புதிய அமைப்புப் போராட்டம் பூர்த்திபெற வேண்டும்

0 346

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஒரு மகத்­தான போராட்டம்
கடந்த வருடம் காலி­மு­கத்திடலில் ஆரம்­ப­மா­கிய இளைய தலை­மு­றையின் போராட்டம் இடம்­பெற்­றி­ருக்­கா­விட்டால் ராஜ­பக்­சாக்­களே இன்னும் இந்த நாட்டை ஆண்­டு­கொண்­டி­ருப்பர். மகிந்­த­வையும் கோத்­தா­ப­ய­வையும் விரட்­டி­ய­டித்து ஏனைய ராஜ­பக்ச குடும்­பத்­தி­ன­ரையும் பதவி துறக்கச் செய்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வையும் தினேஷ் குண­வர்த்­த­ன­வையும் முறையே ஜனா­தி­ப­தி­யாகவும் பிர­த­ம­ரா­கவும் பதவி வகிக்­கச்­செய்­த­மைக்கு அந்த இளைய தலை­மு­றை­யி­னரின் போராட்­டமே காரணம் என்­பதை யார்தான் மறுப்பர்?

எனினும், அந்த மாற்­றத்­தையே குறிக்­கோ­ளாகக் கொண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்­ட­மல்ல அது. அதன் முக்­கிய குறிக்கோள் அதை­விட மகத்­துவம் வாய்ந்­தது. சுருக்­கமாக் கூறினால், கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டைக் கட்­டி­யாண்ட அர­சியல் பொரு­ளா­தார சமூக அமைப்­பையும் அந்த அமைப்பின் அடித்­த­ள­மாக அமைந்த சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­தையும் களைந்­தெ­றிந்து எல்­லாரும் இந்நாட்டு மன்­னர்­களே என்ற அடிப்­ப­டையில் ஒரு புதிய ஜன­நா­யக சகாப்­தத்­தையும் ஊழ­லற்ற அர­சாங்­கத்­தையும் அமைக்கத் துடித்த இள­வல்­களின் வர­லாற்றுப் புகழ்­மிக்க போராட்­டமே அது என்றால் மிகை­யா­காது.

“அமைப்பை மாற்­று”, “225 வேண்டாம்” என்ற அவர்­க­ளது இரு சுலோ­கங்­க­ளுக்குள் இரண்­டா­வதின் ஒரு சிறு விளை­வையே ஆரம்­பத்தில் கூறிய அர­சியல் மாற்­றங்கள் எடுத்­துக்காட்டுகின்­றன. ஆனால் அதே 225 இன்னும் நாடா­ளு­மன்­றத்­துக்குள் குந்திக் கொண்­டி­ருக்­கின்­றன. அதே­போன்று பழைய அமைப்பே இன்னும் தொடர்­கின்­றது. ஆகவே புதிய அமைப்பு வேண்டி ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் பூர்த்­தி­பெ­றாமல் இடை­யிலே நின்று விட்­டது. இல்லை, அது புதிய ஜனா­தி­ப­தியின் அரா­ஜ­கத்­தினால் படை­கொண்டு நிறுத்­தப்­பட்­டது. எனினும் அப்­போ­ராட்­டத்தின் அடுத்த கட்டம் ஆரம்­ப­மாக வேண்­டிய சூழல் இன்று உரு­வா­கி­யுள்­ளது. அதைப்­பற்­றிய சில சிந்­த­னை­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

பன்­முகப் பிரச்­சினை
இந்த நாட்டைப் பீடித்­துள்ள பிரச்­சினை பன்­மு­கப்­பட்­ட­தொன்று. ஆங்­கில வர­லாற்­றா­சி­ரியர் ஒருவர் அதனை “polycrisis” என்று கூறி­யுள்ளார். அர­சியல் கலா­சாரம், பொரு­ளா­தா­ரர வங்­கு­ரோத்து, இன­வாதம், மத­வாதம், தொற்று நோய், சீர­ழியும் சுற்றுச் சூழல் என்­ற­வாறு பிரச்­சி­னை­களை ஒவ்­வொன்­றாக அடுக்­கிக்­கொண்டே போகலாம். அவற்றுள் இன்று முன்­னி­லையில் நிற்­பது பொரு­ளா­தாரப் பிரச்­சினை. ஆனால் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தாயாக அமைந்­துள்­ளது பேரி­ன­வாத அர­சியல் கட்­ட­மைப்பு. அந்த அமைப்பை மாற்­றாமல் ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காண­மு­டி­யாது என்­ப­தைத்தான் இளை­ஞர்­களின் முத­லா­வது கோரிக்கை உள்­ள­டக்கி இருந்­தது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக அப்­போ­ரா­ளி­க­ளி­டையே ஒரு தலை­மைத்­துவம் உரு­வா­கா­த­தனால் அக்­கோ­ரிக்­கையின் உள்­ள­டக்­கத்தை விரி­வாக விளக்கும் ஒரு வாய்ப்பை அவர்கள் இழந்து நின்­றனர். எனினும் அந்தப் போரா­ளி­களின் நடத்­தையை உன்­னிப்­பாக அவ­தா­னித்­த­வர்­க­ளுக்கு அவர்­களின் பக்­கச்­சார்­பற்ற அர­சியல் நிலைப்­பாடும், சர்வ இனங்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரு­மைப்­பாடும், தற்­புகழ் தேடா நிலைப்­பாடும், அப்­போராட்டத்தின் தூய நோக்­கி­னையும் அவர்கள் கோரிய புதிய அமைப்பின் விழு­மி­யங்­க­ளையும் நன்கு தெளி­வு­ப­டுத்தும். எனவே அமைப்பை மாற்­றாமல் தனியே பொரு­ளா­தாரச் சிக்­க­லை­மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்தி அதற்­கொரு பரி­காரம் காண விளை­வது நிரந்­தரப் பய­ன­ளிக்­காது என்­பதே அவர்­க­ளது தலை­யாய வாதம் என்று கூறு­வது பொருந்தும். ஆனால் ஒரு பன்­முகப் பிரச்­சி­னையைக் கூறு­போட்டு அதில் ஒன்றை மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்தி அதற்குப் பரி­காரம் தேட முனை­கி­றது ரணிலின் ஜனா­தி­பதி ஆட்சி.

பொரு­ளா­தாரப் பிரச்­சினை
ஒரு தாயின் கர்ப்பப் பையிலே கோளாறு. அதனால் அவள் வயிற்­றிலே தரித்த அத்­தனை குழந்­தை­க­ளுக்கும் வெவ்­வேறு வித­மான நோய்கள். அந்தக் குழந்­தை­களுள் ஒன்­றுதான் பொரு­ளா­தாரம். அதன் நோய்க்கு வங்­கு­ரோத்து என்று பெயர். அதற்கு வைத்­தியம் பார்க்கச் சர்­வ­தேச நாணய நிதி என்ற வைத்­தி­யரை வர­வ­ழைத்­துள்ளார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ. அந்த நிதியின் பரி­கா­ரங்­களுள் வரி­களை உயர்த்­து­வதும், அர­சாங்கச் செல­வி­னங்­களைக் குறைப்­பதும், பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனி­யார் ­மயப்படுத்­து­வதும், ஊழல்­களை ஒழிப்­பதும், நாணய மதிப்பை சந்தைச் சக்­தி­களின் பொறுப்பில் விடு­வதும் என்­ற­வாறு பல அடங்கும். ஆனால் இந்தப் பொரு­ளா­தாரக் குழந்­தையின் நோய் தாய்­வ­ழி­யிலே பிறந்த ஒரு பரம்­பரை நோய். அது இந்தப் பரி­கா­ரங்­களால் மட்டும் தீருமா என்­ப­துதான் இக்­கட்­டு­ரை­யா­ளனின் கேள்வி.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்­கு­த­வாது
நீண்டகா­ல­மாகப் பொரு­ளி­ய­லுடன் ஈடு­பா­டு­டையோன் என்ற ரீதியில் பொரு­ளி­யல்­வா­தி­களின் ஒரு குறு­கிய நோக்­கினை இங்கே சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. தனியே பொரு­ளா­தாரக் கார­ணி­க­ளுக்கு மட்டும் முக்­கிய இடம் கொடுத்து பொரு­ளா­தா­ரத்­துக்கு அப்­பாற்பட்ட மானிட கார­ணி­களை வெறும் எடு­கோள்­க­ளாக மட்டும் கருதி, அவற்றை ஒதுக்கித் தள்­ளி­விட்டுப் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை ஒரு குறிப்­பிட்ட மாதி­ரியின் எல்­லைக்குள் நின்று அணு­கி­யதால் மக்­களின் வாழ்­வையும் அவர்­களின் அர­சு­களின் திட்­டங்­க­ளையும் எதிர்­பா­ராத விதத்தில் தாக்கி கோடிக்­க­ணக்­கான மக்­களின் வாழ்க்­கையை நாச­மாக்கி அர­சாங்­கங்­களின் நிதி நிலை­யையும் சுக்கு நூறாக்­கிய பல சம்­ப­வங்­களை இப்­பொ­ரு­ளியல் நிபு­ணர்­களால் முன்­கூட்­டியே உய்த்­து­ணர முடி­ய­வில்லை.

உதா­ர­ண­மாக, 1970களில் ஏற்­பட்ட எண்ணெய் வள­நா­டு­களின் சடுதி விலை­யேற்றம், 2009ல் ஏற்­பட்ட உலக நாணய நெருக்­கடி, 2021ல் ஏற்­பட்ட கொரோனா கொள்ளை நோய் என்­ப­ன­வற்றை எந்தப் பொரு­ளியல் ஞானி எதிர்­பார்த்து அர­சு­களை எச்­ச­ரித்தான்? ஏனெனில் அவை ஒவ்­வொன்றும் மானிட நட­வ­டிக்­கை­களால் ஏற்­பட்­டவை. பொரு­ளி­ய­லா­ளரின் கணிதத் தேற்­றங்­க­ளுக்குள் அவை அடங்­க­வில்லை. அத­னா­லேதான் அவர்­களின் பரி­கா­ரங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்­கா­யாக மாறின. இந்த உண்­மையை கருத்திற் கொண்டு சர்­வ­தேச நாணய நிதியின் பொரு­ளா­தாரப் பரி­காரம் இலங்­கையின் பன்­முகப் பிணிக்கு நிரந்­தரத் தீர்­வா­குமா என்ற கேள்­வியை அணு­குவோம்.

பேரி­ன­வாத அமைப்பின் பலிக்­கடா பொரு­ளா­தாரம்
சுதந்­திரம் கிடைத்த நாள் தொட்டு இன்­று­வரை பல்­லின மக்­களைக் கொண்ட இந்த மாணிக்கத் தீவு சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு மட்­டுமே சொந்தம், ஏனையோர் அன்­னியர், ஆதலால் இந்த நாட்டின் பொரு­ளா­தார வளங்­களும் அவற்றின் வளர்ச்­சியும் அந்தப் பெரும்­பான்­மை­யி­னரின் நல­னுக்­கா­கவே பயன்­ப­ட­வேண்டும் என்ற ஒரு பேரி­ன­வாதத் தாரக மந்­தி­ரமே நாட்டின் அர­சி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்­தையும் இதர அமைப்­பு­க­ளையும் அவற்றின் நட­வ­டிக்­கை­க­ளையும் கட்­டி­யாண்­டது. அவற்­றை­யெல்லாம் விப­ரிக்க கட்­டு­ரையின் நீளம் இடம் தராது. சுருக்­க­மாக ஒன்­றி­ரண்டை மட்டும் இங்கே சுட்­டிக்­காட்­டுவோம்.

1948ல் இந்­திய வம்­சா­வ­ழி­யி­னரின் பிரஜா உரி­மையை நீக்­கியும், அதன் பின்னர் அடுக்­க­டுக்­காக சட்­டத்தின் மூலம் இலங்கைத் தமி­ழரின் உரி­மை­க­ளுக்கு ஆப்­பு­வைத்தும், வன்­மு­றைகள் மூலமும் போர் மூலமும் அவர்­களின் உயிர்­களைக் கொன்றும், உட­மை­களை அப­க­ரித்தும், ஒட்டு மொத்­தத்தில் அவர்­க­ளையும்அந்நிய­ராக்­கியும், அதனைத் தொடர்ந்து அதே அட்­டூ­ழி­யங்­களை முஸ்லிம் சிறு­மை­யி­னர்­மீது அவிழ்த்­து­விட்டு அவர்­க­ளையும் அந்நி­ய­ராக்கி ஏப்பம் விட்­டது இப்­பே­ரி­ன­வாதம். அதனால் பொரு­ளா­தார வளர்ச்­சிக்குத் தேவை­யான முத­லீடு, முயற்சி, உழைப்பு, கல்­வித்­திறன் போன்ற வளங்­களை இச்­சி­று­பான்­மை­யி­ன­ரி­ட­மி­ருந்து துரி­த­மாகப் பெறு­வ­தற்கு நாடு தவ­றி­விட்­டது. இந்தப் பேரி­ழப்பை எண்­ணிக்­கையில் அள­விட முடி­யாது. ஆனால் அது எவ்­வாறு ஒரு புலம்­பெ­யர்ந்த சமு­தா­யத்தை உல­கெலாம் உரு­வாக்கி அந்த வளங்கள் எவ்­வாறு அந்நிய நாடு­களின் பொரு­ளா­தா­ரத்­துக்குப் பலமாய் இயங்­கு­கின்­றன என்­பதை அள­வி­டுதல் மூலம் அறிந்து கொள்­ளலாம். அந்த இழப்பு ஒரு புற­மி­ருக்க பேரி­ன­வாத அமைப்பு வளர்த்த இன்­னொரு நாச­காரக் கறையான் எப்­படி பொரு­ளா­தா­ரத்தை ஏழு தசாப்­தங்­க­ளாகச் செல்­ல­ரித்து இறு­தியில் அதனை வங்­கு­ரோத்­த­டையச் செய்­துள்­ளது என்­ப­தையும் விளங்க வேண்டும்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் ஜன­நா­ய­கத்தைத் திசை திருப்பி சுதந்­தி­ரத்­துக்குப் பின் வெற்­றி­பெற்ற ஒவ்வோர் அர­சாங்­கத்­தையும் அதற்கு அடி­மை­யாக்­கிற்று. பேரி­ன­வாத அமைப்பின் அபி­லா­ஷை­களை எந்த ஆட்­சி­யி­னரோ அதன் அதி­கா­ரி­களோ நிறை­வேற்­று­கின்­ற­னரோ அவர்­க­ளுக்குக் கட்­டற்ற சுதந்­தி­ரத்தை எல்­லாத்­து­றை­க­ளிலும் வழங்­கிற்று. அதன் பாரிய ஒரு விளை­வுதான் ஊழல். பிர­தமர் தொடக்கம் பியூன்­வரை ஊழல் ­வ­ழி­யாகச் செல்வம் திரட்­ட­லா­யினர். இந்த ஊழல் டி. எஸ் சேன­நா­யக்க அர­சாங்­கத்­தி­லி­ருந்தே ஆரம்­ப­மா­கிற்று. அது படிப்­ப­டி­யாக வளர்ந்து ராஜ­பக்­சாக்­களின் ஆட்­சியில் இம­யத்தை எட்­டிற்று. ஒரு மீன் நாறி­விட்­டதா என்­பதை அறிய அதன் தலையைப் பார்த்தால் தெரி­யுமாம். அது போல் பிர­த­மர்­களே ஊழல் நாய­கர்­க­ளானால் மற்­ற­வர்­க­ளைப்­பற்றிப் பேசவும் வேண்­டுமோ?

பொரு­ளா­தார வளர்ச்சி என்ற போர்­வையில் ஆடம்­ப­ர­மான திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. மத்தள விமான நிலையம், அம்­பாந்­தோட்டை கிரிக்கட் விளை­யாட்டு மைதானம் தாமரைக் கோபுரம் ஆகி­ய­வற்றை அதற்கு உதா­ர­ணங்­க­ளாகக் காட்­டலாம். இவற்­றிற்­கு எவ்­வ­ளவு செல­வா­கி­யது? அந்­தப்­பணம் எங்­கி­ருந்து வந்­தது? என்­ப­தற்­கெல்லாம் எந்தக் கணக்கும் இது­வரை இல்லை. இந்த லட்­ச­ணத்தில் பொரு­ளா­தாரம் வங்­கு­ரோத்து அடை­யாமல் என்ன செய்யும்? பொரு­ளா­தாரம் பேரி­ன­வா­தத்தின் பலிக்­க­டா­வாக மாறி­யது என்று கூறு­வது பொருந்தும். ஆகவே முதலில் திருத்­தப்­பட வேண்­டி­யது பேரி­ன­வாத அமைப்பா பொரு­ளா­தா­ரமா? இதில் ஒரு புதுமை என்னவெனில் பொரு­ளியல் நிபு­ணர்­களும் மற்றும் பண்­டி­தர்­களும் பேரி­ன­வாத அமைப்­புக்கும் பொரு­ளா­தா­ரத்­துக்கும் உள்ள நெருக்­க­மான தொடர்பை வெளிப்­ப­டுத்தத் தயங்­கு­வதே. அவர்­களின் இந்தத் தயக்கம் அவர்­களும் பேரி­ன­வா­தத்­துக்குப் பலி­யாகி உள்­ளார்­களோ என எண்ணத் தோன்­று­கி­றது.
ஆனால் போராட்ட இளை­ஞர்கள் அந்தத் தொடர்பைச் சரி­யாக விளங்­கி­ய­த­னா­லேதான் அமைப்­பையே மாற்று என்று குர­லெ­ழுப்­பினர். அதன்பின் நடந்­த­தென்ன?

ஜனா­தி­ப­தியின் சாகசம்
ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ பேரி­ன­வாத அமைப்பின் காவ­லர்­களால் பத­வியில் அமர்த்­தப்­பட்டு அவர்­களின் சிறைக்­கை­தி­யாகச் செயற்­ப­டு­கிறார் என்­பது யாவரும் அறிந்த உண்மை. அவர் பத­விக்கு வந்­ததும் முதன்­மு­த­லாகச் செய்த வேலை இளை­ஞர்­களின் ஆர்ப்பாட்டத்தை முறி­ய­டித்­த­தாகும். அதன்பின் அவர்­க­ளையும் தன்­பக்கம் ஈர்ப்­ப­தற்­காக அவர்­க­ளுக்குப் பச்­சைக்­கொடி காட்டி ஒரு சமா­தானப் பற­வைபோல் நடித்து, தனது 25 ஆண்டு காலப் பொரு­ளா­தார மாற்றத் திட்­டத்­துக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு அழைப்பு விடுத்­துள்ளார். இந்தப் பம்­மாத்து நாட­கத்­துக்கு இளைஞர் சமு­தாயம் பலி­யாகப் போவ­தில்லை.

அமைப்பை மாற்­றாமல் அதன் பலிக்­க­டா­வான பொரு­ளா­தா­ரத்தை மட்டும் தனி­மைப்­ப­டுத்தி அதன் அவ­லத்தைப் போக்­கு­வ­தற்கு சர்­வ­தேச நாணய நிதியின் உத­வி­யுடன் இப்­போது செயற்­படத் தொடங்­கி­யுள்ளார். அந்த நிதியின் நிபந்­த­னை­க­ளுக்கு அமை­யவே 2023 வர­வு­செ­லவுத் திட்­டமும் தீட்­டப்­பட்­டது. அதன் பாரிய தாக்­கங்­களை மக்கள் தினமும் அனு­ப­விக்­கின்­றனர். அதன் பாதிப்­பு­க­ளுக்கு ஆளா­கிய மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அவர்களின் வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு இம்மாதம் நடக்கவிருந்த ஊராட்சிமன்றத் தேர்தல் வாய்ப்பு வழங்கி இருக்கும். ஆனால் அதனையும் ஜனாதிபதி சாகசமாகப் பின்போட்டுள்ளார். நீண்ட காலச் சுபீட்சத்துக்காகச் சொற்ப காலத்துக்கு கஷ்டங்களை தாங்குமாறு ஜனாதிபதியும் அவரின் அமைச்சர்களும் மக்களிடம் வேண்டுகின்றனர். ஆனால் அந்த நீண்ட காலம் வரும்போது இந்த மக்களுள் எத்தனைபேர் உயிர் வாழ்வார்களோ? ஏன் ஜனாதிபதிதான் உயிரோடிருப்பாரோ?

இளைஞரின் போராட்டம்
தொடர வேண்டும்
ஜனாதிபதி கருதுவதுபோல் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளுடன் சிறிதளவு வளரத் தொடங்கினாலும் அது நிரந்தர வளர்ச்சியாகாது. காரணம் அமைப்பின் கோளாறு. அதனை மாற்றாமல் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நிரந்தர சுபீட்சம் இல்லை. இதனை இன்றுள்ள எதிர்க் கட்சிகளுள் தேசிய மக்கள் சக்தி மட்டுமே உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. ஏனைய கட்சிகள் சர்வதேச நாணய நிதியின் திட்டத்தைச் சரிகாண்கின்றன. ஏனெனில் அவர்களும் நடைமுறை அமைப்பின் அடிவருடிகளே. ஆதலால் இளைஞர் சமுதாயம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்துப் பூர்த்தி காண்பதே இந்த நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு ஒரே வழி.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.