இலங்கை – சவூதி உறவு இரு நாடுகளின் நட்புறவின் அடிப்படையில் ஸ்தாபிப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி

0 153

சவூதி மற்றும் இலங்கை ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு தரப்பு உற­வுகள் இரு நாடு­களின் தலை­மை­களின் அனு­ச­ர­ணையின் கீழ் ஒத்­து­ழைப்பு மற்றும் நட்­பு­றவின் அடிப்­ப­டையில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி தெரி­வித்தார்.

இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி கடந்த ஜன­வரி 22 முதல் 27ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் சவூதி அரே­பி­யா­விற்கு மேற்­கொண்ட விஜ­யத்தின் போது, சவூதி அரே­பிய வெளி­யு­றவு அமைச்சர் இள­வ­ரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவூதை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

அத்­துடன் இந்த விஜ­யத்தின் விளை­வாக சவூதி அரே­பி­யா­விற்கும் இலங்­கைக்கும் இடையில் இரட்டை வரித் தவிர்ப்­பிற்­கான உடன்­ப­டிக்­கையும் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
இவ்­வு­டன்­ப­டிக்­கையில், சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் சார்­பாக சகாத், வரி மற்றும் சுங்க அதி­கா­ர­ச­பையின் ஆளுநர் சுஹைல் அபா­னா­மியும், இலங்கை அர­சாங்­கத்தின் சார்­பாக, இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியும் கைச்­சாத்­திட்­டனர்.
அவ்­வாறே வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, அரே­பிய அபி­வி­ருத்­திக்­கான நிதி­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளரையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடாத்­தினார்.
அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதியம், இலங்­கையில் 46 அபி­வி­ருத்தித் திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காக 455 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை உத­வி­யாக வழங்­கி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் குறிப்­பி­டு­கையில்,
“சவூதி அரே­பி­யா­வா­னது, 2021 ஆம் ஆண்டில், 7.12 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை குறைந்த மற்றும் நடுத்­தர வரு­மானம் கொண்ட நாடு­களின் வளர்ச்­சிக்­கான நன்­கொ­டை­யாக வழங்கி, உத்­தி­யோ­க­பூர்வ உத­வி­களை (மனி­தா­பி­மான மற்றும் மேம்­பாடு) வழங்கும் நாடு­களில் முத­லி­டத்தைத் தக்க வைத்­துக்­கொண்­டுள்­ளது.

இவ்­வு­த­வித்­தொ­கை­யா­னது சவூதி அரே­பி­யாவின் மொத்த தேசிய வரு­மா­னத்தில் 1.05% ஆகும். மேலும் இத்­தொகை, உதவி வழங்கும் நாடுகள் தங்­க­ளது மொத்த தேசிய வருமானத்தில் 0.7% என்ற தொகையை மேற்குறிப்பிட்ட நாடுகளின் வளர்ச்சிக்காக உத்தியோகபூர்வ உதவியாக ஒதுக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடவும் அதிகமாகும்” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.