இஷா­லினி விவ­கா­ரத்தை அணு­கு­வது எப்­படி?

0 2,387

முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யு­தீனின் வீட்டில் பணிப் பெண்­ணாக கட­மை­யாற்­றிய சிறுமி இஷா­லினி தீக் காயங்­க­ளுடன் உயி­ரி­ழந்த சம்­பவம் மற்றும் அதனைத் தொடர்ந்தும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­படும் விட­யங்கள் குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந் நிலையில் நாட­ளா­விய ரீதியில் துஷ்­பி­ர­யோ­கங்­களால் பாதிப்­பட்ட சிறு­மி­களின் உரி­மைகள் தொடர்பில் கடந்த பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வரும் பெண் செயற்­பாட்­டா­ளர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு இந்த விவ­கா­ரத்தை எவ்­வாறு அணுக வேண்டும் என கேட்டோம். அவர்கள் வழங்­கிய பதில்­களை வாச­கர்­க­ளுக்­காக இங்கு தொகுத்து தரு­கிறோம்.

நேர்­காணல் :
எம்.ஏ.எம். அஹ்ஸன்

முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக திருப்­பப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­யது – மனித உரி­மைகள் ஆர்­வலர் ஷ்ரீன் ஸரூர்

இஷா­லினி மர்­ம­மான முறையில் மர­ணித்த விவ­காரம் முழு­மை­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக திருப்­பப்­ப­டு­கின்­றது. குறித்த சிறுமி தொடர்­பான விட­யத்தில் முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் மற்றும் அவ­ரது குடும்­பத்­தினர் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­படும் பட்­சத்தில் கண்­டிப்­பாக நீதிக்கு முன் நிறுத்தி அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்துக்­க­ளுக்கு இட­மில்லை. ஆனால் ரிஷாத் பதி­யுதீன் என்­கின்ற தனி­நபர் ஒரு முஸ்லிம் என்­ப­தற்­காக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் இந்த விட­யத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி பழி சொல்­வது அநா­வ­சி­ய­மான ஒன்­றாகும்.

முஸ்லிம் சமூகம் மீது இஸ்­லா­மோ­போ­பி­யாவை பிர­யோ­கித்தல் மற்றும் பிரித்­தாளும் கொள்­கையை பயன்­ப­டுத்­துதல் மூலமே காலங்­கா­ல­மாக இலங்­கையில் அர­சியல் நடக்­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்கும் தமிழ் பேசும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் பிள­வினை ஏற்­ப­டுத்­தியே அர­சாங்கம் தேர்­தலில் வெற்றி பெற்­றுள்­ளது. இப்­போது மலை­யக மக்கள் மற்றும் முஸ்­லிம்கள் மீது பிரித்­தாளும் கொள்­கையை பிர­யோ­கிக்­கவே தற்­போது அர­சாங்கம் முனை­கி­றது.

இந்த துஷ்­பி­ர­யோக விவ­காரம் மற்றும் இதை­யொத்த ஏனைய சிறுவர் விவ­கா­ரங்­களை சீராக வழி­ந­டத்த வேண்டும் என்று வலி­யு­றுத்தி கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகி­யோ­ருக்கு 31 பொது சமூக அமைப்­பு­களின் சார்­பாக நாம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளோம்.

இலங்­கையின் 1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள் மற்றும் இளம் பிள்­ளை­களை தொழி­லுக்கு அமர்த்­துதல் சட்­டத்­திற்கு அமை­வாக பொது நன்­மைக்­காக 16 வய­துக்கு மேற்­பட்­டதும் 18 வய­துக்கு இடைப்­பட்­ட­து­மான ஆட்­களை தொழில் ஆணை­யா­ள­ருக்கு அவ­சர நிலை தொடர்­பாக அறி­வித்த பின்­னரே தொழி­லுக்கு அமர்த்த முடியும். பாட­சா­லைக்குச் செல்­வதை தடுக்கும் வகையில் சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்த முடி­யாது என்றும் குறித்த சட்டம் தெளி­வாகக் கூறு­கின்­றது.

இந்­நி­லையில் சட்­டத்­தினை இயக்கும் பொறுப்பில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரின் வீட்டில் இவ்­வாறு சட்­டத்­திற்கு மாற்­ற­மான ஒரு விடயம் நிகழ்ந்­தி­ருப்­ப­தா­னது எமது நாட்டின் அர­சி­யல்­வா­தி­களின் சீரற்ற நிலை­மையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. என்­ற­போ­திலும் இந்த விவ­கா­ரத்தை முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக திருப்­பு­வது ஆரோக்­கி­ய­மான ஒன்­றல்ல. ஏனென்றால் மலை­யகம் உட்­பட நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் எத்­த­னையோ இஷா­லி­னிகள் இருக்­கி­றார்கள். பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கும் ஆளா­கின்­றார்கள். அவை அனைத்­தையும் மறக்­க­டித்து இந்த விட­யத்தை மாத்­திரம் மெரு­கூட்­டு­வது ஏற்க முடி­யாத ஒன்­றாகும்.

பண வீக்கம் மற்றும் பொது­மக்­களின் வாழ்­வா­தாரம் பாதிப்பு என்­ப­வற்றால் இந்த அர­சாங்கம் பாரிய தோல்­வி­களை சந்­தித்து வரு­கின்­றது. குறித்த தோல்­வி­களை மறைத்து அடுத்த தேர்­த­லிலும் தம்மை தக்க வைத்­துக்­கொள்ள இஸ்­லா­மோ­போ­பியா எனும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை இந்த அர­சாங்கம் மேற்­கொள்­கின்­றது என்றே பார்க்க வேண்­டி­யுள்­ளது. மேலும் சிறு­வர்­களை பாலியல் தொழி­லுக்கு விற்கும் நாடு­களில் முதன்­மை­யான ஒரு நாடா­கவே இப்­போ­து­வரை இலங்கை இருக்­கி­றது.

எனவே குறித்த சிறு­மியின் மர­ணத்­திற்கும் அத­னோடு தொடர்­பு­டைய ஏனைய உரிமை மீறல் குற்­றங்­க­ளுக்கும் தகுந்த வகையில் விசா­ர­ணை­களை நடத்தி குற்­ற­வா­ளி­களைத் தண்­டிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். குறித்த விசா­ர­ணை­களை சட்­டத்­தினை அமுல்­ப­டுத்தும் தரப்­பினர் பக்­கச்­சார்­பின்­றியும் உயி­ரி­ழந்த சிறு­மியின் சுய­கௌ­ரவம் பாதிக்­காத வகை­யிலும் எந்­த­வொரு பின்­புல அழுத்­தங்­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது நடத்­த­வேண்டும்.

மலையகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடாக காட்ட முயற்சிக்கின்றனர் – பெண் உரிமை செயற்­பாட்­டாளர் பிஸ்­லியா பூட்டோ

ரிஷாட் பதி­யுதீன் என்ற கதா­பாத்­தி­ரத்தை வைத்­துத்தான் ஆரம்­பத்தில் முஸ்லிம் சமூ­கத்தை தீவி­ர­வாத சமூ­க­மா

க சித்­தி­ரிக்கும் செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன. இப்­போது அதே நபரை முன்­வைத்து முஸ்­லிம்கள் வன்­மு­றை­யா­ளர்கள் என்ற நிலைப்­பாட்­டி­னையும் கொண்டு வர ஒரு கூட்டம் முயற்­சிக்­கி­றது. இப்­போது வன்­முறைச் சம்­பவம் ஒன்றின் சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு முஸ்லி

ம் சமூகம் ஒத்­து­ழைப்பு வழங்கி நடந்த விட­யங்­களை மூடி மறைக்க முயற்­சிக்­கி­றது என்ற மாயையில் ஏனைய சமூ­கங்கள் இருக்கும் நிலைக்கு முஸ்லிம் சமூகம் ஆளா­கி­யுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த 6 மாதங்­களில் 14 சிறு­வர்கள் மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், சிறு­வர்­க­ளுக்கு எதி­ராக 63 வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜூலை மாதம் மட்டும் இஷா­லி­னியின் சம்­பவம் உள்­ள­டங்­க­லாக மொத்தம் சிறு­வர்­க­ளுக்­கெ­தி­ரான 6 வன்­முறைச் சம்­ப­வங்கள் ஊட­கங்­களில் பதி­வா­கி­யி­ருந்­தன. இவை அனைத்­தையும் மறக்­க­டித்து இஷா­லி­னியின் துஷ்­பி­ர­யோக சம்­ப­வத்தை மாத்­திரம் சில ஊட­கங்கள் குறி வைத்து இன­வா­தத்தை பரப்­பு­கின்­றன.

இவ்­வா­றான இன­வாத பிர­சா­ரங்­க­ளுக்கு தீனி போடும் வகையில் ரிஷாட் பதி­யுதீன் என்ற கதா­பாத்­தி­ரத்தின் ஆத­ர­வா­ளர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட சிறுமி தொடர்­பா­கவும் அவ­ரது குடும்பம் தொடர்­பா­கவும் மிக மோச­மான விட­யங்­களை சமூக ஊட­கங்­களில் எழு­திக்­கொண்டும் வரு­கின்­றார்கள். இந்த விட­யத்தை ஒரு சிறு­மிக்கு நடந்த துஷ்­பி­ர­யோ­க­மாக பார்க்க யாரும் தயா­ரில்லை. மலை­யகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்ற இரு வேறு கண்­ணோட்­டத்தில் பார்க்­கவே எண்­ணு­கி­றார்கள். அவ்­வாறு சித்­தி­ரிக்­கவே ஊட­கங்­களும் அர­சாங்­கமும் விரும்­பு­கின்­றன.

பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் சிறு­பான்­மை­யி­னரை வன்­மு­றை­யா­ளர்­க­ளாக காட்­டவே விரும்­பு­கி­றார்கள். இஷா­லினி துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட ஒரு சிறுமி ஆவார். என்­ற­போ­திலும் பெரும்­பான்­மை­யின மற்றும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் கூட அர­சியல் இலாபம் ஈட்­டு­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மா­கவே இந்த விட­யத்தைப் பார்க்­கி­றார்கள். அவ்­வாறே கருத்­துக்­க­ளையும் வெளி­யி­டு­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எப்­போதும் பார­பட்சம் காட்­டப்­ப­டு­வது யாவரும் அறிந்த உண்மை. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டமும் அவர்கள் மீது மாத்­தி­ரமே பாய்­கி­றது. அந்த வகையில் முஸ்­லிம்­களை வன்­மு­றை­யா­ளர்கள் என்று காட்­டு­வ­தற்­கான அர­சியல் நாட­க­மா­கவே இந்த விட­யத்தை பார்க்கத் தோன்­று­கி­றது.

இனவாத கண்ணோட்டத்தில் அணுகுவது தவறு – சட்­டத்­த­ரணி சுவஸ்­திகா அரு­லிங்கம்

மலை­ய­கத்தில் இருந்து சிறு­வர்­களை நகர்ப்­பு­றங்­களில் உள்ள வீடு­களில் வேலைக்கு அமர்த்­து­வதும், இப்­படி அமர்த்­தப்­ப­டு­ப­வர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வதும், சம்­பளம் வழங்­கப்­ப­டாமல் வைத்­தி­ருப்­பதும் இது முதல் தடவை அல்ல. எனவே இந்த விட­யத்தை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு பிரச்­சி­னை­யாக திருப்பி இன­வாத அர­சியல் செய்­ப­வர்­களின் நோக்­கத்­திற்கும் இஷா­லி­னிக்கு நீதி கோரு­கின்­ற­வர்­களின் நோக்­கத்­திற்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டுகள் இருக்­கின்­றன, இருக்­கவும் வேண்டும்.

மலை­ய­கத்தில் இருந்து வேலைக்கு அமர்த்­தப்­படும் பிள்­ளைகள் முஸ்லிம் சமூ­கத்­த­வரின் வீடு­களில் மாத்­திரம் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வது இல்லை. நகர்ப்­பு­றங்­களில் அனைத்து இன மக்­களின் வீடு­க­ளிலும் இவ்­வாறு பிள்­ளைகள் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­கின்­றனர். அங்கும் துஷ்­பி­ர­யோ­கங்கள் நடை­பெ­று­கின்­றன.

மலை­யக மக்­களை ஆரம்­பத்தில் இருந்தே வறுமை என்ற குழி­யினுள் வைத்­தி­ருக்­கிறோம். இந்த நிலை­மைக்கு தமிழ், முஸ்லிம், சிங்­களம் என நாங்கள் அனை­வரும் பொறுப்பு கூற வேண்­டி­ய­வர்கள். இதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். எனவே இந்த விட­யத்தை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திருப்­பு­வது எந்­த­வித பய­னையும் தராது. இன­வா­தி­க­ளுக்­குதான் அது அதீத பயனைத் தரும்.

ஏன் இஷா­லினி போன்ற சிறு­வர்கள் வீட்டு வேலைக்கு அனுப்­பப்­ப­டு­கின்­றார்கள்? ஏன் இவர்கள் பாட­சாலை கல்­வியை முடிப்­ப­தில்லை ? பெற்­றோர்கள் இவ்­வாறு பிள்­ளை­களை அனுப்­பு­வ­தற்கு காரணம் என்ன ? ஆயிரம் ரூபா அடிப்­படை சம்­ப­ளத்தை கூட இன்று முறை­யாக தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­க­மு­டி­யாமல் உள்ள நிலையில், மலை­யக பாட­சா­லை­க­ளுக்கு வளங்கள் இல்­லாத நிலையில், வறு­மையின் மத்­தி­யிலும் பிள்­ளை­க­ளுக்கு பாட­சாலை கல்­வியை முடிக்க ஊக்­கு­விப்­பு­களை அர­சாங்கம் வழங்­காத நிலையில், இதற்கு மேல் அடைக்க முடி­யாத கடன்­க­ளினால் இக்­கு­டும்­பங்கள் பாதிக்­கப்­பட்டு இருக்கும் நிலையில் பிள்­ளைகள் இவ்­வாறு வேலைக்கு அனுப்ப படு­கின்­றார்கள்.
வேலைக்கு அனுப்­பப்­ப­டு­வது பிள்­ளைகள் என்­பதால் சிறுவர் பாது­காப்பு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் குறைந்த பட்சம் இந்த பிள்­ளை­களை கட்­டாய கவ­னிப்­பிற்கு கீழ் கொண்­டு­வ­ரு­வதும் இல்லை. வீட்டு வேலைக்கு அனுப்­பப்­படும் மலை­யக சிறு­வர்­களின் பிரச்­சி­னை­களை பல கோணங்­களில் அணுகி தீர்வைத் தேடலாம். இதை விடுத்து இதை இன­வா­தத்­துடன் அணு­கு­வோ­ருக்கு இஷா­லி­னிக்கோ அவரை போன்ற ஏனைய சிறு­வர்­க­ளுக்கோ நியாயம் கிடைக்க வேண்டும் என்­பது நோக்­க­மல்ல. இதே போன்று பாதிக்­கப்­பட்ட இஷா­லி­னி­யையும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் சமூக வலைத்­தள கூண்­டு­களில் ஏற்றி அவர்­க­ளது நடத்­தையை பற்றி விமர்­சிப்­ப­வர்­க­ளையும் நாம் வன்­மை­யாக எதிர்க்க வேண்டும்.

அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்-  சட்­ட­த்த­ரணி ரனித்தா மயூரன்

தற்­போது இடம்­பெற்­றுள்ள துஷ்­பி­ர­யோக சம்­பவம் தீர விசா­ரிக்­கப்­பட்டு கண்­டிப்­பாக குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். அத்­துடன் வழங்­கப்­படும் தீர்ப்பு இந்த துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு மட்­டு­மான தீர்­வாக இருக்கக் கூடாது. நாட்டின் பல்­வேறு பாகங்­களில் இது போன்ற எத்­த­னையோ இஷா­லி­னிகள் இருக்­கி­றார்கள், அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான தீர்ப்­பாக இந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். அதற்கு கொள்கை மற்றும் சட்ட ரீதி­யாக இந்த விடயம் மாற்­றப்­பட வேண்டும்.

உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் வீட்டு வேலை­க­ளுக்கு செல்­ப­வர்­களின் பாது­காப்பு, உரி­மைகள் மற்றும் சம்­பள விவ­கா­ரங்கள் போன்ற விட­யங்­களை கண்­கா­ணிக்க அல்­லது அது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­க­வென்று போதி­ய­ளவு சட்ட வரை­புகள் இலங்­கையில் இல்லை. இவ்­வா­றான விட­யங்கள் தொடர்­பாக கொள்­கைகள் அல்­லது சட்­டங்­களை ஏற்­ப­டுத்த இந்த வழக்­கிற்கு வழங்­கப்­படும் தீர்ப்­பினை பயன்­ப­டுத்த முடி­யு­மாக இருந்தால் மக்­களும் இணைந்து அதற்­காக உழைக்க வேண்டும்.

இலங்­கை­யி­லுள்ள ஒவ்­வொ­ரு­வரும் 16 வயது வரை பாட­சாலைக் கல்­வியை பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். இந்த விட­யத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு உரிய அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. குறித்த அதி­கா­ரிகள் தமது கட­மையை சரி­யாக செய்­தி­ருந்தால் இன்று இப்­ப­டி­யொரு பிரச்­சினை வந்­தி­ருக்­காது.
ஒரு பாடசாலை மாணவர் தான் கல்வி கற்கும் பாடசாலையை விட்டு இடையில் விலகும்போது குறித்த மாணவரின் குடும்பத்தை அணுகி மீண்டும் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் அந்த பாடசாலை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கும் இருக்கிறது. பிரதேச செயலக மட்டத்தில் கோட்டக் கல்விக் காரியாலயம், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், தேசிய சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் போன்ற அதிகாரிகளுக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இவர்கள் சரியான முறையில் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்திருக்க வேண்டும்.

இஷா­லினி போன்ற பாதிக்­கப்­படும் சிறு­மி­களின் விட­யத்தில் குறித்த அதி­கா­ரிகள் பொறுப்­பாக நடப்­பார்கள் என்றால் இத்­த­கைய சம்­ப­வங்கள் நடை­பெற வாய்ப்­புக்கள் இல்லை. என்னைப் பொறுத்­த­வ­ரையில் இந்த அதி­கா­ரி­களும் தமது கட­மையை உரிய முறையில் செய்­கின்­றார்­களா இல்­லையா என்­ப­தனை கண்­கா­ணிப்­ப­தற்கு உரிய கண்­கா­ணிப்பு பொறி­முறை நிறு­வப்­பட வேண்டும். பொறுப்­புடன் செயற்­பட தவறும் அதி­கா­ரிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். குற்­றத்­திற்­காக சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிக்­கப்­பட வேண்டும். இத­னூ­டாக இனி­வரும் காலங்­களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.