சமூ­கத்தின் சாக்­க­டைகள்

0 251

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஒவ்­வொரு சமூ­கத்­திலும் சில மனி­தர்கள் தமக்­காக மட்டும் வாழாமல் பிற­ருக்­கா­கவும் வாழ்­வ­துண்டு. அவ்­வாறு பிறர்­நலம் கருதி வாழ்­ப­வர்­கள்தான் வர­லாறு படைக்­கி­றார்கள். அவர்­க­ளா­லேதான் சமூகம் மேம்­ப­டு­கி­றது. அவர்­க­ளைத்தான் சமூகம் நினை­வு­கூரும். அவர்­க­ளது வாழ்க்கைச் சுவ­டு­களின் தொகுப்­பைத்தான் வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் தேடித்­தி­ரட்டி, அவற்­றிற்கு விளக்­கங்கள் அளித்து, வியாக்­கி­னங்கள் செய்து அவற்­றைக்­கொண்டு பின்­வரும் சந்­த­தி­க­ளுக்குச் சுைவ­யான பாடங்­க­ளையும் கற்­பிக்­கின்­றார்கள். அவ்­வா­றில்­லாமல் ஒவ்­வொ­ரு­வரும் தமக்­கெ­னவே மட்டும் வாழ்ந்து வெறும் சந்­த­தி­க­ளை­மட்டும் உரு­வாக்­கி­விட்டுச் சென்றால் அதிலே புது­மைப்­பட என்ன இருக்­கி­றது? ஒரு­வ­ரது வர­லாற்றை மட்டும் படித்­து­விட்டால் அதுவே எல்லா மனி­தர்­களின் வர­லாற்­றையும் படித்­த­தற்குச் சம­மா­காதா? இந்த அறி­மு­கத்தின் பின்­ன­ணி­யிலே இலங்கை முஸ்லிம் சமூ­கத்துள் இன்று உரு­வா­கி­யுள்ள ஒரு கேவ­ல­மான பிரச்­சி­னை­யைப்­பற்றி இக்­கட்­டுரை சில கருத்­துக்­களை முன்­வைக்­கி­றது.

இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே வர­லாற்றுத் தடம்­ப­தித்துச் சென்­ற­வர்கள் பலர். அறிஞர் சித்தி லெப்பை, தொடக்கம் பதி­யுத்தீன் மஹ்­மூத்­வரை எத்­த­னையோ தன்­னலம் போணாத் தலை­வர்­க­னையும் பணி­யா­ளர்­க­ளையும் கண்ட ஒரு சமூகம் இது. இவர்­க­ளெல்­லாரும் ஏதோ ஒரு வகையில் பிற­ருக்­காக அதுவும் அவர்கள் பிறந்த சமூ­கத்­துக்­காக வாழ்ந்­து­விட்டுச் சென்­றுள்­ளார்கன். அத­னா­லேதான் அவர்­களின் நாமங்கள் இன்னும் பிர­கா­சிக்­கின்­றன. அந்த வரி­சை­யிலே மறக்க முடி­யாத ஒரு­வர்தான் என். டி. எச். அப்­துல்­கபூர். அவரின் சுய­ச­ரி­தையை இக்­கட்­டுரை விப­ரிக்க விரும்­ப­வில்லை. ஆனால் அந்தப் பிர­பல வர்த்­தகர் ஒரு கண்­ணி­ய­மான முஸ்லிம். அவரின் தொழிற்­துறைப் பெருமை கொழும்­பிலே கொடி­கட்டிப் பறந்­ததை அன்­னிய ஆட்­சி­யி­னரே விதந்து புகழ்ந்­துள்­ளனர். ஆனால் அந்த வர்த்­தகர் தனது நாட்­டி­னதும் சமூ­கத்­தினதும் மேம்­பாட்­டிற்­காகச் செய்த கொடை­களை இங்கே பட்­டி­ய­லி­டாமல் அவற்­றைப்­பற்­றிய ஓர் உண்­மையை மட்டும் வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது. தனது பெயர் புக­ழப்­பட வேண்­டு­மென்றோ ஆட்­சி­யா­ளர்­களால் மதிக்­கப்­பட்டு பட்­டமும் பத­வியும் கிடைக்க வேண்­டு­மென்றோ அந்தப் பெரு­மகன் அக்­கொ­டை­களை வழங்­க­வில்லை. வலக்­கரம் கொடுத்­ததை இடக்­க­ரமே அறி­யாமல் இறை­வ­னுக்­கா­கவும் அவனின் படைப்­பு­க­ளுக்­கா­கவும் அர்ப்­பணம் செய்த ஒரு பரோ­ப­காரி. உதா­ர­ண­மாக, இன்­றைய கொழும்பு ஸாகிரா கல்­லூரி இருக்கும் வரை அவரின் ஞாப­கமும் நிலைத்­தி­ருக்கும்.

இஸ்­லாத்தில் வக்புச் சட்டம் என்ற ஒன்­றுண்டு. அந்தச் சட்­டத்­தின்கீழ் தன­வந்­தர்­களும் தயா­நி­தி­களும் தமது சமூ­கத்­துக்­கென அவர்­களின் உழைப்பால் திரட்­டப்­பட்ட சொத்­துக்­களில் சில­வற்றை நன்­கொ­டை­க­ளாக அவர்­க­ளது வாழ்­நா­ளி­லேயே எழு­தி­வைப்­பது வழக்கம். இந்த வழக்கு ஏனைய சமூ­கங்­க­ளிலும் உண்டு. உலக முஸ்­லிம்­களின் வர­லாற்­றிலே வக்பு மூலம் உரு­வா­கிய எத்­த­னையோ கல்­லூ­ரி­க­ளையும், பள்­ளி­வா­சல்­க­ளையும், தர்­ம­சத்­தி­ரங்­க­ளையும், வைத்­தி­ய­சா­லை­க­ளையும் மற்றும் பல பொது ஸ்தாப­னங்­க­ளையும் முஸ்­லிம்கள் வாழும் ஒவ்­வொரு நாட்­டிலும் காணலாம். அவ்­வாறு அர்ப்­பணம் செய்­வதில் முஸ்லிம் பெண்­களும் முக்­கிய இடம் வகித்­துள்­ளனர் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும். அந்த வரி­சை­யிலே வள்ளல் அப்துல் கபூர் அவர்­களும் மஹ­ர­க­மயில் 1931ஆம் வருடம் வக்பு செய்த ஒரு கல்­லூ­ரியும் கொழும்பில் அவர் நன்­கொடை வழங்­கிய காணியில் இயங்­கி­வந்த ஒரு வைத்­தி­ய­சா­லையும் அவரின் குடும்­பத்­தி­ன­ரா­லேயே சமூ­கத்­தி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­ப­டு­வதை அறி­யும்­போது இந்த அவல நிலை ஏன் இந்தச் சமூ­கத்­திற்கு ஏற்­பட்­ட­தென உள்ளம் அங்­க­லாய்க்­கி­றது. முன்னோர் சமூ­கத்­துக்­காகச் செய்த அர்ப்­ப­ணங்­களை பின்னோர் நிரா­க­ரிப்­ப­தையும் அப­க­ரிப்­ப­தையும் எக்­கா­ர­ணம்­கொண்டும் ஒரு சமூகம் மன்­னிக்க முடி­யாது. ஒரு சில நபர்­களின் சுய­ந­லத்­துக்­காக பொதுச் சொத்­துகள் சூறை­யா­டப்­ப­டு­வதைத் தடுத்­து­ நி­றுத்தும் சக்தி இந்தச் சமூ­கத்­துக்கு இல்­லாமல் போனதேன்? ஒரு பக்­கத்தில் பேரி­ன­வா­திகள் முஸ்­லிம்­களின் நிலங்­க­ளையும் பள்­ளி­வா­சல்­க­ளையும் (மஹ­ர­யிலும் மெத ­ம­கா­நு­வ­ர­யிலும் நடந்­த­துபோல்) அரசின் அனு­ச­ர­ணை­யுடன் அப­க­ரிக்க மறு­பக்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்­ளேயே உரு­வா­கி­யுள்ள சில புல்­லு­ரு­விகள் சமூ­கத்தின் பொதுச் சொத்­து­களைச் சுய­லாபம் கருதிச் சூறை­யா­டினால் இந்தச் சமூ­கத்தின் எதிர்­காலம் என்­ன­வா­குமோ? எங்கே போனார்­களோ முஸ்லிம் தலை­வர்கள்?

இந்தச் சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளுக்­குள்ள இரண்டு ஸ்தாப­னங்­க­ளைப்­பற்­றியும் சில குறிப்­பு­களைப் பதிய வேண்­டி­யுள்­ளது. ஒன்று வக்பு சபை, மற்­றது அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா. வக்பு சபை நிறு­வப்­பட்­டதன் முக்­கிய நோக்­கமே வக்புச் சொத்­துக்­களைப் பாது­காத்து அவை நீதி­யுடன் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­ப­தையும் கண்­கா­ணிப்­ப­தாகும். அச்­சொத்­து­க­ளுக்குப் பங்கம் ஏற்­ப­டும்­போது தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது வக்பு சபையின் பொறுப்பு. ஆனால் கபூ­ரியா கல்­லூ­ரி­யைப்­பற்றி வக்பு சபை கரி­ச­னை­யற்­றி­ருப்­பது பல கேள்­வி­களை எழுப்­பு­கி­றது. ஊழல்­களால் நாடே வங்­கு­ரோத்து அடைந்­துள்ள நிலையில் வக்பு சபைக்­குள்ளும் ஊழல் உற­வாடி வேலியே பயிரை மேய்­கி­றதா என எண்ணத் தோன்­று­கி­றது. ஏற்­க­னவே மெத­ம­ஹா­நு­வரை பள்­ளி­வாசல் விட­ய­மாக வக்பு சபை நடந்­து­கொண்ட விதமும் இவ்­வா­றான சந்­தே­கத்தைத் தோற்­று­விக்­கி­றது. அதைப்­பற்­றிய விப­ரங்­களை இன்­னொரு கட்­டுரை வெளிப்­ப­டுத்தும். இல்­லை­யென்றால் ஏன் இப்­பி­ரச்­சி­னைக்கு ஆட்­சி­யா­ளரின் உத­வியை வக்பு சபை நாடத் தயங்­கு­வதேன்?

இது முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­காலம் பற்­றிய ஒரு பிரச்­சினை. சட்­டத்தின் ஓட்­டை­களை ஆயு­த­மாகக் கொண்டு கபூ­ரி­யாவைக் கவர நினைப்­ப­வர்கள் முஸ்­லிம்­கள்­தானே என்றும் அதனால் அச்­சொத்து முஸ்­லிம்­க­ளி­டம்­தானே இருக்­கப்­போ­கி­றது என்றும் நினைத்து வாழா­வி­ருந்தால் அதைப்­போன்ற முட்­டாள்­தனம் வேறெ­துவும் இல்லை. அப­க­ரிக்­கப்­பட்ட சொத்தை யாருக்­கா­வது விற்­று­விட்டுப் பண­மாக்­கு­வதே இந்த முயற்­சியின் நோக்கம். அது வேறொரு இனத்­த­வரின் உட­மை­யா­கி­விட்டால் போனது போன­துதான். இனிமேல் அது முஸ்­லிம்­களின் கைக­ளுக்கு வரப்­போ­வ­தில்லை. முஸ்லிம் சமூ­கத்தை ஒன்று திரட்டி கபூ­ரி­யாவைக் காப்­பாற்­று­வது வக்பு சபையின் மகத்­தான பொறுப்பு. அது முடி­ய­வில்­லை­யென்றால் ஏன் வக்பு சபை?

அதே குறை­யைத்தான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை­யிலும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இச்­சபை உண்­மை­யி­லேயே முஸ்லிம் சமூ­கத்தின் காவல் அரண் என்றால் அது ஏன் கபூ­ரியா விட­யத்தில் தூங்கிக் கொண்­டி­ருக்­கி­றதோ? இச்­ச­பையின் தலை­மையில் இயங்கும் எல்லாப் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை அங்­கத்­த­வர்­க­ளையும் ஒரு மகா­நாட்­டுக்கு அழைத்து அதில் கபூ­ரியாப் பிரச்­சி­னை­யை­மட்டும் ஆராய்ந்து அதை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்து அவர்­கள்­மூலம் நிறை­வேற்று அதி­கா­ரம்­பெற்ற ஜனா­தி­ப­தியின் கட்­ட­ளை­யுடன் அக்­கல்­லூ­ரியை மீட்­டெ­டுத்­தா­லென்ன? ஜனா­தி­பதித் தேர்­த­லுக்காய்க் காய் நகர்த்தும் இச்­சந்­தர்ப்­பத்தை சமூ­கத்­துக்­காகப் பயன்­ப­டுத்­தி­னா­லென்ன?

இப்­பி­ரச்­சினை ஒட்­டு­மொத்­தத்தில் முஸ்­லிம்­களின் தலை­மைத்­து­வத்தின் பல­ஹீ­னத்­தையே உணர்த்­து­கி­றது. தேர்தல் வாக்­கு­க­ளுக்­காக அலையும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஒரு புறம், பத­வியைக் காப்­பாற்­றிக்­கொண்டு காலத்தைக் கடத்தும் வக்பு சபை அங்­கத்­த­வர்கள் மறு­புறம், வாய்ப்­பேச்சு வீரர்­களைக் கொண்ட ஓர் உலமா சபை இன்­னொரு புறம் என்ற தோர­ணையில் முஸ்­லிம்­களின் தலை­மைத்­துவம் சக்­தி­யற்று இருக்­கும்­போது கபூ­ரியா மட்­டு­மல்ல இன்னும் பல பொதுச் சொத்­துகள் சட்­டத்தின் ஓட்­டைகள் மூலம் எதிர்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் கைக­ளை­விட்டு நீங்­கலாம். இந்தத் தலை­மைத்­து­வங்­க­ளையும் வக்பு நன்­கொ­டை­களைக் கள­வாட நினைக்கும் சுய நல­வா­தி­க­ளையும் அவர்­க­ளது வழக்­கு­க­ளுக்கு நீதி­மன்­றத்தில் அவர்­க­ளுக்­காக வாதாடும் முஸ்லிம் வழக்­கு­ரை­ஞர்­க­ளையும் சமூ­கத்தின் சாக்­க­டைகள் என்று சொல்­லாமல் வேறு எப்­படி அழைப்­பதோ தெரி­ய­வில்லை.

பணத்­தையே கும்­பிடும் மக்­கள்­முன்னே
பர­நயம் சமூ­க­நயம் சேவை­யென்று
குணம்­பேசித் திரி­ப­வர்கள் கச­ட­ராவர்;
குனித்­த­முகம் களித்­த­கன்ன மூட­ராவர்;
பிணந்­தின்னும் காக்­கை­யென ஞானம்­பேசும்
பெற்­றி­யுளார் சுய­ந­லத்தால் உறிஞ்­சி­வாழ
பணங்­கொ­டுப்பர்; சமூகமெனப் பாடுபட்ட
பாவிகளோ குப்பையென வீழ்ந்துமாய்வர்.
(கவிஞர் அப்துல் காதர் லெப்பை)

அப்துல் கபூர் போன்ற வக்பு செய்த வள்ளல்களின் நிலைமையும் இச்சமூகத்தில் இதுவாகத்தான் இருக்குமோ?

முஸ்லிம்களிடையே ஏன் இந்தத் தூக்கமோ? ஒரு காலத்தில் இச்சமூகத்தில் படித்தவர்கள் இல்லை, ஆதலால் விழிப்பூட்டுவார் யாரும் இல்லை என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால் அது இன்று இல்லையே. படித்துப்பட்டம் பெற்ற எத்தனையோ ஆண்களும் பெண்களும் முஸ்லிம் சமூகத்தில் மலிந்துள்ளனரே. அப்படியானால் ஏன் இந்தத் தூக்கம்? கபூரியா பிரச்சினை தனிப்பட்ட ஓரிருவரின் பிரச்சினை அல்ல அது சமூகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பிரச்சினை. அண்டை நாடான இந்தியாவில் வக்பு சொத்துக்களுக்கு நடக்கும் தீங்குகளைப் பற்றி இவர்கள் அறிந்திருக்க வேண்டாமா? அங்கேயும் இனவாதமே இப்பிரச்சினைக்குக் காலாய் அமைந்துள்ளது. அந்த ஆபத்து இங்கேயும் உருவாகின்றது. ஒவ்வொரு நன்கொடைப் பத்திரத்திலுமுள்ள ஓட்டைகளை இப்போதே சிலர் ஆராயத் தொடங்கிவிட்டனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.