தீர்வின்றித் தொடரும் கபூரிய்யா விவகாரம்!

0 471

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் இயங்­கி­வரும் வர­லாற்று புகழ்­மிக்க அர­புக் ­கல்­லூ­ரி­களில் மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி 92 வரு­ட­கால பழமை வாய்ந்த கலா­பீ­ட­மாகும். கபூர் ஹாஜி­யா­ரினால் வக்பு செய்­யப்­பட்டு பல தசாப்­த­ கா­ல­மாக சீராக இயங்கி வந்த கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி இன்று சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கபூ­ரிய்யா வக்பு சொத்­தல்ல அது குடும்பச் சொத்து என்று ஒரு குடும்­பத்­தி­னர் சொந்தம் கொண்­டா­டி­வரும் நிலையில் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியும் அதன் வக்பு சொத்­து­க­ளையும் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக சமூகம் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

கபூ­ரிய்யா அர­புக் ­கல்­லூரி தொடர்­பான வழக்­குகள் நீதி­மன்­றங்­களில் நிலு­வையில் உள்­ளன. வக்பு ட்ரிபி­யுனில் மூன்று வழக்­கு­களும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ஐந்து வழக்­கு­களும், மாவட்ட நீதி­மன்றில் ஒரு வழக்கும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன.

மாவட்ட நீதி­மன்றில் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும், தடை செய்­யப்­பட்ட புத்­த­கங்கள் போதனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அதி­ப­ருக்கு எதி­ராக வழக்­குத்­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பழைய மாணவர் சங்­கத்தின் உதவிச் செய­லா­ளரும், முன்னாள் முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னரும் வழக்­கு­களை நெறிப்­ப­டுத்­து­ப­வ­ரு­மான ஜி.ஏ.சி. ஹிப்­ப­துல்லா விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். இந்த வழக்கு ஜூன் மாதம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

விழிப்­பு­ணர்­வுக் ­கூட்டம்
கபூ­ரிய்யா அர­புக்­ கல்­லூ­ரியும் அதன் வக்பு சொத்­து­களும் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி எதிர்­நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்­சி­னைகள் என்­ப­ன­வற்றை சமூகமயப்­ப­டுத்தல் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கூட்டம் அண்­மையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டல் வர­வேற்பு மண்­ட­பத்தில் இடம்பெற்­றது. இக்­கூட்­டத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், சமூக ஆர்­வ­லர்கள் எனப் பலர் கலந்து கொண்­டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இஷாக் ரஹ்மான், காதர் மஸ்தான் மேலும் முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி உட்­பட மேலும் பல அர­சி­யல்­வா­தி­களும் கலந்து கொண்டு கருத்­துக்­களை வெளி­யிட்­டனர்.

ரவூப் ஹக்கீம் எம்.பி.
மர்ஹூம் அப்துல் கபூ­ரினால் வக்பு செய்­யப்­பட்ட வக்பு சொத்­துக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். மர்ஹூம் அப்துல் கபூர் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரிக்கு மஹ­ர­க­மயில் 17.5 ஏக்கர் காணியை வக்பு செய்­துள்ளார். கொழும்பில் கிரேண்ட்­பாஸில் இந்­துக்­கல்­லூ­ரியின் பரி­பா­ல­னத்­திற்­காக 2 ½ ஏக்கர் காணியை வக்பு செய்­துள்ளார்.

இந்த வக்பு சொத்­துக்கள் இன்று அப்துல் கபூ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ருக்கும், கல்­லூ­ரிக்கும் இடையில் பெரும் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக மாறி­யுள்­ளது. இவ்­வி­வ­காரம் நீதி­மன்றம் வரை கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கி­றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், வக்பு செய்­யப்­பட்ட நோக்­கத்­திற்கு மாறான நிலைப்­பா­டுகள் தவிர்க்­கப்­பட வேண்டும். இவ்­வி­வ­காரம் சுமு­க­மாக தீர்க்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கேற்­ற­வாறு வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இது தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆராய்ந்து வரு­கிறோம். முஸ்லிம் உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வுக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்து, இது தொடர்பில் பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­பட வேண்டும் என்­றார்.

ரிசாத் பதி­யுதீன் எம்.பி.
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி உட்­பட நாட்டின் பல பகு­தி­களில் வக்பு சொத்­துக்கள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் கவலை வெளி­யிட்டார். கபூ­ரிய்யா ஒரு தனியார் நிதியம் அல்ல, குடும்ப சொத்­தல்ல, அது முஸ்லிம் சமூ­கத்­துக்­கு­ரித்­தான வக்பு சொத்­தாகும். இதனை பாது­காப்­பது எம் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மை­யாகும் என்றார்.

முஸ்லிம் பாரா­ளுன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து உயர்­நீ­தி­மன்றில் விசேட மனு­வொன்­றினைத் தாக்கல் செய்து கபூ­ரிய்­யா­வையும் அதன் வக்பு சொத்­து­க­ளையும் பாது­காப்­ப­தற்கு அவ­ச­ர­மாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள், தீர்­வுகள் தொடர்பில் ஊடக மாநா­டு­க­ளிலும், விழிப்­பு­ணர்­வுக்­கூட்­டங்­க­ளிலும் பேசிப்­பே­சியே இருக்­கி­றார்­களே தவிர ஆக்க பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. இவ்­வா­றான விட­யங்கள் காலம் தாழ்த்­தாமல் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­ய­தாகும்.

தீர்­மானம் நிறை­வேற்றம்
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி தொடர்­பான விழிப்­பு­ணர்வுக் கூட்­டத்தில் பின்­வரும் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து உயர் நீதி­மன்­றத்­திலோ அல்­லது மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றிலோ வழக்­கொன்­றினை தொடர்­வ­தற்­கான சட்ட விட­யங்­களை ஆராய்­வ­தற்­கான ஒரு குழுவை அவ­ச­ர­மாக தெரிவு செய்தல்.

சிவில் சமூக அமைப்­புகள் தங்­களால் மேற்­கொள்ள முடி­யு­மான விட­யங்கள் குறித்து ஆராய்தல். அத்­தோடு ஒருமித்த தரப்­பாக நின்று நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுடன் சம­ரச பேச்சுவார்த்­தை­யினை ஆரம்­பித்தல்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைந்து தெரி­வுக் ­கு­ழு­வொன்­றினை நிய­மித்து வக்பு சொத்­து­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல் எனும் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

மகஜர் கைய­ளிப்பு
இதே வேளை விழிப்­பு­ணர்வு கூட்­டத்­தின்­போது கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி தொடர்­பான மகஜர் ஒன்று பழைய மாணவர் சங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டது.
மக­ஜரின் பிர­திகள் கூட்­டத்தில் கலந்து கொண்ட அனை­வ­ருக்கும் கைய­ளிக்­கப்­பட்­டன.
மக­ஜரில் உள்­ள­டங்­கி­யுள்­ளவை.

மர்ஹூம் அப்துல் கபூ­ரினால் இலங்­கையின் முஸ்­லிம்­களின் சன்­மார்க்க கல்­விக்­காக வழங்­கப்­பட்­டதே கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரி­யாகும்.

கிரேண்ட்பாஸ் காணி (முன்னாள் சுலைமான் வைத்­தி­ய­சாலை) மூலம் கிடைக்­க­பெறும் வரு­மானம் கபூ­ரிய்யா கல்­லூ­ரிக்கு வழங்­கப்­பட வேண்­டி­ய­தாகும்.
பொரு­ளா­தார மற்றும் பெள­தீக வளங்­களைக் கொண்­டுள்ள கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு இலங்கை முஸ்­லிம்­களின் சன்­மார்க்க கல்­விக்­கான ஒரு பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்­றப்­பட வேண்டும்.

நம்­பிக்கை பொறுப்­பா­ளர்கள் கல்­லூ­ரி­யி­னதும் அதன் மாண­வர்கள் பழைய மாண­வர்கள் குறித்து கூறி­வரும் உண்­மைக்கு புறம்­பான அப்­பட்­ட­மான பொய்­க­ளையும் அவ­தூ­று­க­ளையும் நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.

மர்ஹூம் அப்துல் கபூரின் நான்­கா­வது பரம்­ப­ரையில் வந்த ஒரு சிலரால் கல்­லூ­ரிக்கும் அதன் உடை­மைக்கும் அதன் இருப்­பிற்கும் ஆபத்­தேற்­பட்­டி­ருப்­பதை கருத்­திற்­கொண்டு முஸ்லிம் அர­சியல் மற்றும் மார்க்க சிவில் அமைப்­பு­களின் தலை­மைகள் கபூ­ரிய்யா கல்­லூ­ரி­யையும் அதன் உடை­மை­க­ளையும் பாது­காப்­ப­தற்கும் வளர்த்­தெ­டுப்­ப­தற்கும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியும் அதன் கிராண்ட்பாஸ் காணியும் இன்று சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு பேர­ழிவைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருப்­பதை பாது­காத்து மீட்­டுத்­த­ர­வேண்­டிய பொறுப்பும் கட­மையும் எம் அனை­வ­ரி­னதும் ஆகும். எனவே இவ்­வி­வ­கா­ரத்தை உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வது எமது அர­சியல் மற்றும் சிவில் அமைப்­பு­களின் கட­மை­யாகும் என மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கபூ­ரிய்யாவில் பயங்­க­ர­வாதம்,
அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­டதா?
கபூ­ரி­ய்யா அர­புக்­கல்­லூ­ரியின் நம்­பிக்­கை­யாளர் சபை அங்கு பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும், பாட­வி­தா­னத்தில் அடிப்­ப­டை­வாத கருத்­துகள் கொண்ட புத்­த­கங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கிரு­லப்­பனை சி.ஐ.டி. பிரிவில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தது. தடை செய்­யப்­பட்ட புத்­த­கங்கள் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக கபூ­ரிய்யா பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை சி.ஐ.டி.யினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

பழைய மாணவர் சங்கம் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியும் அதன் சொத்­துக்­களும் தனியார் நம்­பிக்கை நிதி­யத்­துக்கு சொந்­த­மா­ன­தல்ல. அது வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்கள் என வக்பு சபையில் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபைக்கு எதி­ராக வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­த­த­னை­ய­டுத்தே கபூ­ரிய்யா நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் பழைய மாணவர் சங்­கத்­துக்கு எதி­ராக சி.ஐ.டி.யில் முறை­பாடு செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். பழைய மாண­வர்­சங்கம் சட்­ட­வி­ரோத குழு­வெ­னவும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் டில்சாட் மொஹமட் சி.ஐ.டி. விசா­ர­ணையின் போது ‘பழைய மாணவர் சங்கம் சட்­ட­வி­ரோ­த­மான குழு­வல்ல. பயங்­க­ர­வா­தி­க­ளுடன் இச்­சங்­கத்­துக்கு எவ்­வித தொடர்பும் இல்லை. கல்­லூ­ரியில் தடை செய்­யப்­பட்ட புத்­த­கங்கள் இல்லை. பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­ட­வு­மில்லை. பயங்­க­ர­வாதத்­துடன் எம்மை தொடர்புபடுத்­து­வதை நாம் முழு­மை­யாக மறுக்­கின்றோம் என்று தெரி­வித்தார்.

இந்­நி­லையில் சி.ஐ.டியினர் மூன்று புத்­த­கங்­களின் போட்டோ பிர­தி­களை பழைய மாணவர் சங்­கத்தின் செய­லா­ள­ரிடம் காண்­பித்­தனர். அப்­பி­ர­திகள் கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் சி.ஐ.டி.க்கு வழங்­கப்­பட்­ட­வை­யாகும் என டில்சாட் மொஹமட் கூறினார்.

 

போதிக்கப்படும் பாட நூல்கள்

இவை இமாம் இப்னு தைமி­யாவின் பத்­வாக்கள், கிதாபுத் தெளஹீத், உலூமுல் குர்ஆன் என்­ப­ன­வாகும். இப்­புத்­த­கங்கள் அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிப்­பன என சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர். இதற்கு மறுப்புத் தெரி­வித்த டில்சாட் மொஹமட் இது தொடர்பில் விளக்­க­ம­ளித்தார்.

இமாம் இப்னு தைமி­யாவின் பத்­வாக்கள் என்ற நூல் அறிஞர் வழங்­கிய பத்­வாக்­க­ளையே குறிக்­கி­றது. இதைப் பின்­பற்ற வேண்டும் என்­ப­தல்ல. அதே­போன்று கிதாபுத் தெளஹீத் எ-னும் நூலின் பொருள் அரபு மொழியில் கிதாப் என்­பது புத்­தகம், தெளஹீத் என்­பது ஏகத்­துவம் என்­ப­தா­கவும், உலூமுல் குர்ஆன் என்றால் கற்­ப­தற்குத் தேவை­யான அறிவு என்றும் விளக்­க­ம­ளித்தார்.

‘காபிர்­க­ளைக் ­கண்டால் .ெகால்­லுங்கள்’ என குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ள­தாக ஞான­சார தேரர் முறை­யிட்­டுள்ளார். ஆனால் உலூமுல் குர்ஆன் பற்­றிய அறிவு இருந்தால் இவ்­வாறு ஞான­சா­ர­தேரர் முறை­யிட்­டி­ருக்­க­மாட்டார். இந்நூல் கட்­டாயம் படித்­துக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.இக்­க­லை கட்­டாயம் அல்­குர்­ஆனை படிக்கும் ஒவ்­வொ­ரு­வரும் அறிந்­தி­ருக்க வேண்டும். இது­பற்­றிய தெளி­வின்­றியே முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்றார்.
கிதாபுத் தெளஹீத் என்ற நூல் இஸ்­லாத்தின் ஏகத்­துவ கொள்­கையை விலாவா­ரி­யாக விளக்கும் நூலாகும் என டில்சாட் மொஹமட் விளக்­க­ம­ளித்தார். அத்­தோடு இந்­நூல்கள் நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும் பங்கம் ஏற்­ப­டுத்தும் கருத்­துக்­களைக் கொண்­டி­ருந்தால் அது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு செய்­யலாம் என்றும் கூறினார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சி.ஐ.டி.பிரிவின் அதி­கா­ரிகள், இமாம் இப்னு தைமி­யாவின் பத்­வாக்கள் என்ற நூல் ஈரானில் தடை செய்­யப்­பட்­டுள்­ளதே என டில்சாட் முஹம்­ம­திடம் வின­வி­னார்கள். அது ஈரான் ஆட்­சி­யா­ளர்­களின் தனிப்­பிட்ட தீர்­மானம் எனத் தெரி­வித்த டில்சாட் அது தொடர்பில் ஈரான் அர­சிடம் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம் எனப் பதி­ல­ளித்தார்.

மாணவர் அனு­மதி?
கபூ­ரிய்யா நம்­பிக்கை பொ-றுப்­பாளர் சபை 2023 ஆம் ஆண்­டிற்­கான புதிய மாண­வர்­களை அனு­ம­திப்­ப­தற்கு விண்­ணப்பம் கோரி­யி­ருந்­தது. நேர்­மு­கப்­ப­ரீட்­சையும் நடத்­தப்­பட்­டது. ஆனால் புதிய மாண­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டார்­களா? என்­பதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிந்து கொள்ள முடி­ய­வில்லை.

இதே­வேளை கல்­லூ­ரியில் கற்­றுக்­கொண்­டி­ருந்த மாண­வர்­க­ளுக்கு நோன்பு கால விடு­மு­றையின் பின்பு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. 57 மாண­வர்கள் கல்­வியைத் தொடர முடி­யாது வீடு­களில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். இவர்­களின் நிலைமை என்ன? இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு மாண­வர்­களின் பெற்­றோர்­களால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கபூ­ரி­ய்யாவின் பொது மக்­க­ளுக்­கான
அறி­வித்தல்
மர்ஹூம் நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்­களால் இலக்கம் 2125 உடைய 1935.11.22 ஆம் திக­தி­யி­டப்­பட்ட நம்­பிக்கைப் பத்­தி­ரத்தின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டதே என்.டி.எச். அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம் என கபூ­ரி­ய்யாவின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை வெளி­யிட்­டுள்ள பொது­மக்­க­ளுக்­கான அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அறி­வித்­தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; அப்துல் கபூர் நம்­பிக்கை நிதியம் என்­பது இஸ்­லா­மிய கருணைக் கொடை நம்­பிக்கை நிதி­யமோ அல்­லது சட்­டத்தின் கீழான ஒரு கரு­ணைக்­கொடை நிதி­யமோ அல்ல. எனவே கூறப்­பட்ட நம்­பிக்கை நிதியம் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் கருணைக் கொடை நம்­பிக்கை நிதி­யாக அல்­லது 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க வக்பு சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­ட­தல்ல. அத்­தோடு இது ஒரு தனியார் வெளி­பாட்டு நம்­பிக்கை நிறு­வ­ன­மா­கவே தொடர்ந்து இயங்கி வரு­கி­றது.

அப்துல் கபூர் நம்பிக்கை வெளிப்பாட்டு அமைப்பின் நிறுவுனர் 2125 ஆம் இலக்க நம்பிக்கை நிதியப் பத்திரத்தின் 6 ஆவது சரத்தில் நம்பிக்கை நிதியம் ஆங்கில சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படவேண்டும். இதன் மூலம் வக்பு சட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.ஒரு போதும் அவ்வாறு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கவுமில்லை. அதன் கூறப்பட்ட நோக்கங்கள் நம்பிக்கைப் பத்திரத்தின் விடயங்களுக்கு ஏற்ப அமைந்தவை என்பதுடன் அதில் முஸ்லிம் கருணை நம்பிக்கை நிதியம் அல்லது வக்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் வேண்டாம்
அண்மையில் நடாத்தப்பட்ட ‘கபூரிய்யாவைப் பாதுகாப்போம்’ எனும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தாமதியாது செயலுறுப்பெற வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் அதிக கரிசனை கொண்டு கபூரிய்யாவையும் அதன் வக்பு சொத்துக்களையும் அழிவிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும் இதுவே சமூகத்தின் அபிலாஷையுமாகும்.

அத்­தோடு கல்­லூ­ரியில் மாண­வர்கள் வரு­டக்­க­ணக்கில் படித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் அவர்­க­ளது கல்வி தற்­போது கல்­லூரி நிர்­வா­கத்­தினால் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் உட­ன­டி­யாக கல்­வியைத் தொடர அனு­ம­திக்க வேண்டும். மேலும் வாராந்தம் சுமார் 1000 பேர் அளவில் ஜும்ஆ தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த கபூ­ரிய்யா பள்­ளி­வாசல் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் இழுத்து மூடப்­பட்­டுள்­ளது. சமயக் கட­மைகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. எனவே முஸ்லிம் அர­சியல்வாதி­களும் சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னங்­களும் தூங்­கிக்­கொண்­டி­ருக்­காது விழித்தெழ வேண்டும் என்பதும் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.