பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் ஜெனீவா அறிக்கைக்கு பயந்து கொண்டுவரப்பட்ட திருத்தமே

அரசாங்கத்தின் போலி முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்கிறார் ஹக்கீம்

0 266

(எஸ்.என்.எம்.சுஹைல்)
மார்ச் மாதம் ஜெனீ­வாவில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்குப் பயந்தே பயங்­கர­வாத தடைச் சட்­டத்தில் திருத்த யோச­னையை அர­சாங்கம் முன்­வைத்­துள்­ளது என தெரி­வித்த, முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் அர­சாங்­கத்தின் போலி முகத்தை கிழித்­தெ­றிய வேண்டும் என்றும் குறிப்­பிட்டார்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்டும் என நாடு தழு­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் கையெ­ழுத்து வேட்டை நேற்­று­முன்­தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலை­யத்­திற்கு முன்­பாக இடம்­பெற்­றது. இதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை மிக மோச­மாக துஷ்­பி­ர­யோகம் செய்து அடிக்­கடி தங்­க­ளு­டைய அர­சியல் எதி­ரி­க­ளையும் அப்­பா­வி­க­ளையும் கைது­செய்து நீண்­ட­காலம் தடுப்புக் காவலில் வைத்­தி­ருந்­து­விட்டு நீதி­மன்­றத்தின் உத்­த­ரவு வரும் என்ற பயத்தில் விடு­விக்கும் நிலையே நீடிக்­கி­றது. இதன் மூலம் அப்­பா­விகள் பல மாதக் கணக்கில் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கின்­றனர். வேண்­டு­மென்று சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களால் அவர்கள் கைது செய்­யப்­ப­டு­வதால் உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு மேற்­கொள்­ளப்­படும் அடாத்­தான செயற்­பா­டுகள் முடி­வுக்கு வர வேண்டும்.

ஜெனீ­வாவில் மார்ச் மாதம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்ற அறிக்­கைக்கு பயந்து அர­சாங்கம் போலி­யான திருத்­தங்கள் சில­வற்றை கொண்­டு­வந்து தங்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற பாதிப்­பு­க­ளி­லி­ருந்து தப்­பிக்­கொள்ள முயற்­சிக்­கி­றது. பொரு­ளா­தார தடை ஏற்­ப­டா­தி­ருக்­கவும் ஜீ.எஸ்.பி.வரிச் சலுகை இல்­லாமல் போய்­விடும் என்ற அச்­சத்தில் இன்று ஒரு திருத்தச் சட்­டத்தை முன்­மொ­ழிந்­தி­ருக்­கின்­றனர். இதனை நாம் ஏற்க முடி­யாது. முழு­மை­யாக பயங்­க­ர­வாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்.

நாட்டில் பிரி­வி­னைகள் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­ப­தற்­காக 1978 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தற்­கா­லிக சட்ட ஏற்­பாடே பயங்­க­ர­வாத தடை சட்­ட­மாகும். இச்­சட்டம் நிரந்­த­ர­மாக 42 வரு­டங்கள் நீடித்­தி­ருக்­கி­றது. இந்த சட்டம் கிழித்­தெ­றி­யப்­பட வேண்டும்.
புதிய சவால்­களை எதிர்­கொள்ளும் நோக்கில் உலகில் நடை­மு­றையில் இருக்­கின்ற மனித உரிமை சாச­னங்­க­ளுக்கு கட்­டுப்­பட்ட புதிய சட்ட மூல­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­தலாம். இதைத்தான் நாங்கள் நீண்­ட­கா­ல­மாக கதைத்து வரு­கின்றோம். இதை தொடர்ந்தும் புறந்­தள்ள அனு­ம­திக்க முடி­யாது. இந்த அரசின் போலி முகத்தை கிழித்­தெ­றிய வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் நாங்கள் இந்த கையெ­ழுத்து வேட்­டையை ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். இது நாடு­த­ழு­விய ரீதியில் இடம்பெறுவதையிட்டு ஆறுதல் அடைகிறோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் பொதுவாகவே ஆபத்தானது. எனினும், அதிகமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே இச்சட்டம் அதிகமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும், இது ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் பாதிக்கின்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.