உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: ஹாதியாவுக்கு பிணை

நான்காண்டுகள் தடுத்து வைக்கப்பட்டதை விஷேட காரணியாக ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்

0 214

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷிமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­விக்க கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெய­ராமன் ட்ரொக்ஸி நேற்று அனு­மதி வழங்­கினார்.

25,000 ரூபாய் பெறு­ம­தி­யான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான இரு சரீர பிணை­களில் செல்ல அனு­ம­தித்த நீதி­பதி, பிர­தி­வாதி வெளி­நாடு செல்­லவும் பிணை­யா­ளர்கள் வெளி­நாடு செல்­லவும் தடை விதித்து உத்­த­ரவு பிறப்­பித்தார்.
மூன்று கார­ணங்­களின் அடிப்­ப­டை­களில் ஹாதி­யா­வுக்கு பிணை வழங்க தீர்­மா­னித்­த­தாக நீதி­பதி இதன்­போது மன்றில் அறி­வித்தார்.

ஹாதி­யாவின் சட்­டத்­த­ர­ணிகள் பிணைக் கோரிக்­கையின் போது அவர் நீண்ட கால­மாக ( 3 வரு­டங்­களும் 11மாதங்­களும்) விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள விவ­கா­ரத்தை விசேட கார­ணி­யாகக் குறிப்­பிட்­டி­ருந்­தனர். இந்த விட­யத்தை நீதி­மன்றம் ஏற்றுக் கொண்­டது. அதன்­படி பிணை வழங்­கு­வ­தற்கு சட்­டமா அதிபர் முன்­வைத்த ஆட்­சே­ப­னை­களை புறந்­தள்ளி, பிணை வழங்கும் தீர்­மா­னத்தை எடுத்­த­தாக நீதி­பதி அறி­வித்தார்.
அதே­நேரம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி நீல் இத்­த­வல, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா விவ­கா­ரத்தில் பிணை வழங்­கு­வ­தற்­காக அளித்த தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்­க­ளையும் இந்த வழக்கில் பிணை தொடர்­பான தீர்­மா­னத்­திற்கு வரு­வ­தற்கு ஓர் உசாத்­து­ணை­யாக எடுத்துக் கொள்­வ­தாக நீதி­பதி அறி­வித்தார்.

இதற்கு மேல­தி­க­மாக, அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் ஏற்­பட்ட கொள்கை மாற்­றங்கள், சர்­வ­தேச மனித உரிமை நிலை­வ­ரங்கள் மற்றும் தனி மனித உரிமை சுதந்­திரம் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்தே பிணை தொடர்­பி­லான இறுதித் தீர்­மா­னத்­திற்கு வந்­த­தாக திறந்த நீதி­மன்றில் நீதி­பதி அறி­வித்தார்.

நேற்­றைய தினம் வழங்கு விசா­ர­ணை­களின் முன்­வி­ளக்க மாநாடு நிறைவு செய்­யப்­பட்டு முத­லா­வது சாட்சி விசா­ரணை பதிவு செய்­யப்­பட்­டது. இதன்­போது சாய்ந்­த­ம­ருது குண்டு வெடிப்­பின்­போது ஹாதியா மற்றும் அவ­ரது மகள் ஆகி­யோரை மீட்ட இரா­ணுவ அதி­கா­ரி­யான மேஜர் சுது­சிங்க சாட்­சி­ய­ம­ளித்தார். அவ­ரு­ட­னான குறுக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே அதனை இடை­நி­றுத்தி நீதி­பதி பிணை வழங்கும் தீர்­மா­னத்தை அறி­வித்தார்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலை­மையில், அரச சட்­ட­வாதி லாபிரும் பிர­தி­வா­திக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ், வீ. அர்சாத் உள்­ளிட்ட குழு­வி­னரும் மன்றில் ஆஜ­ரா­கினர்.

மேலதிக சாட்சி விசாரணைகள் மே 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்து அறிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக ), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.