மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்

ஜனாதிபதி ரணில் உறுதியளிப்பு

0 236

(எஸ்.என்.எம்.சுஹைல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை தந்தால், அது குறித்து பாது­காப்பு தரப்­புடன் பேசி தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.
நேற்­று­முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்­கொண்ட முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இது விட­ய­மாக ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டி­ய­போதே, அவர் இவ்­வாறு பதி­ல­ளித்தார்.

இங்கு கருத்து வெளி­யிட்ட மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்,

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பல்­வேறு அநா­வ­சிய கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன. அத்­தோடு, பல பள்­ளி­வா­சல்­களும் பொது நிறு­வ­னங்­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இவை குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும்.

குறிப்­பாக, காத்­தான்­குடி தாருல் அதர் அமைப்பின் பள்­ளி­வாசல் பொலி­ஸா­ரினால் பொறுப்­பேற்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உல­மாவும் கோரிக்­கை­யொன்­றை­வி­டுத்­துள்­ளது. (இதன் பிர­தி­யொன்று ஜனா­தி­பதியின் செய­லா­ள­ருக்கும் கைய­ளிக்­கப்­பட்­டது) அந்த பள்­ளி­வா­சலை காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உல­மா­விடம் ஒப்­ப­டைத்தால் அதை மக்களது பாவ­னைக்கு கைய­ளிப்­பார்கள். இது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குற்­றத்­துடன் சம்­பந்­தப்­பட்ட இட­மல்ல. சந்­தே­கத்தின் பேரில் இதனை அர­சாங்கம் பறிமுதல் செய்­வ­தற்கு பொலி­ஸாரை ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இது ஊர் நடுவில் இருக்­கின்ற மக்­களின் வணக்­கஸ்­த­ல­மாகும். இதற்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் தொடர்­புகள் இல்லை. எனவே, அந்த பள்­ளி­வாசல் விடு­விக்­கப்­பட வேண்டும் என குறிப்­பிட்டார்.

இதற்கு பதிலளித்துப்பேசிய ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பான தகவல்கைளை எமக்கு தாருங்கள், பாதுகாப்பு தரப்புடன் கதைத்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என உறுதியளித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.