சேயா சதெவ்மி, பாத்திமா ஆயிஷா

0 285

அட்டுளுகமவில் சிறுமி பாத்திமா ஆயிஷா கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2022.05.30 ஆம் திகதி வெளியான திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம். இது குற்றவாளியை இனங்காண்பதற்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

கொட­தெ­னி­யாவின் சேயா சதெவ்மி தொடர்­பான சோகக் கதை படிப்­ப­டி­யாக நினை­வி­லி­ருந்தும் தூர­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இப்­போ­தைக்கு 7 வரு­டங்­க­ளுக்கு முன்பு ஆறு­வ­ய­தான சேயா நித்­திரை கொள்ளும் கட்­டிலில் இருந்து கள­வாக தூக்கிச் செல்­லப்­பட்டு பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார். இன்று அவள் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் 13 வயது யுவ­தி­யாக இருந்­தி­ருப்பாள்.

சேயா மீது பாலியல் பலாத்­காரம் மேற்­கொண்­டமை தொடர்பில் கொண்­டையா எனும் இளைஞர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார். கைது செய்­யப்­பட்ட கொண்­டையா தொங்­க­வி­டப்­பட்டு பொலி­ஸா­ரினால் உண்­மையை வர­வ­ழைப்­ப­தற்­காக அடிக்­கப்­பட்­ட­போது தான் சேயா மீது பலாத்­காரம் பிர­யோ­கித்து அதன்­பின்பு கொலை செய்­த­தாக ஏற்­றுக்­கொண்டார்.

ஆனால் உண்மை இது­வல்ல. உண்­மை­யான கதை என்­ன­வென்றால் சேயாவை பாலியல் பலாத்­காரம் செய்து கொலை செய்­தது கொண்­டையா அல்ல. கொண்­டை­யாவின் மூத்த சகோ­தரர் சமன் ஜயலத் ஆவார். இந்தச் சம்­ப­வத்தை எவ­ரி­டமும் தெரி­விக்­கக்­கூ­டாது என சகோ­தரன் சமன் ஜயலத் கொண்­டை­யா­விடம் உறுதி மொழி பெற்­றுக்­கொண்டார். கொண்­டையா எவ்­வ­ள­வுக்கு மடையன் என்றால் பொலி­ஸாரின் அடி­க­ளுக்குப் பயந்து சிறு­மியை தானே பாலியல் பலாத்­காரம் செய்­த­தாக பொலி­ஸா­ரிடம் ஒப்­புக்­கொண்டான். இலங்கை பொலிஸ் மதிநுட்பம் மிக்­கது என்று கூறப்­பட்­டாலும் எத­னையும் முறை­யாக செய்து கொள்ள முடி­யாத ஒன்­றாகும். இப்­போது முறை­யாக வழக்­கொன்­றினைக் கூட அவர்­க­ளாக தாக்கல் செய்ய முடி­யா­துள்­ளது. இதனால் அவர்கள் நீதி­மன்றின் முன்­னி­லையில் அவ­மா­னத்­துக்கு உள்­ளா­கி­றார்கள்.

ஏதா­வ­தொரு குற்றச் செயல் தொடர்­பான விசா­ர­ணையை விரைவில் முடி­வு­றுத்­து­வ­தற்­கான தேவை பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்டால் அவர்கள் பாதையில் செல்லும் ஏவ­ரா­வது ஒரு மனி­தனை கைது செய்து கொண்டு வரு­கி­றார்கள். அம்­ம­னி­தனை எலும்­புகள் உடையும் வகையில் தாக்கி அவ­னி­ட­மி­ருந்து பொய் வாக்கு மூலத்தைப் பெற்­றுக்­கொள்­கி­றார்கள். இது தொடர்­பாக உவ­மானக் கதை­யொன்றைக் கூறலாம்.

ஒரு நாள் மனி­த­ரொ­ருவர் காட்­டுக்குச் சென்ற போது கர­டி­யொன்­றினால் கொலை செய்­யப்­பட்டு உண்­ணப்­பட்டார். கர­டியைப் பிடித்­துக்­கொண்டு வந்து வாக்கு மூல­மொன்­றினைப் பதிவு செய்­தபின் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறு பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

பொலிஸார் காட்­டுக்குச் சென்­றனர். அங்­கி­ருந்து ஒரு முயலை கைது செய்து கொண்டு வந்­தனர். அந்த முயலை பல­வாறு தாக்கி தான் அந்த மனி­தனை கொலை செய்து சாப்­பிட்­ட­தாக ஏற்­றுக்­கொள்­ளு­மாறு பல­வந்­தப்­ப­டுத்­தினர். முயலும் தான் மனி­தனைக் கொன்று சாப்­பிட்­ட­தாக வாக்கு மூலம் வழங்­கி­யது. கொண்­டை­யா­வுக்கும் நடந்­தது இதுதான்.

கொண்­டை­யா­வுக்கு அறி­வி­ருந்தால் பொலி­ஸா­ருக்கு எதி­ராக வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்து நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும். சமன் ஜயலத் தூக்குத் தண்­ட­னைக்­குள்­ளாகி மரண தண்­டனை அமுலில் இல்­லா­ததால் சிறைச்­சா­லையில் இருக்­கிறார். பெண்கள் மீதான பாலியல் பலாத்­காரம் புரியும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வேண்­டு­மென நாம் இதற்கு முன்பும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம்.

மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்­ட­வர்­களை தூக்­கி­லிட்டு தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்காவின் ஆட்­சிக்­கா­லத்தில் புதிய கயிறு ஒன்று பாகிஸ்­தா­னி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­டது. சில­வேளை அந்­தக்­க­யிறு தற்­போது உப­யோ­கிக்க முடி­யாத அள­வுக்கு பழு­த­டைந்­தி­ருக்­கலாம்.

கடந்த 27 ஆம் திகதி பண்­டா­ர­கம அட்­டு­லு­க­மயில் கோழி இறைச்சி வாங்­கு­வ­தற்கு கடைக்குச் சென்ற பாத்­திமா ஆயிஷா எனும் 9 வயது சிறுமி வீடு திரும்­ப­வில்லை. இது பற்றி பெற்றோர் பண்­டா­ர­கம பொலிஸில் முறை­ப்பாடு செய்­தனர். அடுத்த நாள் காலையில் சிறு­மியின் சடலம் வீட்­டுக்கு அண்­மித்த சதுப்பு நிலப்­ப­கு­தியில் கண்டு பிடிக்­கப்­பட்­டது.

அட்­டு­லு­கம அல்­கஸ்­ஸாலி வித்­தி­யா­ல­யத்தின் மாண­வி­யான ஆயிஷா சுறு­சு­றுப்­பான சிறு­மி­யாவார். இவ்­வா­றான சிறு­மி­யொ­ரு­வரை கோழி­யி­றைச்சி வாங்­கு­வ­தற்­காக கடைக்கு அனுப்­பிய அவ­ளது தாயையும் தந்­தை­யையும் சவுக்கால் அடிக்க வேண்டும் என நாம் முதலில் தெரி­விக்க விரும்­பு­கிறோம்.

அடுத்து இந்த சம்­ப­வத்தின் குற்ற நிலை­மையை நாம் நோக்­குவோம். பாலியல் பலாத்­காரம் மேற்­கொள்­ளப்­பட்டு அல்­லது மேற்­கொள்­ளப்­ப­டாது சிறிய பிள்­ளை­யொன்று கொலை செய்­யப்­படும் போது அந்தச் சிறு­வ­னது அல்­லது சிறு­மி­யி­னது சடலம் அவர்­க­ளது வீட்­டுக்கு அண்­மித்த இடத்­தி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வதே உலக குற்றச் செயல் வர­லா­றாகும்.

இவ்­வா­றல்­லாத சந்­தர்ப்பம் மிகவும் குறை­வாகும். இவ்­வா­றல்­லாத சந்­தர்ப்­பங்­களில் காணா­மற்­போகும் சிறுவன், சிறு­மி­களின் சட­லங்கள் ஒருபோதும் கிடைக்கப் பெறு­வ­தில்லை. கொலை செய்­யப்­பட்ட சிறு­மியின் சடலம் அவ­ளது வீட்­டுக்­க­ருகில் கண்டு பிடிக்­கப்­பட்டால் அந்தக் கொலையைச் செய்­தவர் அருகில் வசிக்கும் ஒரு­வ­ராக இருப்­ப­தற்கு 75 வீத­மான வாய்ப்பு உள்­ளது.

ஆயிஷா சென்ற பாதையை மோப்­ப­மிட்டுச் சென்ற பொலிஸ் நாய் கோழிக்­க­டைக்­க­ருகில் நின்­றது. சிறுமி ஆயிஷா இறப்­ப­தற்கு முன்­னைய இரவு அணிந்­தி­ருந்த ஆடை­யையே பொலிஸ் நாய் மோப்­ப­மிட்­டது. ஆயிஷா காணா­மற்­போன பின்பு முகநூல் பக்­கத்­தில்­ அ­றி­விப்பு ஒன்று பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. சிறுமி ஆயிஷா புறக்­கோட்டை பஸ் நிலை­யத்தில் பெண் ஒரு­வ­ருடன் இருப்­ப­தா­கவே அப்­ப­திவில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் மூலம் பொலிஸ் விசா­ர­ணைகள் ஒரு வகையில் குழப்பமடைய முடியும். இந்தப்பதிவினையேற்றியவர் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட வராக இருந்தால் சிறுமியின் வீட்டுக்கருகில் சோதனைகளை மேற்கொள்ளாது பொலிஸாரை புறக்கோட்டை பஸ்நிலையத்துக்கு அனுப்பி வைப்பது குற்றவாளியின் இலக்காக இருக்கலாம்.

சேயா சதெவ்­மியின் கொலை­யுடன் கொண்­டை­யாவை தொடர்­பு­ப­டுத்தி கொட­தெ­னிய பொலிஸார் ஆடிய நாட­கத்­துக்கு சம­மாக அட்­டு­லு­கம பொலிஸார் நாட­க­மா­டா­விட்டால் பாத்­திமா ஆயி­ஷாவின் கொலை தொடர்பில் உண்­மை­யான தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொள்ள முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.