சிறுமியர் மற்றும் இள வயதுப் பெண்களின் தொடர் மரணங்களால் நாம் பாடம் கற்றோமா?

0 231

எம்.ஒஸன் ஸலாம்
அட்டுளுகமை

அண்மைக் கால­மாக நமது நாட்டில் இன மொழி மத வேறு­பா­டு­க­ளின்றி இள­வ­யதுப் பெண் பிள்­ளை­களில் பலர் சில காம வெறி­யர்­க­ளுக்கும் போதைப் பொருள் அடி­மை­க­ளுக்கும் தொடர்ந்தும் இரை­யாகி வரு­கின்­றனர்.

இந்த வரி­சையில் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் 18 வயது கல்­லூரி மாணவி வித்யா, அதே ஆண்டு செப்­டம்பர் 12ஆம் திகதி கொட­க­தெ­னி­யவில் 4 வயது பாலர் பாட­சாலை மாணவி ஸேயா ஸந்­தெவ்­மினி ஆகியோர் காம வெறி­யர்­களின் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்­குள்­ளாகி கொலையும் செய்­யப்­பட்­டனர்.

அத்­துடன் 2022ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி அட்­டு­ளு­க­மையைச் சேர்ந்த 9 வயது மாணவி ஆயிஷாவும் கடந்த 07.-05-.2023 அன்று கம்­பொளை வலி­கல்­லையைச் சேர்ந்த மருந்­தக பணி­யா­ள­ரான பாத்திமா முனவ்­வ­ராவும் போதைப் பொருட்­க­ளுக்கு அடி­மை­யான காடை­யர்­க­ளா­லேயே சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்டு மர­ணத்தைத் தழு­வி­ய­வர்கள் ஆவர்.

இவர்கள் பாலியல் வன்­பு­ணர்­வு­க­ளுக்கு ஆளா­கா­விட்­டாலும் அதற்­கான முயற்­சி­களில் தோல்வி கண்டு கொலை செய்­யப்­பட்­டனர் என்­பது போலி­சாரின் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கின்ற கவலை தரும் தக­வல்­க­ளாகும்.

இருப்­பினும் இந்த இள ­வ­யது பெண்­பிள்­ளைகள் அனை­வ­ரதும் கொலைகள் ஊட­கங்­களில் பெரி­தாகப் பேசப்­பட்­ட­துடன் வெளிச்­சத்­திற்குக் கொண்டு வரப்­பட்டு சமூ­கங்­களை உலுக்­கி­விடச் செய்த கொலைச் சம்­ப­வங்­க­ளாகும்.

ஆயினும் ஊட­கங்­களில் வெளிச்­சத்­திற்குக் கொண்டு வரப்­ப­டாத கற்­ப­ழிப்­புகள், கொலைகள் பல கால வெள்­ளத்தின் ஓட்­டத்தில் மண்ணுள் புதை­யுண்டு போயின என்­பதும் கசப்­பான உண்­மை­யாகும்.

ஒரு காலத்தில் முஸ்லிம் சமூ­கத்தில் மாத்­திரம் தான் இது போன்ற கொலைகள் இடம்­பெ­று­வ­தில்­லை­யென்றும் அதற்கு அவர்­க­ளது சமூக அமைப்பும் மத போத­னை­களும் தான் அடிப்­படைக் கார­ண­மென்றும் அந்­நிய மதத்தை சார்ந்­த­வர்கள் கருத்து வெளி­யிட்டு வந்­தனர். ஆனாலும் நடந்­தது என்ன? முழு நாடும் இன்று போதைப் பொருள் எனும் அரக்­க­னிடம் அடகு வைக்­கப்­பட்டு வரும் ஒரு மோச­மான கால­கட்­டத்தில் நாம் வாழ்கிறோம். அனைத்து சமூ­கங்­களும் அதன் கோரப் பிடி­யி­லி­ருந்து விடு­பட முடி­யாத ஒரு பயங்­கர சூழலில் நமது சமூ­கமும் அதில் சிக்­குண்டுள்ளது. அதனால் பாதிக்­கப்­பட்ட பலர் பல்­வேறு களவு, கொலை, கற்­ப­ழிப்பு முத­லிய இஸ்லாம் வெறுக்கும் மா பாதகச் செயல்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

போதைப்பொருள் பாவ­னை­யா­ளர்­களை தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளாக்கி அதன் மூலம் லட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் கய­வர்கள் நமது சமூ­கத்­திலும் மலிந்து காணப்­ப­டு­கின்றனர். அவர்­க­ளுக்கு சமூகம் சன்­மார்க்கம் போன்­ற­வற்றின் மீது எந்தக் கண்­ணி­யமும் கரு­ணையும் கிடையாது. மாறாக பணம் ஒன்­றையே தமது இலக்­காகக் கொண்டு செயல்­ப­டு­கின்­றனர். இளை­ஞர்­க­ளுக்கு போதை மருந்து புகட்டி நாட்டில் நிலவும் பிரச்­சி­னை­களை மறக்­க­டிக்க இளை­ஞர்­களின் கவ­னத்தைத் திசை திருப்பும் அர­சியல் புல்­லு­ரு­வி­களின் தந்­தி­ரோ­பா­யங்­களும் இல்­லாமல் இல்லை என்­ப­தையும் நாம் மறக்க முடி­யாது.

ஆகவே அந்தக் கய­வர்­களும் போதைப்பொருள் தரு­விப்­பதில் பெரும் பங்கு வகிக்­கின்­றனர் என்­பதும் கசப்­பான உண்­மை­யாகும்.

இத­னா­லேயே நாட்டில் போதைப் பொருள் பாவ­னை­களை ஒழிக்க முடி­யா­துள்­ளது. இதற்கு பாது­காப்புத் துறை­யினர் சிலரும் துணை போகின்­றனர் என்­பது வெள்­ளிடை மலை. இது தவிர இவர்­க­ளுக்குத் துணை போகின்­ற­வர்கள் நமது சமூ­கத்தின் மேல்­மட்­டத்­திலும் இல்­லா­ம­லு­மில்லை. அவர்­களை சமூ­கத்தின் இலு­மி­னாட்­டி­க­ளா­கவே கரு­தப்­பட வேண்­டி­யுள்­ளது.

இது போன்ற எத்­தனை கொலைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றாலும் எவ்­வ­ளவு அறி­வு­ரைகள் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­டாலும் அதன் மூலம் எந்தப் பாடங்­க­ளையும் நமது சமூகம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்­பெறும் நேரத்தில் மாத்­திரம் அது குறித்துக் கொக்­க­ரிப்­பதும் அடிப்போம் உதைப்போம் என கூப்­பாடு போடு­வதும் போதை வஸ்­துக்­களை இல்­லாது ஒழிக்க வேண்டும் என சப­த­மி­டு­வதும் அதன் பாவ­னை­யா­ளர்­களை அந்தப் பாவச் செயல்­க­ளி­லி­ருந்து விட­படச் செய்ய வேண்டும் என்று கங்­கணம் கட்­டு­வதும் வழக்கமாகிவிட்டது. அது மாத்திரமன்றி இதற்கு எதிராக பல பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களும் நாரே தக்பீர் கூறி முழக்­க­மி­டு­வதும் சோடா போத்­தலின் பொங்கு நுரை அள­வுடன் பொங்கி வழிந்து கப்சிப் ஆகி பின்னர் ஓய்ந்­து­விடும் அவல நிலை­யையே நமது சமூகம் வாடிக்­கை­யாகக் கொண்­டுள்­ளது.

இந்தப் போராட்ட கோஷங்­களை மீண்டும் மற்­று­மொரு இள­வ­யதுப் பெண் அல்­லது சிறுமி கொலை செய்­யப்­படும் வரை தற்­கா­லி­க­மாக பண்­ட­க­சாலை ராக்­கை­களில் அடுக்கி வைத்து விடுவர். இதுவே காலம் கால­மாக இன ­ரீ­தி­யா­கவும் மத ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் இடம்­பெறும் அவல நிலை­களின் போது நாம் நடந்து கொள்­கின்ற வரை­மு­றை­யாகும்.

கொலை செய்­யப்­பட்ட அப்­பாவிப் பெண் பிள்­ளைகள் மண்­ண­றை­களில் அடக்கஞ் செய்­யப்­ப­டு­வது போன்றே இந்த வெற்றுக் கோஷங்­களும் அந்தக் கப்­று­க­ளி­லேயே அடக்கஞ் செய்­யப்­பட்டு விடு­கின்ற புளித்துப் போன விநோத காட்­சி­க­ளையே தொடர்ந்தும் நாம் கண்டு வரு­கின்றோம்.

சிறு­மிகள் தொடக்கம் பரு­வ­ம­டைந்த யுவ­திகள் வரை அவர்கள் பெற்­றோரின் தீவிர கண்­கா­ணிப்பின் கீழ் நிச்­ச­ய­மாக இருந்­தே­யாக வேண்டும். இஸ்­லாத்தின் வரை­ய­றைகள் பேணப்­ப­டா­த­தா­லேயே இன்று நமது சமூ­கத்தில் பல தொல்­லை­க­ளுக்கு ஆளாக வேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் பின்­வரும் விட­யங்­களைப் பெற்­றோர்கள் பின்­பற்­றினால் நமது பெண் பிள்­ளை­களைப் பாது­காக்­கலாம் என்­பதைக் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

  • பரு­வ­ம­டை­யாத சிறு­மி­களை அக்கம் பக்­கத்­தி­லுள்ள எந்தக் கடை­க­ளுக்கும் வீட்­டுக்குத் தேவை­யான எப்­பொ­ருட்­க­ளையும் வாங்க அனுப்­பு­வதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • பாட­சாலை மற்றும் பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்குத் தாய், தந்தை, சகோ­தரன், பெற்­றோரின் தந்­தைகள் (அப்பா) அல்­லது தாய்கள் (பாட்டி) ஆகி­யோரைத் தவிர வேறு யாரு­டனும் அவர்­களைத் தனி­யாகச் செல்­லவோ மீண்டும் அந்த வகுப்­பு­க­ளி­லி­ருந்து தனி­யாக அழைத்து வரவோ அனு­ம­திக்கக் கூடாது.
  • பாட­சா­லை­களில் 6ஆம் ஆண்­டி­லி­ருந்து உயர் தரம் வரை ஆண் பெண் கலவன் வகுப்­பு­க­ளாக இணைந்து இருக்­காமல் இரு பாலா­ருக்கும் தனித்­தனி வகுப்­பு­க­ளாக தரம் பிரித்தல்; இந்த நடை­முறை பல பாட­சா­லை­களில் தற்­போது நடை­மு­றையில் உள்­ளது. இல்­லாத இடங்­களில் அதனை உரு­வாக்­குதல் அவ­சி­ய­மாகும்.
  • வீடு­க­ளிலும் ஏனைய உற­வினர் வீடு­க­ளிலும் சில வைப­வங்­களின் போது மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நெருங்­கிய குடும்ப உற­வி­னரைத் தவிர வேறு ஆண் உற­வி­னர்கள் மடி­களில் போய் உட்­கா­ரவோ, தொடவோ, முத்­தங்கள் கொடுக்­கவோ அனு­ம­திக்­காமல் அவர்­களைத் தவிர்த்துக் கொள்ளல்.
  • ஆண் பெண் கலப்­புகள் நிகழும் இடங்­க­ளுக்கு (திரு­மணம், விளை­யாட்டு மற்றும் பாட­சாலை கலை­வி­ழாக்கள் போன்­ற­வற்­றிற்கும்) மேற்­கூ­றி­ய­வர்­க­ளது உரிய பாது­காப்­பின்றி செல்ல அனு­ம­திக்­கா­தி­ருத்தல்; பெற்­றோரின் கண்­கா­ணிப்­பி­லேயே பிள்­ளை­களைக் கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொள்ளல்
  • அத்­துடன் அறி­மு­க­மற்ற சிலர் சிறுவர் சிறு­மி­யர்­களைக் கவ­ரு­வ­தற்­காக அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் இனிப்புப் பண்­டங்­களை வாங்கக் கூடாது என அவர்­களைத் தின­சரி அறி­வு­றுத்திக் கொண்­டி­ருத்தல்
  • தொழி­லுக்­காக அல்­லது படிப்பு முத­லிய விட­யங்­க­ளுக்­காக வெளியே செல்ல வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் இருக்கும் பரு­வ­ம­டைந்த இளம் பெண்கள் எவ்­வ­கை­யிலும் தனி­மையில் செல்­­வதை அனு­ம­திக்கக் கூடாது.
  • இஸ்லாம் கூறும் வகையில் மஹ்­ர­மான தனது குடும்ப ஆண்­களின் துணை­யுடன் தான் அவர்கள் வெளியே செல்ல வேண்டும்.
  • அவர்கள் தொழில் புரியும் நிறு­வனம் அல்­லது கல்வி நிலையம் வரை இந்த மஹ்ரமிகள் தொடர்ந்து செல்ல வேண்டும். திரும்பி வரும்போதும் அதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
  • இவர்கள் திருமணமானால் கணவன்மார்கள் இந்த நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும்.

ஆகவே, நமது சிறு­மியர் யுவ­தி­களைத் தொடர்ந்தும் நாம் பலி­க்க­டாக்­க­ளாக ஆக்­கி­வி­டு­வதா? என்­பதை சிந்­தித்து வருமுன் காப்­போ­ராக மொத்­தத்தில் இஸ்லாம் வகுத்த விதி­மு­றை­களைக் கவ­னத்திற் கொண்டு ஆண் பெண் கலப்­பு­க­ளையும் சந்­திப்­பு­க­ளையும் தவிர்த்து மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தொடர்ந்து உறு­தி­யுடன் பின்­பற்­றினால் காடை­யர்­க­ளி­ட­மி­ருந்தும் கய­வர்­க­ளி­ட­மி­ருந்தும் நமது அப்­பாவிச் சிறு­மி­க­ளையும் இளம் பெண்­க­ளையும் பாது­காத்துக் கொள்ள முடியும்.

அது தவிர அன்­றாட சோடா போத்தல் போராட்டங்களால் சாதிக்க முடிந்தது எதுவுமில்லை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.