கொவிட் ஜனாஸாக்கள் முஸ்லிம்களுக்குக் கற்பிக்கும் பாடம்

0 482

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ராஜ­பக்ச குடும்­பத்தை மைய­மா­கக்­கொண்ட பௌத்த பேரி­ன­வாத ஆட்­சி­யின்கீழ் முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் இன்­னல்கள் ஒன்­றி­ரண்­டல்ல. முஸ்லிம் மக்­களைக் குறி­வைத்தே இந்த அரசு பல முடி­வு­களை பொரு­ளா­தார ரீதி­யா­கவும் மத கலா­சார ரீதி­யா­கவும் எடுத்­துள்­ளது. சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­களின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் 2009லிருந்தே ஆரம்­பித்­து­விட்­ட­போ­திலும் கடந்த இரண்டு வரு­ட­கா­லத்தில் அவை ஒரு புதிய உத்­வே­கத்தை அடைந்­துள்­ளன. ஜனா­தி­ப­தியும், பிர­தம மந்­தி­ரியும், அவர்களின் அர­சாங்­கமும், சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­களின் ஆத­ர­வுடன் ஆட்­சிக்கு வந்­த­மையும் அதே பேரி­ன­வா­தத்­தையே இவ்­விரு தலைவர்களும் தழுவி இருப்­பதும் இந்த உத்­வே­கத்­துக்கு ஒரு முக்­கிய காரணம். இருந்­தாலும் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட இழப்­பு­களை இங்கே பட்­டி­ய­லிட்டு விப­ரிக்க இக்­கட்­டுரை விரும்­ப­வில்லை. ஆனால் அவற்றுள் மிகவும் துயர்படிந்­ததும் மறக்க முடி­யா­த­து­மான ஒன்­றை­மட்டும் பொறுக்­கி­யெ­டுத்து அது முஸ்­லிம்­க­ளுக்குப் புகட்டும் ஒரு முக்­கி­ய­மான பாடத்தை விளக்­கு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

2020இல் உல­கெங்கும் ஆரம்­பித்த கொவிட் கொள்ளை நோய் இன்­னும்தான் விட்­ட­பா­டில்லை. கோடிக்­க­ணக்­கான உயிர்­க­ளையும் பொரு­ளா­தாரச் செல்­வத்­தையும் விழுங்கி ஏப்­பம்­விட்­ட­பின்னும் அதன் பசி தீர­வில்­லை­போலும். ஆனால் இலங்­கை­யிலே அந்த நோய் பர­வத்­தொ­டங்­கி­ய­போது அதனை நாட்­டுக்குள் கொண்­டு­வந்­தவர்களே தப்லீக் ஜமா­அத்­தினர்தான் என்ற ஒரு அபாண்­டத்தை பேரி­ன­வா­திகள் அவிழ்த்­து­விட்­டனர். அதே­போன்­றுதான் இந்­தி­யா­விலும் இந்­துத்­து­வ­வா­திகள் முஸ்­லிம்­களின் தலைமேல் பழி­யைப்­போட்­டனர். அது உண்­மை­யல்ல என்­பதை இரு நாடு­களும் பின்பு உணர்ந்தன. ஆனால் முஸ்­லிம்­களைப் பழி­வாங்கும் நோக்கம் பேரி­ன­வா­தி­க­ளை­விட்டும் நீங்­கவே இல்லை. அதன் பிர­தி­ப­லிப்­பா­கவே கொவிட் நோயால் மர­ணிக்கும் முஸ்லிம் உடல்­களை தகனம் செய்­ய­வேண்டும் என்ற கட்­டளை ஜனா­தி­ப­தியால் பிறப்­பிக்­கப்­பட்­டது. அதற்­கான விஞ்­ஞான ஆதா­ரத்தை வழங்­கி­யவர் ஒரு மருத்­துவ நிபு­ண­ரல்ல, சாதா­ரண ஒரு மண்­ணியல் பேரா­சி­ரியை. இவரும் ஒரு சிங்­கள பௌத்த பேரி­ன­வாதி என்­பது பின்பு தெரி­ய­வந்­தது. சுமார் ஒரு­வ­ருட காலம் இந்தக் கட்­ட­ளையால் எத்­த­னையோ முஸ்லிம் ஜனா­ஸாக்கள் தீக்­கொ­ழுத்­தப்­பட்­டன. இஸ்­லா­மிய மத உணர்வுக­ளுக்கு எந்த மதிப்பும் அளி­யாது உலக மருத்­துவ விற்­பன்னர்களதும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தி­னதும் ஆலோ­ச­னை­க­ளை­யெல்லாம் ஒதுக்­கித்­தள்ளி உதா­சீனம் செய்து இந்த ஆட்சி முஸ்­லிம்­களைப் பழி­வாங்­கி­யது. எத்­த­னையோ மனி­தா­பி­மா­ன­முள்ள பௌத்த தலைவர்களும், பௌத்த துற­வி­களும், கிறிஸ்­தவ மதத்­த­லைவர்களும் சிவில் இயக்­கங்­களும் முஸ்­லிம்­களின் மத உணர்வுக­ளுக்கு அரசு மதிப்­ப­ளிக்­க­வேண்டும் எனக்­கோரி ஆர்ப்­பாட்டம் செய்தும் அரசின் கடும்­போக்கு மாற­வில்லை. இறு­தி­யாக ஐ.நா. மனித உரிமைச் சபை 2021 இல் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்­களைப் பகி­ரங்­கப்­ப­டுத்தி அர­சுக்­கெ­தி­ராகக் கொண்­டு­வந்த பிரே­ர­ணையே முஸ்லிம் கொவிட் ஜனா­ஸாக்­களின் கட்­டாய தக­னத்­தையும் நிறுத்­தி­யது.

இருந்தும் அந்த நிறுத்­தத்தால் பேரி­ன­வாத அரசு தோற்றுப் போக­வில்லை. முஸ்­லிம்­களைப் பழி­வாங்­குதல் வேறு உரு­வத்தில் தோன்­றி­யது. அதா­வது கொவிட் நோயால் மர­ணித்த அனைத்து உடல்­க­ளையும் (முஸ்லிம் அல்­லா­தவர்கள் உட்­பட) ஓட்­ட­மா­வ­டியின் மஜ்மா நகர் மைய­வா­டி­யி­லேயே அடக்­க­வேண்டும் என்ற கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டது. பூமிக்­க­டி­யி­லுள்ள நீருடன் மரண உடல்கள் கலப்­பதால் நோய் தொற்ற வழி­யுண்டு என்ற மண்­ணியல் பேரா­சி­ரி­யையின் அர்த்­த­மற்ற வாதம் பொய்­யா­னது என்­பதை ஏற்­றுக்­கொள்­ளாமல் ஒரு வரண்ட பிர­தே­சத்தில் ஜனா­ஸாக்­களை அடக்­கு­வதால் அந்த ஆபத்தை தடுக்­கலாம் என்ற இன்­னொரு அபாண்­டத்தை முன்­வைத்து ஓட்­ட­மா­வ­டியே முழு இலங்­கையின் கொவிட் புதை­கு­ழி­யாகத் தேர்ந்தெடுக்­கப்­பட்­டது. மஜ்மா நகரின் மரண ஓலம் பேரி­ன­வா­தி­க­ளுக்கு ஆத்ம ராக­மாக அமைந்­தது. இந்த முடிவால் எத்­தனை முஸ்லிம் குடும்­பங்கள் எவ்­வ­ளவு துன்­பங்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டன என்­பதை வார்த்­தை­க­ளுக்குள் அடக்க முடி­யாது. இறு­தி­யாக, மேலும் ஒரு வரு­டத்­தின்­பின்னர் அந்தக் கட்­டளை பின்­வாங்­கப்­பட்டு இப்­போது நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அவ்­வு­டல்­களை அடக்­கலாம் என்று ஜனா­தி­பதி புதிய கட்­ட­ளை­யொன்றை வெளி­யிட்­டுள்ளார். இதற்குக் கார­ண­மென்ன? முஸ்­லிம்­கள்மேல் அர­சுக்­கேற்­பட்ட புதிய அனு­தா­பமா அல்­லது அவரின் அதி­கா­ர­ப­லத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக முஸ்லிம் சமூ­கத்தின் கோட­ரிக்­காம்­பு­க­ளாகச் செயற்­பட்ட பிர­தி­நி­தி­களின் துரோ­கத்­துக்­கான பரிசா? இல்­லவே இல்லை. உண்­மை­யான காரணம் ஜெனிவா நகரில் நடை­பெறும் ஐ. நா. மனித உரி­மைகள் சபையின் 2022 ஆம் வருடக் கூட்டம். அந்­தச்­ச­பைக்கு ஒரு போலி முகத்­தைக்­காட்டி அச்­ச­பையின் கண்­ட­னங்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட ஒரு முடி­வுதான் அந்தப் புதிய கட்­டளை. இந்த வர­லாறு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­துக்குப் புகட்டும் பாடம் என்ன? அதை விளக்­கு­வ­தற்கு முன்னர் வேறு இரண்டு உண்­மை­க­ளையும் இங்கே சுட்­டிக்­காட்­டு­வது அவ­சியம்.

முஸ்­லிம்­களின் கொவிட் மரண உடல்­களை தகனம் செய்­ய­வேண்டும் என்று கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­ட­போது அப்­போ­தைய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தலை­வரோ எரிந்த உடலின் சாம்­பலை எவ்­வாறு இஸ்­லா­மிய முறைப்­படி அடக்­கு­வது என்ற ஒரு புதிய வியாக்­கி­யா­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யது பல­ருக்கும் ஞாபகம் இருக்­கலாம். அநீ­தி­களை எதிர்த்துப் போராடத் துணி­வற்ற தலை­மைத்­து­வங்கள் எதி­ரியின் செயல்­க­ளுக்கு அனு­தாப வண்ணம் பூசு­வது வர­லாற்­றுக்குப் புதி­தல்ல. எதி­ரியை மாற்ற முடி­யா­விட்டால் எதி­ரி­யுடன் சேர்ந்து செல்­வதே நல்­லது என்ற கோழை­களின் உபா­யமே இது. அதற்குப் பிறகு கட்­டாயத் தகனம் நீக்­கப்­பட்­டபின் அதற்குக் காரணம் தாங்கள் அர­சுக்கு வழங்­கிய ஒத்­து­ழைப்பும் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சுமு­க­மான பேச்­சு­வார்த்­தை­க­ளுமே என்ற கார­ணத்தை முன்­வைத்து தங்­க­ளது சமூகத் துரோ­கத்தை மூடி­ம­றைக்க முற்­பட்­டனர் அந்தக் கோட­ரிக்­காம்­புகள். மதத்­த­லை­வரின் வியாக்­கி­யா­னமும் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களின் விளக்­கமும் எந்த அள­வுக்கு முஸ்லிம் சமூகம் துணி­வற்ற திற­மை­யற்ற ஒரு தலை­மைத்­து­வத்­துடன் தடம்­பு­ரண்டு தவிக்­கி­றது என்­பதை காட்­ட­வில்­லையா? பெய­ருக்கு ஒரு முஸ்லிம் மந்­தி­ரி­யாக இருந்­தும்­கூட அவரால் ஒரு துரும்­பை­யேனும் முஸ்லிம் சார்­பாக நகர்த்த முடி­யா­தி­ருப்­பதை என்­ன­வென்று கூறு­வதோ? இந்த நிலையை இதற்கு முன்­னரும் பல கட்­டு­ரை­களில் இக்­கட்­டுரை ஆசி­ரியர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். எனவே முஸ்­லிம்கள் ஒரு மாற்று வழியைத் தேடு­வது அவ­சியம். அதனை இனி விளக்­குவோம்.

கொவிட் ஜனா­ஸாக்கள் விடு­த­லை­யா­னது அரசின் காருண்­யத்­தாலோ முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களின் முயற்­சி­யாலோ அல்ல. அதற்கு ஒரே காரணம் ஐ. நாவின் மனித உரி­மைச்­ச­பையும் அதன் செய­லாளர் மிச்சேல் பச்­சலெற் வீர­மங்­கையின் துணி­வான செயற்­பா­டு­க­ளுமே. அவ­ருக்கு உடந்­தை­யாகச் செயற்­பட்­டவர்கள் புலம்­பெயர்ந்து வாழும் இலங்­கையர். சிங்­கள பௌத்த இன­வா­தத்தின் இனச்­சுத்­தி­க­ரிப்பு அழி­வு­க­ளி­லி­ருந்து உரு­வா­னதே இப்­பு­லம்­பெயர் சமு­தாயம். அது தமிழர்களோடு ஆரம்­பித்து இன்று முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்கி சிங்­க­ளவர்களையும் தன்­ன­கத்தே சேர்த்துக் கொண்­டுள்­ளது. அத­னி­ட­முள்ள மிகவும் சக்­தி­வாய்ந்த செல்வம் அறிவு. அந்த அறி­வினை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்தி பிறந்த நாட்டின் அரா­ஜ­கத்­தினுள் சிக்கித் தவிக்கும் மக்­க­ளுக்­காக உலக நிறு­வ­னங்­களின் ஆத­ரவைத் திரட்டி இலங்கை மக்­களின் நல­னுக்­காக அய­ராது உழைக்­கின்­றது இச்­ச­மு­தாயம். அதன் செல்­வாக்கு ஐ. நாவையும் எட்­டி­யுள்­ளமை இலங்கை அர­சுக்கு உரு­வான ஒரு புதிய தலை­யிடி. இந்தப் புலம்­பெயர் சமூ­கத்­தி­னூ­டா­கவே இலங்கை முஸ்­லிம்­களும் தமது பிரச்­சி­னை­க­ளுக்குப் பரி­காரம் தேடு­வது இன்­றைய நிலையில் தவிர்க்க முடி­யா­த­தொன்று. அதை எவ்­வாறு செய்­யலாம்?

முத­லா­வ­தாக, இலங்கை முஸ்­லிம்கள் இறை­தூ­தரின் உம்­மத்­து­களுள் ஓர் அங்கம், ஆதலால் அவர்கள் உலகின் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் அங்­கத்­தவர்கள். அவர்களுக்கு ஆபத்­து­வந்தால் உலக முஸ்லிம் நாடுகள் ஐம்­பத்­தேழும் உலக முஸ்லிம் கூட்­டு­றவு நிறு­வ­னத்­தி­னூ­டாக அபயம் கொடுக்கும் என்ற மாயை­யி­லி­ருந்து விடு­பட வேண்டும். மாறாக, ஐ. நா. போன்ற சர்வதேச அரங்­கு­க­ளி­னூ­டா­கவே தமது பிரச்­சி­னை­க­ளுக்குப் பரி­காரம் தேட­வேண்டும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். உண்­மை­யி­லேயே உள்­நாட்டு அரசு ஜன­நா­யக அடிப்­ப­டையில் எல்லாப் பிர­ஜை­க­ளையும் சம­மாக மதித்து நடக்­கு­மே­யானால் இது தேவை இல்லை. அது இல்­லாத பட்­சத்தில் வெளி உத­வியை நாடு­வ­திலே தவறும் இல்லை. ஆகவே நாட்டின் அர­சினை மாற்­று­வ­தற்கு மற்ற இனங்­க­ளுடன் சேர்ந்து போராடும் அதே­வேளை அது சாத்­தி­ய­மா­கும்­வரை சர்வதேச வழி­யினை கையாள்­வ­தைத்­த­விர வேறு பரி­காரம் முஸ்­லிம்­க­ளுக்கு இல்லை. அதற்கு அடிப்­ப­டைத்­தேவை உள்­நாட்டு முஸ்லிம் இயக்­கங்கள் புலம்­பெயர் முஸ்லிம் அமைப்­பு­க­ளுடன் தொடர்புகொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநியா­யங்­களை தக்க ஆதா­ரங்­க­ளுடன் அறி­யப்­ப­டுத்த வேண்டும். உதா­ர­ண­மாக அண்­மையில் பாது­காப்புப் படை­யி­­னரால் முஸ்லிம் பெண்­க­ளுக்கு துன்புறுத்தல்கள் இழைக்­கப்­பட்­ட­தாகச் செய்­திகள் கசிந்­துள்­ளன. ஆனால் அதனை வெளியில் கூறப்­ப­யந்து அவர்களின் குடும்­பங்கள் மௌனம் சாதிப்­ப­தா­கவும் அறி­யக்­கி­டைக்­கின்­றது.

இது பார­தூ­ர­மான மனித உரிமை மீறல். எனினும் திட்­ட­வட்­ட­மான ஆதா­ரங்­களும் சாட்­சி­யங்­களும் இல்­லாமல் இதனை எப்­படி உலக அரங்­கி­னுக்குக் கொண்டு வரு­வது? எனவே இவ்­வா­றான குற்­றங்­க­ளையும் அநி­யா­யங்­க­ளையும் உள்­நாட்டு முஸ்லிம் அமைப்­புகள் திரட்­டி­யெ­டுத்துப் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் தொடர்புகொண்டால் அந்த அமைப்­புகள் அவற்றை மேலி­டங்­க­ளுக்குக் கொண்டு செல்ல முடியும். தமிழ்ச் சமூகம் அவ்வாறுதான் செயற்படுகின்றது. அஞ்சினார்க்கு அரண் இல்லை என்பதை உணர்ந்து துணிவுடன் செயலாற்ற வேண்டிய காலம் இது.

கத்­தோ­லிக்க பேராயர் எவ்­வாறு துணி­வுடன் தனது மக்­க­ளுக்­காக நீதி­கேட்டு உலக அரங்­கினை நாடி­யுள்ளார் என்­ப­தை­யா­வது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா போன்ற அமைப்­புகள் உணர்வதில்லையா? எல்லாரும் வியாபார அரசியல் செய்து அரசு மூலம் பதவிகளும் பணமும் தேடும் நோக்குடன் செயற்பட்டால் சமூகத்தின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பௌத்த பேரினவாதம் ஒரு சூறாவளியாக நாட்டில் வீசுகிறது. எந்த எதிர்க்கட்சியாவது அதனை பகிரங்கமாக கண்டிக்க முன்வருவதாகக் காணோம். காக்கிப் படையும் காவிப்படையும் ஒன்றிணைந்து ஆளும் அரசைப் பாதுகாக்கிறது. அதே பாதுகாப்பைத்தான் எதிர்க்கட்சிகளும் எதிர்பார்க்குமானால் இலங்கையின் எதிர்காலம் இருள் படிந்ததாகத்தான் இருக்கும். எனவேதான் சர்வதேசத்தின் பார்வையை சிறுபான்மை இனங்களின் சார்பாக இலங்கைமேல் திருப்ப வேண்டியுள்ளது. கொவிட் மரணங்கள் புகட்டிய பாடமும் இதுதான். முஸ்லிம் புத்திஜீவிகளே, விழியுங்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.