எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்குவதில் இழுபறி

0 764
  • ஆர்.யசி
  • எம்.ஆர்.எம்.வசீம்

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக்ஷ நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்தார். எனினும், எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து சம்­பந்­தனே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நீடிக்க அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அது தொடர்பில் ஆராய தெரி­வுக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் சபையில் நேற்று ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இக்­கோ­ரிக்­கைக்கு வெள்­ளிக்­கி­ழமை தனது தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பதிலளித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதற்கு முன்னர் கட்சித் தலைவர் கூட்டம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் கூடி­யது, இதன்­போது முன்னாள் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்கும் யோசனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்ற அமர்­வுகள் கூடிய வேளையில் சபா­நா­யகர் விடுத்த அறி­விப்­பி­லேயே மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிப்­ப­தாக குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தின் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு அமை­வாக எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எதிர்க்­கட்­சியில் அமர்ந்­தி­ருக்கும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கட்­சி­க­ளுக்­கி­டையே அதி­கப்­ப­டி­யான உறுப்­பி­னர்­களை கொண்ட கட்­சி­யி­னதோ அல்­லது சுயா­தீன குழு­வி­னதோ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழுவின் தலை­வ­ரையே ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இதன்­படி ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி எதிர்க்­கட்­சியில் அமர்ந்­தி­ருக்கும் அதி­கப்­ப­டி­யான எம்.பி.க்­களை கொண்ட கட்சி என்­ப­தனால் அதன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழுவின் தலை­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­ள­வ­தற்கு நான் இணங்­கு­கின்றேன். இதற்­கி­ணங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொர­டா­வாக மஹிந்த அம­ர­வீ­ர­வையும் ஏற்­றுக்­கொள்­கின்றேன்.

அத்­துடன் பாரா­ளு­மன்ற சபை முதல்­வ­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்­லவும் ஆளும்­கட்சி பிர­தம கொர­டா­வாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் கயந்த கரு­ணா­தி­ல­க­வையும் நிய­மிப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சபையில் அறி­வித்தல் விடுத்தார்.

இந்­நி­லையில், இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ செயற்­பட முடி­யாது எனக் குறிப்­பிட்­ட­துடன், பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளாக இவர்கள் உள்ள நிலையில் அவர்களை ஏற்றுகொள்ள முடியாது. எனவே இதனை ஆராய தெரிவுக்குழு அமைத்து தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனையடுத்து கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்தக் குழப்ப நிலைமை தொடர்பிலான தனது தீர்மானத்தை வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக சபையில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.