அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகை நடத்தலாம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

0 467

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜும்ஆ தொழு­கையை மஸ்­ஜி­து­களில் மாத்­தி­ர­மல்ல மறு அறி­வித்தல் விடுக்­கப்­படும் வரை தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்­க­ளிலும் தொழ­மு­டியும் என வக்பு சபை தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கொவிட் பர­வ­லுக்கு முன் ஜும்ஆ தொழுகை நடை­பெற்ற மஸ்­ஜி­து­களில் மாத்­திரம் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை நடத்­து­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அவ­ச­ரப்­பட்டு கடந்த வாரம் அறி­வு­றுத்தல் விடுத்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரி­விக்­கையில், வக்பு சபை வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை பற்றி இது­வரை தீர்­மானம் மேற்­கொள்­ள­வில்லை எனவும் அதனால் கொவிட் 19 பரவல் கார­ண­மாக ஜும்ஆ தொழுகை நடை­பெற்ற தக்­கி­யாக்கள், ஸாவி­யாக்­களில் தற்­கா­லி­க­மாக மறு அறி­வித்தல் வரை தொழுகை மேற்­கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில் கொவிட் 19 வைரஸ் பரவல் கார­ண­மாக மக்கள் பள்­ளி­வா­சல்­களில் ஒன்­று­கூடும் எண்­ணக்கை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் ஜும்ஆ தொழுகை தக்­கி­யாக்கள், ஸாவி­யாக்­களில் அனு­ம­திக்­கப்­பட்­டது.

கொவிட் 19 கட்­டுப்­பா­டுகள் சுகா­தார அமைச்­சினால் இது­வரை தளர்த்­தப்­ப­டவோ நீக்­கப்­ப­டவோ இல்லை. இந்­நி­லையில் வக்பு சபை இந்தத் தீர்­மா­னத்தை எடுத்துள்ளது. எனவே மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தக்கியாக்கள், ஸாவியாக்களில் ஜும்ஆ தொழுகை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.