மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு

0 515

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி

மட்­டக்­க­ளப்பு – கொழும்பு நெடுஞ்­சா­லையில் மட்­டக்­க­ளப்பு நக­ரி­லி­ருந்து வடக்கே பய­ணிக்­கும்­போது சுமார் 12 கிலோ­மீற்றர் தொலை­தூ­ரத்தில் அமைந்­தி­ருக்­கி­றது ஏறாவூர் நகரம்.

இந்த ஊர் 10 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட குடும்­பங்­க­ளுடன் சுமார் 50 ஆயிரம் சனத்­தொ­கையை தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­னரால் –  ஏறாவூர் பொலிஸ் நிலையம் முற்­றாக அழித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது. ஏறாவூர் பொலிஸ் நிலையம் இல்­லாமல் போன­தோடு அங்­கி­ருந்த பாது­காப்பும் முற்­றாகத் துடைத்­தெ­றி­யப்­பட்­டது. இரா­ணுவம், எஸ்.ரி.எஃப் என்று எந்த அரச படை முகாம்­களும் ஏறா­வூரில் இருக்­க­வில்லை.

1990ல் பொலிஸ் நிலையம் அழிக்­கப்­பட்ட கையோடு ஏறாவூர் பிர­தேச சபை, வாசி­க­சாலை என்­பன எல்­ரீ­ரீஈ இன­ரால் பட்டப் பகலில் சூறை­யா­டப்­பட்ட பின்னர் முற்­றாக தீவைத்து அழிக்­கப்­பட்­டது.

மின்­சாரம் நிரந்­த­ர­மாகத் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. கிழக்­கி­லி­ருந்த ஏனைய முஸ்லிம் ஊர்­களில் செய்­ததைப் போன்று புலிகள் இயக்­கத்­தினர் ஏறா­வூ­ரிலும் முஸ்­லிம்­களைக் கடத்­து­வதும் கொல்­வதும் தொடர்ந்து கொண்­டி­ருந்­தது.

இதன் நோக்கம் அச்­சு­றுத்­து­வதன் மூலம் கிழக்கில் முஸ்­லிம்­களை அவர்­க­ளது வாழ்­வி­டங்­களை விட்டும் விரட்­டு­வ­தாகும். கிழக்கில் தமது பின்­ன­டை­வுக்கு முஸ்லிம் ஊர்­களே கார­ண­மென்றும் முஸ்லிம் ஊர்­களை மைய­மாகக் கொண்டே இரா­ணுவம், பொலிஸ் முகாம்கள் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் எல்­ரீ­ரீஈ இனர் கூறி­வந்­தனர். இது அவர்கள் தம் தோல்­வி­களை மறைக்க முஸ்­லிம்கள் மீது இட்டுக் கட்டி பழி போட்ட கதை­க­ளாகும்.
எனவே, ஏறாவூர் முஸ்லிம் நகரப் பிர­தேசம் பாது­காப்பு ஏது­மற்ற இட­மாக இருந்­தது.

1990 ஆகஸ்ட் படு­கொலை
இவ்­வா­றி­ருக்கும் தறு­வா­யி­லேயே மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பிர­தான முஸ்லிம் நக­ர­மான காத்­தான்­கு­டி­யிலும் முஸ்­லிம்கள் மீது எல்­ரீ­ரீஈ இனர் கூட்டுப் படு­கொ­லை­களை மேற்­கொண்­டனர். இது முஸ்­லிம்­களை அப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்து அவர்­களை விரட்­டி­ய­டிக்கும் நோக்கில் செய்­யப்­பட்­டது.

1990 ஆகஸ்ட் 03ஆம் திகதி எவ­ருமே எதிர்­பார்த்­தி­ராத விதத்தில் புலிகள் இயக்­கத்­தினர் காத்­தான்­கு­டி­யி­லுள்ள பள்­ளி­வா­சல்­களைத் தாக்கி அங்கு தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேரைப் படு­கொலை செய்­தனர். உலகம் முழு­வதும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய இச்­சம்­பவம் ஏறாவூர்ப் பொது­மக்­களைக் குலை­ந­டுங்கச் செய்­தது. எப்­போது என்ன நடக்­கு­மென்ற பதை­ப­தைப்­பு­டனும் அச்­சத்­து­டனும் ஒவ்­வொ­ரு­வரும் நாட்­களைக் கடத்திக் கொண்­டி­ருந்­தார்கள். பெரும்­பாலும் தூங்­கா­ம­லேயே கழிந்த அந்த இர­வுகள் பெரும் பயங்­க­ர­மாக இருந்­தன.

அவ்­வா­றி­ருக்­கும்­போது 1990 ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏறாவூர் நகர், ஏறாவூர் ஆற்­றங்­கரைப் பிர­தேசம், ஓட்­டுப்­பள்­ளி­யடி, புன்­னைக்­குடா வீதி, சதாம் ஹுஸைன் கிராமம் போன்ற இடங்­களில் மொத்­த­மாக 121 பேரை புலிகள் கொன்றுகுவித்தனர். இதில் 200க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்­தனர். அவர்­களில் பலர் சிகிச்சை பய­ன­ளிக்­காமல் பின்­னாட்­களில் உயி­ரி­ழந்­தனர். எஞ்­சி­ய­வர்கள் நடைப்­பி­ணங்­க­ளாக ஆகினர். இறந்­த­வர்­களின் உடல்­களைக் குளிப்­பாட்டி அடக்கம் செய்­யும்­போது பின்­னே­ர­மா­னது. சுஹ­தாக்கள் பூங்கா எனப் பெயர் பொறிக்­கப்­பட்ட காட்­டுப்­பள்ளி மைய­வா­டியின் புறம்­பான பகு­தியில் கொல்­லப்­பட்­ட­வர்கள் ஒன்­றாக அடக்கம் செய்­யப்­பட்­டனர்.

1990ஆம் ஆண்டு எல்­ரீ­ரீஈ அமைப்பு மேற்­கொண்ட கூட்டு இனப்­ப­டு­கொ­லையின் பின்னர் ஏறாவூர் மக்கள் தமது நிரு­வாக ரீதி­யான கரு­மங்­க­ளுக்­காக ஊரை விட்டு வெளி­யேற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது.

ஏற்­கெ­னவே ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச செய­லகப் பிரி­வுடன் ஏறாவூர் நக­ரி­லுள்ள மக்­களின் அரச நிரு­வாகக் கட­மைகள் இடம்­பெற்று வந்­தன.

இருந்­த­போ­திலும் 1990ஆம் ஆண்டு இடம்­பெற்ற இன வன்­மு­றை­க­ளையும் முஸ்­லிம்கள் மீதான கூட்டுப் படு­கொ­லை­க­ளையும் தொடர்ந்து ஏறாவூர்ப் பகுதி திறந்­த­வெளி அகதி முகாம்­போல இருந்­தது.

அங்­கி­ருந்து வெளியில் நக­ர­மு­டி­யாத உயி­ரச்­சு­றுத்தல் இருந்­ததால் ஏறாவூர் நகர மக்கள் அரச நிரு­வாகக் கட­மை­க­ளுக்­காக ஏறா­வூ­ரி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ­மீற்­ற­ருக்கும் குறை­வான தூரத்தில் செங்­க­ல­டியில் அமைந்­தி­ருக்கும் ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச செய­ல­கத்­திற்குச் செல்ல முடி­யாமற் போனது.

இந்த சூழ்­நி­லை­யில்தான் ஏறாவூர் நகர பிர­தேச முஸ்லிம் மக்கள் அரச சேவை­களைப் பெறும் பொருட்டு 1990ஆம் ஆண்டு தனி­யான மேல­திக உதவி அர­சாங்க அதிபர் பிரி­வாக ஏறா­வூரில் மேல­திக உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­லகம் இயங்கத் தொடங்­கி­யது.
மேல­திக உதவி அர­சாங்க அதி­ப­ராக யூ.எல்.எம். ஹனீபா 1990.08.22ல் நிய­மிக்­கப்­பட்டார். தள­வா­டங்கள் ஆளணி எது­வு­மின்றி 13 கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் ஏறாவூர் மேல­திக உதவி அர­சாங்க அதிபர் காரி­யா­லயப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

மேல­திக உதவி அர­சாங்க அதிபர் காரி­யா­லயம் ஏறாவூர் பிர­தான வீதியில் அல்ஹாஜ். பீ.எம். மீரா­சா­ஹிபு, அல்ஹாஜ். பீ.எம். அப்துல் மஜீது சகோ­த­ரர்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்டு கடை­களில் திறந்து வைக்­கப்­பட்­டது.

அதன் பின்னர் நிர்­வா­கத்தை பர­வ­லாக்கும் நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிர­தேச செய­லகம் உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண சபைகள் அமைச்சர் ஜோன் ஏ.ஈ. அம­ர­துங்­க­வினால் 1993.11.04 காலை 10.00 மணிக்கு விம­ரி­சை­யாகத் திறந்து வைக்­கப்­பட்­டது. கே. விம­ல­நாதன் ஏறாவூர் நகர பிர­தேச செய­லா­ள­ராக 1993.08.26ல் கட­மையைப் பொறுப்­பேற்றார்.

வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் ஏறாவூர் நகர் பிர­தேச செய­லகப் பிரிவு
1993.01.01ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வரும் வகையில் 1998.06.12ஆம் திகதி வெளி­யான அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மிகக் குறைந்­த­ளவு நிலப்­ப­ரப்­பையும், மிகக்­கூ­டிய சனத்­தொகை அடர்த்­தி­யையும் கொண்ட ஒரு பிர­தே­ச­மாக ஏறாவூர் நகர பிர­தேசம் விளங்­கு­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் சுமார் 2633.10 சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்பைக் கொண்­டி­ருக்­கின்­ற­போதும் ஏறாவூர் நகர் பிர­தேச செய­லக பிரிவு 3.745 சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்பை அதா­வது மாவட்­டத்தில் 0.14 சத­வீத நிலப்­ப­ரப்பை மட்­டுமே கொண்­டுள்­ளது.
ஏறா­வூரில் வாழும் ஒரு குடும்பம் 0.000304 சதுர கிலோ­மீட்டர் நிலத்தை மட்­டுமே கொண்­டுள்­ளது. 2020ஆம் ஆண்டில் உள்­ள­படி ஏறா­வூரில் சனத்­தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்­ற­ருக்கு 7785 பேர் என்று காணப்­படும் அதே­வேளை மாவட்­டத்தின் சனத்­தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்­ற­ருக்கு 236 பேர் என்­ற­வாறு உள்­ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு திரட்­டப்­பட்ட விவ­ரங்­க­ளின்­படி ஏறாவூர் நகர பிர­தேச செய­லாளர் பிரிவில் 2373 குடும்­பங்கள் குடி­யி­ருப்­ப­தற்கு ஒரு அங்­குலக் காணி­கூட இல்­லா­தோ­ராக நிர்க்­கதி நிலையில் உள்­ள­தாக ஏறாவூர் நகர பிர­தேச செய­லக திட்­ட­மிடல் உதவிப் பணிப்­பாளர் எம். ஹன்சுல் சிஹானா தெரி­விக்­கிறார்.

இதே­வேளை ஏறாவூர் நகரைச் சூழ்ந்­தி­ருக்கும் ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச செய­லகப் பிரிவு 634.16 சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்பைக் கொண்­டுள்­ளது. இது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மொத்த நிலப்­பரப்பில் 24.08 சத வீத­மாகும். அப்­பி­ர­தேச செய­லகப் பிரிவில் சனத்­தொகை அடர்த்தி 2020இல் உள்­ள­படி ஒரு சதுர கிலோ மீற்­ற­ருக்கு 148 பேர் என்­ற­வாறு உள்­ளது.

மேலும் இத­ன­டிப்­ப­டையில் நோக்­கினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள 14 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் அதி­கூ­டிய நிலப்­ப­ரப்பைக் கொண்ட பிர­தேச செய­லகப் பிரி­வாக ஏறா­வூர்ப்­பற்று உள்­ளது.

ஏறா­வூரில் குறு­கிய நிலப்­ப­ரப்பில் கூடு­த­லான மக்கள் செறிந்து வாழ்ந்து வருவதால் சுகாதாரம், இருப்பிடம் ஏனைய அரச வசதி வாய்ப்புகள் தொடர்பில் அநேகமான பிரச்சினைகளை ஏறாவூர் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.

ஏறாவூரில் அரச கட்டிடங்களை அமைப்பதற்குக் காணித்துண்டொன்று இல்லாதிருப்பது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச மக்களுக்குச் சேவையாற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையம்கூட கடந்த 31 வருடங்களாக தனியாருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றிலேயே ஏறாவூரில் இயங்கி வருகின்றது.

ஏறாவூர் தபாற்கந்தோர் தனியாருக்குச் சொந்தமான கடைத்தொகுதி ஒன்றினை சுவீகரித்து அமைக்கப்பட்டது.

தற்­போ­துள்ள ஏறாவூர் நகர பிர­தேச செய­லகம் கூட வாவியை அண்­டி­யுள்ள சதுப்பு நிலப்­ப­கு­தியில் இயற்­கை­யாக நீர் வழிந்­தோ­டக்­கூ­டிய தனி­யா­ருக்குச் சொந்­த­மான சதுப்பு நிலத்தை செயற்­கை­யாக மண் இட்டு நிரப்­பியே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால் அப்­பி­ர­தேச செய­ல­கத்தை வரு­டாந்தம் மாரி­கால வெள்ளம் சூழ்ந்து கொள்­கின்­றது.
(மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணி பிரச்சினைகள் பற்றிய தொடர் வரும் வாரமும் வரும்)

Leave A Reply

Your email address will not be published.