இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதத்தின் நகல் வரைபு மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது

ஒப்பமிடவில்லை என மு.கா., அ.இ.ம.கா. தெரிவிப்பு

0 355

தமிழ் பேசும் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து இந்­தியப் பிர­த­ம­ருக்கு அனுப்­பு­வ­தற்­கான கடி­தத்தின் வரைபே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, நாம் அதில் இன்னும் ஒப்­ப­மி­ட­வில்லை என முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்­பன தெரி­வித்­துள்­ளன.

ஏற்­க­னவே பல சுற்று பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் அர­சியல் அமைப்பின் 13ஆம் திருத்த சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற பிர­தான கோரிக்கை உள்­ளிட்ட விட­யங்கள் அடங்­கிய கடி­தத்தின் நகல் மாத்­தி­ரமே தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது இறுதி செய்­யப்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் கட்­சி­களும் தமது  ஆலோ­ச­னை­களை முன்­வைக்கும் என்றும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

மக்கள் காங்­கிரஸ்
இது தொடர்பில் அ.இம.கா.வின் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கி­டையே பல சுற்று பேச்சு வார்த்­தைகள் இடம்­பெற்­றுள்­ளன. நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கூட்­டத்­தி­லேயே நாம் முதன் முத­லாக கலந்­து­கொண்­டி­ருந்தோம். பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் இந்­திய பிர­த­ம­ருக்கு அனுப்­பு­வ­தற்­கான கடி­தத்தின் நகல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நகலை முன்­வைத்து இன்­றைய தினம் கட்­சியின் உயர்­மட்ட உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யே­யான கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­ற­வுள்­ளது. அதன் பின்னர் எமது கட்­சியின் ஆலோ­ச­னை­களை முன்­வைப்போம். இங்கு தமிழ் பேசும் கட்­சிகள் ஒன்­றி­ணைந்­துள்­ளன. இதன் மூலம் இரு சமூ­கத்தின் நலன்­களை பேனும் வித­மா­கவும் நாட்டில் பல­மா­ன­தொரு தரப்­பா­கவும் மாற முடியும். எமக்­கி­டையில் பொது­வான பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அது விட­ய­மாக இணங்கி செயற்­பட முடியும். கடந்த கால அனு­பங்கள் அடிப்­ப­டையில் எமக்­கான தனிப்­பட்ட பிரச்­சி­னை­களும் உள்­ளன. அவற்­றையும் நாம் முன்­வைப்போம் என்றார்.

முஸ்லிம் காங்­கிரஸ்
இதே­வேளை, அர­சியல் அமைப்பின் 13ஆம் திருத்த சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற பிர­தான கோரிக்­கை­களை முன்­வைத்த புதிய வரைபை தமிழ் பேசும் கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து வரைந்­துள்­ள­துடன், குறித்த கடிதம் இன்னும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை என முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர் தெரி­வித்தார். இறுதி செய்­யப்­ப­ட்ட பின்­னரே குறித்த கடி­தத்தில் ஒப்­ப­மி­டு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

தமிழ் முற்­போக்கு கூட்­டணி
தமிழ் பேசும் கட்­சி­களின் மாநாட்டில், இறுதி வடி­வ­மான தமிழ் பேசும் கட்­சிகள் சார்­பான ஆவண நகல் தயா­ரிக்­கப்­பட்டு தற்­போது கட்சி தலை­வர்­களின், இறுதி உடன்­பாட்­டுக்­காக அவர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. இதுவே இந்த செயற்­பாட்டின் இந்த கட்­டத்தின் உண்மை நிலை என்­பதை கூற விரு­ம்பு­கிறேன். இந்த ஒருங்­கி­ணைவை பிடிக்­கா­த­வர்கள் ஓர­மாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்­பி­விட முனைய கூடாது எனவும் வேண்­டு­கிறேன் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலைவர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு
தமிழ் கட்­சிகள் தமது கோரிக்­கை­யாக தயார் செய்த கடி­தத்தின் தலைப்பு “13 ஆம் திருத்­தத்தை அமுல் படுத்த கோருதல்” என இருந்த நிலையில், தற்­போது “தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­வதும் இலங்கை இந்­திய ஒப்­பந்­தமும்” என மாற்­றப்­பட்­டுள்­ள­தாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­தோடு, புதிய வரைவு தயா­ரிக்­கப்­பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்­பன மாற்­றப்­பட்டே புதிய ஆவணம் தயார் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆவ­ணமும் தற்­போது ஒரு வரை­பா­கவே இருக்­கி­றது. இந்த வரைபை அல்­லது இதன் திருத்­தத்தை கட்­சிகள் ஏற்றுக் கொண்டால் மட்­டுமே இது கைச்­சாத்­தி­டப்­படும் என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர்த்­த­முள்ள அதி­கா­ரப்­ப­கிர்­வினை இலங்கை அர­சாங்­கத்­திடம் இருந்து பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக இந்­தி­யா­விடம் ஒரு­மித்த கோரிக்­கையை விடுக்கும் வித­மாக வடக்கு கிழக்கு மற்றும் மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் பேசும் கட்­சிகள் நேற்­று­முன்­தினம் கொழும்பில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள குளோபல் டவர் ஹோட்­டலில் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது.

இதன்­போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர். சம்­பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அதன் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தவி­சாளர் அமீல் அலி, இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ.சுமந்­திரன், தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன், பாரா­ளு­மன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், உதயகுமார், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.