இன்று நடக்க வேண்டிய தேர்தல் என்று நடக்கும்?

0 202

ஏ.ஆர்.ஏ. பரீல்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­டுமா? இன்றேல் பிற்­போ­டப்­ப­டுமா? என்ற சந்­தேகம் மக்கள் மத்­தி­யிலும், அர­சியல் கட்­சி­களின் மத்­தி­யிலும் வலுத்து வந்த நிலையில், கடந்த வாரம் உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு மக்கள் மத்­தி­யிலும் அர­சியல் கட்­சிகள் மத்­தி­யிலும் நம்­பிக்கை ஒளியை சுடர்­விடச் செய்­துள்­ளது.

2023 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை முடக்கும் செயற்­பாட்­டுக்கு கடந்த வாரம் உயர்­நீ­தி­மன்றம் இடைக்­கால தடை­வி­தித்­துள்­ளது. நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செய­லாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகி­யோ­ருக்கே இந்த இடைக்­கா­லத்­த­டை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து மக்கள் மத்­தி­யிலும் அர­சியற் கட்­சிகள் மத்­தி­யிலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பிலும் நம்­பிக்கை ஒளி பிறந்­துள்­ளது.

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான ப்ரீத்தி பத்மன் சூர­சேன, ஜனக்க டி சில்வா மற்றும் பிரி­யந்த ஜய­வர்­தன ஆகிய மூவ­ர­டங்­கிய நீதி­ய­ரசர்கள் குழாமே இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்­ளது.

2023 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் உள்­ளூ­ராட்­சி­மன்­றத்­தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை முடக்­கு­வதை சவா­லுக்­குட்­ப­டுத்தி ஐக்­கிய மக்கள் சக்­தியின் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார தாக்கல் செய்­தி­ருந்த மனு­ மீ­தான பரி­சீ­ல­னையின் போதே உயர்­நீ­தி­மன்றம் இந்த இடைக்­கால தடை உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்­ளது.

இதே வேளை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அரச அச்­சகக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கும் நிதி­வி­டுவிக்­கா­தி­ருப்­பதை தடுக்கும் வகையில் மற்­று­மொரு இடைக்­கால தடை­யுத்­த­ர­வி­னையும் உயர்­நீ­தி­மன்றம் பிறப்­பித்­துள்­ளது. மனு­மீ­தான விசா­ர­ணையை எதிர்­வரும் மே மாதம் 26 ஆம் திக­தி­வரை நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­துள்­ளது.

தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான
அர­சாங்­கத்தின் சூழ்ச்சி
தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்ட சூழ்ச்­சி­ சிங்­கள ஊட­க­மொன்று தகவல் அறியும் சட்டம் ஊடாக (RTI) பெற்­றுக்­கொண்ட தக­வல்கள் ஊடாக வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம், பொது­நிர்­வாக அமைச்சின் செய­லா­ள­ரினால் மீள அறி­விக்­கப்­ப­டும்­வரை வேட்­பா­ளர்­க­ளுக்­கான கட்­டுப்­பணத்தை ஏற்­றுக்­கொள்­ள ­வேண்டாம் என மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு சுற்­று­நி­ரு­ப­மொன்று அனுப்­பி­வைக்­கப்­பட்­டது. இச்­சுற்று நிருபம் நாட்டில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. இந்தச் சுற்­று­நி­ருபம் அமைச்­ச­ரவைத் தீர்­மா­னத்தின் படியே வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்­பது தகவல் அறியும் சட்­டத்தின் ஊடாக தெரிய வந்­துள்­ளது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்­டத்தின் ஊடாக இந்த விப­ரங்­களை சிங்­கள ஊட­க­மொன்று பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

மீள அறி­விக்­கப்­படும் வரை கட்­டுப்­பணத்தை ஏற்­றுக்­கொள்ள வேண்டாம் என பொது நிர்­வாக அமைச்சின் செய­லா­ள­ருக்கு அமைச்­ச­ரவை உத்­த­ரவு பிறப்­பிக்க வில்லை என அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தாலும் அவ்­வா­றான உத்­த­ர­வு­ பி­றப்­பிக்­கப்­பட்­டுள்ளதென்­பதே உண்­மை­யாகும்.

இவ்­வா­றான தீர்­மானம் அமைச்­ச­ர­வை­யினால் எடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தமர் தினேஷ் குண­வர்­தன கடந்த ஜன­வரி மாதம் 17 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் பிர­த­மர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்தும் உண்­மைக்குப் புறம்­பா­னது என உறு­தி­யா­கி­யுள்­ளது.

அமைச்­ச­ரவை அலு­வ­லகம் அமைச்சின் செய­லா­ள­ருக்கு 23/எம்.ஐ.எஸ்.சி (001) இலக்­கத்தின் கீழ் அனுப்பியுள்ள அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தில், மீள அறி­விக்­கப்­ப­டும்­வரை உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு அபேட்­ச­கர்­க­ளி­ட­மி­ருந்து கட்­டுப்­பணத்தை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டாம் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­தோடு தேர்­தல்கள் ஆணைக்­குழு தேர்தல் தொடர்பில் பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்து அர­சுக்கு அறி­வித்­ததன் பின்பு தேர்தல் தொடர்பில் தேவை­யான நிதி வழங்­கு­வது தொடர்பில் கவனம் செலுத்­தும்­ப­டியும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கட்­டுப்­பணம் ஏற்­றுக்­கொள்­வதை இடை­நி­றுத்­தும்­படி குறிப்­பிட்டு மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு கடிதம் அனுப்­பி வைத்­துள்­ள­மைக்­காக பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் மன்­னிப்பு கேட்­க­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

செய­லாளர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் மன்­னிப்பு கோரி­ய­தற்­கான எவ்­வித எழுத்து மூல ஆவ­ணங்­களும் இல்லை என பொது­ நிர்­வாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அமைச்­ச­ர­வையின் 2023.01.10 ஆம் திக­திய தீர்­மா­னத்­துக்கு அமைய செயற்­பட்­ட­த­னாலே மன்­னிப்பு கேட்­க­வில்லை என அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை 2023.01.13 ஆம் திகதி தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்­கவின் கையொப்­பத்­துடன் கூடிய கடி­தத்தில் பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் நீல் பண்­டார ஹபு­ஹின்ன, குறிப்­பிட்ட கடிதம் தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அசெ­ள­க­ரி­யங்கள் ஏற்­பட்­டி­ருந்தால் மன்­னிப்பு கேட்ப­தாக கூறினார் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பொது­நிர்­வாக அமைச்சின் செய­லாளர் நீல் பண்­டார ஹபு­ஹின்­ன­வுக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வேண்­டிய தேவை­யில்லை என அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் பந்துல குண­வர்­தன கடந்த ஜன­வரி 23 ஆம் திகதி அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தேர்தல் திகதி அறி­விப்பு
உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான புதிய திக­தியை தேர்­தல்கள் ஆணைக்­குழு அறிவித்­துள்­ளது. தேர்தல் செல­வு­க­ளுக்­கான நிதி­வி­டு­விப்பு தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் பிறப்­பித்­துள்ள உத்­த­ர­வினைக் கருத்­திற்­கொண்டு இந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஆணைக்­கு­ழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி நிமல் புஞ்சி ஹேவா தெரி­வித்தார்.

தேர்தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான நிதியைப் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் திறை­சே­ரியின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­த­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பை நடாத்­து­வ­தற்­கான புதிய திக­தியை கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­விப்­ப­தாக ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருந்­தது. இதற்­க­மைய அன்­றை­ய­தினம் ஆணைக்­குழு ஒன்­று­கூடி ஆராய்ந்­தது. தேர்தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு திறை­சேரி நிதி ­வி­டு­விப்பைத் தடுத்­துள்­ளமை நாட்டின் நிதி அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­திடம் உள்­ளதால் நிதி விடு­விப்பு தொடர்பில் பாரா­ளு­மன்றம் தலை­யிட வேண்டும் என வலி­யு­றுத்தி தேர்­தல்கள் ஆணைக்­குழு சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­த­ன­வுக்கு அனுப்பி வைத்­தி­ருந்த கடிதம் தொடர்­பிலும் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது.

இந்­நி­லை­யிலே 2023 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் மூலம் தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை நிறுத்தி வைப்­ப­தைத் ­த­டுத்து நிதி­ய­மைச்சின் செய­லா­ள­ருக்கு உயர்­நீ­தி­மன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பிறப்­பித்­துள்­ளது. உயர் நீதி­மன்றின் உத்­த­ர­வைக் ­க­ருத்திற் கொண்டு தேர்­தல்கள் ஆணைக்கு தனது நகர்­வினை முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

நீதி­மன்றின் உத்­த­ர­வுக்­க­மைய
செயற்­ப­டுவோம்
இது­வரை காலம் தொடர்ச்­சி­யாக உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை சூட்­சு­ம­மாக பிற்­போட்டு வந்த அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்கள் தேர்­த­லுக்­கான நிதி தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள உத்­த­ர­வி­னை­ய­டுத்து மென்­மை­யான போக்­கி­னைக்­கொண்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான நிதி­தொ­டர்பில் உயர்­நீ­தி­மன்­றத்­தினால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள உத்­த­ர­வுக்­க­மைய செயற்­ப­டு­வதில் எவ்­வித சிக்­க­லு­மில்லை என நிதி இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லாப்­பிட்­டிய தெரி­வித்­லுள்ளார்.
நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் தேர்­த­லுக்­கான நிதியை வழங்­கு­வது கடி­ன­மாகும் என்று ஏற்­க­னவே திறை­சே­ரியின் செய­லா­ள­ரினால் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை முடக்­கு­வதை சவா­லுக்­குட்­ப­டுத்தி, ஐக்­கிய மக்கள் சக்­தியின் பொதுச்­செ­ய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டா­ர­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனு மீதான விசா­ர­ணையின் போதே உயர்­நீ­தி­மன்றம் குறிப்­பிட்ட தீர்ப்­பினை வழங்­கி­யுள்­ளது.

ஏப்­ரலில் தேர்தல்?
நிதி நெருக்­கடி உட்­பட தவிர்க்க முடி­யாத பல கார­ணங்­களைக் கொண்டு பிற்­போ­டப்­பட்டு வந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்­து­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான திக­தியைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக தேர்­தல்கள் ஆணைக்­குழு நேற்று முன்­தினம் செவ்­வாய்­கி­ழமை மீண்டும் ஒன்று கூடி­யது. இவ்­வ­ரு­டத்­திற்­கான வரவு செலவு திட்­டத்தில் தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை முடக்­கு­வ­தற்கு உயர் நீதி­மன்றம் இடைக்­காலத் தடை விதித்­துள்ள பின்­ன­ணி­யிலே தேர்­தல்கள் ஆணைக்­குழு நேற்று முன்­தினம் ஒன்று கூடி­யது. இக்­கூட்­டத்­திலே உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லுக்­கான புதிய திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல்கள் ஆணைக்­குழு இது தொடர்பில் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது. அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ‘ உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் கட்­ட­ளைச்­சட்­டத்தின் 38 (1) ஏ.உறுப்­பு­ரையின் கீழ் ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளுக்­கு­மான மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளுக்கு கடந்த ஜன­வரி 30 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் இம்­மாதம் 9 ஆம் திகதி (இன்று) இடம்­பெ­று­மென அறி­விக்­கப்­பட்­டது.

வாக்­குச்­சீட்­டு­களை அச்­சிடும் பணிகள் மற்றும் தேர்­த­லுடன் தொடர்­பு­டைய ஏனைய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எழுந்த எதிர்­பா­ரா­ததும், தவிர்க்க முடி­யா­த­து­மான கார­ணி­களால் 9 ஆம் திகதி (இன்று)நடை­பெ­ற­வி­ருந்த தேர்­தலை நடத்­து­வ­தற்கு பொருத்­த­மான தினம் ஏப்ரல் 25 என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மாதம் 9 ஆம் திகதி (இன்று) உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் அன்­றைய தினத்தில் தேர்­தலை நடத்த முடி­யா­தென ஆணைக்­குழு அண்­மையில் அறி­வித்­தது. இந்­நி­லையில் தேர்­த­லுக்­கான புதிய தினத்தை தீர்­மா­னிப்­ப­தற்­காக கடந்த 3 ஆம் திகதி ஆணைக்­குழு ஒன்று கூடி­ய­போ­திலும் அன்றும் திக­தி­யொன்று தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யிலே வரவு செல­வுத்­திட்­டத்தில் தேர்­த­லுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதியை முடக்­கு­வதை தவிர்க்­கு­மாறு உயர் நீதி­மன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

தேர்­த­லுக்­கான தினம் குறித்து தீர்­மா­னிப்­ப­தற்கு ஆணைக்­குழு நேற்று முன்­தினம் திறை­சேரி செய­லாளர் மஹிந்த சிறி­வர்­தன, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­கி­ரமரத்ன மற்றும் அரச அச்­சக கூட்­டுத்­தா­பனத் தலைவர் கங்­கானி லிய­னகே ஆகி­யோ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அரச அச்­சக கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் மாத்­தி­ரமே கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்­டி­ருந்தார். ஏனைய இரு­வரும் கலந்து கொண்­டி­ருக்­க­வில்லை. பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலரே கலந்து கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதால் தன்னால் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாது என்றும் பிறிதொரு தினத்தை வழங்குமாறும் திறைசேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும், ஒத்தி வைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இனிமேலும் இந்தத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மெளனம் காத்து வந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் சுமார் 2 கோடிக்கும் அதிக­மான மக்கள் சார்­பாக நீதி­மன்றம் சென்­றது. தற்­போது நாட்டு மக்­களின் வாக்­கு­ரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய மக்கள் சக்தி நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்­காக தொடர்ந்தும் பங்காற்றும் என்றார்.

தேர்­த­லுக்­கு­ நிதி வழங்­கு­வீர்­களா
இல்­லையா?
உயர்­நீ­தி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்கு அமைய உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி நிதி வழங்குவாரா , இல்லையா என்பதை நாட்­டுக்கு தெளி­வாக அறி­விக்­க­வேண்டும் என ‘மார்ச் 12 அமைப்பு’ தெரி­வித்­துள்­ளது.

‘இது காலம் வரை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு நிறு­வ­னங்கள் ஊடாக உபா­யங்­களைப் பாவித்து தேர்­தலை காலம் தாழ்த்­து­வ­தற்கு முயற்­சித்து வரு­கிறார். இவ்­வாறு தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு 30க்கும் மேற்­பட்ட உபா­யங்­களை பிர­யோ­கித்­துள்ளார். தொடர்ந்தும் அவர் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பா­ராயின் இது நீதி­மன்­றத்தின் தீர்ப்­பினை அகெ­ள­ர­வப்­ப­டுத்­து­வ­தாக அமையும் என மார்ச் 12 அமைப்­பினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன ஹெட்டி ஆரச்சி தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர், தேர்தல் தொடர்பில் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்­வேறு கருத்­து­களைக் கூறி­னாலும் இதன்­பின்­ன­ணியில் இருந்து ஜனா­தி­ப­தியே செயற்­பட்டு வரு­கிறார். எனவே தேர்­த­லுக்­கான நிதி­வ­ழங்­கப்­ப­டுமா? இல்­லையா என்­பதை நிதி­ய­மைச்­ச­ரான ஜனா­தி­ப­தியே நாட்­டுக்கு தெரி­விக்­க­வேண்டும்.

ஆட்­சி­யா­ளர்கள் மக்­களின் வாக்­கு­ரி­மையை பறித்துக் கொள்­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள்.
இந்­நி­லையில் உயர் நீதி­மன்றின் தீர்ப்பு தொடர்பில் ஜனா­தி­பதி மெள­ன­மாக இருக்­கிறார். எவ்­வித கருத்தும் வெளி­யி­ட­வில்லை.

உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் தற்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள தினத்தில் கட்­டா­ய­மாக நடத்­தப்­ப­ட­வேண்டும்’ என்றும் கூறி­யுள்ளார்.
நாட்டின் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உருவாகியுள்ள எதிர்வலைகள் குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை உறுதிப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மெளனம் கலைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.