மாவனல்லை சிலை உடைப்பு வழக்கு: தண்டனைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம்

0 463

மாவ­னல்லை சிலை உடைப்பு சம்­ப­வத்தில் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­கொண்­டுள்ள 16 பேர் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் அன்றி தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் கீழ் வழக்­கு­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதிபர் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 46 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் 16 பேருக்கு எதி­ராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த 16 பேரில் 10 பேர் தம் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.

இந் நிலையில் இவ்­வாறு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டத்தின் கீழ் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு தீர்ப்பு அளிக்­கப்­ப­டு­மாயின் அவர்­க­ளுக்கு சுமார் 15 வரு­டங்கள் முதல் 20 வரு­டங்கள் வரை சிறைத்­தண்­டனை கிடைக்க வாய்ப்­புள்­ள­தாக சட்­டத்­த­ர­ணிகள் தெரி­விக்­கின்­றனர். எனினும் தண்­டனைச் சட்­டத்தின் கீழ் வழக்கு முன்­கொண்டு செல்­லப்­ப­டு­மாயின் அதி­க­பட்­ச­மாக ஒரு­வ­ருக்கு இரு வருட சிறைத்­தண்­ட­னையே விதிக்­கப்­பட முடியும். இந் நிலை­யி­லேயே இவ்­வ­ழக்கை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் அல்­லாது தண்­டனைச் சட்டக் கோவையின் கீழ் முன்­கொண்டு செல்­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு சந்­தேக நபர்­களின் சட்­டத்­த­ர­ணிகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இதற்கு தற்­போது சட்­டமா அதிபர் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.
இதனைத் தொடர்ந்து இவ் வழக்கை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பில் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் அறிய முடிகிறது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.