மக்களின் அரசியல் புரிந்துணர்வும் மாற்றமுறும் அரசியலும்

0 986

மூலம்: பேரா­சி­ரியர் ஜய­தேவ உயங்­கொட
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்

எமது நாட்டு மக்­களின் குறிப்­பாக வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யி­னர்­க­ளா­கிய கிரா­மிய மக்­களின் அர­சியல் புரி­தலை விருத்தி செய்­வ­தற்­கான வழி வகைகள் இல்­லையா? கிரா­மிய சமூ­கத்தில் அர­சியல் செய்யும் ஓர் அர­சியல் செயற்­பாட்­டாளர் அண்­மையில் என்­னிடம் கேட்ட மேற்­படி வினாவை கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக இந்தக் கட்­டு­ரையைப் பயன்­ப­டுத்திக் கொள்­கிறேன்.

மக்­களின் அர­சியல் புரி­தலும் அறிவும் கூர்­மை­யாக மதிப்­பி­டப்­படும் ஒரு சந்­தர்ப்பம் பொதுத் தேர்­த­லாகும். அர­சியல் கட்­சி­களின் பொய் வாக்­கு­று­தி­க­ளுக்கும் ஊட­கங்­களின் பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கும் போலி­யான செய்­தி­க­ளுக்கும் ஏமாறும் வாக்­கா­ளர்கள் தாங்கள் எதிர்­கா­லத்தில் வேத­னைப்­படும் தீர்­மா­னத்தை எடுக்கும் நிலைமை பொதுத்­தேர்­தல்­களில் ஏற்­ப­டு­கின்­றது. இப்­போது சமூக ஊட­கங்­களில் வெளி­யாகும் கட்­டுரை மற்றும் வீடி­யோக்கள் மூலம் 2019 இல் ராஜ­பக்ச குடும்­பத்தை ஆட்­சியில் அமர்த்­தி­ய­வர்கள் 69 இலட்சம் பேரும் அர­சியல் ஞான­மற்ற மடை­யர்கள் என்று சித்­த­ரிக்­கப்­ப­டு­கி­றது. இது­போன்ற கருத்­துக்­க­ளுக்கு மக்­களின் அர­சியல் புரிந்­து­ணர்வை அதி­க­ரிக்க நினைக்கும் அர­சி­யல்­வா­திகள் எத்­த­கைய துலங்­கலைச் செலுத்த வேண்டும்? என்­பது பற்றி நாம் ஆராய வேண்­டி­யுள்­ளது.

இந்த விட­யத்தை சற்று ஆழ­மாக யோசிக்கும் போது பார்க்­கப்­பட வேண்­டிய விடயம் யாதெனில் நமது நாட்டு மக்கள் அர­சியல் புரிந்­து­ணர்­வற்­ற­வர்கள் என்று கூறு­வது பிழை­யான கருத்து என்­ப­தாகும். வளர்ந்­த­வர்­க­ளா­க­வுள்ள அனை­வ­ருக்கும் போல் ஒரு குறிப்­பிட்ட மட்­டத்தில் அர­சி­ய­ல­றிவு உண்டு. அர­சியல் அறிவு இல்­லாத அல்­லது அர­சி­யலில் கரி­ச­னை­ய­ற்ற ஒரு சிறு தொகை­யினர் இருக்­கலாம். எவ்­வா­றி­ருப்­பினும் கூடிக் குறைந்த அள­வு­களில் அர­சியல் அறிவு காணப்­ப­டு­கின்­றது என்று எடுத்துக் கொள்­ளலாம். அது ஒரு ஜன­நா­யக சமூ­கத்தில் காணப்­பட வேண்­டிய அர­சியல் புரிந்­து­ணர்­வு­மாகும். அர­சியல் ஞானம் அல்­லது புரிதல் என்­ப­தி­லி­ருந்து விளங்கிக் கொள்ள வேண்­டி­யது விமர்­சன ரீதி­யான அர­சி­ய­ல­றிவின் குறைந்த மட்ட நிலை­யாகும். அது சமூ­கத்தில் படிப்­ப­டி­யாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய ஒன்­றாகும். மக்­க­ளி­டையே சுய­மாக உரு­வாகும் ஒன்­று­மாகும். இது அர­சியற் கட்­சிகள் அர­சியல் கழ­கங்கள் சிவில் சமூக அமைப்­புகள் மூலம் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற ஒன்­று­மாகும். பாட­சா­லைகள் பல்­கலைக் கழ­கங்­களில் படிப்­பவை என்று கூற­மு­டி­யாது. இன்று இலங்கைச் சமூ­கத்­துக்­கி­டை­யேயும் மக்­க­ளி­டை­யேயும் விமர்­சன ரீதி­யான அர­சியல் அறிவைக் கட்­டி­யெ­ழுப்­புதல் என்­பது புதி­தாக சிந்­திக்க வேண்­டி­ய­தொரு பணி­யாகும். அது ஒரு வித்­தி­யா­ச­மான கல்விப் பணி­யா­கவும் உள்­ளது.

அர­சியல் பிர­யோக அறிவு
அர­சியல் பற்றி நாட்டு மக்­க­ளி­டையே ஆழ­மான அறிவு இல்­லா­தது குறித்து ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கோ கவ­லை­ய­டை­வ­தற்கோ தேவை­யில்லை. ஏனெனில் பொது மக்­க­ளி­டையே அப்­ப­டி­யொன்று இல்லை என்­ப­த­னா­லாகும். ஆயினும் பொது­மக்­க­ளி­டையே வேறு வகை­யான அர­சியல் ஆற்­றல்கள் உள்ளன. அன்­றாட நிகழ்­வுகள் பற்­றிய இற்­றைப்­ப­டுத்தல், அர­சியல் எதிர்­பார்ப்­புகள் இருத்தல், அர­சியல் எதிர்வு கூறல்கள், மற்றும் தீர்­மா­னங்கள் ஆகிய நான்கு வகை அர­சியற் திறன்­களும் காணப்­ப­டு­கின்­றன.

அர­சியல் பற்­றிய அன்­றாட அறிவு என்­பது அர­சியல் பிர­யோக ஞானம் என்றும் அழைக்­கப்­படும். பாட­சாலைக் கல்­வியில் குறைந்­த­வர்­க­ளான விவ­சா­யிகள், தொழி­லா­ளர்கள், வீடு­களில் வேலை­செய்யும் பணிப்­பெண்கள் போன்­ற­வர்­க­ளுடன் அர­சியல் பற்றிப் பேசும் போது அவர்­க­ளிடம் மேற்­கூ­றிய திறன்கள் கூடிக் குறைந்த அளவு இருப்­பது புரியும். படித்­த­வர்கள் போன்றே அவர்­க­ளி­டமும் அர­சியல் ஓட்டம் இருப்­பது விளங்கும்.
ஆயினும் மக்கள் அர­சி­யல்­வா­தி­களின் பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கு ஏமாறும் போது மேற்­கூ­றிய அர­சியல் அறிவை புறக்­க­ணிப்­பது ஏன்? என்ற கேள்வி எழு­கின்­றது. அதே­நேரம் அத்­த­கைய வாக்­கு­று­தி­க­ளுக்கு மக்கள் ஏமா­றாமல் இருப்­ப­தற்கு என்ன செய்ய வேண்டும்? என்­பதும் சம­மான முக்­கி­யத்­துவம் வாய்ந்த மற்­றொரு கேள்­வி­யாகும். இலங்­கையை அதன் அர­சி­ய­லையும் சமூ­கத்­தையும் புதிய பாதை­யொன்றின்பால் திரும்­பு­வ­தற்கு மக்­க­ளி­டையே விமர்­சன ரீதி­யான அறிவு இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­கு இப்­போ­துள்ள தடை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான வழி­மு­றை­களைப் பற்றி சிந்­திப்­பதும் முக்­கி­ய­மாகும்.

விமர்­சன ரீதி­யான விளக்கம்
இந்தக் கட்­டு­ரையின் ஆரம்­பத்தில் குறிப்­பிட்ட கேள்வி பதில்­களில் இருந்து மற்­று­மொரு கருத்தைச் சீர்­தூக்கிப் பார்க்க முடியும். அது யாதெனில் நாட்டில் இன்று நிலவும் கடு­மை­யான நெருக்­க­டிகள் பிரச்­சி­னைகள் பற்­றிய உண்­மை­யான புரிதல் எமது நாட்டின் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு இல்லை என்­ப­தாகும். அது ஆதிக்­க­வாத அர­சியல் கட்­சிகள் தமது நன்­மைக்­காக தவ­றாகப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் ஒரு விட­ய­மு­மாகும். இந்தப் பொய்­க­ளினால் ஏமாற்றும் அர­சி­யல்­வா­திகள் மற்றும் ஊட­கங்­களின் ஏமாற்­றத்­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளும் ஒரு சிவில் சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது எவ்­வாறு? என்ற வினாவும் இங்கு எழு­கி­றது. அர­சியல் கோட்­பாட்டு மொழி­ந­டையில் கூறு­வ­தானால் விமர்­சன ரீதி­யான அர­சியல் சிந்­தனை ஆற்­றலும் அர­சியல் ரீதி­யான தீர்­மா­னத்தை எடுக்­கக்­கக்­கூ­டிய முதிர்ச்­சி­யான சிந்­தனை ஆற்­றலும் உள்ள அர­சியல் ரீதி­யான விழிப்­பு­ணர்­வுள்ள உச்­ச­நிலை இற்­றைப்­ப­டுத்­த­லுடன் கூடிய ஏமாற்­று­த­லுக்கு உட்­ப­டா­ததும் குடி­ய­ரசு சிந்­த­னை­யுடன் கூடி­ய­து­மான (அரிஸ்­டோட்டில் குடி­மகன்) ஒரு சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது எவ்­வாறு? என்­பதே இந்த சவாலில் உள்ள கருப்­பொருள் ரீதி­யான அர்த்­த­மாகும். நம்மில் அநேகர் தெரிந்து வைத்­தி­ருப்­பதன்படி அரிஸ்­டோட்டில் செம்மை வாய்ந்த கிரேக்­கத்தில் வாழ்ந்த ஒரு அர­சியல் சிந்­த­னை­யாளர். அவர் குடி­யாட்சி வாதத்தின் முன்­னோ­டி­யாவார். குடி­ய­ரசு என்­பது குடி­மக்­களை சமூ­கத்தை மைய­மாகக் கொண்­ட­தாகும். நேரடி அர­சியல் பங்­கு­பற்­றுதல் மையப்­ப­டுத்­திய ஒரு அரசும் அர­சாங்­கமும் குடி மக்­களும் இணைந்த அர­சியல் வடி­வ­மாகும்.

‘குடி­மக்கள் நற்­பண்­புகள்’ என்ற அரிஸ்­டோட்டில் எண்­ணக்­கரு மூலம் கரு­தப்­ப­டு­வது தேர்­தலில் வாக்­க­ளிக்கும் பிர­ஜை­களை மட்­டு­மல்ல தானும் அங்கம் வகிக்கும் அர­சியல் சமு­தா­யத்தின் பொது நன்மை கருதி தனது பயன்­பாட்­டுக்கு என்று கரு­தாது அர்ப்­ப­ணிப்­புடன் கரும­மாற்றும் பிர­ஜை­க­ளாகும். அர­சி­யலில் வினைத்­தி­ற­னுடன் பங்­கு­பற்­றுதல் அர­சி­யல்­வா­திகள் மட்­டு­மன்றி அதி­கா­ரிகள், அர­சாங்கம் என்­ப­வற்றின் நட­வ­டிக்­கைகள் குறித்து விழிப்­புடன் இருப்­பது. ஏனைய பிர­ஜை­க­ளுடன் அர­சியல் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு அர­சியல் விழிப்­பு­ணர்­வுடன் இருத்தல் என்­பன குடி­மக்களின் நற்­பண்­புகள் இயல்­பு­க­ளாகும்.

இன்­றைய அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார, விவ­சாயக் கொள்­கை­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­லங்­களில் எதிர்ப்­பு­களைக் காட்­டிய விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து வெளிப்­பட்­டதும் அத்­த­கைய பிர­சைகள் இயல்­பு­க­ளாகும்.

தமது சம்­பள முரண்­பாடு தொடர்­பாக பல மாதங்­க­ளாக போராட்டம் நடத்­திய அர­சாங்க ஆசி­ரி­யர்கள் வெளிப்­ப­டுத்­தி­யதும் அதே இயல்­பு­களே. இவற்­றி­லி­ருந்து விளங்­கு­வது எமது நாட்டின் பிர­ஜை­க­ளிடம் அர­சியல் ரீதி­யான விழிப்­பு­ணர்­வுடன் இருக்க வேண்­டிய பிர­ஜைகள் பண்­புகள் இருப்­பதும் தேவை­யான இடங்­களில் அத­னது வெளிப்­ப­டு­த­லு­மாகும்.
இதனை நாம் நினை­வு­ப­டுத்த வேண்­டி­யி­ருப்­பது அர­சியல், சமூக சீர்­தி­ருத்­தத்­திற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் இருக்கும் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் சூழல் தொடர்பில் கவனம் செலுத்­தினால் அத­னூ­டாக புதிய நோக்­கொன்றை உரு­வாக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்­பதை குறிப்­பி­டு­வ­தற்­காகும். அதில் நாங்கள் சிந்­திக்க வேண்­டி­யுள்ள ஒரு விட­ய­மா­வது வழக்­க­மாக பெரும்­பா­லான அர­சியல் கட்­சி­க­ளினால் பிர­ஜை­களின் அர­சியல் ஞானத்தைக் கூர்­மை­யாக்கும் பணிகள் நடை­பெ­று­வ­தில்லை என்­ப­தாகும்.

இந்­நி­லைக்கு அர­சியற் கட்­சிகள் தள்­ளப்­பட்­ட­தற்­கான பிர­தான காரணம் எமது நாட்டில் நிலவும் நலி­வ­டைந்த பிர­தி­நி­தித்­துவ ஜன­நா­யக முறை­யாகும். மக்­களின் மேலோட்­ட­மான அர­சியல் உணர்வைத் தூண்டி அவர்­களின் சமய, இன, வர்க்க முரண்­பா­டு­களைப் பெருப்­பித்துக் காட்டி பாது­காப்­பின்மை, குரோதம், சந்­தேகம் போன்ற மனி­தர்­க­ளி­டை­யே­யுள்ள அடி­மட்ட கூட்­டு­ணர்­வு­களைத் தூண்­டி­விட்டு “தேர்­தலில் வெற்றி பெறுதல்” என்ற இலக்கை நோக்கி வாக்­கா­ளர்­களை மந்தை கூட்டம் போன்று பிர­சாரக் கூட்­டங்­க­ளுக்கும் வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்கும் இழுத்துச் செல்லல் அனே­க­மான அர­சியல் கட்­சி­களின் பிர­தான பணி­யா­க­வுள்­ளது. பிர­ஜை­களின் அர­சியல் விளக்­கத்­தை­யன்றி அர­சியல் மட­மையை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வதில் அர­சியல் தலை­வர்கள் காட்டும் ஆர்வம் இன்று ஓர் அர­சியல் சாணக்­கி­ய­மா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. பல அர­சியல் தலை­வர்­களும் இந்தத் திறனை விருத்தி செய்து கொள்­ளவே முயற்சி செய்­கின்­றனர்.

ஏமா­றாத பிர­ஜை­களை நோக்கி
இந்த நிலைக்குச் சவால் விடவும் இதி­லி­ருந்து மீண்டு குடி­யாட்சி உயர் பண்­பு­க­ளுடன் கூடிய பிர­ஜை­களை உரு­வாக்­கவும் குறைந்­த­பட்சம் சில அர­சியல் கட்­சி­க­ளா­வது தீர்­மா­னிக்­கு­மானால் அதன் மூலம் அதி­கா­ரத்தை பிடிப்­பதை மட்டும் நோக்­காகக் கொண்ட கட்­சி­க­ளி­டமும் அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் ஏமா­றாத பிர­ஜை­களைக் கொண்டு ஒரு அர­சியல் சமூ­கத்தை உரு­வாக்கும் பணியில் இணை­வ­தற்கு முடி­யு­மாக இருக்கும். அவ்­வாறு செய்யத் துணியும் அர­சியற் கட்­சி­க­ளிடம் பின்­வரும் பண்­புகள், இயல்­புகள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதில் முத­லா­வது “அடுத்த தேர்­தலில் வெற்றி பெற்று அர­சாங்­கத்தை அமைப்போம்” என்ற குறுங்­கால அர­சியல் இலக்கை உள்­ளத்­தி­லி­ருந்து நீக்­கி­விட வேண்டும். இலங்கை இப்­போது எதிர்­கொண்­டுள்ள அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதி­யான கடு­மை­யான நெருக்­க­டிகள் அடுத்த தேர்­தலில் வெற்றி பெற்­ற­வுடன் தீர்க்கக் கூடி­ய­ன­வாக இல்லை. அவற்றை ஓட்டுப் போடுதல் மூலம் தீர்க்க முடி­யாது. அத்­த­கைய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள சமூ­கத்தைப் பழக்கப் படுத்த வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றில்­லாது கொள்­கை­களின் தீர்­வுகள் விட­யத்தில் சமூ­கத்தின் எதிர்ப்பு கிளம்­பு­வது தவிர்க்க முடி­யா­தது. அப்­போது நடப்­பது வலுக்­கட்­டா­ய­மாக அநீ­தி­களை அமுல் நடத்த முற்­ப­டு­வ­த­னூ­டாக நெருக்­க­டி­களைச் சந்­திப்­ப­தாகும். எமது நாட்டின் மீள் கட்­டி­யெ­ழுப்­புதல் பணிக்கு மக்­களைத் தயார்­ப­டுத்­து­வ­துடன் அடுத்த தேர்­தலில் வெற்றி பெறுதல் என்ற குறு­கிய இலக்­குக்கு அப்பால் மக்­களைக் கொண்டு செல்லும் பிர­ஜைகள் அறிவூட்ட வேண்­டிய திட்­ட­மொன்றை முன்­வைக்க வேண்டும்.

அந்த தொடரின் இரண்­டா­வது விடயம் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் பிர­ஜை­களின் அர­சியல் அறிவின் பண்பு ரீதி­யான ஒரு மாற்­றத்தைக் கொண்­டு­வர வேண்­டு­மானால் அடுத்த பத்­தாண்­டு­க­ளா­வது எதிர்க்­கட்­சியில் இருக்கத் தயா­ரான ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட அர­சியல் கட்­சிகள் முன்­வர வேண்டும். ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்றும் படிப்­ப­டி­யான இலக்கை நோக்­கிய அர்ப்­ப­ணிப்­புள்ள அர­சியல் கட்­சிகள் ஆட்­சிக்கு வராமல் எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டு சமூ­கத்தில் அர­சியல் கலந்­து­ரை­யா­டல்­களைத் தீவி­ரப்­ப­டுத்தி சமூ­கங்­களின் அர­சியல் போராட்­டங்­க­ளுக்கு தலைமை தாங்கி சமூ­கங்­க­ளுக்­கான புத்­தி­ஜீவித் தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தாகும். அது சற்றுக் கால­மெ­டுக்கும் ஒரு முயற்­சி­யாகும். அவ்­வா­றி­ருப்­பினும் மக்­க­ளி­டையே நிகழும் அர­சியல் கலந்­து­ரை­யா­டல்கள் வாத விவா­தங்கள் ஒரு நோக்­கத்தை இலக்­காகக் கொண்­ட­தாக மாற்­றி­ய­மைக்கும் ஆற்றல் அத்­த­கைய அர­சியல் கட்­சி­களால் செய்ய முடி­யு­மான ஒரு குறிக்­கோ­ளாகும்.

ஒரு கருத்­தி­யலின் தேவைப்­பாடு
மூன்­றா­வது விடயம் இத்­த­கைய செயற்­பாட்­டுக்கு வழி­காட்டும் தெளி­வான ஒரு கருத்­தியல் மற்றும் அக்­க­ருத்­தியல் சார்ந்த வேலைத்­திட்டம் வளர்த்துச் செல்ல வேண்­டிய கருத்­தியல் தொகுதி என்­பன அத்­த­கைய அர­சியல் கட்­சி­க­ளிடம் அவ­சியம் இருக்­க­வேண்டும். தற்போது அநேகமான பிரஜைகளிடமுள்ள போலி அரசியல் ஞானத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமானால் அவர்களின் அரசியல் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் புதுப்பிக்கும் ஒரு புது சட்டகத்தை அமைக்கும் ஒரு புதிய கருத்தியற் தொகுதி காணப்பட வேண்டும். “புதிய கருத்தியலினால் பலமடைதல்” என்ற பண்டைய போல்செவிக் கட்சியினரின் அரசியல் அகராதியில் இருந்த எண்ணக்கருவின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. மாற்றத்தை கட்டியெழுப்புவதற்காக மக்களைத் தயார் படுத்துவதற்கும் தேவையான கருத்தியலை அது போன்ற வேறு சில கருத்தியல்களுடன் இணைக்கப்படுமானால் அதற்கான சமூகக் கவர்ச்சியும் பலமாக இருக்கும். ஜனநாயகம், சமவுடைமை வாதம், குடியரசு வாதம், பெண்ணியம் ஆகிய நான்கு முற்போக்குக் கருத்தியல் பார்வைகளும் இதற்கான சிறந்த மூலாதாரங்களாகும்.
இலங்கையின் முக்கிய பிரச்சினைகள் பற்றி விளக்கும் வகையிலும் மக்களுக்கு இலகுவாக விளங்கும் வகையிலும் இந்தக் கோணங்களிலான வழிகாட்டல் வழங்கப்படவேண்டும். மாற்றத்துக்கான சமூகத்தை தயார்படுத்தும் பணியை தனியொரு கட்சி மட்டும் செய்ய முடியாது. அதற்கான பரந்த கூட்டணி வேண்டும். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், முற்போக்கான சமயக் குழுக்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆகிய சக்திகளினூடாக தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ளப்படும் பங்களிப்பின்றி மாற்றத்தை நோக்கிப் பயணித்தல் சிரமமானது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.