முஸ்லிம்களின் பேரீத்தம்பழ அரசியல்

0 463

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

இலங்­கையில் இஸ்லாம் காலூன்­றிய காலம்­தொட்டு முஸ்­லிம்­க­ளுக்கும் பேரீத்தம் பழங்­க­ளுக்கும் நோன்பு மாதத்­துக்­கு­மி­டையே நெருங்­கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பு சுதந்­திரம் கிடைத்­ததன் பின்னர் ஆட்­சி­யி­லி­ருக்கும் அர­சாங்­கங்­க­ளுக்கு முஸ்­லிம்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கும், தேர்தல் காலங்­களில் அவர்களின் வாக்­கு­களைத் திரட்­டு­வ­தற்கும், பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. நோன்பு மாதம் வந்­து­விட்டால் முஸ்லிம் அமைச்சர்களும் பிர­தி­நி­தி­களும் பேரீத்­தம்­பழ இறக்­கு­ம­தி­யைப்­பற்றி விசேட அறிக்­கை­களை செய்தித் தாள்­க­ளிலும் வானொலி மூல­மா­கவும் வெளி­யிட்டு முஸ்லிம் சமூ­கத்­துக்­கான அவர்களது மகத்­தான சேவையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது வழக்கம். அதிலும் குறிப்­பாக பொரு­ளா­தார நெருக்­கடி காலத்தில், இறக்­கு­ம­திக்­கான அந்நியச் செலா­வணி தட்­டுப்­பா­டான வேளையில், பேரீத்­தம்­பழ இறக்­கு­ம­திக்­கான அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு மேலும் பிர­பல்­ய­மான விளம்­பர அறிக்­கைகள் செய்தித் தாள்­களில் வரு­வ­துண்டு. அப்­ப­டிப்­பட்ட ஒரு நெருக்­க­டி­யான காலத்­துக்­குள்­ளேதான் எதிர்­வரும் நோன்பு மாதத்தில் போதிய அளவு பேரீத்­தம்­பழம் இறக்­கு­மதி செய்­தல் ­பற்றி ஒரு செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

நாடே வங்­கு­றோத்து அடையும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளதை யாவரும் அறிவர். ஏற்­க­னவே பேரீத்­தம்­பழம் உட்­பட 367 இறக்­கு­மதிப் பொருட்­க­ளுக்கு கட்டுப்பாடு ­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு அறி­வித்­துள்­ளது. இந்த நிலையில் முஸ்லிம் நீதி அமைச்சர் அலி சப்ரி உட்­பட ஏழெட்டு முஸ்லிம் பிர­தி­நி­திகள் பிர­தமரை அணுகி முஸ்­லிம்­க­ளுக்கு இத்­த­டையால் ஏற்­ப­டப்­போகும் பெரும் பாதிப்­பைப் பற்றி வலி­யு­றுத்­தி­யதால் பிர­த­மரும் அதை உணர்ந்து உட­ன­டி­யாக அத்­த­டையை நீக்­கு­வ­தற்கு வர்த்தமானி ஒன்று விரைவில் வெளி­வ­ரப்­போ­வதைப் படித்தேன். அதனைப் படித்­து­விட்டு அழு­வதா சிரிப்­பதா என்று தெரி­யா­ததால் இவ்­வி­ட­யம் ­பற்­றிய எனது சில சிந்­த­னை­களை வாசகர்களுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

முத­லா­வ­தாக, இஸ்லாம் மத்­திய கிழக்கின், அரே­பி­யா­விலே பிறந்­ததால் அப்­பி­ர­தே­சத்தின் இயற்கை வளங்­களும் புவி­யியல் பண்­பு­களும் அம்­மார்க்­கத்தின் சில ஆசா­ரங்­களில் கலந்­துள்­ளமை தவிர்க்க முடி­யா­த­தொன்று. இது இஸ்­லாத்­துக்­கு­மட்டும் சொந்­த­மான உண்­மை­யல்ல. அனைத்துச் சம­யங்­க­ளுக்கும் பொது­வான ஓர் யதார்த்தம். எல்லா மதங்­களும் உல­கத்தில் வாழ்­பவர்களுக்­கா­கவே வந்­தன. ஆதலால் வாழ்­பவர்களின் இயற்கைச் சூழ­லுக்கு மாறாக எந்த ஒரு மதமும் தனது ஆசா­ரங்­களை அறி­மு­கப்­ப­டுத்த முடி­யாது. இது ஒரு சமூ­க­வியல் அடிப்­ப­டை­யி­லான உண்மை.

நாளெல்லாம் பசித்­தி­ருந்து அந்­தி­வே­ளை­யிலே விர­தத்தை நிறைவு செய்­வ­தற்கு அரே­பி­யா­விலே விளைந்த பேரீத்­தங்­கனி அரபு நாட்டு முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சாதம். வரண்­டு­போன உட­லுக்குச் சுவை­யுடன் சக்­தி­யையும் ஊட்டும் ஒரு கனி­யா­க அது அமைந்து அதற்கும் நோன்­புக்கும் இடை­ய­றாத ஓர் உறவு ஏற்­பட்­டதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. கால­வோட்­டத்தில் இஸ்லாம் உல­கெங்­கிலும் பரவத் தொடங்­கி­ய­போது அத­னுடன் பர­விய புரோ­கித இஸ்லாம் பேரீத்­தங்­க­னி­யையும் நோன்­புடன் இணைத்து பாம­ர­ மக்­க­ளி­டையே அந்­தக்­கனி இல்­லை­யென்றால் நோன்பே பூர்த்­தி­யா­காது என்ற ஒரு மனோ­நி­லையை வளர்த்து விட்­டது. பேரீத்­தங்­க­னிக்கு மத ­ரீ­தி­யான மகத்­து­வ­மொன்று ஏற்­பட்ட வர­லாறு இதுதான்.

இலங்­கை­யிலோ அது அர­சி­ய­லுக்குள் நுழைந்­து­விட்­டது. போதிய அளவு அக்­க­னியை இறக்­கு­ம­தி­ செய்து முஸ்­லிம்­களின் விரத தாபத்தைத் தணித்­து­விட்டால் அவர்கள் தமது நன்­றியை வாக்­குச்­சா­வ­டி­யிலே காட்­டுவர் என்று பிர­தமர் மகிந்த ராஜ­பக்ச நினைத்­துள்ளார் போலும். அத்­துடன் அவ­ருக்­குப் ­பின்னால் நின்று அவரை ஊக்­கு­வித்த அந்த ஏழெட்டு முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் தாம் ஏற்­க­னவே 20ஆம் திருத்தப் பிரே­ர­ணைக்கு வாக்­க­ளித்த பாவத்­துக்­காக பேரீத்­தம்­ப­ழத்தின் மூலம் பிரா­யச்­சித்தம் தேடு­கி­றார்­கள் ­போலும் தெரி­கி­றது. இருந்தும் முஸ்­லிம்­களின் பேரீத்­தம்­பழ அர­சியல் என்றோ ஆரம்­பித்­து­விட்­டதை ஏலவே குறிப்­பிட்­டுள்ளேன்.

இரண்­டா­வ­தாக, முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக நாங்கள் அர­சுடன் இணைந்து பாடு­ப­டு­கிறோம் என்று பறை அடிக்கும் இப்­பி­ர­தி­நி­தி­க­ளிடம் முன்­வைக்க வேண்­டிய ஒரு சில கேள்­விகள் இருக்­கின்­றன. ஒன்று, பேரீத்தம் பழம்தான் இன்று முஸ்­லிம்­கள் எதிர்­நோக்கும் தலை­யாய பிரச்­சி­னையா? இரண்டு, கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக கேகாலை மாவட்­டத்தில் நெலுந்­தெ­னிய பள்­ளி­வாசல் வளா­கத்­திற்­கு­முன்பு இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­யொன்று தோன்றி அது இன்று நிரந்­த­ர­மாகி இருப்­பது இந்தச் செயல் வீரர்களின் பார்­வையில் விழ­வில்­லையா? மூன்று, மகரை சிறைச்­சா­லையின் நூறு­ வ­ருடப் பள்­ளி­வாசல் சிறைக்­கா­வலர்களால் அப­க­ரிக்­கப்­பட்டு அது இன்று அவர்களின் கேளிக்கை மண்­ட­ப­மாக இயங்­கு­வது இந்த அர­சியல் தலைவர்களின் கவ­னத்­திற்கு வர­வில்­லையா? நான்கு, பலாங்­கொ­டையில் கூர­க­லையில் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் மினாரா இடித்துத் தள்­ளப்­பட்­ட­போது எங்கே போனார்கள் இந்தப் போரா­ளிகள்? ஐந்து, முஸ்­லிம்­களின் கொவிட் ஜனா­ஸாக்­களை அர­சாங்கம் தீயிட்டுக் கொழுத்­தி­ய­போதும், அதனைக் கண்­டித்து ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை சபை குர­லெ­ழுப்­பிய பின்னர் அந்த ஜனா­ஸாக்கள் யாவற்­றையும் மஜ்மா நகரில் மட்­டுமே அடக்கம் செய்ய முடி­வெ­டுத்து ஒரு வருட கால­மாக முஸ்­லிம்­களின் மனோ­வேக்­காட்டை வளர்த்துக் கொண்­டி­ருந்­த­போதும் வாய் மூடிச் செய­லி­ழந்து நின்ற இந்தத் தலைவர்கள் கேவலம் நோன்பு திறக்கப் பேரீத்­தம்­பழம் பெற்றுத் தரு­கிறோம் என்று கூறு­வது ஒரு கேலிக்­கூத்­தாகத் தெரி­ய­வில்­லையா? ஆறு, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்­வைக்குள் முஸ்லிம் இனத்தின் தனித்­து­வங்­களை அழிக்க முனையும் நட­வ­டிக்­கை­க­ளைப்­பற்றி மௌனி­களாய் இருந்­து­கொண்டு பேரீத்­தம்­ப­ழத்­துக்­காகப் போர்க்­கொடி தூக்­கி­யதன் மர்மம் என்­னவோ? ஏழு, அட்­டா­ளைச்­சே­னையின் முள்­ளி­ம­லையில் ஒரு புத்தர் சிலையை நிறு­வு­வ­தற்குச் சில வாரங்­க­ளாக எடுக்­கப்­படும் முயற்­சிகள் இந்த இனப்­பக்தர்களுக்குத் தெரி­ய­வில்­லையா? முதலில் இக்­கேள்­வி­க­ளுக்கு விடை கூறி­யபின் அவர்களின் பேரீத்­தம்­பழப் போராட்­டத்தைப் பற்றி மக்­க­ளுக்கு விளக்­கட்டும். சுருக்­க­மாகச் சொன்னால், இந்தப் பம்­மாத்து அர­சி­ய­லுக்கு முஸ்­லிம்கள் இனியும் பலி­போக மாட்­டார்கள் என்­பதை எடுத்துக் கூறும் காலம் வந்­து­விட்­டது.

நோன்பு காலம் வந்­து­விட்டால் எத்­த­னையோ ஏழை முஸ்லிம் குடும்­பங்கள் பள்­ளி­வாசல் அரிசிக் கஞ்­சி­யையே இர­வு­நேர உண­வா­கக்­கொண்டு தமது நோன்புக் கட­மையை நிறை­வேற்­று­வது காலம் கால­மாக நடை­பெறும் ஒரு சம்­பவம். அதை இந்தத் தலைவர்களும் அறிந்­தி­ருப்பர். இன்றோ, ஜனா­தி­ப­தியின் கண்­மூ­டித்­த­ன­மான பசளை இறக்­கு­மதித் தடையால் அர­சிக்கே தட்­டுப்­பாடு ஏற்­பட்டு கஞ்­சி­கூடக் கிடைக்­காமல் நோன்பு நோற்கும் நிலலைமைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு இத்­த­லைவர்கள் கூறும் ஆறுதல் என்­னவோ? அதைப்­பற்றி எந்தக் கவ­லை­யு­மில்­லாமல் ஜனா­தி­ப­தியின் குறு­கி­ய­நோக்குக் கொள்­கை­க­ளுக்கு ஆமா போட்­டுக்­கொண்டு இருந்­து­விட்டு பேரீத்தம் பழத்­துக்­காக இப்­போது கூத்­தா­டு­வது வேடிக்­கை­யாகத் தெரி­ய­வில்­லையா?

தலை­ய­றுந்த சேவ­லொன்று திசை­யெங்கும் சுழன்று திரி­வ­து­போன்று என்­ன­செய்­வ­தென்று தெரி­யாது திக்­கு­முக்­கா­டு­கி­றது ராஜ­பக்ச அரசு. கடன்­பட்டு வாழ்ந்த கால­மும்போய் இனியும் கடன்­கொ­டுப்பார் யாரோ என்று ஏங்­கு­கின்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளார் நிதி அமைச்சர். தான் வகுத்த பாதைதான் நாட்டைச் செழிக்­க­வைக்கச் சிறந்த பாதை என்று தம்­பட்டம் அடித்து பொரு­ளா­தார வல்­லுனர்களின் ஆலோ­ச­னை­க­ளை­யெல்லாம் உத­றித்­தள்­ளிய ஜனா­தி­பதி இன்று நாட்­டையே இந்­தி­யா­வி­டமோ சீனா­வி­டமோ அட­கு­வைக்கும் ஒரு பாதையைத் தேடு­கி­றாரோ தெரி­ய­வில்லை. ஆனால் ஒன்­று­மட்டும் உண்மை. இந்த ஆட்சி நீண்­ட­காலம் நீடிக்­கப்­போ­வ­தில்லை. முஸ்­லிம்கள் தங்­க­ளது மார்க்­கத்தின் கட­மையை நிறை­வேற்ற நோன்பு நோற்­கி­றார்கள். ஆனால் லட்­சோ­ப­லட்சம் சிங்­கள, தமிழ்க் குடும்­பங்கள் பொரு­ளா­தாரக் கஷ்­டத்தால் பட்­டினி நோன்பு நோற்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளன. அந்தப் பட்­டி­னிப்­ப­டையே இந்த ஆட்­சிக்குச் சாவு­மணி அடிக்கத் தொடங்­கி­விட்­டது.

ஆனால் முஸ்­லிம்­க­ளுக்கோ பொரு­ளா­தாரக் கஷ்­டங்­க­ளோடு இன்­னுமோர் அடிப்­படைப் பிரச்­சி­னையும் எதிர்­நோக்­கி­யுள்­ளது. அதா­வது, இந்த ஆட்­சியை ஆட்­டிப் ­ப­டைக்கும் பேரி­ன­வா­தி­களின் பார்­வையில் முஸ்­லிம்­களின் பிர­ஜா­உ­ரி­மையே ஒரு கேள்விக் குறி­யாக எழுந்­துள்­ளது. அதனால் முஸ்­லிம்­களின் மனித உரி­மை­களும் படிப்­ப­டி­யாகப் பறிக்­கப்­பட்­டுக்­கொண்டே வரு­கின்­றன. ஏற்­க­னவே நமது தலைவர்களை நோக்கி எழுப்­பிய கேள்­விகள் இந்த மீறல்­க­ளையே சுட்­டிக்­காட்­டு­கின்­றன. சுருங்கக் கூறின், முஸ்­லிம்கள் இந்த நாட்­டுக்கே உரி­யவர்களா என்ற கேள்வி கடந்த பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளாக ஒலிக்கத் தொடங்­கி­யுள்­ளது. அந்தக் கேள்­விக்கு திட்­ட­வட்­ட­மான ஒரு பதிலை ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்தோ பிர­தம மந்­தி­ரி­யி­ட­மி­ருந்தோ இது­வரை கேட்க முடி­யாது இருக்­கி­றதே, ஏன்?
இந்த அரசு பேரி­ன­வா­தி­களின் பிடியில் இருந்­தா­லும்­கூட நாடே அவர்களின் பிடியில் இல்லை. அதைத்தான் நாடெங்­கிலும் இப்­போது உரு­வா­கி­யுள்ள எதி­ர­ணிகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. அந்த எதி­ர­ணிக்குள் சகல இனங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. ஆனாலும் சில பச்­சோந்­தி­களும் அதில் நுழைந்­துள்­ள­தையும் உணர முடி­கி­றது. அவர்களை இனங்­கண்டு ஒதுக்­கி­விட்டு நாட்டின் சகல இன­ மக்­களும் சம­மா­னவர்கள், அவர்கள் யாவ­ரி­னதும் மனித உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும், அத்­துடன் அவர்கள் யாவ­ரையும் ஒன்­றி­ணைத்­துக்­கொண்டே இப்­போது பேரி­ன­வாதக் கும்­பலால் சூறை­யா­டப்­பட்டுச் சிதைந்­து­கி­டக்கும் பொரு­ளா­தா­ரத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் போராடும் ஆயுதம் ஏந்தாத முற்போக்குப் படைகளும் அவ்வணிக்குள் காணப்படுகின்றன. அந்தப் படைகளின் கரங்களை வலுப்படுத்துவதிலேதான் முஸ்லிம்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. அடிப்படைப் பிரச்சினைக்கான சுமுகமான விடையும் அப்படைகளிடமே உண்டு. அத்துடன், அந்தப்படைகளிடம் பேரீத்தம்பழ அரசியல் செல்லுபடியாகாது என்பதையும் விளங்குதல் அவசியம்.

மக்­களின் செல்­வாக்கை இழந்து, பொரு­ளா­தா­ரத்­தையும் சீர­ழித்து, உலக அரங்கில் ஒரு கோமா­ளி­யாக மாறி­யுள்ள இன்­றைய ஆட்சி அதனைப் பாது­காத்­துக்­கொள்ள எந்த உபா­யத்­தையும் கையா­ளலாம். இரா­ணுவ பலத்தைக் கொண்டு அடக்­கு­மு­றையைக் கையா­ளலாம். ஒரு­வேளை இனச்­சுத்­தி­க­ரிப்பில் இறங்கி சிறு­பான்மை இனங்­களை நசுக்கி பெரும்­பான்­மையின் ஆத­ரவைப் பெறவும் முயற்­சிக்­கலாம். இரண்­டா­வது உபாயம் இலங்­கைக்குப் புதி­ய­தல்ல. இவற்­றை­யெல்லாம் ஞாப­கத்­திற்­கொண்டு முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் தமது சமூ­கத்தை இப்­போது வழி­ந­டத்த வேண்­டி­யுள்­ளது. அதற்கு அடிப்­ப­டை­யாக, பேரீத்­தம்­பழ அர­சி­யலை ஒதுக்­கித்­தள்ளி அதனை முன்­னெ­டுக்­கின்ற தலைமைகளையும் ஓரங்கட்ட வேண்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.