கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 2

0 335

லத்தீப் பாரூக்

உள்­ளூரில் செய்­யப்­பட்ட செங்­கற்­களைக் கொண்டும் காங்­கே­சன்­து­றையில் உற்­பத்தி செய்­யப்­பட்ட சீமெந்­தையும் கொண்டு தான் இந்தக் கோபுரம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது நிரூ­பிக்­கப்பட்­டது. அதன் பிறகு அமைச்­ச­ரவை இந்த நிர்­மா­ணத்தை உட­ன­டி­யாகக் கைவி­டு­மாறு உத்­த­ர­விட்­டது. அதன் பிறகு 1971இல் பள்­ளி­வா­சலும் குகையும் அமைந்­துள்ள பகு­திகள் தொல்­பொருள் பெறு­மதி மிக்க இடங்­க­ளாகப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டன.

கூர­க­லயில் இவ்­வா­றா­னதோர் கோபுரம் ஒரு­போதும் இருக்­கவே இல்லை என்ற உண்மை கிரி­யெல்ல ஞான­வி­மல தேரர் எழு­திய ஒரு கட்­டு­ரையில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தக் கட்­டுரை 1971 ஜன­வரி 21இல் தவஸ என்ற பெயரில் அன்­றைய கால­கட்­டத்தில் வெளி­யான பிர­பல சிங்­கள தின­சரிப் பத்­தி­ரி­கையில் பிர­சு­ர­மாகி உள்­ளது.

இந்த இடத்­துக்கு தான் ஐந்து தட­வைகள் விஜயம் செய்­துள்­ள­தா­கவும், அன்­றைய பிரதி தொல்­பொருள் ஆணை­யாளர் சார்ள்ஸ் கொட­கும்­புர உடன் இந்தப் பிர­தே­சத்தை முழு­மை­யாக சோதனை செய்­த­தா­கவும், இந்த இடத்தில் பௌத்­தர்­க­ளுக்கு உரி­மை­யான அவர்கள் சார்ந்த எந்த ஒரு அடை­யா­ளத்­தையும் தாங்கள் காணவே இல்லை என்று அந்தக் கட்­டு­ரையில் தேரர் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளார். தொல்­பொருள் திணைக்­களம் அவ­ச­ர­அ­வ­ச­ர­மாகக் கட்­டிய கோபுரம் ஒரு சர்ச்­சைக்­கு­ரிய விடயம் என்­பதால் சங்­கைக்­கு­ரிய கிரி­யெல்ல ஞான­வி­மல தேரர் இது பற்றித் தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் மிக முக்­கி­ய­மான சான்­று­க­ளாக அமைந்­துள்­ளன.

அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தின் பின் கூர­கல தப்தர் ஜெய்­லானி சம்­பந்­த­மான முஸ்­லிம்­களின் உரிமை கோரலில் எந்த வகை­யிலும் பாதிப்பு எற்­ப­டாது என அறி­வித்து மும் மொழி­க­ளிலும் தொல்­பொருள் ஆணை­யா­ளரால் சுற்­ற­றிக்­கைகள் அனுப்­பப்­பட்­டன.
பின்னர் 1973 செப்­டம்பர் 13இல் மீண்டும் மும் மொழி­களில் தொல்­பொருள் திணைக்­களம் ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டது ‘கூர­கல பிர­தே­சத்தை ஒரு வணக்க வழி­பாட்­டுக்­கான இட­மாக முஸ்­லிம்கள் பாவித்து வரு­கின்­ற­மைக்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாது’ என அதில் குறிப்­பி­டப்­பட்­டது.

அபு­சா­லியின் கருத்­துப்­படி சில அதி­கா­ரிகள் பத­வியில் இருந்த அர­சுக்கும் மக்­க­ளுக்கும் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தும் வகையில் விரும்­பத்­த­காத தேவை­யற்ற பிரச்­சி­னை­களை உரு­வாக்­கினர். தொல்­பொருள் திணைக்­களம் சிங்­கள மற்றும் பௌத்த தொல்­பொருள் விட­யங்­களில் மட்­டுமே அக்­கறை கொண்­டி­ருந்­தது. உதா­ர­ணத்­துக்கு திரு. கொட­கும்­பு­ர­விடம் தப்தர் ஜெய்­லானி பள்­ளியில் குறிப்­பாக ஹிட்­டு­வங்­கல கற்­பா­றையில் செதுக்­கப்­பட்­டுள்ள அரபு எழுத்து வடி­வங்­களைப் பதிவு செய்­யு­மாறு கூறிய போது அது இந்த விட­யத்­தோடு சம்­பந்­தப்­பட்­ட­தல்ல என்று அவர் பதில் அளித்தார். அரபு எழுத்­தணி வடிவம் இன்றும் மாறாத நிலையில் உள்­ளதால் இந்தக் கற்­பா­றையில் செதுக்­கப்­பட்­டுள்ள எழுத்­துக்கள் எத்­தனை ஆண்­டுகள் பழ­மை­யா­னவை என்­பதை யாராலும் ஊர்­ஜிதம் செய்­யவும் முடி­யாமல் உள்­ளது. எவ்­வா­றேனும் இங்­குள்ள அரபு வச­னங்கள் மற்றும் எழுத்து வடிவம் என்­பன பதிவு செய்­யப்­பட வேண்டும் என பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் வலி­யு­றுத்­தினர். இது­போன்ற பார­பட்­ச­மான செயற்­பா­டுகள் தான் இன்றும் நாட்டில் இனங்­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­க­ளுக்கு பிர­தான கார­ணங்­க­ளாக அமை­கின்­றன.
அமைச்­ச­ரவை தீர்­மா­னத்­துக்கு இணங்கி இரு தரப்­பி­னரும் நடந்து கொண்­டதால் சிறிது காலம் ஜெய்­லா­னியில் எந்தப் பிரச்­சி­னை­களும் இருக்­க­வில்லை.

மீண்டும் தீவிர தேசி­ய­வாத போக்­கு­டைய ஜாதிக ஹெல உறு­மய அமைப்பு இந்த விட­யத்தை கையில் எடுத்து கூர­கல பிர­தேசம் ஒரு பௌத்த மத்­திய நிலையம் என உரிமை கோரி அங்கு பெருந்­தி­ர­ளான மக்­க­ளோடு விஜயம் செய்­த­தை அடுத்து மீண்டும் பதற்ற நிலை உரு­வா­னது. இந்த விட­யத்தில் இன­வாத சமய ரீதி­யான பாஸிஸ போக்­குள்ள பொதுபல சேனா அமைப்பும் தலை­யிட்­டதை அடுத்து நிலைமை மேலும் மோச­ம­டைந்­தது. 2013 மார்ச் 17இல் கண்­டியில் இடம்­பெற்ற ஒரு கூட்­டத்தில் இன­வாத தீயை கக்கும் வகையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் அந்த வரு­டத்தின் வெசாக் தினத்தை கூர­க­லயில் கொண்­டாடத் தயா­ரா­கு­மாறும் சிங்­கள மக்­களைத் தூண்டும் வகையில் உரைகள் நிகழ்த்­தப்­பட்­டன.

இதே­வேளை 2013 ஏப்ரல் 10இல் த பினான்­ஸியல் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் (The Battle For Sacred Ground) புனித பூமிக்­கான யுத்தம் என்ற தலைப்பில் வெளி­யான ஒரு கட்­டு­ரையில் தரீஷா பஷ்­டியன் என்ற பிர­பல பத்தி எழுத்­தாளர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வையும் அவ­ரது இரா­ணுவ, பொலிஸ் மற்றும் புல­னாய்வுப் பரி­வா­ரத்­தையும் தாங்கிச் சென்ற விமானப் படை ஹெலி­கொப்டர் பனி­மூட்டம் நிறைந்த கூர­கல கிரா­மத்தில் (2013 ஏப்ரல் 8இல்) தரை­யி­றங்­கி­யதும் அந்தக் கிராமம் மீண்டும் உயிர்ப்­ப­டைந்­துள்­ளது.

 

கூர­கல ஒரு பண்­டைய சூபி வழி­பாட்டு இடம் அமைந்­துள்ள ஒரு பகு­தி­யாகும். முஸ்­லிம்­க­ளுக்கு இது புனி­த­மா­னது. அங்­குள்ள கற்­பா­றை­களில் அரபு எழுத்­துக்கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. சமா­தி­களும் அமைந்­துள்ள இடமும் அவற்­றுக்­கான வர­லாற்றுத் தட­யங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

 

ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் எல்­லே­வல மேதா­னந்த தேரர் உட்­பட பல தேரர்கள், மௌல­விகள், தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹென்­த­வி­தா­ரண, தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆகி­யோரும் அவ­ருடன் சென்­றுள்­ளனர். இஸ்­லா­மிய வழி­பாட்டு இடம் ஒன்று அமையப் பெற்­றுள்ள மலை உச்­சியின் முகப்பு பகுதி உட்பட அங்­குள்ள பல இடங்­களை பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் பார்வை இட்­டுள்ளார்.

கூர­கல ஒரு பண்­டைய சூபி வழி­பாட்டு இடம் அமைந்­துள்ள ஒரு பகு­தி­யாகும். முஸ்­லிம்­க­ளுக்கு இது புனி­த­மா­னது. அங்­குள்ள கற்­பா­றை­களில் அரபு எழுத்­துக்கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. சமா­தி­களும் அமைந்­துள்ள இடமும் அவற்­றுக்­கான வர­லாற்றுத் தட­யங்­களும் காணப்­ப­டு­கின்­றன. பக்தி மிக்க ஒரு இஸ்­லா­மியப் புனிதர் ஆதம் மலைக்கு செல்லும் தனது பய­ணத்தின் ஒரு அங்­க­மாக இந்த இடத்தில் சுமார் 12 ஆண்­டுகள் தரித்­தி­ருந்து தியான வழி­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­மைக்­கான வர­லாற்றுத் தடங்கள் அங்கு உள்­ளன. வரு­டாந்தம் பெருந்­தி­ர­ளான மக்கள் இங்கு சமய ரீதி­யான வழி­பாட்­டுக்காகக் கூடு­கின்­றனர். ஷேக் முஹி­யத்தீன் அப்துல் காதர் எனப்­படும் அங்கு தியானம் புரிந்த மகானை அந்த மக்கள் நினைவு கூறு­கின்­றனர். ஏனைய எல்லா நாட்­க­ளிலும் அந்த இடம் சூபிஸம் போதிக்கும் தியானம் புரி­ப­வர்­க­ளுக்கும் தனிமைப் பிர­தி­ப­லிப்­புக்கும் ஒரு சொர்க்க பூமி­யாக அமைந்­துள்­ளது.

இந்த வழி­பாட்டு இடத்தின் அமைதி அண்­மைக்­கா­லங்­களில் மாறு­பட்ட உரிமை கோரல்­களின் விளை­வாக சீர்­கு­லைந்­துள்­ளது. இதே கார­ணத்தால் அதன் வர­லாற்றின் அசல் தன்­மையும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இன்­றைய அர­சியல் அரங்கில் சூடேறி வரும் பௌத்த பிக்­கு­களும், கடும் போக்­கா­ளர்­களும் இந்த மலைக் குகையை ஒரு பண்­டைய பௌத்த மடா­லயம் என்ற தமது ஒரு தசாப்த கால உரிமை கோரலை இப்­போது மீண்டும் புதுப்­பித்­துள்­ளனர். இங்­குள்ள பள்­ளி­வாசல் உட்­பட இஸ்­லா­மியக் கட்­டி­டங்கள் மற்றும் நினைவுச் சின்­னங்கள் என எல்­லா­வற்­றையும் இங்­கி­ருந்து அகற்றி விட வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பி உள்­ளனர். இந்த இடத்தின் முக்­கி­யத்­து­வத்தின் அடிப்­ப­டையில் இது உலக முஸ்­லிம்கள் அனை­வ­ருக்கும் பொது­வான இட­மாகும். ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்­கான எந்­த­வொரு அச்­சு­றுத்­தலும் மற்றும் அந்த இடத்தின் வர­லாற்றுத் தடங்­களை மாற்றி அமைக்கும் எந்­த­வொரு முயற்­சியும் இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் இடையில் மிகப் பார­தூ­ர­மான பதற்ற நிலையை உரு­வாக்கும் என்று அந்தக் கட்­டு­ரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெய்­லா­னியின் பாது­காப்பு பொறுப்பு
1970களில் பௌத்­தர்­களால் இவ்­வா­றான ஒரு உரிமை கோரல் இடம்­பெற்ற போது தொல்­பொருள் திணைக்­களம் அதன் பாது­காப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்­டது. ஜெய்­லானி புனிதப் பிர­தே­சத்தின் பாது­காப்பு பொறுப்பு, மலைக்­குகை, பள்­ளி­வாசல், யாத்­தி­ரி­கர்கள் தரிப்­பிடம் என்­ப­ன­வற்றின் பாது­காப்பு பொறுப்பு அபு­சாலி குடும்­பத்­த­வர்­க­ளிடம் இருந்த போதிலும் தொல்­பொருள் திணைக்­களம் அதன் பொறுப்பை ஏற்­றது. ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த எம்.எல்.எம். அபு­சாலி தான் ஜெய்­லானி புனிதப் பிர­தே­சத்தின் பிர­தம தர்­ம­கர்த்­தா­வாக இருந்தார். இன்று இந்தப் பொறுப்பை அவ­ரது மகள் றொஷானா ஏற்­றுள்ளார்.

இன்­றைய பாது­காப்புச் செய­லாளர் அந்த இடங்­களைச் சுற்றிப் பார்­வை­யிட்ட பின் அவ­ரோடு ஆரம்ப கட்ட கலந்­து­ரை­யா­டலில் தர்­ம­கர்த்­தாக்கள் ஈடு­பட்­டனர். மௌல­வி­மார்­களும் இதில் கலந்து கொண்­டனர். இந்த இடம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மா­னது அங்­குள்ள எல்லா கட்­டி­டங்­களும் அவற்றின் முகப்­புக்­களும் அகற்­றப்­பட வேண்டும் என்ற தொனி­யில்தான் இந்தப் பேச்­சு­வார்த்தை அமைந்­தது. இந்தத் தொனியால் ஊக்கம் இழந்த முஸ்லிம் பிர­தி­நி­திகள் தாம் இந்த விட­யத்தில் ஏற்­க­னவே ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் தோற்றுப் போய் விட்­ட­தா­கவும் உணர்ந்­தனர். அங்கு குழு­மி­யி­ருந்த முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கும் சிங்­கள கிரா­ம­வா­சி­க­ளுக்கும் தமது நிலைப்­பாட்டை விளக்­கு­மாறு பாது­காப்பு செய­லாளர் தொல்­பொருள் ஆணை­யாளர் கலா­நிதி செனரத் திஸா­நா­யக்­கவை கேட்டுக் கொண்டார். அந்த இடத்தின் தொல்­பொருள் முக்­கி­யத்­துவம் பற்­றிய உண்­மை­யான நிலையை விளக்­கு­மாறு கூறப்­பட்­டது.

முன்­மொ­ழி­யப்­பட்ட இணக்­கப்­பாடு
மலைக்­குகை பள்­ளி­வா­ச­லுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது என திஸா­நா­யக்க விளக்­க­ம­ளித்தார். ஆனால் அதில் உள்ள எழுத்து வடி­வங்கள் மற்றும் கல்­வெட்­டுக்கள் பற்றி தொல்­பொருள் திணைக்­களம் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும். மலைக்­கு­கையும் சோத­னைக்கு உட்­படும். பய­ணிகள் தங்­கு­வ­தற்­கா­கவும் பள்­ளி­வா­சலின் வரு­டாந்த கொண்­டாட்­டங்­களை நடத்­தவும் அண்­மைய பகு­தி­களில் 26 ஏக்கர் காணி ஒதுக்­கப்­படும். பள்­ளி­வாசல் அப்­ப­டியே இருக்கும். ஆனால் தொல்­பொருள் அகழ்வு வேலை­களும் விசா­ர­ணை­களும் இடம்­பெறும் போது மலை முகப்பில் உள்ள ஏனைய கட்­டி­டங்கள் யாவும் அகற்­றப்­படும் என்று திஸா­நா­யக்க விளக்­க­ம­ளித்தார்.

அவ­ரது விளக்­கத்தை செவி­யுற்ற முஸ்லிம் பிர­தி­நி­திகள் பலர் இந்த விட­யத்­தோடு இணங்கிச் செல்­ல­வில்லை. ஜெய்­லா­னியின் ஞாப­கார்த்­தங்கள் சர­ண­டையச் செய்­யப்­ப­டு­வ­தா­கவும், அதன் மூலம் இந்த நாட்டில் உள்ள ஏனைய இஸ்­லா­மியப் புனிதப் பிர­தே­சங்­க­ளையும் அவற்றின் உண்­மை­யான குடி­யேற்ற உரிமை கோரல்­களின் அடிப்­ப­டையில் மீட்டு எடுக்க வேண்­டிய கத­வு­களைத் திறந்து விடு­வ­தா­கவும் அவர்கள் நம்­பினர்.
எவ்­வா­றா­யினும் பள்­ளி­வாசல் தரை­மட்­ட­மாக்­கப்­ப­டாது என்ற உத்­த­ர­வாதம் அதி­கா­ரி­களால் வழங்­கப்­பட்ட பின் ஒரு மித­வாத போக்கில் இந்த விடயம் எச்­ச­ரிக்­கை­யோடு கையா­ளப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்குப் புனி­த­மான பகு­தி­களில் மேலும் எதை­யா­வது இணைத்துக் கொள்ள முயற்­சிகள் இடம்­பெற்றால் சமூகம் ஒரு கடி­ன­மான போக்கை கடை­பி­டிக்க வேண்டி இருக்கும் என்றும் முடிவு செய்­யப்­பட்­டது. தேவை ஏற்­படின் இந்த விவ­காரம் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும், 57 நாடுகள் அங்கம் வகிக்கும் மிகப் பெரிய இஸ்­லா­மிய அமைப்­பான இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பின் (OIC) கவ­னத்­துக்கும் கொண்டு செல்­லப்­படும் என்றும் முடிவு செய்­யப்­பட்­டது. இந்த அமைப்பு பல ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு உத­வி­களை வழங்கி வரு­வதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

திஸா­நா­யக்க விட­யங்­களைத் தெளிவு படுத்­திய பின் பள்­ளி­வா­ச­லுக்கு எந்தப் பாதிப்பும் எற்­ப­டாது, முஸ்லிம் யாத்­தி­ரி­கர்கள் இங்கு விஜயம் செய்­வ­திலும் எந்த இடை­யூ­று­களும் இருக்­காது என்று முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு உறுதி மொழி வழங்­கினார். அது­வரை அந்த இடத்தை சுற்றி பார்­வை­யிட்டு விட்டு கோத்­தா­பய ராஜ­க்ஷவும் அங்கு வருகை தந்தார். முஸ்­லிம்­க­ளது சமய உரி­மை­க­ளுக்கு எந்த வித­மான பாதிப்பும் ஏற்­ப­டாது என்ற உறு­தியை அவரும் அங்கு வழங்­கினார் அத்­தோடு அங்கு எந்­த­வி­த­மான பௌத்த நினைவுச் சின்­னங்­க­ளையும் அரசு நிறு­வாது என்றும் உறுதி அளித்தார்.

மேலும் அந்த இடம் ஒரு சுதந்­திரப் பிர­தே­ச­மாக முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் திற­ந்திருக்கும் என்றும் அவர் கூறினார். பலாங்­கொடை பிர­தே­சத்­திலும் நாட்டின் ஏனைய இடங்­க­ளிலும் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையில் இந்த விடயம் பெரும் பதற்­ற­மாக உரு­வெ­டுத்­தது. இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் சமூ­கங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு முயற்­சியா அல்­லது சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் சீர்­கு­லைக்கும் ஒரு முயற்­சியா என்­பதும் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பிர­தேச ரீதி­யான ஒரு உரிமை கோர­லுடன் பெருந்­தி­ர­ளான பௌத்­தர்கள் வர­லாற்று ரீதி­யான உரி­மை­கோ­ர­லுடன் கூடிய பெரு­ம­ளவு முஸ்லிம் யாத்­தி­ரி­கர்­களை எதிர் கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­பட்­டனர். வேண்­டத்­த­காத சக்­திகள் யாரா­வது அதற்குள் ஊடு­ரு­வினால் அங்கு என்ன வேண்­டு­மா­னாலும் நடக்­கலாம் அது அமை­தியை குலைக்­கலாம் என்று ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்த வண்ணம் இருந்­தனர்.

ஒரு குழுவை நிய­மிக்­கு­மாறு திஸா­நா­யக்­க­வுக்கு பாது­காப்புச் செய­லாளர் ஆலோ­சனை வழங்­கினார். புனிதப் பிர­தேசத்தின் தர்­ம­கர்த்­தாக்கள், மேதா­னந்த தேரர், ஏனைய சில தேரர்கள், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களைக் கொண்­ட­தாக ஒரு குழுவை நிய­மிக்க ஆலோ­சனை வழங்­கினார். கூர­கல புனிதப் பிர­தேசம் பற்­றிய பதற்ற நிலையைத் தணிக்கும் சாத்­தி­ய­மா­னதோர் இணக்­கப்­பாட்டுத் திட்­டத்­துக்கு வரு­மாறு அந்தக் குழு­வுக்கு பணிப்­புரை வழங்­கப்­பட்­டது.

இந்தக் குழு பற்றி எவ்­வி­த­மான கருத்துக் கூறவோ அல்­லது அதில் கலந்து கொள்­ளவோ பொது பல சேனா மற்றும் சிங்­ஹல ராவய உறுப்­பி­னர்­க­ளுக்கு எது­வித சந்­தர்ப்­பமும் வழங்­கப்­ப­டாது என்ற உத்­த­ர­வா­தமும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

முஸ்லிம் யாத்­தி­ரி­கர்கள் இங்கு வருகை தரு­வ­தற்கு பௌத்­த­ர்கள் எந்த வகை­யிலும் அச்­சு­றுத்­த­லாக இருக்­க­மாட்­டார்கள் என்று மேதா­னந்த தேரர் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு மீண்டும் உறுதி அளித்தார். ஆனால் ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் இன விவ­கா­ரங்­களில் எப்­போ­துமே கடி­ன­மான போக்­கையே பின்­பற்­று­பவர் அந்தக் கட்சி கூட சமா­தா­னத்­துக்­கான கருத்­துக்­களை ஒரு போதும் முன் வைத்­த­தில்லை. ஆனால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான மோச­மான நிகழ்ச்சி நிர­லுடன் பொது பல சேனா போன்ற அமைப்­புக்­களின் பிர­வே­சமே மேதா­னந்த தேரர் போன்­ற­வர்கள் ஓர­ளவு மித­வாத போக்கை கைகொள்ள கார­ண­மா­யிற்று.

மலைக்­கு­கையை முற்­று­கை­யிடல்
ஜே.எச்.யூ தலை­மை­யி­லான பௌத்த தேரர்­களைக் கொண்ட ஒரு அணி சில காலங்­க­ளுக்கு முன் கூர­கல புனிதப் பிர­தே­சத்தை முற்­று­கை­யிட்­டது. அந்த இடத்தை மீண்டும் கைப்­பற்­று­வது, அங்கு பௌத்த மர­பு­ரி­மையை மீண்டும் நிலை நிறுத்­து­வது என்ற தீர்­மா­னத்­துடன் இந்த முற்­றுகை இடம்­பெற்­றது. புனிதப் பிர­தே­சத்தின் அன்­றைய தர்­ம­கர்த்தா றொஷானா அபு­சாலி மற்றும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுடன் அந்த இடத்தின் வர­லாறு, முஸ்­லிம்­க­ளுக்கு அதன் முக்­கி­யத்­துவம், முஸ்­லிம்­க­ளது உரிமை கோரல்கள் மற்றும் அந்த இடத்தில் வாழ்ந்த முஸ்லிம் மகான் தொடர்­பான ஆதா­ரங்கள் என்­பன பற்றி விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதன் பிறகு இந்த விட­யத்தை அப்­ப­டியே அமை­திப்­ப­டுத்­து­வது என பௌத்த தேரர்கள் இணங்­கினர். ஆனால் அதிலும் சில கடினப் போக்கு குழுக்கள் தமது முஸ்லிம் எதிர்ப்பு பிர­சா­ரத்தின் முக்­கிய கவ­னத்­துக்­கு­ரிய விட­ய­மாக கூர­கல விட­யத்தை தொடர்ந்தும் கையாண்­டனர்.

2013 ஜன­வ­ரியில் சிங்­ஹல ராவய மற்றும் பொது பல சேனா குழுக்கள் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை முற்­று­கை­யிட சுமார் 150 பேர் கொண்ட பௌத்த தேரர்கள் குழுவை ஏற்­பாடு செய்­தனர். இவர்­க­ளோடு பல பொலி­ஸாரும் உடன் சென்­றனர். புத்த பிரானின் சிலை­களைக் கைகளில் ஏந்­தி­ய­வாறு அவர்கள் மலை முகப்பை நோக்கி ஏறினர். ஆனால் அப்­போது திடீ­ரென அங்கு கடும் மின்னல் இடி முழக்கம் என்­ப­ன­வற்­றுடன் மழை பெய்யத் தொடங்­கி­யது. அதனால் அவர்கள் தமது முயற்­சியில் இருந்து பின்­வாங்­கினர் என சம்­பவ இடத்தில் இருந்த பலர் தெரி­வித்­துள்­ளனர்.

பதற்ற நிலையில் ஒரு கூட்டம்
ஜெய்­லானி முற்­றுகை முயற்சி அதனால் உரு­வாக்­கப்­பட்ட பிணக்­குகள் என்­பன அதி­கா­ரிகள் அவ­ச­ர­மாக சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் தூண்­டின. அதனைத் தொடர்ந்து தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் கலா­நிதி செனரத் திஸா­நா­யக்­கவின் கொழும்பு அலு­வ­ல­கத்தில் ஒரு கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. கூர­கல புனிதப் பிர­தே­சத்தின் தர்மா கர்த்­தாக்கள், ஏனைய பிர­தி­நி­திகள், முஸ்லிம் சமூ­கத்தின் புத்தி ஜீவிகள், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், பொலிஸ் அதி­கா­ரிகள் அங்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஆனால் கடைசி நேரத்தில் பொது பல சேனா, சிங்­ஹல ராவய ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­தி­களும் அங்கு வருகை தந்­தனர்.

ஆரம்ப கட்­டத்­தி­லேயே மிகவும் கடு­மை­யான தொனியைப் பாவித்த பௌத்த தேரர்கள் பள்­ளி­வாசல் தர்­ம­கர்த்தா ரொஷானா அபு­சாலி ஆங்­கி­லத்தில் உரை­நி­க­ழ்த்­து­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது என கண்­டித்­தனர். தனக்கு சிங்­களம் சர­ள­மாக வராது என்றும் அதற்­காக மன்­னிப்புக் கோரு­வ­தா­கவும் தன்னை ஆங்­கி­லத்தில் உரை நிகழ்த்த அனு­ம­திக்­கு­மாறும் அவர் தய­வுடன் வேண்­டினார். ஆனால் அதை ஏற்க பொது பல சேனா பிர­தி­நி­திகள் திட்­ட­வட்­ட­மாக மறுத்­தனர். இலங்கை ஒரு சிங்­கள நாடு எனவே அவர் சிங்­க­ளத்தில் தான் பேச வேண்டும் என அவர்கள் அடம் பிடித்­தனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.