மத அவமதிப்பை தடுப்பதற்கு நீதியான பொறிமுறையே தேவை

0 222

நாட்டில் மீண்டும் மத அவ­ம­திப்பு தொடர்­பான விவ­காரம் கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. மத பிர­சா­ர­கர்கள் மற்றும் கலை­ஞர்­களை மையப்­ப­டுத்தி இது தொடர்பில் பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இப் பின்­ன­ணியில் அண்­மைய நாட்­களில் பெளத்த மத அவ­ம­திப்பு தொடர்பில், பௌத்த பிக்கு ஒருவர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
பௌத்த மதத்­திற்கு அவ­ம­திப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்து வெளி­யிட்ட குற்­றச்­சாட்டின் கீழ், குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினால் நடாஷா எதி­ரி­சூ­ரிய என்ற பெண் நகைச்­சுவை கலைஞர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இவ­ருடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்டில் யூ டியூப் சனல் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான மற்­றொ­ருவர் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
அதே போன்று இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்து வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் ராஜாங்­கனை சந்­தா­ரத்ன தேரர் சில தினங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
இதே­வேளை, பௌத்த மதத்­திற்கு அவ­ம­திப்பை ஏற்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் போத­க­ரான ஜெரோம் பெர்­ணான்டோ தொடர்பில், குற்றப் புல­னாய்வு திணைக்­கள அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவரைக் கைது செய்­வ­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் வெளி­நாட்டில் தங்­கி­யுள்ள அவர் தன்னைக் கைது செய்­வதை தடுக்­கு­மாறு முன்­பிணை கோரி­யுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்­ணான்டோ பெளத்த, இந்து மற்றும் இஸ்­லா­மிய சம­யங்­களை அவ­ம­திக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. பெளத்த மத குரு­வான ராஜாங்­கனை சந்­தா­ரத்ன தேரர் மற்றும் கலைஞர் நடாஷா ஆகியோர் மீது பெளத்த மதத்தை அவ­ம­திக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இவர்கள் இரு­வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்­க­ளி­டையே முரண்­பாட்டைத் தோற்­று­விக்க இவர்கள் முயற்­சிப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
இருப்­பினும் அர­சாங்கம் வேண்­டு­மென்றே கருத்துச் சுதந்­தி­ரத்தை முடக்கும் வகை­யிலும் அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்­களைப் பழி­வாங்கும் நோக்­கிலும் இவ்­வாறு மத அவ­ம­திப்பு என்ற போர்­வையில் கைது­களைக் கட்­ட­விழ்த்­து­விட்­டுள்­ள­தாக மனித உரிமை அமைப்­புகள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. குறிப்­பாக நடாஷா எதிரிசூ­ரி­யவை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய வேண்டும் என சர்­வ­தேச மன்­னிப்பு சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.
இந்­நி­லையில், மத நல்­லி­ணக்­கத்­திற்கு தடை ஏற்­ப­டுத்தும் குழுக்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தி, அதற்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்கும் வகை­யி­லான விசேட பொலிஸ் பிரி­வொன்றை ஆரம்­பிக்க ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அர­சாங்­கத்தை தர்­ம­சங்­க­டத்­திற்கு உட்­ப­டுத்தும் நோக்கில் திட்­ட­மிட்டு இவ்­வா­றான கருத்­துக்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றதே தவிர, தற்­செ­ய­லாக இவ்­வா­றான கருத்­துக்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என ஜனா­தி­ப­திக்கு புல­னாய்வு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே விசேட பொலிஸ் பிரிவு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பொலிஸ் மாஅ­தி­ப­ருடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி, உட­னடி நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தா­கவும் இவ்­வா­றான நாச­கார செயற்­பா­டு­களை அவ­தா­னித்து, மத நல்­லி­ணக்­கத்­திற்கு இடை­யூறு விளை­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள பொலிஸ் பிரி­விற்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவம் அறிய முடி­கின்­றது.
மத முரண்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் இவ்­வாறு முன்­னெச்­ச­ரிக்­கை­யாக செயற்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும். கடந்த காலங்­களில் இவ்­வாறு விரைந்து செயற்­பட்­டி­ருந்தால் அளுத்­கம, அம்­பாறை, திகன, கிந்­தோட்டை போன்ற இடங்­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளையும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­த­லையும் அதனால் ஏற்­பட்ட விளை­வு­க­ளையும் தடுத்­தி­ருக்­கலாம்.
துரதிஷ்டவசமாக, இவற்­றுக்­கெல்லாம் கார­ண­மாக அமைந்த தீவிரப் போக்கு கொண்ட பெளத்த மத குருக்கள் இன்றும் சுதந்­தி­ர­மா­க­வுள்­ளனர். இஸ்லாமிய சமயத்தை மிகக் கேவலமாக இவர்கள் விமர்சித்த போது இவர்களுக்கு எதிராக எந்தவொரு அரசாங்கமும் மத அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேலும் மேலு்ம பதவிகளையும் சலுகைகளையுமே வழங்கினர். இன்று இதே நபர்கள் மீண்டும் ஊட­கங்கள் முன் தோன்றி மத அவ­ம­திப்பு தொடர்பில் பேசவும் பெளத்த மக்­களைத் தூண்­டவும் முனை­வது வேடிக்கையானதாகும்.
மதங்­களை அவ­ம­திக்கும் வகையில் யார் கருத்து வெளியிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும் அதனை தேர்ந்தெடுத்தவர்கள் மீதும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதும் மாத்திரம் பயன்படுத்த முனைவது ஆபத்தானதாகும். புதிய பொலிஸ் பிரிவு நீதியான முறையில் செயற்பட வேண்டும். அது கருத்துச் சுதந்திரத்தைக் கருவறுக்காது, அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு துணை போகாது சட்டத்தை நீதியாக அமுல்படுத்த முற்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.