வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்டு சரி­யாக 10 வரு­டங்கள்: நீதி எங்கே?

0 250

எம்.எப்.எம்.பஸீர்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்டு 10 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட நிலையில் ஜனாஸா அவ­ரது காருக்குள் இருந்து நார­ஹேன்­பிட்டி சாலிகா மைதா­னத்­துக்கு அருகில் மீட்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இன்று வரை குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. கொலை­யா­ளிகள் அடை­யாளம் காணப்­ப­டவோ கைது செய்­யப்­ப­டவோ இல்லை.

இந்நிலையில், கடந்த 2021 மே 17 ஆம் திகதி, வஸீம் தாஜு­தீனின் சகோ­தரி ஆயிஷா தாஜுதீன், தனது முகப் புத்­த­கத்தில் வஸீமின் படு­கொ­லைக்கு இது­வரை நியாயம் கிடைக்­கா­மையை சுட்­டிக்­காட்டி, ‘நீதி என்­பது ஒரு மாயை” என வர்­ணித்­தி­ருந்தார்.
“புயலைப் போல, பல ஆண்­டுகள் கடந்­து­விட்­டன, விட­யங்கள் அமை­தி­யா­கி­விட்­டன, நீதி என்­பது ஒரு மாயை.ஆனால் காயங்கள் இன்னும் புதி­தா­கவே எரி­கி­றது. அதனை ஒரு போதும் வெல்ல முடி­யாது. 9 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அந்த சமயம் நடந்­தது என்ன என்­பது இன்னும் எமக்கு கேள்விக் குறியே. மறக்க முடி­யாமல் உமது இறுதி நாள் தரு­ணங்­களில் நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்றோம் வஸீம். நாம் உன்னை இழந்­து­விட்டோம்” என ஆயிஷா தாஜுதீன் அதில் பதி­விட்­டி­ருந்தார். ஆம், நீதி இன்னும் மாயையே. விசா­ர­ணை­களில் எந்த முன்­னேற்­றமும் இல்லை.

கடந்த 2015 இல் ஆட்சி மாற்­றத்தில் முக்­கிய பங்கு, வஸீம் தாஜுதீன் கொலை­யா­ளி­களை பிடிப்போம் என்ற வாக்­கு­று­திக்கும் இருந்­தது. எனினும் அது நடக்­கவே இல்லை. பல தடங்­கல்­களைக் கடந்து அந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, சந்­தேக நபர்­களை நெருங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில், அதனை விசா­ரித்த சி.ஐ.டி. விசா­ரணை அதி­காரி, அவ்­வி­சா­ர­ணை­களை நெறிப்­ப­டுத்­திய உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் (தற்­போது பொலிஸ் அத்­தி­யட்சர்) உள்­ளிட்ட குழு, சி.ஐ.டி.யை விட்டே மாற்­றப்­பட்டு விட்­டனர்.
இந்த 8 வரு­டத்தில் சாட்­சி­யங்­களை மறைத்­தமை, அழித்­தமை தொடர்பில் மட்டும் மூவர் கைது செய்­யப்­பட்­டனர்.

வஸீமின் மர­ணத்தை கொலை என உறுதி செய்ய நடந்த சட்டப்
போராட்­டங்கள் ஏராளம். அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் வஸீமின் காருக்குள் தீ பரவ இர­சா­யனம் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக
சந்­தே­கிக்கும் சான்­றுகள் உள்­ள­தாக அறிக்கை கொடுத்தும், அதனை கொலை என சொல்ல 3 வரு­டங்­க­ளுக்கு மேல் ஆனது.
2 பிரேத பரி­சோ­த­னைகள் தேவைப்­பட்­டன.

மேல் மாகா­ணத்தில் கொலை நடந்த அன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த அனுர சேன­நா­யக்க, அப்­போது கொலை நடந்த பொலிஸ் பிரிவின் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் பெரேரா ஆகி­யோ­ருக்கு எதி­ராக தக­வல்­களை மறைத்­தமை தொடர்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டது. அக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அவர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில், கொலையின் பின்னர் மேல­திக ஆய்­வுக்­காக எடுக்­கப்­பட்ட வஸீமின் உடற் பாகங்கள் சில காணாமல் போனமை தொடர்பில் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணைக்கு அமை­வாக முன்னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந் நிலையில் அவர்­களில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, முன்னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகி­யோ­ருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் தண்­டனை சட்டக் கோவையின் 198 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்­றினை செய்­துள்­ள­தாக கூறி வழக்கு தொட­ரப்­பட்­டது. எவ்­வா­றா­யினும், வழக்கு விசா­ரணை ஆரம்­பத்தில் ஆனந்த சம­ர­சே­க­ரவும், பின்னர் அனுர சேன­நா­யக்­கவும் உயி­ரி­ழந்­தனர். எனினும் கொலை­யா­ளிகள் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

வஸீமின் மர­ணத்தை கொலை என உறுதி செய்ய நடந்த சட்டப் போராட்­டங்கள் ஏராளம். அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் வஸீமின் காருக்குள் தீ பரவ இர­சா­யனம் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்கும் சான்­றுகள் உள்­ள­தாக அறிக்கை கொடுத்தும், வஸீமின் ஜனாஸா, அவ­ரது காரின் சாரதி ஆச­னத்­துக்கு பக்­கத்து ஆச­னத்தில் ஆச­னப்­பட்டி அணிந்­தி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்டும் கூட அதனை கொலை என சொல்ல 3 வரு­டங்­க­ளுக்கு மேல் ஆனது. 2 பிரேத பரி­சோ­த­னைகள் தேவைப்­பட்­டன.

இந்தப் படு­கொலை தொடர்பில் மீண்டும் தற்­போது பேசப்­ப­டு­கி­றது. தற்­போது காலி முகத்­திடல் அருகே கோட்டா கோ கம எனும் பெயரில் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்டம் தொடரும் நிலையில், ராஜ­பக்ச குடும்­பத்தின் கடந்த கால நட­வ­டிக்­கைகள் குறித்து அங்கு பேசப்­ப­டு­கி­றது.

ராஜ­பக்ச குடும்­பத்­திற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களில் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை முக்­கி­ய­மா­னது. இந்த படு­கொலை தொடர்பில் ராஜ­பக்­சாக்கள் மீது­விரல் நீட்ட 3 முக்­கிய விட­யங்கள் கார­ண­மா­கின்­றன.

முத­லா­வது கொலைக்­கான கார­ண­மாக கரு­தப்­படும் ஹெவ்லொக் – கால்டன் றக்பி கழ­கங்கள் குறித்த முறுகல் நிலை­யாகும். கால்டன் விளை­யாட்டு கழ­கமும் அது சார் செயற்­பா­டு­களும் ராஜ­பக்ச குடும்­பத்தை மையப்­ப­டுத்­தி­யது என்­பது எல்­லோரும் அறிந்த விட­ய­மாகும். 2 ஆவது காரணம், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் மனைவி, கொலை நடக்கும் போது நாட்டின் முதற் பெண்­மணி சிரந்தி ராஜ­பக்­சவின் சிரி­லிய மன்­றத்­துக்கு செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட டப்­ளியூ. பி. கே. ஏ.0642 எனும் டிபண்டர் வண்­டி­யாகும். இவ்­வண்டி 2011.08.11 ஆம் திகதி சிரந்தி ராஜ­பக்­ச­வுக்கு செஞ்­சி­லுவை சங்கத் தலைவர் ஜகத் பாலசுரிய­வினால் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. வஸீம் கொலை நடந்த போது, வஸீம் வாக­னத்தை பின் தொடர்ந்து சென்­ற­தாக சி.ஐ.டி. அடை­யாளம் கண்ட வண்டி இந்த டிபண்டர் வண்­டியை ஒத்­தது. அத்­துடன் எந்த நம்பும் படி­யான கார­ணி­களும் இன்றி, டிபண்டர் வண்­டியின் நிறம் இரு தட­வைகள் மாற்­றப்­பட்­டுள்­ளன. இது சந்­தே­கத்தை அதி­க­ரிக்கும் செயற்­பா­டாகும்.

அடுத்த காரணம், வஸீம் கொலை தொடர்பில் 2015 ஆம் ஆண்டின் பின் விசா­ரித்த சி.ஐ.டி. பல தட­யங்­களை வைத்து, வஸீமின் வாக­னத்தை பின் தொடர்ந்த கொலைக்­கார கும்பல் சிரந்தி ராஜ­பக்­சவின் பாது­காப்­புக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த கடற்­படை சிறப்புக் குழு என சந்­தே­கித்து விசா­ர­ணை­களை நடத்­தினர். இதற்­காக அவர்கள் அப்­பா­து­காப்பு குழுவின் நாளாந்த பதிவுப் புத்­த­கத்தை ஆராய்ந்­தனர். இதன்­போது நாளாந்த பதிவுப் புத்­த­கத்தின் 6 பக்­கங்கள் கிழிக்­கப்­பட்டு, வேறு பக்­கங்கள் செலோடேப் கொண்டு ஒட்­டப்­பட்­டி­ருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது. அந்த பக்­கங்கள் வஸீம் கொலை நடந்த தினத்­துக்­கு­ரி­ய­தாகும். இந்த நிலையில் அன்று கட­மை­யி­லி­ருந்த கடற்­ப­டை­யினர் குறித்த தக­வல்­களை தரு­மாறு சி.ஐ.டி. கோரிய போதும் அவை வழங்­கப்­ப­டா­ததால் வஸீம் கொலை­யா­ளியை தேடிய விசாரணை தடைப்பட்டது. இதற்கு மைத்திரி–ரணில் கூட்டாட்சியும் பதில் சொல்ல வேண்டும். அந்த அரசாங்கமும் விசாரணைகள் முன் கொண்டு நகர்வதை தடுக்கும் செயல்களை செய்தன. தேர்தல் காலத்தில் மட்டும் அவர்கள் வஸீம் மீது அக்கறை காட்டினர்.

எவ்வாறாயினும், வஸீம் கொலைக்கு நேற்று முன் தினத்துடன் ஒரு தசாப்தம் பூர்த்தியானது. உண்மைகள் வெளிப்படையானவை. ஆனால் விசாரணை மந்தமானது. குற்றவாளிகள் என கருதப்படுவோர் அரசியல் பலமிக்கவர்கள். அதனால் வஸீம் கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக திரிகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.