முஸ்லிம் அமைப்புகள், தனி நபர்கள் மீதான கறுப்புப் பட்டியல் அநீதியான செயல்

0 497
  • கைதாகி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோரும் பட்டியலில்;
    ஜமாஅதே இஸ்லாமி மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள் அமைப்புக்களும் இணைப்பு
  • சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

(எம்.எப்.எம்.பஸீர்)
அரசு, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்­கிய நாடுகள் சட்­டத்தின் கீழ் 2022 ஆகஸ்ட் முதலாம் திக­தி­யி­டப்­பட்ட 2291/02 ஆம் இலக்க அதி விஷேட வர்த்­த­மானி ஊடாக வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட தனி நபர்கள், அமைப்­புக்­களின் பெயர் விப­ரங்கள் அடங்­கிய கறுப்புப் பட்­டியல் சர்ச்­சை­களை தோற்றுவித்துள்­ளது.

ஆகஸ்ட் முதலாம் திக­தி­யி­டப்­பட்ட 2291/02 ஆம் இலக்க வர்த்­த­மானி பிர­காரம் 55 முஸ்லிம் நபர்­களும், 3 அமைப்­புக்­களும் தடை செய்­யப்­பட்டோர் குறித்­தான கறுப்புப் பட்­டி­யலில் புதி­தாக உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

தாருல் அதர், இலங்கை இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் , சேவ் த பேர்ள் ஆகிய அமைப்­புக்­களே இவ்வாறு தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் பட்­டி­யலில் புதி­தாக சேர்க்­கப்­பட்­டுள்ள அமைப்­புக்­க­ளாகும். புதி­தாக சேர்க்­கப்­பட்­டுள்ள தனி நபர்கள் பட்­டி­யலில், தனது கைது நட­வ­டிக்கை கார­ண­மாக சர்­வ­தேச அளவில் இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்பில் கேள்­வி­களை தொடுக்கச் செய்த கவி­ஞரும் இளம் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீமின் பெயர் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை மீண்டும் சர்ச்­சை­களை தோற்­று­வித்­துள்­ளது. இத­னை­விட உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்டு, சாட்­சிகள் இல்­லா­மையால் நீதி­மன்றால் விடு­தலை செய்­யப்­பட்ட சிலரும், சட்ட மா அதி­பரின் ஒப்­பு­த­லுடன் சாட்­சி­களில் காணப்­படும் பல­வீனம் கார­ண­மாக பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள பலரும், வழக்கு நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு கூட சந்­தர்ப்பம் அளிக்­கப்­ப­டாத பலரும் இந்த கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

எந்த நியா­ய­மான விசா­ர­ணைகள் மற்றும் கார­ணி­களும் இன்றி பலர் இவ்­வாறு குறித்த பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­மையால், குறித்த வர்த்­த­மா­னியை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் பலர் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு உதவி ஒத்­தாசை அளிப்­பதை தடுப்­பது குறித்­தான நோக்­கத்­துக்­காக, 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஐ. நா. கட்­ட­ளை­களின் 4 (7) ஆம் விதி­வி­தா­னத்­துக்கு அமைய, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்கள் பட்­டி­ய­லி­டப்­ப­டு­கின்­றனர். இதனை இலங்கை 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்­கிய நாடுகள் சட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கின்­றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் வெளி­யிட்ட 1758/ 19 எனும் வர்த்­த­மானி ஊடாக இதற்­கான அடித்­தளம் இடப்­பட்­டது.

பின்னர், கடந்த 2014 மார்ச் 21 ஆம் திகதி, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை தொடர்­பி­லான முத­லா­வது கறுப்புப் பட்­டியல் அடங்­கிய வர்த்­த­மானி 1854/41 எனும் இலக்­கத்தின் கீழ் அப்­போ­தைய பாது­காப்பு செய­ல­ரான தப்­பி­யோ­டிய ஜனா­தி­ப­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதில் 424 தனி நபர்­களும் 16 அமைப்­புக்­களும் தடை செய்­யப்­பட்டோர் பட்­டி­யலில் இணைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அது முதல் இறு­தி­யாக கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி வரை அவ்­வா­றான 8 தடைப் பட்­டி­யல்கள் அடங்­கிய வர்த்­த­மா­னிகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு 1941/44 எனும் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டுள்­ள­துடன் , 2016 ஆம் ஆண்டு 1992/25 எனும் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்டு தடைச் செய்­யப்­பட்­டோரின் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு 2016/18 ஆம் இலக்க வர்த்­த­மானி ஊடாக அப்­பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் ஊடாக அப்­பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டன. 2019 மே 23 ஆம் திகதி 2124/32 எனும் இலக்­கத்தின் கீழும் 2019 செப்­டம்பர் 9 ஆம் திகதி 2140/ 16 எனும் இலக்­கத்தின் கீழும் இரு வர்த்­த­மா­னிகள் வெளி­யி­டப்­பட்­டன.

இத­னை­விட கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 28 ஆம் திகதி 2216/37 எனும் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்­னரே கடந்த முதலாம் திகதி 2291/02 எனும் வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடா­க­ தற்­போ­தைய பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
முன்­ன­தாக 2021 பெப்­ர­வரி 28 ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம், 577 தனி நபர்­களும் 18 அமைப்­புக்­களும் ஐ. நா. சட்­டத்தின் கீழ் பாது­காப்பு அமைச்­சினால் கறுப்புப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் அப்­பட்­டி­யலில் இருந்த 316 தனி நபர்கள் ( ஒரே பெயர் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த 7 பேர் உள்­ள­டங்­க­லாக), ஆறு அமைப்­புக்கள் தடைப் பட்­டி­யலில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய தமிழ் காங்­கிரஸ், உலக தமிழர் பேரவை , உலக தமிழர் ஒருங்­கி­ணைப்பு குழு , தமிழ் ஈழ மக்கள் சம்­மே­ளனம், கனே­டிய தமிழர் காங்­கிரஸ், பிரித்­தா­னிய தமிழர் பேரவை ஆகிய 6 தமிழ் அமைப்­புக்கள் மீதான தடையே தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ளன.
இது தொடர்பில் பாது­காப்­புச்­செ­ய­லாளர் ஜெனரல் கமால் குண­ரத்­ன­வினால் திருத்­தப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் வெளி­நா­டு­களில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் கருத்­தி­யலை பரப்பும் வகையில் செயற்­பட்­டு­வந்த அவ்­வி­யக்­கத்தின் கட்­ட­மைப்­பை­யொத்த தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள், தமிழர் புனர்­வாழ்வு அமைப்பு, தமிழர் கூட்­டி­ணை­வுக்­குழு, உல­கத்­த­மிழர் இயக்கம், நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்கம், உல­கத்­த­மிழர் உதவி நிதியம், தலை­மைக்­கா­ரி­யா­ல­யக்­குழு, தேசிய தௌஹீத் ஜமா-அத், ஜமா அத்தே மில் அத்தே இப்­ராஹிம், விலாயத் அஸ் செய்­லானி, தாருல் அதர் அல்­லது ஜாமியுல் அதர் பள்­ளி­வாசல், தேசிய கனே­டி­யத்­த­மிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு, இலங்கை இஸ்­லா­மிய மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள் ஆகிய 15 அமைப்­புக்­களே தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள அமைப்­புக்கள் பட்­டி­யலில் உள்­ள­டங்­கு­கின்­றன.

எவ்­வா­றா­யினும் ஏற்­க­னவே இலங்கை இஸ்­லா­மிய மாணவர் இயக்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை­களை எதிர்த்து அந்த இயக்கம் உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுத்­துள்­ளது. குறித்த வழக்கு நிலு­வையில் உள்ள பின்­ன­ணியில், இடைக்­கால தடை உத்­த­ர­வொன்றும் வழங்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னோக்கி நகர்த்­தப்­பட்­டுள்ள நிலையில், அந்த இயக்கம் பயங்­க­ர­வாத கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்டு பாது­காப்பு அமைச்சின் செய­லரால் விடுக்­கப்­பட்­டுள்ள வர்த்­த­மானி எந்­த­ளவு தூரம் நியா­ய­மா­னது என்­பது குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக அவ்­வி­யக்கம் சார்பில் ஆஜ­ராகும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

அத்­துடன் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் பட்­டி­யலில் புதி­தாக உள்­ளீர்க்­கப்­பட்ட, வறிய மாண­வர்­க­ளுக்கு கல்­வியை வழங்­கிய சேவ்த பேர்ள் அமைப்பு எதற்­காக அப்­பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டது என்­பது குறித்து கேள்வி எழுப்­பட்­டுள்­ளது.

‘சேவ் த பேர்ள் ‘ பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக இது­வரை எங்கும் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் அந்த அமைப்பு கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டமை ஆச்­ச­ரி­ய­மா­னது என இது குறித்து விடி­வெள்­ளி­யிடம் பேசிய சமூக ஆர்­வலர் ஒருவர் கூறினார்.
சேவ்த பேர்ள் அமைப்பு, கடந்த 2020 ஆம் ஆண்டின் பின்னர், கட்டார் அறக்­கட்­ட­ளை­யிடம் இருந்து உத­வி­களைப் பெற்­றி­ருந்­த­மையை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டது. அவ்­வ­மைப்பின் முன்­னணி செயற்­பாட்­டா­ள­ராக திகழ்ந்த சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வும் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் கட்டார் அறக்­கட்­ட­ளையை பயங்­க­ர­வாத தடைப் பட்­டி­யலில் இருந்து இலங்கை நீக்­கு­வ­தாக அமைச்சர் கஞ்­சன விஜே­சே­கர கட்­டாரில் வைத்து அண்­மையில் அறி­வித்­தி­ருந்தார். அவ்­வா­றான பின்­ன­ணியில் கட்டார் அறக்­கட்­ட­ளை­யிடம் இருந்து உத­வி­களைப் பெற்­ற­மையை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்ட சேவ்த பேர்ளை புதி­தாக தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் பட்­டி­யலில் இணைத்­துள்­ளமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னை­விட பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து கைது செய்­யப்­பட்டு பின்னர் சாட்­சியம் இல்­லா­மையால் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்­ட­வர்கள் உட்­பட பலர் இந்த கறுப்புப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக ‘நவ­ரசம்’ கவிதை தொகுப்பை எழு­தி­யதை வைத்து கைது செய்­யப்­பட்டு, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்க வற்­பு­றுத்­தப்­பட்­டி­ருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீமும் பயங்­க­ர­வாத கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். அவ­ரது கைது சம்­ப­வமே முழு உல­கிலும் பேசப்­பட்ட, கருத்து சுதந்­தி­ரத்­துக்கு எதி­ரான கைது என பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள பின்­ன­ணியில் இலங்கை அரசு மீண்டும் ஜன­நா­யக விரோத செயலில் ஈடு­பட்­டுள்­ள­தாக அஹ்னாப் ஜஸீமின் உரி­மைகள் குறித்து பேசும் அவ­ரது சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர குறிப்­பிட்டார்.
‘ஒரு நபர் அல்­லது அமைப்பு இவ்­வாறு பட்­டி­ய­லி­டப்­பட்­ட­வுடன், அவர் அல்­லது அந்த குழு அல்­லது நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான அல்­லது வைத்­தி­ருக்கும் அனைத்து நிதிகள், பிற நிதி சொத்­துக்கள் மற்றும் பொரு­ளா­தார ஆதா­ரங்கள் உரிய கட்­டளை மூலம் தகு­தி­வாய்ந்த நிறு­வங்­களால் உட­ன­டி­யாக முடக்­கப்­படும்.

16 மே 2020 அன்று இலங்கை அர­சாங்­கத்தால் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக கைது செய்­யப்­பட்­டதில் இருந்து அஹ்னப் வேலை­யில்­லாமல் இருக்­கிறார். அவர் ஏழை விவ­சா­யியின் மூத்த மகன் ஆவார். உழைக்கும் மக்­களும் ஜன­நா­யக உரி­மை­களைப் பாது­காப்­ப­வர்­களும் இந்த நிறை­வேற்றுச் சட்­டத்தைக் கண்­டித்து அவரைப் பட்­டி­யலில் இருந்து நீக்கக் கோர வேண்டும்.’ என சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர குறிப்­பிட்டார்.
இந் நிலையில் இந்த கறுப்புப் பட்­டியல் தொடர்பில் பாது­காப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமல் குண­ரத்ன விஷேட அறிக்கை ஒன்­றினை விடுத்து கருத்து வெளி­யிட்டார்.
‘2012 ஆம் ஆண்டு முதலாம் இலக்க ஐக்­கிய நாடுகள் சபையின் வழி­காட்டல் முறை­மை­களின் கீழ் பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி­யு­த­வி­களை வழங்­குதல் தொடர்பில் கடந்த ஆண்டு 577 நபர்கள் மற்றும் 18 அமைப்­புக்கள் தடைப்­பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டன.

வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு, சட்­டமா அதிபர் திணைக்­களம், புல­னாய்­வுப்­பி­ரிவு , சட்ட அமு­லாக்க நிறு­வ­னங்கள் மற்றும் மத்­திய வங்­கியின் நிதி புல­னாய்வு பிரிவு உள்­ளிட்ட நிறு­வ­னங்­களை அடங்­கிய குழுவின் ஊடாக மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நபர்கள் மற்றும் அமைப்­புக்கள் கடந்த சில ஆண்­டு­க­ளுக்குள் பயங்­க­ர­வா­தத்­திற்­காக நிதி உத­வி­களை வழங்­கி­யமை தொடர்பில் ஆராய்ந்­துள்­ளன.

அதற்­க­மைய பெற்றுக் கொள்­ளப்­பட்ட ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் நீண்ட கால ஆய்வு மற்றும் பாது­காப்பு அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பல சுற்று கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்குப் பிறகு, தடைப்­பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்­டிய மற்றும் சேர்க்­கப்­பட வேண்­டிய தனி­ந­பர்கள் மற்றும் நிறு­வ­னங்கள் குறித்து பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டன.

அதற்­க­மைய மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட 577 நபர்கள் மற்றும் 18 அமைப்­புக்­களில் பயங்­க­ர­வா­தத்­திற்­காக நிதி­யு­த­வி­களை வழங்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பாடு காண்­பிக்­காத 316 நபர்கள் மற்றும் 6 அமைப்­புக்­களை தடைப்­பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், இந்த காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி மற்றும் உத­வி­ய­ளிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­தாக அண்­மையில் இனங்­கா­ணப்­பட்ட 55 தனி­ந­பர்கள் மற்றும் 3 அமைப்­புக்­களை தடைப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய பாது­காப்பு அமைச்சின் இந்த பரிந்­துரை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சிடம் அனு­ம­திக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் 316 நபர்கள் மற்றும் 15 அமைப்­புக்­களை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல 1 , 229/ 02 அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக தடைப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி­யு­த­வி­ய­ளித்தல் தொடர்பில் நபர்கள் மற்றும் அமைப்­பு­களை தடைப்­பட்­டி­யலில் உள்­ள­டக்கல் மற்றும் அகற்றல் நடை­மு­றை­யா­னது, அத­னுடன் தொடர்­பு­டைய நிறு­வ­னங்­களின் நீண்ட கால அவ­தா­னிப்பு மற்றும் கவ­ன­மாக தொடர் ஆய்வு நட­வ­டிக்­கை­களின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வது வழ­மை­யாகும்.’ என அவர் குறிப்­பிட்டார்.

இத­னை­விட பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து முத்­திரைக் குத்­தப்­பட்டு வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் இந்த பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­ப­டாத போதும், அவர் இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் விடி­வெள்­ளி­யிடம் பின்­வ­ரு­மாறு கருத்­து­ரைத்தார்.

‘பாது­காப்பு அமைச்சின் செயலர் மிகக் கவனமாக ஆராய்ந்தே பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறினாலும், மிகக் கவனமாக அது ஆராயப்பட்டதாக தெரியவில்லை.

ஏனெனில், 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பின்னர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறி கைது செய்­யப்­பட்ட பலர், 2019, 2021 ஆம் ஆண்­டு­களில் வெளி­வந்த பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவ்­வா­றான பலர், அவர்­க­ளுக்கு பிணை கிடைக்கப் பெற்ற பின்­னரும், வழக்­கி­லி­ருந்து விடு­த­லை­யான பின்­னரும் தடைப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர். இது பாரிய முரண்­பாட்டு நிலை­யாகும்.’ என தெரி­வித்தார்.
இந்த வர்த்­த­மா­னியில் தடைப் பட்­டி­யலில் தனது சேவை பெறு­நர்கள் பலர் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக விடி­வெள்­ளி­யிடம் பேசிய சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்த நிலையில், வர்த்­த­மானி அறி­வித்­தலில் பெய­ரி­டப்­பட்­டுள்ள பலர் அப்­பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டி­ருக்கக் கூடா­த­வர்கள் என்­பதே தனது நிலைப்­பாடு என அவர் குறிப்­பிட்டார்.

‘இந்த வர்த்­த­மானி சர்ச்­சைக்­கு­ரி­யது. அதில் பட்­டியல் இடப்­பட்­டுள்ள நபர்­க­ளுக்கு, அவர்கள் சார்­பி­லான விளக்­கங்­களை முன் வைக்க எந்த சந்­தர்ப்­பமும் வழங்­கப்­ப­டாமல், அவர்­க­ளது பெயர்கள் சேர்க்­கப்பட்­டுள்­ளன. இது நியா­ய­மற்­றது. எவ­ரேனும் தமது பெயர்கள் அநி­யா­ய­மாக குறித்த வர்த்­த­மா­னியில் தடைப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கருதுவாராயின் அவர்கள் நிச்சயம் சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லலாம்.’ என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறிப்பிட்டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.