரிப்­புக்கு, இன வெறிக்கு உட்­பட்­ட­வர்கள் எதிர்­கொள்­ள­வேண்டும் என்­ப­தற்­கான சிறந்த உதா­ர­ணமு­மாகும்.

அவர், தான் ஹமாஸின் தாக்­கு­தலை ஏற்­றுக்­கொள்­ளாத போதும், அதனை அவர் வெளிப்­ப­டுத்­த­வில்லை. அதற்­காக அவர் எடுத்­துக்­காட்டும் தர்க்கம் ‘‘இந்தக் கேள்­வியை பல தடவை கேட்­கின்­றார்கள். எல்­லோரும் கேட்கின்­றார்கள். அவர்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும் ஹமாஸின் தாக்­கு­தலை நாம் ஆமோ­திப்­ப­தில்லை என்று. ஆனாலும், மீண்டும் மீண்டும் கேட்­கின்­றார்கள். ஆனால் இதே கேள்­வியை உண்­மையில் வன்­மு­றையைத் தூண்டும் இஸ்­ரே­லிடம் யாரும் கேட்­ப­தில்லை. கேள்வி நியாயமா­னது – ஆனால், நோக்கம் தவ­றா­னது. இத்­த­கைய கேள்­வி­களை தெரிவு செய்­வது இஸ்­ரே­லுக்கு சாத­க­மாக செய்­தியை கட்­ட­மைப்­ப­தற்­காகும். அடக்­கு­ப­வரின் ஸ்தானத்­தி­லி­ருந்து, அடக்­கப்­ப­டு­ப­வர்­களை இலக்கு வைத்து மேற்கின் அவ­தா­னத்தை திசை­தி­ருப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது மேற்­கு­லக ஊடகம்.

ஹமாஸ் தாக்­குதல் எப்­போது இடம்­பெ­று­கின்­றதோ அப்­போது மத்­திரம் மேற்­கு­லக ஊட­கங்கள் ஹமாஸை முதன்­மைப்­ப­டுத்­திய வினாக்­களை மேற்­கி­ளப்­பு­கின்­றன. மொத்தச் செய்­தி­களின் போக்கும் அதனை ஒட்­டி­ய­தா­கவே உள்­ளன. பெரும்­பா­லான நேர்­கா­ணல்கள் பலஸ்­தீ­னிய மக்­களின் வேத­னைக்­கு­ரலை அல­ட்சியம் செய்­கின்­றன. சுதந்­தி­ர­மாக நட­மாட, வாக்­க­ளிக்க, வேலை செய்ய, வாழ, சொத்­துக்­களை வைத்­தி­ருக்க உரிமை மறுக்­கப்­ப­டு­வதை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தாக அமை­வ­தில்லை. அமெ­ரிக்­காவில் வாழும் அர­சியல் விமர்­சகர் ஓமர் பதன் தனது எக்ஸ் தளத்தில் வெளிப்­ப­டுத்­திய ஒரு விடயம் மேற்கு ஊட­கங்­களின் வஞ்­சகத் தனத்தை மிகத் தெளி­வாக எடுத்துக் காட்­டு­கின்­றது. வர­லாற்றில் முதலில் பலஸ்­தீனம் அப­க­ரிக்­கப்­பட்­டது, ஆக்­கி­ர­மிப்­பட்­டது. இரண்­டா­வது இஸ்ரேல் துப்­பாக்கிச் சூடு நடத்தி, தண்­டித்து மக்­களை வெளி­யேற்றி ஊடு­ரு­வி­யது. மூன்­றா­வது பலஸ்­தீனம் வன்­முறை மூலம் பதில் வழங்­கி­யது. நான்­கா­வது இஸ்ரேல் படு­கொலை மூலம் பதி­ல­ளித்­தது. இந்த வரி­சையில் மூன்­றா­வது இடம்­பெற்­றதை மாத்­திரம் முன்­நி­றுத்தி அறிக்­கை­யிட்டால் அது தவ­றான வழிக்கு இட்­டுச்­செல்­வ­தாகும்.

மேற்கின் ஊடக கட்­ட­மைப்பை காத்­தி­ர­மாக எதிர்­கொண்ட மற்­று­மொரு சம்­பவம் சீஎன்என் நேர்­காணல் ஒன்றில் இடம்­பெற்­றது. அரபு ஊட­க­வி­ய­லாளர் முஹம்மத் அல்­கா­ரிடம் சீஎன்என் ஊட­க­வி­ய­லாளர் ‘‘உங்­க­ளுக்கு ஆதரவாக உலகம் பூராகவும் நடக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனுமதிக்கின்றீர்களா’’ எனக் கேட்டார்.

அதற்கு அவர் ‘‘எனதும் என் குடும்பத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ள அடக்கு முறைகளையும் வன்முறையையும் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா’’ எனக் கேட்டார். சீஎன்என் செய்தியாளர் சற்று மெளனமானார். மீண்டும் ஆசுவாசப்பட்டு கேள்வி கேட்ட சீஎன்என் செய்தியாளருக்கு இனப் பேரழிப்புக்கு எதிரான போராட்டங்கள் அவ்வாறு அமையக்கூடும் என்றார்.

இஸ்­ரேலில் என்ன நடக்­கின்­றது? ஹமாஸின் தாக்­குதல் நியா­ய­மா­னதா? இஸ்­ரே­லிய சிறு­வர்கள் கொல்­லப்­ப­டு­வது நியா­ய­மா­னதா? என தெரிவு செய்­யப்­பட்ட வினாக்­களைத் தொடுப்­பதை கால­னித்­துவ ஒடுக்­கு­மு­றையின் பிர­தி­ப­லிப்­பா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய போக்­கினை பிர­தான விவா­தத்தை திட்­ட­மிட்டு திசை திருப்பும் செயற்­பா­டாக கருத வேண்­டி­யுள்­ளது. இந்தப் பிர­தி­ப­லிப்பே மேற்­கு­லகின் கொள்­கை­யாக்­கங்­க­ளிலும் தாக்கம் செலுத்­து­கின்­றது. அத­னா­லேயே, ஐக்­கிய இராச்­சி­யத்தின் வெளி­வி­வ­கார செய­லாளர் டொமினிக் ரொப் இரு­பது பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­ட­போது ‘‘ஐக்­கிய இராச்­சியம் ஜெரு­சலேம் மற்றும் இஸ்ரேல் பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். ஜெரு­ச­லத்­திலும் காசா­விலும் இடம்­பெறும் வன்­மு­றைகள் நிறுத்­தப்­பட வேண்டும். சகல தரப்­பிலும் பொது­மக்கள் கொல்­லப்­ப­டு­வது நிறுத்­தப்­ப­ட­வேண்டும்’’ எனக் எக்ஸ் தளத்தில் குறிப்­பிட்டார். பலஸ்தீன் உயிர்கள் பறிக்­கப்­ப­டும்­போது பட்­டும்­ப­டா­மலும் வருத்தம் தெரி­விக்கும் இத்­த­கைய போக்கு மேற்­கு­லக ஊட­கங்­களின் கதை­யா­ட­லுடன் மிகவும் பொருந்திச் செல்­கின்­றது.

பீபீசி போன்ற ஊட­கங்­களின் இஸ்­ரே­லிய ஆத­ரவு அறிக்­கை­யிடல் ஊட­கத்தில் புற­வ­யப்­பட்ட நிலை (Objectivity) என்­பதை முற்­றிலும் கேள்­விக்­கு­றி­யாக்கிவிட்­டி­ருக்­கின்­றது. பீபீசி தொகுப்­பாளர் இஸ்­ரேலை ‘அடக்­கு­முறை நாடு’ என்றும், ‘இன­வெறி கொண்ட நாடு’ என்றும் சொல்­வது நியா­ய­மா­னதா என்றார். இதற்குப் பதிலளித்த அம்­னெஸ்டி இண்­டர்­னே­ஷனல் நிறு­வ­னத்தின் செய­லாளர் நாயகம் கல்­மார்ட் “ அது உண்­மைதான். இஸ்ரேல் ஒரு இன­வெறி கொண்ட நாடு’’ என்றார். பீபீசி தொகுப்­பாளர் இஸ்­ரேலை சுத்­தப்­ப­டுத்த எடுத்த பிர­யத்­தனம் பீபீசி போன்ற ஊடகங்களின் பக்கஞ்சாராமையை கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் Novara Media வின் செய்தி விவரணங்கள் பல பீபீசியின் இரட்டை வேடத்தை படம்பிடித்துக் காட்டிவருகின்றன. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.