நீர்கொழும்பில் நடப்பது என்ன?

0 268

எம்.எம். இஸ்மதுல் றஹுமான்

கொழும்பில் ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரி மாளிகை முன்­பாக அமை­தி­யான முறையில் போராட்­டங்­களை நடாத்தி வந்­த­வர்கள் மீது கடந்த மே 9 ஆம் திகதி ஆளும் தரப்பு குண்­டர்கள் நடாத்­திய தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் வன்­மு­றைகள் வெடித்­தன. இவற்றில் அதிகம் வன்­மு­றைகள் மற்றும் பதற்ற நிலையை சந்­தித்த ஒரு பிர­தே­சமே நீர்­கொ­ழும்பு. அங்கு அர­சி­யல்­வா­தி­க­ள் மாத்­தி­ர­மன்றி தனி­யா­ருக்குச் சொந்­த­மான ஹோட்­டல்கள், வீடுகள், வர்த்­தக நிலை­யங்­களும் தாக்­கப்­பட்டு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. இதனைத் தொடர்ந்து அங்கு முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன முரண்­பாட்டைத் தூண்­டவும் ஒரு குழு முயற்­சித்­தது. எனினும் இந்த முயற்சி தோற்­க­டிக்­கப்­பட்­டது. இந் நிலையில் இந்த வன்­மு­றை­களின் பின்னர் நீர்­கொ­ழும்பில் தற்­போ­தைய நிலை­வரம் எவ்­வா­றுள்­ளது என்­பது பற்­றிய ஒரு பார்­வையை இந்தக் கட்­டுரை முன்­வைக்க விளை­கி­றது.

கொழும்பில் அமை­தி­யாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்ட தகவல் கிடைக்கப் பெற்­றதைத் தொடர்ந்து, நீர்­கொ­ழும்பு, தெல்­வத்த சந்­தியில் அமைந்­துள்ள ‘கோட்டா கோ ஹோம்’ கிளையில் ஒன்று சேர்ந்த மக்கள் வீதியை மறித்து ஆர்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அல­ரி­மா­ளி­கைக்கு ஆட்­களை ஏற்­றிச்­சென்ற பஸ்­களின் இலக்­கங்­களை காட்­சிப்­ப­டுத்­தினர். கொழும்­பி­லி­ருந்து வரும் பஸ்­களை நிறுத்தி காலி­மு­கத்­திடல் தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் உள்­ள­னரா என தேடினர்.

ஊர­டங்குச் சட்­டத்­தையும் பொருட்­ப­டுத்­தாது சந்தி சந்­தி­யாக கூடி­யி­ருந்த ஆண்கள், பெண்கள், இளை­ஞர்கள், யுவ­திகள் பஸ்­களை நிறுத்தி சோத­னையில் ஈடு­பட்­டனர்.
கடற்­கரைத் தெருவில் ஒன்று கூடிய மக்கள் கூட்டம் முதலில் லுயிஸ் பிளேஸில் உள்ள நிமல் லான்சா எம்.பி.யின் காரி­யா­ல­யத்தைத் தாக்கி அங்­கி­ருந்த ஆவ­ணங்­களை வீதியில் வீசினர். அத­னைத்­தொ­டர்ந்து அவரின் தந்­தையின் வீடு, வர்த்­தக நிலை­யங்­களை தாக்கி சேத­மாக்­கி­ய­துடன் அங்­கி­ருந்த பொருட்­க­ளையும் வீதியில் போட்டுக் கொளுத்­தினர்.

ஒன்­று­கூ­டிய கூட்­டத்­தினர் கோஷங்­களை எழுப்­பிக்­கொண்டு ஊர்­வ­ல­மாகச் சென்று தலு­பொத்த, ஹிர­க­த­வுர வீதியில் அமைந்­துள்ள முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் நிமல் லான்­சாவின் அரு­க­ருகே அமைந்­துள்ள இரு வீடு­க­ளுக்கும் தீ வைத்­தனர். இதில் இரு வீடு­களும் முற்­றாக சேத­ம­டைந்­தன.

பின்னர் அவரின் சகோ­த­ர­ரான நீர்­கொ­ழும்பு முதல்வர் தயான் லான்­சாவின் கட்­டு­வ­பிட்­டிய வீதியில் உள்ள வீட்டை உடைத்­தனர். இந்த வன்­மு­றை­க­ளின்­போது, வீதியில் ஊர்­வ­ல­மாக செல்லும் போதும் தீயிட்டுக் கொளுத்தும் போதும் தமது கைய­டக்கத் தொலை­பே­சிகள் ஊடாக புகைப்­படம் எடுப்­ப­தையோ வீடியோ எடுப்­ப­தையோ தடுப்­ப­திலும் அவர்கள் கண்ணும் கருத்­து­மாக இருந்­தார்கள். ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கூட படம் எடுக்க விட­வில்லை.

பின்னர் அர­சியல் பிர­மு­கர்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தென பேசப்­படும் கட்­டான பொலிஸ் பிரி­விற்கு உட்­பட்ட நீர்­கொ­ழும்பு-மீரி­கம பிர­தான வீதியில் அமைந்­துள்ள எவன்ரா கார்டன் ஹோட்டல், குராண, கொழும்பு வீதியில் உள்ள கிரேன்­டிஸா ஹோட்டல், கல்­கந்த சந்­தியில் உள்ள பே போடேன்ட் ஹோட்டல் என்­ப­னவும் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொளுத்­தப்­பட்­டன. இவை அனைத்தும் ஆடம்­பர சொகுசு ஹோட்­டல்­க­ளாகும்.
இந்த ஹோட்­டல்­களின் உரி­மை­யா­ளரின் இல்லம் என சந்­தே­கிக்­கப்­படும் பன்­சலை வீதி­யி­லுள்ள வீட்­டையும் இக்­கும்­பல்கள் விட்­டு­வைக்­க­வில்லை.

ஒரு கூட்டம் இவ்­வாறு தாக்­குதல் நடாத்தி கொளுத்­திய பின்னர் அதனைப் பார்­வை­யிட அங்கு சென்ற பொது­மக்கள் அங்­கி­ருந்த உட­மைகள், தள­பா­டங்கள் மற்றும் அனைத்துப் பொருட்­க­ளையும் சூறையாடிச் சென்­றனர்.

கையில் அகப்­பட்ட பொருட்­களை வாக­னங்­க­ளிலும், மோட்டார் சைக்­கிள்கள், துவிச்­சக்­கர வண்­டி­க­ளிலும், கால்­ந­டை­யா­கவும் எடுத்துச் சென்­றனர். விலை உயர்ந்த வெளி­நாட்டு மது­பான போத்­தல்கள், சமை­ய­லுக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உண­வுப்­பொ­ருட்கள், சமையல் உப­க­ர­ணங்கள், ஏன் ஆவ­ணங்­களை கோவைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த பைல் கவர்­களைக் கூட எடுத்துச் சென்­ற­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் கூறு­கின்­றனர்.
ஏழெட்டுக் கதி­ரை­களை துவிச்­சக்­கர வண்­டியில் வைத்து தள்­ளிக்­கொண்டு செல்லும் காட்­சியும் குளி­ரூட்டி சாத­னத்தை கழற்றி எடுத்துச் செல்லும் காட்­சியும் சமூக வலைத்­த­ளங்­களில் அதிகம் பகி­ரப்­பட்­டன. குளிர்­சா­தனப் பெட்­டிகள், மெத்­தைகள், பீங்கான் கோப்­பைகள், தள­பா­டங்கள் என அனைத்­தையும் எடுத்துச் சென்­றனர். எவன்ரா ஹோட்­டலில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஆடம்­பர வாக­னங்­களும் தீயில் கருகி இருந்ததைக் காண முடிந்­தது.

எவன்ரா கார்டன் ஹோட்­டலின் பாது­காப்பு பெட்டி (safe) உடைக்­கப்­பட்டு அதி­லி­ருந்து பணம், தங்க நகைகள் அனைத்தும் கள­வா­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைக்­கின்­றன. உரி­மை­யா­ளரின் மகளின் திரு­ம­ணத்­திற்­காக கொள்­வ­னவு செய்­யப்­பட்­டி­ருந்த நகை­களும் அதில் இருந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

பொது­வாக ஒரு இடத்தில் ஏதா­வது ஒரு குற்­ற­வியல் சம்­பவம் நடந்தால் உடனே தட­ய­வியல் பொலிஸார் (சோகோ) அந்த இடத்­திற்கு வந்து மஞ்சள் நிற பட்­டியைக் கட்டி அந்தப் பகு­திக்கு யாரையும் உட்­செல்ல விட­மாட்­டார்கள். ஆனால் அசம்­பா­விதம் நடந்த எந்த ஒரு இடத்­திற்கும் பாது­காப்பு தரப்­பினர் உட­ன­டி­யாக வர­வில்லை. இது கொள்­ளை­யர்­க­ளுக்கு பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்கு போது­மான கால அவ­கா­சத்தை வழங்­கி­யது.

திருடப்பட்டு பின்னர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள்

பல்­வேறு கோணங்­களில் விசா­ரணை நடாத்­திய பொலிஸார் கொள்­ளை­ய­டித்துச் சென்ற பொருட்­களை வீதி ஓரங்­களில் வைக்­கு­மாறு ஒலி­பெ­ருக்கி மூலம் அப்­பி­ர­தேச மக்­களை அறி­வு­றுத்தி காலக்­கெடு விதித்­தனர். இதனை செவி­ம­டுத்த பலர் அவ்­வாறே செய்­தனர்.
வீதி ஓரங்­களில் வைக்­கப்­பட்ட பொருட்­களை பொலிஸார் எடுத்துச் சென்­றனர். குறித்த காலக்­கெடு முடி­வ­டைந்­ததன் பின்னர் நீர்­கொ­ழும்பு பிராந்­தி­யத்தின் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொலிஸார் ஒன்­றி­ணந்து இரவு வேளையில் சந்­தே­கத்­துக்­கு­ரிய பகு­தி­களில் வீடு­வீ­டாகச் சென்று சோதனை நடத்­தினர்.

இதன்­போது மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பொருட்கள் என சந்­தே­கிக்­கப்­பட்­ட­வற்றை பொலிஸார் கைப்­பற்­றினர். அத்­துடன் அவற்றை வைத்­தி­ருந்­த­வர்­களும் கைது செய்­யப்­பட்­டனர்.

கைப்­பற்­றப்­பட்ட, சூறையா­டப்­பட்ட பொருட்கள் நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் நிலை­யங்­களில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இரு பொலிஸ் நிலை­யங்கள் மூலமும் சந்­தே­கத்தின் பேரில் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் கட்­டான பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட 12 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதேபோல் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்­தி­னூ­டாக 15 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
இன்னும் சிலரை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­துடன் மேலும் பலரை கைது செய்­வ­தற்­கான புலன்­வி­சா­ர­ணைகள் தொடர்ந்து இடம்­பெ­று­கின்­றன.
இதே­வேளை, எவன்ரா ஹோட்­ட­லுக்கு முன்னால் இடம்­பெற்ற சூட்டுச் சம்­ப­வத்தில் இருவர் கொல்­லப்­பட்­டனர். இச் சம்­பவம் தொடர்­பிலும் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

முஸ்­லிம்கள் மீது திருப்ப முயற்சி
இந்த வன்­மு­றைகள் மற்றும் பொருட்­களைக் கொள்­ளை­யிட்ட சம்­ப­வங்­களில் அப் பகு­தியைச் சேர்ந்த பல்­வேறு தரப்­பு­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த நிலையில், எவன்ரா கார்டன் ஹோட்­ட­லி­லி­ருந்து பொருட்­களை கொள்­ளை­யிட்­ட­வர்கள் முஸ்­லிம்­கள்தான் என கதை பரப்­பப்­பட்­டது.

10 ஆம் திகதி மாலை ஹோட்டல் உரி­மை­யா­ளரின் ஆத­ர­வா­ளர்கள் சிலர் அங்கு வரு­கை­தந்து பொருட்­களை எடுத்துச் செல்­ப­வர்­களை தாக்கத் தொடங்­கினர். பின்னர் இர­வாகும் போது அந்தக் கும்பல் பெரி­ய­முல்லை, தீன் சந்­தியில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­களை தாக்க ஆரம்­பித்­தனர். உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு விரைந்து வந்த நீர்­கொ­ழும்பு பிர­தேச கத்­தோ­லிக்க குருக்களும், கன்­னி­யாஸ்­தி­ரி­களும் இவ்­வி­வ­காரம் இன­மோ­த­லாக மாறாது தடுக்க பெரும் பிர­யத்­தனம் எடுத்­தனர். அவர்கள் வீதியில் இறங்கி நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­தினர். இவர்­க­ளுடன் மௌல­வி­மார்­களும் இணைந்­து­கொண்டு சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தினர்.

உட­ன­டி­யாக பொலி­ஸாரும், இரா­ணுவ, விமா­னப்­படை வீரர்­களும் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

உரிய நேரத்தில் கத்­தோ­லிக்க குருமார் செயற்பட்­ட­தனால் இன மோத­லாக மாற­வி­ருந்த நிலைமை தடுக்­கப்­பட்­ட­தென மக்கள் நிம்­மதிப் பெரு­மூச்சு விட்­டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து நீர்­கொ­ழும்பில் இன வன்­மு­றையைத் தூண்­டிய அதே நபர்­களே இம்­மு­றையும் இன­மு­று­களை தூண்ட எத்­த­னித்­த­தாக பலரும் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றனர்.

இந்தச் சம்­ப­வத்தில் தீன் சந்திப் பிரதேசத்தில் 16 கடைகள் உடைக்கப்பட்டன. வேன் ஒன்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பனவும் தீயிடப்பட்டன.

தீன் சந்தி பேக்கரியினுள் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இரவு வேளையில் மைமன்கொடல்லையில் ஒரு கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் உடைத்து களவாடப்பட்டதுடன் வை சந்தியில் முஸ்லிம் ஒருவரின் பெயின்ட் கடையை உடைத்து அங்கிருந்த பெயின்ட் பக்கற்றுகளை எடுத்துச் செல்லும் காட்சியும் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

முஸ்லிம்களை இலக்கு வைத்த இந்த வன்முறைகள் தொடர்பில் போதுமான ஆதாரங்கள் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.