ஆட்சி மாற்றத்தை நோக்கி …

0 394

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

கொவிட் கொள்ளை நோய் நாட்­டை­விட்டு நீங்கும் சாயல்கள் எங்­குமே தென்­ப­ட­வில்லை. மாறாக, அதன் நான்­கா­வது டெல்டா என்ற அதி­வி­ரை­வாகப் பர­வக்­கூ­டிய கிருமி ஊடு­ரு­வி­யுள்­ள­தாக அதி­காரத் தக­வல்­களும் அன்­றாட நிகழ்­வு­களும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. தடுப்­பூ­சியை உள்­வாங்­கிக்­கொண்டு நெருங்­கிய மனித உற­வா­ட­லையும் மனிதத் திரள்­க­ளையும் தவிர்த்து வாழ­வேண்­டிய ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்கு மனித சமூகம் உல­கெங்கும் மாற்­றப்­பட்­டுள்­ளது. இதற்கு இலங்கை மட்டும் எவ்­வாறு விதி­வி­லக்­காக மாற முடியும்? இருந்தும், மருத்­துவ வல்­லு­னர்­களின் வேண்­டு­கோள்­க­ளையும் இரா­ணுவ அதி­கா­ரி­களின் கட்­ட­ளை­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது வெகு­ஜ­னங்கள் வீதி­க­ளிலே இறங்கி அர­சுக்­கெ­தி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­து­வது இலங்­கை­யிலே இன்று தினந்­தோறும் நடை­பெறும் நிகழ்­வு­க­ளாகி விட்­டன. அர­சாங்­கத்தின் ஊட­கங்கள் இதனை மூடி­ம­றைத்­தாலும் சமூ­க­வலைத் தளங்கள் உண்­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­றன. காரணம் நோயின் அவஸ்தை ஒரு புற­மி­ருக்க அர­சாங்­கத்தின் தவ­றான கொள்­கை­க­ளினால் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தாரக் கஷ்­டங்­களும் அதனால் உரு­வாகும் குடும்ப நெருக்­க­டி­களும் கொவிட் கிரு­மி­யை­வி­டவும் கொடி­ய­ன­வாக இருக்­கின்­றன. இதனை அரசு உணர்­வ­தாகத் தெரி­ய­வில்லை. எனவே வெகு­ஜ­னங்­களைப் பொறுத்­த­வரை ஆட்­சி­யா­ளர்கள் தமது கொள்­கை­களை மாற்­றிக்­கொள்­ளா­விட்டால் ஆட்­சி­யையே மாற்­று­வது அவ­சியம் என்­றா­கி­றது. இத­னைப்­பற்­றிய சில சிந்­த­னை­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­வதே இக்­கட்­டு­ரையின் கோக்கம்.

ஆட்­சி­யா­ளர்கள் என்ன சொன்­னார்கள்?
கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­ற­போது இலங்­கை­யைப்­பற்­றிய ஒரு கனவு தன்­னி­ட­முண்டு. அதன்­படி இந்த நாட்டைப் பொரு­ளா­தாரச் செழிப்பும் மகோன்­ன­தமும் பின்­னிப்­பு­ரளும் ஒரு பொன் நாடாக மாற்­றுவேன் என்றும், இந்த நாட்டின் இறை­மையைப் பாது­காத்து பௌத்த சாச­னத்­தையும் கட்­டிக்­காப்பேன் என்றும், தான் சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­க­ளா­லேயே தெரி­வு­செய்­யப்­பட்­டாலும் சர்வ இனத்­த­வர்­க­ளி­னதும் ஜனா­தி­ப­தி­யா­கவே ஆட்சி செய்வேன் என்றும் கூறி­யதை மக்கள் மறக்­க­வில்லை. அவரைத் தொடர்ந்து அவ­ரது தமயன் மகிந்த ராஜ­பக்­சவும் தனது முத­லா­வது வர­வு­செ­லவுத் திட்ட உரையில் இதே விட­யங்­களை உரைத்­த­தையும் மக்கள் மறந்­து­வி­ட­வில்லை. ஆனால் நடந்­த­தென்ன?

கொவிட் துர­திஷ்டம்
இந்த ஆட்­சி­யா­ளர்கள் பத­வி­யேற்ற ஒரு வரு­டத்­துக்குள் கொவிட் தொற்­றுநோய் பரவத் தொடங்­கி­யது அவர்­களின் துர­திஷ்டம் என்­பதை யாரும் மறுக்­க­வில்லை. அனால் அந்த நோய் இலங்­கையை மட்­டுமா பீடித்­தது? உலக நாடுகள் யாவற்­றை­யும்­தானே. அந்த நோயால் பீடிக்­கப்­பட்ட கோடிக்­க­ணக்­கான நோயா­ளி­களும் அதனால் ஏற்­பட்ட இலட்­சக்­க­ணக்­கான மர­ணங்­களும் உலக வர­லாற்றில் மறக்க முடி­யா­தவை. மர­ணித்­த­வர்கள் விண்­ணு­லகம் சென்­ற­டைந்து நிம்­ம­தி­யா­னார்கள். ஆனால் தப்­பிப்­பி­ழைத்து வாழும் கோடா­னு­கோடி மக்கள் அனை­வ­ரையும் காப்­பாற்றி அவர்­களின் ஜீவ­னோ­பா­யங்­க­ளையும் பாது­காத்துக் கொடுப்­பது அர­சாங்­கங்­களின் கட­மை­யல்­லவா? அந்தக் கட­மையைச் சிறப்­பாகச் செய்ய முடி­யாத அர­சுகள் தமது தோல்­விக்கு கொவிட் நோயையே சதா குறை­கூறிக் கொண்­டி­ருப்­பதை ஏற்க முடி­யுமா? அத்­துடன் அந்த நோயையே ஒரு சாட்­டாக வைத்­துக்­கொண்டு ஜன­நா­யக விழு­மி­யங்­களைப் புறக்­க­ணித்து, அநீ­திக்கும் ஊழ­லுக்கும் இட­ம­ளித்து, அர­சையே ஒரு குடும்ப ஆட்­சி­யாக மாற்றி, ஒன்­றுக்­கொன்று முர­ணான பொரு­ளா­தாரக் கொள்­கைளை கடைப்­பி­டித்­துக்­கொண்டு மக்­களின் அடிப்­படைத் தேவை­க­ளையே பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் ஆட்­சி­செய்­வதை மக்­களால் சகித்­துக்­கொண்­டி­ருக்­கத்தான் முடி­யுமா? என­வேதான் இன்­றைய வெகு­ஜனக் கொந்­த­ளிப்பும் ஆர்ப்பாட்டங்­களும்.

பொரு­ளா­தாரக் கஷ்­டங்கள்
நாட்டின் பொரு­ளா­தாரம் ஏன் நலி­வ­டைந்­துள்­ளது, அதை எவ்­வ­ளவு விரைவில் அர­சாங்­கத்தால் மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப முடியும், அதற்­காக அது என்ன வழி­வ­கை­களைக் கையாள்­கின்­றது என்­பன பற்­றி­யெல்லாம் மத்­திய வங்­கியின் ஆளு­னரும் அரசின் பொரு­ளியல் ஆலோ­ச­கர்­களும் மற்றும் விற்­பன்­னர்­களும் புள்ளி விப­ரங்­க­ளு­டனும் வரை­ப­டங்­க­ளு­டனும் ஊட­கங்­களில் விளக்­கு­வதை சாதா­ரண பொது­மக்கள் விளங்­கிக்­கொள்­ளாது இருக்­கலாம். அவர்கள் அந்தச் சூட்­சு­மங்­க­ளை­யெல்லாம் விளங்­க­வேண்டும் என்று எதிர்­பார்ப்­பதும் தவறு. ஆனால் பொது­மக்­களின் வீட்டுப் பொரு­ளா­தாரம் ஏன் சீர­ழிந்­துள்­ளது என்­பதை அவர்­க­ளுக்கு யாரும் விளக்கத் தேவை­யில்லை. ஏனெனில் அவர்கள் அதை தினந்­தினம் கண்­கா­ணித்­துக்­கொண்­டுதான் வாழ்­கின்­றனர். அதற்­கு­ரிய கார­ணங்கள் மூன்றே மூன்­றுதான் என்­ப­தையும் அவர்கள் நன்­றாக உணர்வர். செலவு அதி­க­ரிக்­கி­றது, வரு­மானம் குறை­கி­றது, சிக்­க­ன­மாகச் செலவு செய்­வ­தென்­றாலும் சந்­தை­யிலே பொருள்கள் தட்­டுப்­பாடாய் இருக்­கின்­றன. ஆகவே ஒன்றில் விலை­வாசி குறைய வேண்டும், அல்­லது வரு­மானம் பெருக வேண்டும். இரண்­டுமே இல்­லை­யென்றால் பொருள்­க­ளா­வது தாரா­ள­மாகக் கிடைக்க வேண்டும். இந்த மூன்­றுமே இல்­லா­த­தனால் பசியும் பட்­டி­னியும் கடன் சுமையும் பல இலட்­சக்­க­ணக்­கான குடும்­பங்­களை வாட்டி வதைக்­கின்­றன. இதனைத் தீர்ப்­பதே அர­சாங்­கத்தின் பிர­தான நோக்­க­மாக இன்­றுள்ள சூழலில் அமைய வேண்டும். ஆனால் நடப்­ப­தென்ன?

முரண்­பட்ட கொள்­கைகள்
அர­சாங்­கத்தின் முரண்­பட்ட கொள்­கை­களை இரண்டு உத­ரா­ர­ணங்­க­ளைக்­கொண்டு விளக்­கலாம். ஒன்று இறக்­கு­மதித் தடைகள், மற்­றது ஆடம்­ப­ர­மான செல­வி­னங்கள். உள்­நாட்டு உற்­பத்தி பெருகி உணவுத் தேவை­க­ளி­லா­வது நாடு தன்­னி­றைவு காண வேண்­டு­மென்ற கொள்­கையை யாரும் குறை­கூற முடி­யாது. அதற்­காகத் திடீ­ரென்று இர­வோ­டி­ர­வாக மஞ்சள் இறக்­கு­ம­தி­யையும் இர­சா­ய­னப்­ப­சளை இறக்­கு­ம­தி­யையும் நிறுத்­தி­யமை அர­சாங்­கத்தின் திட்­ட­மி­டப்­ப­டாத பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளையே எடுத்­துக்­காட்­டு­கி­றது. இத்­த­டை­களைச் சடு­தி­யாக இல்­லாமல் படிப்­ப­டி­யாக அமுல்­ப­டுத்த வேண்டும். உதா­ர­ண­மாக, இர­சா­ய­னப்­ப­சளை இயற்­கைச்­சூ­ழ­லுக்குப் பங்கம் விளை­விக்கும் என்­பதை விவ­சாய விஞ்­ஞா­னி­களும் விற்­பன்­னர்­களும் நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இயற்­கைப்­ப­சளை அந்த விளை­வு­களை மட்­டுப்­ப­டுத்தும் என்­ப­தையும் அவர்கள் எடுத்­துக்­காட்­டினர். ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் 1960களி­லி­ருந்து அமெ­ரிக்க இர­சா­யனத் தொழில்­களால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புது­வ­கை­யான நெல், கோதுமை மற்றும் பல வகை­யான விதைத் தானி­யங்கள் இர­சா­யனப் பச­ளை­யையே உட்­கொள்­வ­ன­வாக அமைந்­ததால் அமெ­ரிக்கத் தொழில் நிறு­வ­னங்­களின் இலா­பமும் பெரு­கின. அத்­துடன் தானிய உற்­பத்­தியும் பெரு­கின. இந்தப் பசுமைப் புரட்­சியின் அர­சியல் பின்­ன­ணியை விளக்­கு­வ­தாயின் இக்­கட்­டுரை மிகவும் நீண்டு விடும். அது ஒரு சுவை­யான கதை. (எனது பல்­க­லைக்­க­ழகப் பொரு­ளியல் மாண­வர்­க­ளுக்கு 1960, 1970களில் அதைப்­பற்றிப் பல விரி­வு­ரை­களை ஆற்­றி­யுள்ளேன்). ஆனால் இர­சா­ய­னப்­ப­ச­ளையால் இயற்­கை­யான மண்­வளம் குன்றி சூழலும் மாசு­பட்­டதை இப்­போ­துதான் பல நாடுகள் உணர்­கின்­றன. இதில் உண­ர­வேண்­டிய முக்­கி­ய­மான ஓர் உண்மை என்­ன­வெனில் இன்று விதைக்­கப்­படும் தானி­யங்கள் எல்­லாமே இர­சா­ய­னப்­ப­ச­ளைக்­குத்தான் பொருத்­த­மா­ன­வை­யே­யன்றி இயற்கைப் பச­ளைக்­கல்ல. ஆகவே இயற்கைப் பச­ளைக்குப் பொருத்­த­மான விதை நெல்லை முதலில் அறி­மு­கப்­ப­டுத்­தல்­வேண்டும். அதற்­கான ஆராய்ச்­சியைச் செய்து புதிய விதை நெல்லை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமல் திடீ­ரென பசளை இறக்­கு­ம­தியைத் தடை­செய்­ததால் இன்று விவ­சா­யிகள் உர­மின்றித் தவிக்­கின்­றனர். இதனால் விரைவில் நெல் உற்­பத்தி வீழ்ச்சி காணலாம்.

அதே­போன்­றுதான் அரசின் ஆடம்­பரச் செல­வி­னங்­களும். உதா­ர­ண­மாக, நூறு நகர்­களை அழ­கு­ப­டுத்தப் போவ­தாக பிர­தம மந்­திரி அண்­மையில் செய்தி வெளி­யிட்­டி­ருந்தார். வீடு­க­ளிலே மக்கள் உண­வின்றித் தவிக்கும் வேளையில் இந்­தச்­செ­லவு தேவை­தானா? இந்­தப்­ பி­ர­தமர் மத்­தள விமான நிலை­யம் ­போன்ற ஆடம்­ப­ர­மான திட்­டங்­களில் நாட்டின் சொற்ப வரு­மா­னத்தை விர­ய­மாக்கி நாட்­டையே கடன் பளு­வுக்குள் தள்­ளி­யவர் என்­பதை மக்­களால் மறக்க முடி­யுமா? அதே­போன்று நாட்டின் கல்­வித்­தரம் மிகவும் மோச­மான ஒரு தரத்தை பல வரு­டங்­க­ளாக அனு­ப­வித்து வரு­கின்­றது. ஒரு காலத்தில் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழகம் ஆசி­யா­வி­லேயே முதல் தரத்தில் நின்­றது. இன்றோ இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் கல்­வித்­தரம் நகைப்­புக்­கு­ரி­ய­தாகி விட்­டது. இந்த நிலையில் இருக்­கின்ற பல்­கலைக் கழ­கங்­களின் கல்வித் தரத்தை உயர்த்­து­வ­தை­விட்டு கொத்­த­லா­வலை பாது­காப்புத் துறைப் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வதன் அந்­த­ரங்­க­மென்ன? இவை­யெல்லாம் இந்த அர­சி­னரின் திட்­ட­மி­டப்­ப­டாத செற்­பா­டு­க­ளையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது. என­வேதான் ஆட்சி மாற­வேண்­டு­மென மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கி­யமை தவிர்க்­க­மு­டி­யாத ஒன்று. ஆனால் ஆட்சி மாறினால் மட்டும் போதுமா?

ஆட்­சி­மா­றினால் சுபீட்சம் வந்­து­வி­டுமா?
ஆட்சி மற்­றத்தைப் பற்றி இரண்டு முக்­கிய கேள்­விகள் எழு­கின்­றன. ஒன்று, யாரை புதி­தாக ஆட்­சியில் அமர்த்­து­வது? இரண்­டா­வது புதிய ஆட்­சி­யா­ளர்கள் எதைச் சாதிக்கப் போகி­றார்கள்? இன்­றைய நிலையில், ஆட்­சிக்­கு­வரத் துடிக்கும் கட்­சி­களுள் ஒன்­றைத்­த­விர மற்ற எல்­லாமே இதற்­குமுன் ஆண்டு தோல்வி கண்­ட­வை­களே. ஐக்­கிய தேசியக் கட்­சியும், அதி­லி­ருந்து பிரிந்து உரு­வா­கிய ஐக்­கிய மக்கள் சக்­தியும், இலங்கை சுதந்­திரக் கட்­சியும் தனி­யா­கவோ கூட்­டா­கவோ ஆட்­சி­செய்து தோல்வி கண்­ட­வையே. இன்று நாட்டைப் பீடித்­துள்ள பல்­வ­கை­யான பிரச்­சி­னை­க­ளுக்கும் சிக்­கல்­க­ளுக்கும் இவை­க­ளிடம் ஏதா­வது புதிய பரி­கா­ரங்கள் உண்டா என்­பது இது­வரை வெளி­யா­க­வில்லை. அது­மட்­டு­மல்ல, இன்று இந்த நாட்டைப் பீடித்­துள்ள மிகக் கொடிய நோய் பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம். இது கொவிட் நோயை­விடக் கொடி­யது. அந்தப் பேரி­ன­வா­தத்தை இந்தக் கட்­சி­களுள் எவை­யா­வது உதறித் தள்­ளுமா என்­பது சந்­தே­கமே. தேர்­த­லொன்று வரும்­போது பேரி­ன­வா­தி­களின் வாக்­கு­க­ளுக்­காக இக்­கட்­சிகள் யாவுமே மண்­டி­யிடும் என்­பது நிச்­சயம். ஆகவே இவர்­களுள் எந்தக் கட்­சி­யை­யா­வது தனித்­த­னி­யா­கவோ கூட்­ட­ணி­யா­கவோ ஆட்­சியில் அமர்த்­து­வது பழைய குருடி கதவைத் திறடி என்ற கதை­யா­கவே முடியும்.

இந்த நிலையில் இவற்­றை­விட்டும் வேறு­பட்ட ஒரு கட்­சி­யாகத் தோன்­று­கி­றது அன்­றைய மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் இன்­றைய அவ­தா­ர­மான தேசிய மக்கள் சக்தி. இது இட­து­சாரிக் கொள்­கை­களைக் கொண்ட ஒரு இளைய தலை­மு­றை­யி­னரின் கட்சி. இந்­தக்­கட்சி மட்­டுமே சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தை ஒழித்து மதங்­க­ளையும் இனங்­க­ளையும் அர­சியல் பொரு­ளா­தாரக் கணிப்­பீ­டு­க­ளி­லி­ருந்து தவிர்த்து ஆட்­சியை இலங்­கையர் என்ற ஒரு கோதா­வுக்குள் நின்று நிறுவ முனை­கி­றது. கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக இனமும் மதமும் சேர்ந்து இந்த நாட்டை எவ்­வாறு சீர்­கு­லைத்­துள்­ளது என்­பதை மேலும் விளக்கத் தேவை­யில்லை. இருந்தும் கடந்த காலத் தேர்தல் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்தும் இன்­றைய கருத்துக் கணிப்­பீ­டு­க­ளி­லி­ருந்தும் இந்தக் கட்­சியின் மக்­க­ளுக்­கி­டை­யி­லான செல்­வாக்கு ஐந்து தொடக்கம் பத்து சத­வீத்தைத் தாண்­ட­வில்லை எனத் தெரி­கி­றது. அதற்கு முக்­கிய கார­ணங்கள் இரண்டு.

பிற்­போக்­கு­வா­தி­களின் வல­து­சாரிப் போர்
தேசிய மக்கள் சக்­தியின் பொரு­ளா­தாரக் கொள்­கைகள் வல­து­சாரிக் கும்­பலின் சுரண்­டல்­க­ளுக்குச் சாவு­மணி அடிக்கும் என்­ப­தனால் அந்தக் கட்­சியை எவ்­வ­ழி­யி­லா­வது தோற்­க­டிப்­பதில் இவர்கள் முன்­னணி வகிக்­கி­றார்கள். அதற்­காக, ரோகண விஜ­ய­வீ­ரவின் தலை­மையில் அன்று நடந்த கிளர்ச்­சி­க­ளையும் அத­னா­லேற்­பட்ட அழி­வு­க­ளையும் வாக்­கா­ளர்கள் மத்­தியில் ஞாப­கப்­ப­டுத்தி வல­து­சாரிப் பத்­தி­ரி­கை­களும் ஊட­கங்­களும் ஒரு போராட்­டத்­தையே நடத்­து­கின்­றன. ஆனால் ஒன்­று­மட்டும் உண்மை. அன்­றைய கிளர்ச்­சிகள் நடை­பெற்­ற­போது இன்­றைய மக்கள் சக்­தியின் தலை­முறை பிறந்­தி­ருக்­க­வில்லை. அவ்­வாறு சிலர் பிறந்­தி­ருந்­தாலும் அவர்கள் குழந்­தை­க­ளா­கவே இருந்­தி­ருப்பர். எனவே அன்று நடந்த தவ­று­க­ளுக்கு இன்­றைய தலை­மு­றையை குற்றஞ் சாட்­டு­வது எவ்­வ­ழி­யிலும் பொருந்­தாது. எனவே இன்­றைய தலை­மு­றை­யி­னரின் செயற் திட்­டங்­களை மைய­மா­கக்­கொண்டே ஐக்­கிய மக்கள் சக்­தியின் கொள்­கை­களை எடை­போட வேண்டும். அவ்­வாறு எடை­போட்ட பின்னும் இக்­கட்சி தனி­யாக ஆட்­சி­ய­மைக்கும் வாய்ப்பு சற்­றேனும் கிடை­யா­தென்­பதை இக்­கட்­டுரை உணர்­கி­றது. ஆனால் மற்­றைய கட்­சி­க­ளுக்குள் உள்ள முற்­போக்குச் சக்­தி­க­ளுடன் இணைந்து சிறு­பான்மை இனங்­களின் ஆத­ர­வையும் இக்­கட்சி பெறு­மானால் ஒரு முற்­போக்­கான கூட்­டணி ஆட்­சியை அமைத்து இன்­றைய பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு மாற்று வழியை நிச்­சயம் காணலாம் என்ற நம்­பிக்கை உண்டு. ஆனால் அது இல­கு­வா­ன­தல்ல. ஆகக் குறைந்­தது இக்­கட்சி தக்க பலத்­துடன் வலது சாரி­க­ளுடன் பேரம்­பேசும் ஒரு சக்­தி­யை­யா­வது கொண்­டி­ருக்­கு­மானால் அது நாட்­டுக்கும் நல்­லது. சிறு­பான்மை மக்­க­ளுக்கும் சிறந்­தது. இந்த அடிப்­ப­டையில் சில விட­யங்­களை முஸ்லிம் வாச­கர்­க­ளுக்கு இக்­கட்­டுரை உணர்த்த விரும்­பு­கி­றது.

முஸ்­லிம்­களும் முற்­போக்குச் சக்­தி­களும்
எந்தக் காலத்­தி­லுமே இலங்கை முஸ்­லிம்கள் எந்­த­வொரு முற்­போக்­குள்ள இட­து­சாரிக் கட்­சி­க­ளையும் தேர்தல் காலங்­களில் ஆத­ரிக்­கவே இல்லை. இக்­கட்­சி­க­ளெல்லாம் மத நம்­பிக்­கை­யற்ற நாத்­திகக் கட்­சி­க­ளென்ற கொள்­கை­யி­னாலும் வியா­பா­ரி­களின் வர்த்­தக நலன்­க­ளுக்குப் பாத­க­மா­னவை என்ற முட்­டாள்­த­ன­மான வாதத்­தி­னாலும் எப்­போதும் வல­து­சா­ரி­க­ளையே ஆத­ரித்து வந்­துள்­ளனர். அனால் இன்­றுள்ள நிலையில் அக்­கட்­சி­க­ளெல்­லாமே பௌத்த பேரி­ன­வாத்தின் அடி­வ­ரு­டிகள் என்பதை முஸ்லிம்கள் மறத்தலாகாது. அதுமட்டுமல்ல, இன்றைய முஸ்லிம் சமூகத்துக்கும் அன்றைய சமூகத்துக்குமிடையே ஒரு முக்கிய வேறுபாடுண்டு. அதுதான் புதிதாக உருவாகியுள்ள புத்திஜீவிகள் நிறைந்த ஒரு சமூகமாக முஸ்லிம்கள் மாறியுள்ளமை. அதனுள் ஆண்களும் பெண்களும் அடங்குவர். இவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் முஸ்லிம்கள் அரசியலை அணுகாவிட்டால் எதிர்காலம் இருள் படிந்ததாகவே இருக்கும். அதற்கு முதற்படியாக இன்றுள்ள இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அவற்றின் அங்கத்தவர்களின் நடத்தையும் சுயநலப்போக்கும் பல அசிங்கங்களை முஸ்லிம்களுக்குத் தேடிக்கொடுத்துள்ளன. இந்தத் தலைவர்கள் எந்தக் கட்சியில் முஸ்லிம்களின் வாக்குகளைத் தேடினாலும் அவர்களை தோற்கடிக்கச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகி விட்டது.

முஸ்­லிம்­களும் தமி­ழி­னமும் ஒன்­றி­ணைந்து தேசிய மக்கள் சக்­திக்கு வாக்­க­ளிப்­ப­துடன் அக்­கட்­சியும் ஏனைய சிங்­கள மக்­களின் முற­போக்­கு­வா­தி­களின் ஆத­ர­வுடன் ஒரு பர­வ­லான கூட்­ட­ணியை அமைக்க முடி­யு­மானால் அது ஒரு பல­முள்ள சக்­தி­யாக நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்து வல­து­சாரிப் பிற்­போக்­கு­வா­தத்தின் வளர்ச்­சிக்கு ஒரு முட்­டுக்­கட்­டை­யாக அமை­யலாம். இதைத்­தானும் சிறு­பான்­மை­யினர் உண­ர­வில்­லை­யென்றால் அவ்­வி­னங்­களின் எதிர்­காலம் பரி­தா­ப­மாக அமையும். முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் இந்த ஆலோ­ச­னையைப் புறந்­தள்­ளாது சீர்­தூக்­கிப்­பார்ப்­பது அவ­சியம். ஆட்சி மாறு­வது முக்­கி­ய­மல்ல. அது எவ்­வாறு மாறி யார் கையில் செல்­ல­வேண்டும் என்­பதே முக்­கியம். நாடு ஒரு புதிய பாதையில் செல்ல வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் புத்திஜீவிகளும் இக்கருத்தை புறக்கணிக்கமாட்டார்களென இக்கட்டுரை எதிர்பார்க்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.