முஸ்லிம்களுக்கு பக்கபலமாக செயற்பட்டவர் மங்கள சமரவீர

உலமா சபை அனுதாபம்

0 311

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான மங்கள சமரவீர முஸ்லிம்களுக்கு உதவியாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டவர் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
மங்­கள சம­ர­வீ­ரவின் மறைவு எம்மை ஆழ்ந்த கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. அன்னார் ஜன­நா­யக விழு­மி­யங்­களை பேணக்­கூ­டி­ய­வ­ரா­கவும் நடு­நிலைப் போக்­கு­டை­ய­வ­ரா­கவும் காணப்­பட்­ட­தோடு, நம் நாட்­டுக்­காக அர­சியில் ரீதியில் பாரிய பங்­க­ளிப்­பு­களை செய்த ஒரு­வ­ரு­மாவார். மேலும், அவர் சிறு­பான்மை மக்­களை அர­வ­ணைத்து, அவர்­க­ளது அபி­லா­ஷை­களை மதித்து, அவர்­களின் உரி­மைக்­காக குரல் கொடுத்த ஒரு­வ­ரு­மாவார்
முஸ்­லிம்­க­ளு­டைய விட­யங்­களில் மிக கரி­ச­னை­யுடன் அவர் செயற்­பட்­ட­தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தொடர்ந்து முஸ்லிம் சமூகம் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்ட போது முஸ்­லிம்­க­ளுக்கு உத­வி­யா­கவும் பக்­க­ப­ல­மா­கவும் செயற்­பட்டார். இவ­ரது இந்த நற்­பண்­பு­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் முன்­மா­தி­ரி­யாக எடுத்து அர­சி­யல்­வா­திகள் செயற்­ப­டும்­பட்­சத்தில் நம் நாட்டை அபி­வி­ருத்­தியின் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.
இவ்­வே­ளையில் அன்­னா­ரு­டைய குடும்­பத்­தி­னர்கள், உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்கள் அனை­வ­ருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முழு முஸ்லிம் சமூகம் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.