எதிரிகள் இல்லையேல் வீரர்களும் இல்லை

0 342

மூலம்: திஸரணி குணசேகர 

தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்

2019 ஆண்­டைய ஜனா­தி­பதித் தேர்தல் இலங்கை வர­லாற்றில் ஒரு மெகா வீர நாட­க­மாகும். சிங்­கள மக்­களை (விசே­ட­மாக சிங்­கள பௌத்­தர்­களை) எதி­ரி­களின் இன்­னல்­க­ளி­லி­ருந்து மீட்டு தாய்­நாட்­டுக்கு சுபீட்­சத்தை அழைத்து வரும் அர­சியல், பொரு­ளா­தார ஜாம்­ப­வானை உரு­வாக்­கு­வதே அதன் நோக்­க­மாக அமைந்­தது. நாடகம் பெரு­வெற்றி பெற்­ற­மைக்கு பிர­தான நடி­கரின் திறன் கார­ண­மல்ல, வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யினர் அப்­ப­டி­யொரு ஏமா­று­தலை ஆவ­லுடன் எதிர்­பார்த்­த­மை­யாகும்.

சிறி­சே­ன-­– விக்­ர­ம­சிங்க ஆட்­சியின் குறை­பா­டுகள் ஜன­நா­யக முறையின் சில குறை­பா­டு­க­ளாக வரை­வி­லக்­கணப் படுத்த எதிர்க்­கட்­சி­யாக இருந்த ராஜ­பக்­சாக்­க­ளுக்கு முடி­யு­மாக இருந்­தது. உத்­தி­யோக பூர்­வ­மற்ற ஒரு அர­சனைப் போன்ற ஒரு மீட்­டெ­டுக்கும் தலைவர் பற்றி இலங்கை மக்­க­ளி­டையே ஏற்­பட்ட ஆசையும் நம்­பிக்­கையும் இந்த வரை­வி­லக்­க­ணத்­துடன் நன்கு பொருந்­தி­யது. மஹிந்த ராஜ­பக்­சவின் தயா­ரிப்பில் பசில் ராஜ­பக்ச இயக்­கிய மீட்­டெ­டுக்கும் இள­வ­ரசன் வேடத்தில் கோட்­டா­பய நடித்த அந்தப் படைப்பு இத்­த­கை­ய­தொரு சூழ்நிலையில் தான் வெளி­வந்­தது.

நாட­கத்தின் பிர­தான நடிகர் ஒரு திற­மை­சாலி அல்ல என்­பது அவரின் முத­லா­வது ஊடகச் சந்­திப்­பி­லேயே தெளி­வா­கி­யது. குறிப்­பாக பொரு­ளா­தாரம் தொடர்­பாகக் கேட்ட சில எளி­மை­யான கேள்­வி­க­ளுக்குக் கூட அவரால் பதில் கூற­மு­டி­ய­வில்லை. அந்த ஊடக சந்­திப்பே முத­லா­வதும் கடை­சி­யு­மாக அமைந்­ததும் அத­னால்தான். அதன் பின்னர் அர­சியல் மேடை­களில் கூட எழு­தப்­பட்ட உரையை இலத்­தி­ர­னியல் கரு­வியின் உத­வி­யுடன் வாசிப்­பதில் தான் ஈடு­பட்டார்.

இவை­ய­னைத்­திலும் நடிப்பு மாயையே தவிர உண்­மை­யல்ல என்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­பட்­டன. ஆயினும் நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்பில் விரக்­தி­யுற்று ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலில் பீதி­ய­டைந்­தி­ருந்த பெரும்­பான்மை சிங்­கள பௌத்த மக்கள் அந்த அறி­கு­றி­களைக் கண்டும் காணா­தது போல் முகத்தைத் திருப்பிக் கொண்­டனர். எனவே தான் 2019 தேர்தல் ஓர் ஏமாற்று என்­பதை விட சுய ஏமாற்­ற­மாக முடிந்­தது.

தெறிக்கும் வெய்­யிலில் மணிக்­க­ணக்கில் சமையல் எரி­வாயு கியூ­வ­ரி­சையில் அல்­லது பால்மா வாங்கும் வரி­சையில் காத்துக் கிடக்கும் போது, முன்­பெல்லாம் முத்துச் சம்பா அரிசி வாங்­கிய விலைக்கு நாட்­ட­ரிசி கூடக் கிடைக்­காத நிலையில் சுய ஏமா­று­தலைச் சகித்துக் கொள்­வது இல­கு­வாக இல்லை. வெட்­டி­னாலும் ராஜ­பக்­ச­வா­திகள் என்று கூறிக் கொள்ளும் சிலரை விட்டால் 69 இலட்­சத்­திய பெரும்­பான்­மை­யினர் இன்பக் கனவில் இருந்து துன்­பியல் யதார்த்­தத்தை நோக்கி மீண்டு கொண்டு வரு­கின்­றனர். வலைத்­த­ளங்­களில் கேலிச் சிரிப்­பு­களும் நிஜ உலகில் கூக்­கு­ரல்­களும் வெளிப்­ப­டுத்தும் விடயம் யாதெனில் மீட்­டெ­டுக்கும் இள­வ­ரசன் என்ற நாட­கத்தை உண்மை என நம்­பி­ய­வர்­களின் துன்­பி­ய­லாகும்.

69 லட்­சத்தில் பெரும்­பான்­மை­யி­னரின் கண்கள் திறந்து கொண்­ட­போது ராஜ­பக்­சாக்கள் இன்னும் தங்கள் உரு­வாக்­கிய நாட­கத்­துக்­குள்­ளேயே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் தொடர்ந்தும் இரட்­சகன் வேடங்­களில் நடித்துக் கொண்டு தான் உள்­ளனர். அவர்கள் வெளி­யிடும் எதிர்­வி­ளைவு மேடை­யி­லி­ருந்து நிஜ உல­கிற்கு வரு­வ­தனால் அல்ல. மாறாக நாட­கத்தை மென்­மேலும் கவர்ச்­சி­க­ர­மாக கலப்பு வர்­ணங்­களில் தயா­ரிப்­பதன் மூல­மாகும்.

புதிய பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரை ஆரம்­பித்து வைத்த ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச ஆற்­றிய உரையில் இது மிகவும் தெளி­வ­டைந்­தது. நாட்டின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு எப்­படிப் போனாலும் பிரச்­சி­னைகள் பற்­றிய ஒரு தெளிவு கூட ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை. அவர்கள் எதிர்­நோக்கும் ஒரே பிரச்­சினை நாட­கத்தின் ரசி­கர்கள் நாளுக்கு நாள் தங்­க­ளி­ட­மி­ருந்து விலகிக் கொள்­வ­தாகும். பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச மொட்டுக் கட்­சியின் மாநாட்டில் ஆற்­றிய உரை­யி­னதும் கோட்­டா­பய ராஜ­பக்ச அதி­வேகப் பாதையை திறந்து வைத்து ஆற்­றிய உரை­யி­னதும் சாரம் அதுதான். இதற்­கான காரணம் தங்கள் தவறு என்று அவர்கள் கரு­த­வில்லை. ஏதா­வது தவறு இருக்­கு­மானால் அது மற்­ற­வர்­க­ளு­டை­யது அல்­லது எல்­லா­வற்­றுக்கும் காரணம் உள்­நாட்டு வெளி­நாட்டுச் சதி­க­ளாகும்.

இல்லை. இல்லை. குண்டு வைப்பு நாடகம் இந்தச் சந்­தர்ப்­பத்தில் தான் அரங்­கேற்றப் படு­கி­றது. எதி­ரிகள் இல்­லையேல் வீரர்­களும் இல்லை. இருப்பு தொடர்­பான சவால்கள் இல்­லா­த­போது இரட்­ச­கர்­களும் இல்லை. சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்­குதல் போன்ற ஒன்று பற்றி சில கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளுக்கும் பௌத்த விகா­ரை­க­ளுக்கும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அது­பற்றி விளக்கம் கேட்­ட­போது அது ஒரு ஒத்­திகை என்று கூறி ஆட்­சி­யா­ளர்கள் கையைக் கழுவிக் கொண்­டனர்.

பொரளை கிறிஸ்­துவ ஆலயத்தில் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­பவம் இதில் புதிய தொட­ராகும். சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் மாபெரும் சூத்திர­தா­ரி­யொ­ருவர் இருப்­ப­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் குறிப்­பிட்டார். இது­போன்ற செயல்­களின் நோக்கம் அர­சாங்­கத்­தையும், பொலி­சா­ரையும், இரா­ணு­வத்­தையும் அசௌ­க­ரி­யத்தில் வீழ்த்­து­வதே என்றும் அவர் கூறினார்.

இரண்டு மூன்று தினங்­களில் சம்­ப­வத்தின் பிர­தான சந்­தே­க­நபர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் குண்டை அந்த இடத்தில் வைப்­ப­தற்­காக அவ­ருக்கு 30,000 ரூபா பணத்தை வழங்­கி­யவர் ஒரு முஸ்லிம் என்றும் பொலிசார் குறிப்­பிட்­டனர். இந்தச் செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்த இணை­யத்­த­ளத்தில் ஒரு வாசகர் “இது போன்ற உத்­திகள் இனிமேல் சரி­வ­ராது” என்று குறிப்­பிட்­டி­ருந்தார். “வேறு ஏதா­வது கதை எழுதிப் பாருங்கள்” என்றும் ஒருவர் கூறி­யி­ருந்தார். எதி­ரி­களின் சதி தவிர்ந்த எந்த ஒரு திரைக்­கதை வச­னத்தையும் ராஜ­பக்­சாக்­களால் எழுத முடி­யா­துள்­ளது. தேசிய பொரு­ளா­தா­ரத்தின் வீழ்ச்சி வேக­ம­டையும் போது மக்­களின் பொரு­ளா­தார அழுத்தம் தீவி­ர­ம­டை­யும்­போது முஸ்லிம், தமிழ் மட்­டு­மன்றி கத்­தோ­லிக்க சூத்திதா­ரர்கள் அவர்­க­ளுக்கு உதவி செய்யும் சிங்­கள பௌத்­தர்கள் பற்­றியும் மீண்டும் மீண்டும் நாட­கங்கள் அரங்­கேற்றப் படு­வதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் ராஜ­பக்­சாக்களிடம் உள்­ளதா?

வாக்­கு­று­தி­களும் கோசங்­களும் மாற்று வழி­யா­காது
பேரா­சி­ரியர் லீ புக்ஹய்ட் (Lee Buchheit) அர­சாங்கக் கடன் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான சர்­வ­தேச நிபு­ணத்­துவம் வாய்ந்­தவர். இலங்கை தொடர்­பாக நடை­பெற்ற ஒரு மாநாட்டில் அவர் கடன் மறு சீர­மைப்புச் செய்யும் போது கடன் படுனர் விடுக்கும் பிர­தான கேள்­வி­யா­னது மறு­சீ­ர­மைப்புச் செய்­யப்­படும் கடனின் எவ்­வ­ளவு பங்கை குறிப்­பிட்ட நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்­வார்கள்? என்­ப­தாகும் என்று குறிப்­பிட்டார்.

மக்கள் என்­பது ஒற்றைக் கம்பம் (Monolith) அல்ல. மக்கள் இன, மத, பால் தனித்­துவ அடிப்­ப­டையில் மட்­டு­மன்றி சமூக வகுப்பு, சமூகப் பின்­னணி போன்ற பல்­வேறு வித­மாக பிரிந்து காணப்­ப­டு­கின்­றனர். மக்­களின் ஒரு பிரி­வி­ன­ருக்கு அழிவு ரீதி­யா­ன­தாக இருக்கும் ஒன்று மற்­றொரு பிரி­வி­ன­ருக்கு ஆக்க ரீதி­யா­ன­தாக இருக்கும். இது வர­லாற்று ரீதி­யான சர்­வ­தேச உண்­மை­யாகும். கொவிட் தொற்று உல­கத்தை விழுங்­கிய இந்த இரண்டு வரு­டங்­களில் கூட அதன் தாக்கம் சமூ­கத்தின் அனைத்து வகுப்­பி­னர்­க­ளுக்கும் ஒரே மாதி­ரி­யாக இருக்க வில்லை. உலகில் பல நாடு­க­ளிலும் மில்­லியன் கணக்­கான மக்கள் வறுமை கோட்­டுக்குக் கீழ் தள்­ளப்­பட்ட போதிலும் உலகில் அதி­யுயர் தன­வந்­தர்கள் மேலும் தன­வந்­தர்­க­ளாக மாறி­யமை இந்த உண்­மையை விளங்கப் போது­மா­னது.
ராஜ­பக்­சாக்கள் உரு­வாக்­கிய அசா­தா­ரண பொரு­ளா­தார நெருக்­க­டியில் பெரும்­ப­குதிச் சுமையை ஏற்­ப­வர்கள் இன்று இடை­நிலை மற்றும் குறைந்த வரு­மானம் பெறுப­வர்­களே. பொரு­ளா­தார விருத்தி வேகம் எதிர்க்­க­ணி­ய­மாகும் போது பங்­குச்­சந்தை மீண்டும் விருத்­தி­ய­டை­கின்­றமை மற்­று­மொரு தோற்­ற­மாகும். சென்ற வாரம் பங்­குச்­சந்­தையின் முத­லீட்டுப் பெறு­மானம் முதற்­த­ட­வை­யாக ஆறு ட்ரிலியன்(6) ரூபாவை மிஞ்­சி­யது. எதிர்­கா­லத்தில் இந்­நி­லைமை மேலும் உயர்­வ­டை­யலாம் என்று நம்­பலாம்.

கடன் மறு சீர­மைப்புச் செய்­வ­தற்­காக தாம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் போக­மாட்டோம் என்று ஆட்­சி­யா­ளர்கள் கூறு­கின்­றனர் ஆனால் கடன் மறு­சீ­ர­மைப்பில் இருந்து அர­சாங்கம் விடு­பட முடி­யாது. சீனா­வுக்குச் செலுத்த வேண்­டி­யுள்ள கடனை மறு­சீ­ர­மைக்கும் கோரிக்­கையை கோட்­டா­பய ராஜ­பக்ஷ சீனா வெளி­நாட்­ட­மைச்­ச­ரிடம் முன்­வைத்­தமை அதனால் தான். அதற்­கான பதி­லாக அமைந்­தது சீனா இலங்கை சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் கைச்­சாத்­திட இது நல்ல சந்­தர்ப்பம் என்­ப­தாகும். இரு தரப்புக் கடனை மறு­தி­க­தி­யிட சீனா விரும்­ப­வில்லை என்­பதை இது காட்­டு­கின்­றது. சீனா இலங்­கையின் கோரிக்­கையை ஏற்றுக் கொண்டால் Belt and Road செயற்­திட்­டத்தின் கீழ் சீனா­வி­ட­மி­ருந்து கடன் பெற்­றுள்ள அனைத்து ஆசிய ஆபி­ரிக்க அமெ­ரிக்க நாடு­க­ளுக்கும் அதற்குச் சம­னான சலு­கையை வழங்க வேண்டி வரும் என்ற ஆபத்து ராஜ­பக்­சாக்­க­ளுக்கு விளங்­கா­விட்­டாலும் சீனத் தலை­வ­ருக்கு விளங்­கி­யி­ருக்கும். இரு­த­ரப்பு கடன் மறு­தி­க­தி­யிடல் தொடர்­பாக ஏனைய நாடு­களின் மற்றும் சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களின் துலங்­களும் இதனை ஒத்­த­தா­கவே அமை­யலாம்.

இந்த வரு­டத்­துக்குள் இலங்கை செலுத்த வேண்­டி­யுள்ள வெளி­நாட்டுக் கடன் 4 பில்­லியன் டொலர்­க­ளாகும். இந்தக் கடனைச் செலுத்­து­வ­தற்­கு­ரிய அத்­தி­யா­வ­சி­ய­மான இறக்­கு­ம­திகளைச் சம­நி­லையில் வைத்­தி­ருக்கும் விட­யமும் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு விளங்­கா­துள்­ளது. பசில் ராஜ­பக்­சவின் சலுகைப் பொதி கார­ண­மாக நெருக்­கடி மேலும் கூர்மை அடை­வதால் அவ­சர மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்தி சலுகைப் பொதியை நீக்­கி­விடும் அவ­சி­யமும் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு இருக்­கலாம்.

ராஜ­பக்­சாக்­க­ளுக்கு உள்ள ஒரு சாதகம் யாதெனில் இப்­பி­ரச்­சி­னை­களை முகா­மைத்­துவம் செய்­வ­தற்­கு­ரிய ஒரு திட்டம் இது­வரை எதிர்க்­கட்­சி­க­ளிடம் இல்­லா­தி­ருப்­ப­தாகும். ராஜ­பக்­சாக்கள் சூரியனைக் காட்டி சந்­திரன் என்று சொன்­னாலும் அதை நம்­பு­வ­தற்கு ஆட்கள் இருக்­கி­றார்கள். அவர்­களின் பொதுக் கார­ணி­யாக இருப்­பது சிங்­கள பௌத்த மேலா­திக்க வாதமும், ஜன­நா­யகத் தீர்­வு­களின் மீதுள்ள விருப்­ப­மின்­மை­யு­மாகும். தாம் விரும்பும் சிங்­க­ள-­பௌத்த தீர்வை வழங்க ராஜ­பக்­சாக்­க­ளுக்கு முடி­யாது போனால் வேறு ஒரு தீவி­ர­வாத தலை­வரின் அல்­லது இரா­ணு­வத்தின் தலை­யீடு சாத்­தி­ய­மா­கலாம். விசே­ட­மாக ராஜ­பக்­சாக்­க­ளுக்குப் பின்­ன­ரான அர­சர்­களின் நில­வ­ரத்தில் இது­போன்ற ஒரு நகர்­வுக்கான் வாய்ப்­புகள் அதிகம்.

2015இல் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளித்து மீண்டும் 2019இல் ராஜ­பக்­சாக்­களை வெற்றி பெற வாக்­க­ளித்த எந்த கட்­சி­யையும் சாரா­த­வர்­களின் நிலைமை வேறு­பட்­டதே. இந்த மிதக்கும் வாக்­குகள் இப்­போது ராஜ­பக்­சாக்­களில் இருந்து வில­கி­யி­ருப்­பது உறுதி. ஆயினும் அவர்­களில் பெரும்­பா­லானோர் இது­வரை எந்த எதிர்க்­கட்­சி­யையும் ஆத­ரிக்கும் நிலைக்கு வர­வில்லை. தீக்­காயம் பட்­டவன் மின்­மினிப் பூச்­சிக்கும் பயப்­ப­டு­வது போலவே ராஜ­பக்­சாக்­க­ளிடம் ஏற்­பட்ட ஏமாற்­றத்தை மீண்டும் எதிர்­கொள்ள மக்கள் தயா­ராக இல்லை. அவர்­க­ளது மனதை வெல்­வ­தற்கு கோஷங்­களால், வாக்­கு­று­தி­களால் மட்டும் முடி­யாது. குறிப்­பாக பொரு­ளா­தாரம் தொடர்­பான விளக்கம், தூர­நோக்கு, அதற்­கான சாத்­தி­ய­மான வேலைத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­டு­ப­வர்கள் விட­யத்­தி­லேயே வாக்­கா­ளர்கள் அக்­கறை செலுத்­து­வார்கள்.

வரி­ச் சு­மையை மறு­சீ­ர­மைப்புச் செய்­வதில் வரிச்­சுமை பங்­கீட்டைத் தீர்­மா­னிப்­பது எவ்­வாறு? அர­சாங்கச் செல­வீ­னங்­களை எந்­தெந்த இடங்­களில் குறைப்­பது? மக்கள் மீது வரிச்­சு­மையை தளர்த்துதல், ஊழல் மோச­டி­களை இல்லாமற்செய்­வதன் மூலம் செல­வு­களைக் குறைக்கும் வாக்­கு­றுதி போன்­றவை மட்டும் போது­மா­ன­தாக இருக்­காது. வரிச்­சுமை அதிகம் விதிக்­கப்­ப­டு­வது யார் மீது? செலவுக் குறைப்பு எதில் இடம்­பெறும்? என்­பன அடிப்­ப­டை­யான கேள்­வி­க­ளாகும். இல­குவில் விடு­பட முடி­யாத கேள்­வி­க­ளாகும். அர­சியல் ரீதி­யான மிகவும் சிர­ம­மான தெரி­வு­க­ளாகும். இத்­த­கைய அடிப்­படை அம்­சங்­களில் தெளி­வான நோக்கு இல்­லாத நிலையில் வெறு­மனே ராஜ­பக்­சாக்­களை விமர்­சிப்­பதன் மூலம் மட்டும் கட்­சி­க­ளற்ற மிதக்கும் வாக்­கா­ளர்­களை வென்­றெ­டுப்­பது எதிர்க்­கட்­சி­க­ளுக்கு இல­கு­வாக இருக்­காது.

2024 இல் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இப்­போதே வேட்­பா­ளர்­களைப் பெயர் குறிப்­பிட்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் குழப்­பு­வதை விட்டு ராஜ­பக்­சாக்­க­ளற்ற ஒரு எதிர்­கா­லத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எதிர்க்­கட்­சி­களால் ஏன் முடி­யா­துள்­ளது? ஜனா­தி­பதிக் கனவில் மூழ்கி அனை­வரும் கண்கள் மங்­க­ளா­கி­விட்­டதா? நிறை­வேற்று நிர்­வாக ஜனா­தி­பதி முறையின் அதி­கார மோகத்­திற்கு இவை நல்ல உதா­ர­ண­மில்­லையா?

குண்டுத் தீர்வு
பெற்­றோ­லிய இறக்­கு­ம­திக்­காக இந்­தி­யா­வி­ட­மி­ருந்து அவ­சரக் கடன் கிடைத்த போதிலும் அது ஆகக் கூடி­யது இன்னும் இரண்டு மாதங்­க­ளுக்கு போது­மா­னது. அதன் பின்னர் என்ன நடக்கும்? எரி­வாயு, பால்மா பிரச்­சி­னைக்கு தீர்­வேதும் உண்டா? அரிசி விலை­யேற்­றத்தைத் தடுத்து நிறுத்­து­வது எவ்­வாறு?

மக்­களில் பெரும்­பான்­மை­யினர் அன்­றாடத் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வதில் இடர்படும் போது ஆட்­சி­யா­ளர்கள் வேறொரு உல­கத்தில் வாழ்­கின்­றனர். அதி­வேகப் பாதை­களும், சொகுசு நடை­பா­தை­க­ளுமே அவர்­களின் தேவை­யாக உள்­ளது.
மக்­க­ளுக்கும் தமக்கும் இடை­யி­லான இடை­வெ­ளி­களைக் குறைப்­ப­தற்கு வன்­மு­றையின் பாலத்தை, வெறுப்­பு­ணர்வின் சங்­கி­லியை அவ­ச­ர­மாகக் கட்­டி­யெ­ழுப்பும் பணியில் ஆட்­சி­யா­ளர்கள் இறங்கி இருப்­பது வேறு வழி­யில்­லா­த­தாலா?

வெறு­மனே பயங்­க­ர­வாத லேபிள் ஒட்டி தம்­மிஷ்டப்­படி சந்­தே­க­ந­பர்­களை (தமிழ்-­–முஸ்லிம்) சிறை­யி­ல­டைக்கும் சட்ட ஆற்றல் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இல்­லை­யெனின் பொரளை குண்டுப் புரளி ஜோக்­காகப் போயி­ருக்கத் தேவை­யில்லை. முதலில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் தேவா­ல­யத்தின் பணி­யா­ள­ரான 14ஆவது தமிழ் இளைஞர் ஒரு­வரும் இருந்தார். பனா­முற பிர­தே­சத்தின் வைத்­தியர் ஒருவர் கொடுத்த குண்டை தேவா­ல­யத்தில் வைத்­த­தாக இப்­போது கூறப்­ப­டு­கி­றது.

அமைச்­சரின் முதல் அறிக்­கையும், பொலிஸாரின் இரண்­டா­வது கண்­டு­பிடிப்பு ஆகிய இரண்டும் உண்­மை­யாக இருக்க முடி­யாது பொலி­சாரின் கண்­டு­பி­டிப்பு உண்­மை­யெனின் அமைச்சர் வீர­சே­க­ரவின் முதல் அறிக்கை பொய்யானது. அதனடிப்படையில் ஒரு அப்பாவி கைது செய்யப்பட்டுள்ளார். அது பொய்யாயின் 14 வயதுச் சிறுவன் குண்டு வைத்ததை ஏற்றுக் கொண்டதாகக் கூறியதும் அதனை சரி கண்டதும் எவ்வாறு? யாரின் தேவைக்காக எதற்காக இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பொலிஸில் சிறுவன் பயமுறுத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதா? உளவியல் உடலியல் நோவினைகள் இடம் பெற்றதா?

ஷானி அபே­சே­க­ர­வுக்கு எதி­ராக பொய்ச்­சாட்சி வழங்­கு­மாறு தன்னைப் பொலிஸார் பல­வந்தப்படுத்­தி­ய­தாக உதவி பொலிஸ் பரீட்­சகர் சுகத் மொஹான் மென்டிஸ் நீதி­மன்­றத்தில் அறி­வித்தார். அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக பொய்ச்­சாட்சி சொல்­லு­மாறு இரண்டு சிறு­வர்­க­ளுக்கும் இரண்டு மௌல­வி­மார்­க­ளுக்கும் அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாக நீதி­மன்­றத்தில் கூறப்­பட்­டது. பொரளை தேவஸ்­தான குண்டு வைப்­பிலும் அது தான் நடந்­ததா?

சம்­பவ தினத்­தன்று காலையில் இருந்தே சிசிரிவி (CCTV) கம­ராவை அங்­குள்ள மத­கு­ரு­மார்கள் பரி­சீ­லனை செய்­யா­தி­ருந்தால் உண்மை வெளிச்­சத்­துக்கு வந்­தி­ருக்­காது. அப்­படி நடந்­தி­ருக்­கா­விட்டால் அப்­பாவி சிறுவன் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்பான். இவற்றின் மூலம் வெளிச்­சத்­துக்கு வரு­வது கதை வசனம் எழு­து­வதில் உள்ள திற­மை­யின்­மையா? இந்த வகையில் அடுத்த குண்டு நாடகம் எங்கு அரங்­கேற்­றப்­படும்? இவ்­வாறு எத்­தனை போலி நாட­கங்­களைத் தான் இந்த நாட்டு மக்கள் எதிர் காலத்தில் பார்க்க உள்­ளார்கள்? எத்­தனை முறை பொய்கள் ஒப்­பு­விக்­கப்­பட்­டாலும் தொடர்ந்து அதனையே ரசித்துப்பார்க்கும் பார்வையாளர்கள் இருக்கும் வரை நாடக எழுத்தாளர்கள் ஓயப்போவதில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.