கொள்கை மாற்றமே தேவை!

0 386

நாட்டின் பொரு­ளா­தார நிலை­வ­ரங்­களை முன்­னி­றுத்தி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பாரிய போராட்­டங்கள், எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. சமூக ஊட­கங்­களில் மாத்­திரம் வெளிப்­பட்டு வந்த இந்த எதிர்ப்­புகள் தற்­போது களத்­துக்கு வந்­துள்­ளன.

கடந்த இரு வாரங்­க­ளுக்கும் மேலாக இளை­ஞர்கள், சமூக ஊடக செயற்­பாட்­டா­ளர்கள் கொழும்பில் இரவு வேளை­களில் வீதியில் இறங்கி தொடர் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

பிர­தான எதிர்க்­கட்சி என்ற வகையில் ஐக்­கிய மக்கள் சக்தி நேற்று முன்­தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்றை ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு முன்­பாக நடத்­தி­யி­ருந்­தது. அதே­போன்று தேசிய மக்கள் சக்தி, நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­டத்­திற்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

சமூக வலைத்­த­ளங்­களில் ஜனா­தி­ப­தியை வீட்­டுக்குப் போகு­மாறு கோரும் பதி­வுகள் முன்­ன­ணியில் உள்­ளன.

சில தினங்­க­ளுக்கு முன்னர் பது­ளையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாட்டில் மக்கள் கிளர்ச்சி ஒன்று வெடிக்கும் சாத்­தி­யக்­கூ­றுகள் உள்­ள­தாகக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.
ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஆர்ப்­பாட்­டத்தில் உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரின் பெர்­ணான்டோ, அர­சாங்­கத்­திற்கு ஒரு மாத கால அவ­காசம் வழங்­கு­வ­தா­கவும் இன்றேல் கொழும்பில் ஓர் அரபு வசந்­தத்தைக் காண வேண்டி வரும் என்றும் எச்­ச­ரித்­தி­ருக்­கிறார்.

நாடு முழு­வதும் தற்­போது எரி­பொருள், எரி­வாயு என்­ப­வற்றைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக வரி­சையில் காத்து நிற்கும் மக்­களும் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்­து­வதை காண முடி­கி­றது.

மக்கள் மாற்றம் ஒன்று தேவை என்­பதை உணர ஆரம்­பித்­துள்­ளனர். தற்­போது ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­த­வர்கள் கூட தாம் தவ­றி­ழைத்­து­விட்­ட­தாக வெளிப்­ப­டை­யாகக் கூற ஆரம்­பித்­துள்­ளார்கள்.

அண்­மையில் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக்­கப்­பட்ட உதய கம்­மன்­பில மற்றும் விமல் வீர­வன்ச ஆகியோர் தற்­போது அர­சாங்­கத்தின் குறை­பா­டு­களை கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றனர். குறிப்­பாக நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­பக்­சவே இந்த நிலை­மைக்கு காரணம் என்­பதே அவர்­க­ளது குற்­றச்­சாட்­டா­க­வுள்­ளது.

எவ்­வா­றி­ருப்­பினும் இப்­போது எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­படும் அர­சியல் தரப்­புகள் “ஆட்சி மாற்றம் வேண்டும், ஜனா­தி­பதித் தேர்­தலை நடாத்­துங்கள்” என்­பன போன்ற கோரிக்­கை­களை முன்­வைப்­பதைக் காண முடி­கி­றது.

உண்­மையில் நாடு இப்­போது தேர்தல் ஒன்­றுக்குச் செல்­கின்ற நிலை­மையில் இல்லை. அவ்­வாறு செல்­வ­தா­யினும் அதற்­காகப் பெருந்­தொகைப் பணத்தைச் செல­வ­ளிப்­ப­தற்கு திறை­சே­ரியில் பணமும் இல்லை.

மக்கள் ஒரு வேளைச் சாப்­பாட்­டுக்குக் கூட வழி­யின்­றி­யி­ருக்­கையில், தேர்­தலைப் பற்றிச் சிந்­திப்­ப­தற்கும் அவர்கள் தயா­ரில்லை.

இன்­றைய நிலையில் நாட்­டுக்குத் தேவை­யா­க­வி­ருப்­பது கொள்கை ரீதி­யி­லான பாரிய மாற்­ற­மே­யாகும். இந்த நாட்டின் பொரு­ளா­தார நிலை­மைகள் குறித்த தீர்­மா­னங்­களை எடுக்கும் பொறுப்பை அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மன்றி பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கைகளில் ஒப்­ப­டைக்கக் கூடிய மாற்­றமே இப்­போ­தைக்குத் தேவை­யாகும்.

விஞ்­ஞான ரீதி­யி­லேயே எந்­த­வொரு தீர்­மா­னத்­தையும் எடுப்பேன் எனக் கூறி ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, அண்­மையில் அமைத்த பொரு­ளா­தார சபையில் இருந்­த­வர்கள் பெரும்­பா­லா­ன­வர்கள் அர­சி­யல்­வா­தி­களே. ஜனா­தி­ப­தியின் இந்த நிய­மனம் கடும் விமர்­ச­னங்­களைச் சந்­தித்­த­தை­ய­டுத்து, தற்­போது இந்த சபைக்கு ஆலோ­சனை வழங்­க­வென 14 பேர் கொண்ட நிபு­ணர்கள் குழு­வொன்று சில தினங்­க­ளுக்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் அர­சி­யல்­வா­திகள் போதிய கல்வித் தகைமை கொண்­ட­வர்­க­ளல்லர். இவ்­வா­றான நெருக்­க­டி­யாக நிலை­மை­களில் அவர்­களால் ஒரு­போதும் வினைத்­தி­றன்­மிக்க தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது. என­வேதான், சகல அர­சியல் தரப்­பு­களும் ஒன்­றி­ணைந்து பொது­வான வேலைத்­திட்டம் ஒன்றின் கீழ் பணி­யாற்ற முன்­வர வேண்டும். இதனை ஒரு கட்­சியால், ஒரு அமைப்­பினால் மாத்­திரம் செய்ய முடி­யாது. அதற்கு சகல தரப்­பி­னரும் கைகோர்க்க வேண்டும்.

பேரா­சி­ரியர் ஜய­தேவ உயங்­கொட தனது அண்­மைய கட்­டு­ரை­யொன்றில் “மாற்­றத்­துக்­கான சமூ­கத்தை தயார்­ப­டுத்தும் பணியை தனி­யொரு கட்சி மட்டும் செய்ய முடி­யாது. அதற்­கான பரந்த கூட்­டணி வேண்டும். அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புக்கள், சமூக இயக்­கங்கள், தொழிற்­சங்­கங்கள், மாணவர் சங்­கங்கள், முற்­போக்­கான சமயக் குழுக்கள், முற்­போக்கு ஊடகங்கள் ஆகிய சக்திகளினூடாக தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ளப்படும் பங்களிப்பின்றி மாற்றத்தை நோக்கிப் பயணித்தல் சிரமமானது” எனக் குறிப்பிடுகிறார். இதுவே யதார்த்தமாகும்.

இன்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி இதற்கு முன்னர் சந்தித்திராத ஒன்று. இதே நெருக்கடி நாளை நமது சந்ததியினருக்கும் ஏற்படக் கூடாது எனில் இப்போதிருந்தே வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதுவே உண்மையான தேசப்பற்றும் கூட.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.