புதிய ஜனாதிபதியும் முஸ்லிம் பிரபலங்களும்

0 495

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

தோல்­வியின் நாயகன் ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ, அறப்­போ­ராட்­டத்தின் மகத்­தான வெற்­றி­யினால் இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக மக்­களால் அல்­லாமல் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களால் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். மொத்தம் 225 பிர­தி­நி­தி­களைக் கொண்ட அம்­மன்­றத்தில் 134 வாக்­கு­க­ளைப்­பெற்று அப்­ப­த­வியைக் கைப்­பற்­றி­யுள்ளார். அந்த 134 ஆத­ர­வா­ளர்­களுள் மிகப்­பெ­ரும்­பான்­மை­யினர் ராஜபக்­சாக்­களின் மொட்­டுக்­கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தையும் எஞ்­சிய ஆத­ர­வா­ளர்­களின் வாக்­கு­க­ளுக்­காக ராஜ­பக்ச குடும்­பத்­தி­னரும் அவர்­களின் அடி­வ­ரு­டி­களும் பணக்­கட்­டு­களை அள்ளி வீசினர் எனவும் இப்­போது செய்­திகள் கசிந்­துள்­ளன. எனவே இந்த ஜனா­தி­ப­தியை மக்­களின் ஜனா­தி­பதி என்­ப­தை­விட ராஜ­பக்ச கட்­சி­யி­னரின் ஜனா­தி­பதி என்று அழைப்­பதே பொருத்­த­மா­ன­தாகும்.

கடந்த தேர்­த­லிலே மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட விக்­கி­ர­ம­சிங்ஹ, அர­சியல் யாப்பு வழங்­கிய ஒரு சலு­கையின் மூலம் பின் கதவால் நாடா­ளு­மன்­றத்­துக்குள் அதுவும் காலங்­க­டந்து நுழைந்து, ராஜ­பக்ச ஆட்சி பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் பொது­மக்­க­ளி­டையே ஆத­ரவு இழந்­து­வந்­ததை உன்­னிப்­பாக அவ­தா­னித்து, அதற்­கான தனது கண்­ட­னங்­க­ளையும் இடை­யி­டையே எழுப்பி, அந்த ஆட்­சிக்கு எதி­ராக விழிப்­புற்ற இளைஞர் படை­யொன்று வீறுடன் திரண்டு போரா­டு­வ­தையும் அவ­தா­னித்து, அப்­போ­ராட்­டத்­துக்கு தானும் ஓர் ஆத­ர­வாளன் என்­ப­துபோல் நடித்து, அவர்­களின் போராட்டம் இறு­தியில் பிர­த­ம­ரையும் ஜனா­தி­ப­தி­யையும் பதவி துறக்­கச்­செய்­யவே அந்தச் சந்­தர்ப்­பங்­களை தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திய ஒரு தந்­தி­ர­சாலி. சுருக்­க­மாகக் கூறின், அறப்­போ­ராட்­டத்தின் வெற்­றி­யினால் அதிக பலன் அடைந்த ஒரே­யொரு அர­சி­யல்­வாதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ.

இந்த நடி­கனின் நாட­கத்தின் அடுத்த காட்சி இப்­போது அரங்­கே­றி­யுள்­ளது. தான் பத­வி­யேற்ற 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அறப்­போ­ரா­ளி­களின் மைய­மாக மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாக இயங்­கி­வந்த காலி­மு­கத்­தி­டலை படை­கொண்டு முற்­று­கை­யிட்டு, விரை­விலே அந்த இடத்­தை­விட்டு வெளி­யேற இருந்த போரா­ளி­களை வன்­செ­யலால் வெளி­யேற்­றிய சாத­னை­யுடன் அந்தக் காட்சி ஆரம்­பித்­தது. நாட்டின் சீர்­கு­லைந்த பொரு­ளா­தா­ரத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சட்­டமும் ஒழுங்கும் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் அவிழ்த்­து­வி­டப்­பட்ட அவ­சி­ய­மற்ற ஒரு வன்­மு­றைதான் அங்கே நடந்­தே­றிய ராணுவ அடி­தடி. அதனை உல­கமே கண்­டித்­தமை ஒரு புற­மி­ருக்க பொரு­ளா­தார மீட்­சிக்­காக ஆலோ­ச­னை­களை வழங்கி உத­வ­வி­ருந்த சர்­வ­தேச நாணய நிதியும் அந்த முயற்­சியை பின்­போட்­டுள்­ளது. இப்­போது அந்­தத்­ த­வறை மூடி­ம­றைப்­ப­தற்­காக வேறு மூன்று இடங்­களை சகல வச­தி­க­ளு­டனும் சமா­தானப் போராட்­டங்­க­ளுக்­காக ஒதுக்கித் தரு­வ­தா­கவும் இந்த நடிகர் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஆனால் ஒன்­று­மட்டும் உண்மை. இவர் மாற்று இடங்­களை அளித்­தாலும் அளிக்­கா­விட்­டாலும் அறப்­போ­ரா­ளிகள் தமது போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை. ரணிலின் உரு­வத்­துக்­குள்ளே ராஜ­பக்­சாக்கள் ஒழிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது படிப்­ப­டி­யாக வெளி­வரும்.

ரணிலும் பொரு­ளா­தார மீட்­சியும்
புதிய ஜனா­தி­ப­தியின் முதல்­வேலை பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதே என்­பதை பலரும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அது உண்மை என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் அது எவ்­வா­றென்­ப­திலே கருத்­தொற்­றுமை இல்லை. இந்த ஜனா­தி­ப­திக்குத் தெரிந்த ஒரே­யொரு மார்க்கம் சர்­வ­தேச நாணய நிதியின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய வர­வு­செ­லவுத் திட்­டங்­களின் ஊடா­கவும், மத்­திய வங்­கியின் ஊடா­கவும், நாடா­ளு­மன்­றத்தின் ஆத­ர­வு­டனும் நிதி, வரிக் கொள்­கை­களை மாற்­றி­ய­மைத்து, அரச செல­வி­னங்­களைக் குறைத்து, நட்­டத்தில் இயங்கும் அரச நிறு­வ­னங்­களின் நட­வ­டிக்­கை­க­ளையும் சீர்­ப­டுத்தி, நிர்­வாக ஊழல்­க­ளையும் ஒழித்து, உள்­நாட்டு வெளி­நாட்டு முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும் வகையில் உள்­நாட்டுச் சந்தை அமைப்­பையும் சீர்­ப­டுத்­து­வ­தாகும். இன்று நிலவும் உல­க­ளா­விய முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தார ஒழுங்கில் எந்தப் பொரு­ளா­தார நிபு­ணனும் இவற்­றைத்தான் சிபார்சு செய்வான். ஆனால் முத­லா­ளித்­துவ அமைப்­புக்­குள்­ளேயே புகுந்­தி­ருந்து ஊழல் நிறைந்த ஒரு நிர்­வா­கத்தை வளர்த்து அத­னாலே தம்மை வளர்த்­துக்­கொண்ட அர­சி­யல்­வா­தி­களின் ஆத­ரவால் தெரி­வு­செய்­யப்­பட்ட இந்த ஜனா­தி­ப­திக்கு தன்னை ஏற்­றி­விட்ட ஏணி­யையே தூக்கி வீசி­விடும் துணிவு வருமா? விவா­தத்­துக்­காக அவ­ரிடம் அந்தத் துணிவு உண்­டென்று ஏற்றுக் கொண்­டாலும் தற்­போது உல­க­ளா­விய ரீதியில் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நெருக்­க­டிகள் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை அவ்­வ­ளவு இல­கு­விலும் விரை­விலும் சீர்­ப­டுத்த இடந்­த­ர­மாட்டா. உலகப் பொரு­ளா­தார வளர்ச்­சியே குன்­றப்­போ­கி­றது என்று சர்­வ­தேச நாணய நிதியே எச்­ச­ரிக்­கி­றது.

தற்­போது உக்­ரைனில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் யுத்­தத்தின் பொரு­ள­தார விளை­வு­களும், கால­மாற்­றத்­தினால் உலகின் பல திசை­க­ளிலும் ஏற்­படும் வரட்­சி­களும் வெள்­ளங்­களும், கொவிட் கொள்ளை நோயின் புதிய அலையும் ஒன்று சேர்ந்து பண்­டங்­களின் உற்­பத்­தி­யையும் அவற்றின் விநி­யோ­கத்­தையும் பாதித்து, அதனால் அவற்றின் விலை­களும் உயர்ந்து, பண­வீக்கம் உரு­வாகி அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக மத்­திய வங்­கிகள் வட்­டி­வீ­தங்­க­ளையும் உயர்த்­து­வ­தனால் இன்­னு­மொரு பொரு­ளா­தார மந்­தத்­தினை வளர்ச்­சி­ய­டைந்த நாடுகள் எதிர்­பார்க்­கின்­றன. அதன் பாதிப்­பு­க­ளி­லி­ருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்­பவே முடி­யாது. என­வேதான் ஜனா­தி­ப­தியின் முயற்­சிகள் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை விரைவில் நீக்­க­மாட்டா எனத் துணிந்து கூறலாம். ஆனால் உள்­நாட்டு வளங்­களைப் பூர­ண­மாகப் பயன்­ப­டுத்தி மக்­களின் முழு முயற்­சி­யுடன் அத்­தி­யா­வ­சிய உள்­நாட்டுத் தேவை­களை நிறை­வேற்றும் வாய்ப்பு உண்­டென்­பதை மறுக்க முடி­யாது. ஆனால் அதற்கு ஒரு தடை­யாக அமைந்­துள்­ளது இலங்­கையின் அர­சியல் பொரு­ளா­தார சமூக அடிப்­படை. அதனை உணர்ந்­த­வர்­கள்தான் அறப்­போ­ராட்ட இளைஞர் சமு­தாயம். எனவே அவர்­களை பாசிஸ்­டுகள் என்றும் தீவி­ர­வா­தி­க­ளென்றும் அர­சாங்க வட்­டா­ரங்கள் பட்டம் சூட்­டு­வது மக்­களை திசை திருப்­பவே.

சிந்­தனைச் சட்­டக மாற்றம்
இத­னைப்­பற்றி ஏற்­க­னவே ஓரிரு கட்­டு­ரை­களில் விளக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீண்டும் விளக்­காமல் ஒன்றை மட்டும் வலி­யு­றுத்த வேண்­டி­யது கடமை. அதா­வது, அறப்­போ­ரா­ளிகள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களுள் முக முக்­கி­ய­மா­னதும் இன்­றுள்ள ஆட்­சி­யா­ளர்­களால் வழங்­கப்­பட முடி­யா­த­து­மான ஒன்­றுதான் சிந்­தனைச் சட்­டக மாற்றம். பழைய ஒழுங்­கிலே பிறந்து வளர்ந்து நன்­மை­ய­டைந்த இன்­றைய மூத்த அர­சி­யல்­வா­தி­களால் அதனை மாற்றும் துணிவும் இல்லை அதற்­கான திறனும் இல்லை. அந்தச் சந்­த­தியின் ஜனா­தி­ப­தி­யாக விளங்கும் விக்­கி­ர­ம­சிங்ஹ சிந்­தனைச் சட்­டக மாற்­றத்தின் முழு எதிரி.

அத­னா­லேதான் போரா­ளி­களை முற்­றாக ஒழித்­துக்­கட்ட அவர் முற்­பட்­டுள்ளார். ஆனால் போரா­ளி­களோ ஓயப்­போ­வ­தில்லை. அதனை அடுத்­து­வரும் வாரங்­களும் மாதங்­களும் துல்­லி­ய­மாகத் தெளி­வு­ப­டுத்தும். அவர்­க­ளது போராட்டம் இரு வேறு­பட்ட சந்­த­தி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு போராட்டம் என்­ப­தையும் உண­ர­வேண்டும். இது இலங்­கையில் மட்­டு­மல்ல, உல­க­ளா­விய ரீதியில் நடை­பெற்று வரு­கிற ஒரு வளர்ச்சி. அதனை முதிர்ச்­சி­பெற்ற ஜன­நா­யக நாடு­களின் அர­சுகள் இனங்­கண்டு அப்­பே­ரா­ளி­களின் கோரிக்­கை­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கு­கின்­றன. இளஞ் சந்­த­தியின் ஓயாத அழுத்­தங்­க­ளில்­லாமல் பெண்­ணு­ரிமை, கால­மாற்றம், மனித உரி­மைகள் போன்ற விட­யங்கள் உலக அரங்­கிலே இன்று இடம் பெற்­றி­ருக்­க­மாட்டா. எதிர்­காலம் இன்­றைய இளம் தலை­மு­றையின் கைகளில் என்­ப­தையும் காலம் அவர்­களின் பக்கம் நிற்­கி­றது என்­ப­தையும் மூத்த சந்­த­தி­யி­னரும் தலை­வர்­களும் உணர்தல் அவ­சியம்.

முஸ்லிம் பிர­ப­லங்கள்
ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ ஜனா­தி­பதி போட்­டியில் வெற்றி பெற்­றதும் ஒரு முஸ்லிம் பிர­பலம் அந்த வெற்றி அதி­கார ஆசை பிடித்­த­வர்­க­ளுக்குக் கிடைத்த அடி என்று வரு­ணித்தார். ஆனால் எந்த ஆசையால் ரணில் போட்­டி­யிட்டார் என்­பதை இந்தப் பிர­பலம் விளக்­கு­வாரா? எந்த ஆசையால் இந்த ஜனா­தி­பதி ராஜ­பக்­சாக்­களின் கூடா­ரத்­துக்குள் நுழைந்தார் என்­ப­தா­வது இந்தப் பிர­ப­லத்­துக்கு விளங்­குமா? ஆனால் ரணிலின் வெற்­றிக்குப் புக­ழாரம் சூட்­டி­யபின் அதற்குக் கிடைத்த கூலி­யாக தனக்­கென ஒரு அமைச்­சுப் பத­வியைத் தட்­டிக்­கொண்ட இந்தப் பிர­ப­லத்தின் சாமர்த்­தி­யத்தை பாராட்­டத்தான் வேண்டும்.

இன்­னு­மொரு பிர­பலம், தான் பொறுப்­புள்ள ஓர் அர­சி­யல்­வா­தி­யென்று பறை­சாற்றிக் கொண்டு ரணி­லுக்கே இந்த நாட்டின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையைத் தீர்க்கும் வல்­லமை உண்டு என்றும் அத­னா­லேதான் அவ­ருக்குத் தான் வாக்­க­ளித்­த­தா­கவும் பிரஸ்­தா­பித்தார். அவ­ருக்கும் விரைவில் ஏதா­வது ஒரு பதவி கிட்­டலாம்.

இப்­ப­டிப்­பட்ட முஸ்லிம் பிர­ப­லங்­களின் அர­சியல் சாக­சங்­களை நோக்­கும்­போது இன்னும் முஸ்லிம் சமூகம் வியா­பார அர­சி­ய­லை­விட்டு விடு­ப­ட­வில்லை என்றே எண்ணத் தோன்­று­கி­றது. அத­னா­லேதான் அண்­மையில் அறப்­போ­ரா­ளிகள் முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஓர் எச்­ச­ரிக்­கை­யையும் பிறப்­பித்­தி­ருந்­தனர். எனினும் இந்த வியாபார அரசியலுக்கு காலத்துக்குக் காலம் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விதிவிலக்காய் இருந்துள்ளனர் என்பதையும் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

அறப்­போ­ரா­ளி­களின் விழிப்­பு­ணர்­வையும், உலக அரங்­கிலே அவர்­க­ளைப்­போன்ற இளஞ் சந்­த­திகள் எவ்­வாறு போரா­டு­கின்­றார்கள் என்­ப­தையும், அவர்கள் எதற்­காகப் போரா­டு­கின்­றார்கள் என்­ப­தையும் கிணற்றுத் தவ­ளை­க­ளாக வாழும் சில்­லறை முஸ்லிம் பிர­ப­லங்­க­ளுக்கு விளக்­குதல் அறப்­போருள் குதித்­துள்ள முஸ்லிம் இள­வல்­க­ளி­னதும் வெளியே இருக்­கின்ற முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளி­னதும் தலையாய கடமை.

தூரநோக்குடன் பிரச்சினைகளை அணுகும் ஆற்றல் எல்லாருக்கும் கிடைப்பதரிது. ஆனால் புத்திஜீவிகளிடையே அவ்வாறான ஆற்றலுள்ள ஆண்களையும் பெண்களையும் காணலாம். அவர்களின் கைகளிலேதான் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வருங்காலம் தங்கியுள்ளது என்பதை இன்னும் வலியுறுத்த முடியாது. பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல் இளித்தவர்களாற்தானே இந்த நாடே இன்று குட்டிச் சுவராகியுள்ளது. அவர்களுக்குள் முஸ்லிம் பிரபலங்களும் அடங்குவர் என்பதை மறுப்பாரும் உண்டோ?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.