வறுமைக்கோட்டிலும் அதற்குக் கீழும் வாழும் முஸ்லிம்கள் யாவர்?

0 652

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம், மேற்கு அவுஸ்திரேலியா

பல மாதங்­க­ளுக்கு முன்னர் இப்­பத்­தி­ரி­கையில் வௌிவந்த ஒரு கட்­டு­ரையில் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளைப்­பற்­றியும் அதற்­கான தீர்­வு­க­ளைப்­பற்­றியும் ஆராய்­வ­தற்குத் தேவை­யான விப­ரத்­தி­ரட்டு இல்­லா­மை­யைப்­பற்றிச் சில கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அது தொடர்­பாக மீண்டும் வலி­யு­றுத்­த­வேண்­டிய அவ­சியம் இன்று ஏற்­பட்­டுள்­ளது. இந்தக் கட்­டுரை சிறி­ய­தெ­னினும் அது அலசும் பொருள் பெரி­யதும் காலத்தின் தேவை­யு­மாகும்.

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கை­க­ளைப்­பற்றிப் பல கோணங்­க­ளி­லி­ருந்தும் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. பொதுத்­து­றையின் செல­வு­களைச் சிக்­க­னப்­ப­டுத்­து­வது, இறக்­கு­மதிக் கட்­டுப்­பா­டு­களை விதிப்­பது, வரி­களை உயர்த்­து­வது, அத்­தி­யா­வ­சியப் பொருள்­க­ளுக்கு உச்ச வரம்பு விலை­களை நிர்­ண­யிப்­பது, நட்­டத்தில் இயங்கும் அர­சாங்­கத்­துக்குச் சொந்­த­மான நிறு­வ­னங்­களைச் சீர­மைப்­பது என்­ற­வாறு பல ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இந்த ஆலோ­ச­னை­களை உள்­ள­டக்­கியே சர்­வ­தேச நாணய நிதியும் அர­சாங்­கத்­துடன் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றது. அதன் முடி­வாக 2.9 பில்­லியன் டொலர்கள் கட­னாக அதுவும் பல நிபந்­த­னை­களின் மத்­தியில் அந்த நிதி­யினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது யானைப் பசிக்குச் சோளப்­பொரி போட்­ட­மா­திரி இருக்­கி­றது. அதைப்­பற்றி இன்­னொரு கட்­டு­ரையில் விப­ரிப்போம்.

அந்தப் பேச்­சு­வார்த்­தை­களுள் அடக்­கப்­பட்­டுள்ள வர­வேற்­கத்­தக்க ஒரு விடயம் இந்த மாற்­றங்­களால் பாதிக்­கப்­ப­டப்­போகும் ஏழை­க­ளுக்கு அதிலும் குறிப்­பாக வறு­மைக்­கோட்­டிலும் அதற்­குக்­கீழும் வாழும் வர்க்­கத்­தி­ன­ருக்கு நேரடி நிவா­ரணம் வழங்­கு­த­லாகும். ஏனெனில் நாணய நிதியின் சிபா­ரி­சுகள் ஏற்­கப்­பட்டு அவை அமு­லுக்கு வந்தால் விலை­வா­சிகள் விஷம்போல் ஏறும். ஏற்­க­னவே ஒரு வேளை உண­வுடன் வாழும் கோடிக்­க­ணக்­கான குடும்­பங்கள் அதுவும் கிடைக்­காத ஒரு நிலைக்குத் தள்­ளப்­ப­டுவர். ஏற்­க­னவே ஐந்­தரை மில்­லியன் இலங்கை மக்கள் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்குத் தகு­தி­யு­டை­யோ­ரென ஐக்­கிய நாடுகள் சபை கணித்­துள்­ளது. பொரு­ளா­தார மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­களால் அவர்­க­ளது நிலை தொடர்ந்தும் சரி­வ­டை­யு­மெனின் அது பொது மக்­க­ளி­டையே அர­சுக்­கெ­தி­ரான கொந்­த­ளிப்பை உண்­டு­பண்ணி அர­சியல் அமை­தி­யையும் சீர்­கு­லைக்கும். அதனை உணர்ந்தே ஜனா­தி­ப­தியும் பாது­காப்புத் துறை­யி­ன­ருக்குப் பயங்­க­ர­வாதச் சட்­டத்­தின்கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அனு­மதி வழங்­கி­யுள்ளார்.

அது ஒரு புற­மி­ருக்க, வறு­மையில் வாழும் மக்கள் யார், அவர்­க­ளுக்கு எவ்­வா­றான நிவா­ர­ணத்தை வழங்­கு­வது, அதை எவ்­வாறு வழங்­கு­வது என்­பது பற்­றிய விப­ரங்கள் இன்னும் தௌிவாக்­கப்­ப­ட­வில்லை. எவ்­வ­ளவு நிவா­ர­ணத்தை வழங்­கு­வது என்­பதைத் தீர்­மா­னிப்­பது இலகு. ஆனால் அதை யாருக்கு எவ்­வாறு வழங்­கு­வது என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தி­லேதான் பிரச்­சி­னைகள் உண்டு.

முத­லா­வ­தாக, எத்­தனை பேர் எங்­கெங்கே வறு­மைக்­கோட்டில் வாழ்­கின்­றார்கள் என்ற விப­ரங்­களைச் சேக­ரிக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்பு. அந்த விப­ரங்கள் அத­னுடன் உண்டா என்­பது முத­லா­வது கேள்வி. பொது­வா­கவே அர­சாங்­கத்­தி­ட­முள்ள விப­ரங்கள் நம்­பத்­த­குந்­த­ன­வாக இல்லை. அதற்குக் காரணம் அவற்­றைத்­தி­ரட்ட வேண்­டிய திணைக்­களம் திற­மை­யுடன் இயங்­கா­மையே. இதனால் அர­சாங்கம் வௌியிடும் புள்ளி விப­ரங்கள் எல்­லாமே நம்­பத்­த­குந்­த­ன­வாக இல்லை என்­பது சர்­வ­தேச வட்­டா­ரங்­க­ளுக்கும் தெரியும். அர­சியல் இலாபம் கருதி சில விப­ரங்­களை வௌியி­டா­மலும் சில விப­ரங்­களை மாற்­றியும் வௌியி­டு­வ­தாக அவ­தா­னிகள் குறை கூறு­கின்­றனர். அவ்­வாறு வௌிவரும் மக்கள் நிலை­பற்­றிய விப­ரங்­களுள் இன­வா­ரி­யான தக­வல்­க­ளையும் காண முடி­யாது. சனத்­தொகை வளர்ச்­சி­பற்­றிய விப­ரங்கள் மட்­டுமே இன­வா­ரி­யாகத் திரட்­டப்­ப­டு­கின்­றன. இந்த நிலையில் எத்­தனை முஸ்­லிம்கள் வறுமைக் கோட்டில் வாழ்­கின்­றார்கள் என்ற விப­ரத்தை அர­சாங்க ஏடு­க­ளிலே காண­மு­டி­யாது. என­வேதான் அந்தப் பொறுப்பை முஸ்லிம் இயக்­கங்கள் பொறுப்­பேற்க வேண்­டு­மென வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது.

கடந்த சுமரர் 30 வரு­டங்­க­ளுக்கும் மேலாக முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் நல­னுக்­கா­கவும் போரா­டுவோம் என்று கூறிக்­கொண்டு அர­சியல் கட்­சி­யொன்று முஸ்­லிம்­க­ளுக்­குள்ளே உரு­வாகி அது பின்னர் இரண்­டாகப் பிரிந்து மேலும் மூன்­றாகப் பிரி­யக்­கூ­டிய சாயல்­களும் இப்­போது தென்­ப­டு­கின்­றன. இந்தக் கட்­சி­க­ளெல்லாம் இது­வரை முஸ்­லிம்­க­ளுக்­காகச் சாதித்­தவை என்ன என்ற பட்­டி­யலை யாரா­வது வௌியிட முடி­யுமா? எதையும் சாதிக்­கா­விட்­டாலும் முஸ்­லிம்­களின் வாழ்க்கை நிலை­பற்­றிய விப­ரங்­க­ளை­யா­வது திரட்­டி­யி­ருக்­கலாம் அல்­லவா? அந்த விப­ரங்­களில் ஒன்­றுதான் வறு­மைக்­கோட்டில் வாழும் முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கையும் அவர்கள் எங்­கெங்கே வாழ்­கின்­றார்கள் என்ற விப­ரமும். அந்த விபரம் இல்­லா­ததால் ஏற்­படும் பிரச்­சினை என்ன?
இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்குத் தீர்­வு­காண சர்­வ­தேச நாணய நிதி­யுடன் நடை­பெறும் பேச்­சு­வர்த்­தை­களில் மிகக்­கு­றைந்த வரு­மா­ன­முள்­ள­வர்­க­ளுக்கு நேர­டி­யான சலு­கைகள் வழங்­கப்­ப­டல்­வேண்டும் என்ற ஓர் ஆலோ­ச­னையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­கேற்ப அர­சாங்­கமும் நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த 2022 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்­திலும் அவ்­வா­றான சில நிவா­ர­ணங்கள் சேர்க்கப்­பட்­டுள்­ளன. அவற்றின் மொத்தத் தொகை நிர்­ண­யிக்­கப்­பட்­டு­விட்­ட­தன்பின் அவற்றை எவ்­வாறு வழங்­கு­வது என்­பது அடுத்த பிரச்­சினை. இலங்­கையின் நிர்­வாக ஊழல்கள் உல­க­றிந்த ஒரு விடயம். நட்பு நாடு­க­ளி­லி­ருந்தும் சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்தும் நன்­கொ­டை­யாக நிதி உத­விகள் கிடைக்­கும்­போ­து­கூட அவை குறிப்­பிட்ட சமூ­கத்­துக்குச் சேராமல் இடை­யிலே உள்ள நிர்­வா­கி­க­ளாலும் தர­கர்­க­ளாலும் சூறை­யா­டப்­பட்ட சம்­ப­வங்கள் எத்­த­னையோ. இவ்­வா­றான ஊழல் மலிந்த நிர்­வா­கமே இந்த நாட்டின் பொரு­ளா­தாரச் சீர­ழி­வுக்கு ஒரு முக்­கிய காரணம் என்­பது உல­க­றிந்த உண்மை. இத­னா­லேதான் அண்­மையில் உலக வங்கி விவ­சா­யி­க­ளுக்குப் பச­ளையும் எரி­பொ­ருளும் வழங்கும் விட­யத்தில் அதன் விநி­யோகம் ஏழை விவ­சா­யி­க­ளுக்குச் சென்று சேரும் வண்ணம் கண்­கா­ணிப்புச் செய்ய அதுவே முன்­வந்­துள்­ளது.

இந்த நிலையில் முஸ்லிம் பொது ஸ்தாப­னங்­களோ இருக்­கின்ற அர­சியல் கட்­சி­களோ தமது சமூ­கத்­தைப்­பற்­றிய விப­ரங்­களைத் திரட்­டி­வைத்­தி­ருந்தால் அவற்றை உரிய அமைப்­பு­க­ளுடன் சமர்ப்­பித்து குறிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குக் குறிக்­கப்­பட்ட நன்­மைகள் கிடைக்­கின்­ற­னவா என்று கண்­கா­ணிக்க முடி­யு­மல்­லவா? எனவே நமக்­கென நாமே சில விப­ரங்­களைச் சேக­ரிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அவற்றைச் சேக­ரிப்­பது எப்­படி?

பல்­க­லைக்­க­ழகப் பட்­ட­தாரி மாணவ மாண­விகள் தமது விரி­வு­ரை­யா­ளர்­களின் வழிப்­ப­டுத்­த­லின்கீழ் இவ்­வி­ப­ரங்­களைச் சேக­ரிப்­ப­தற்கு மிகவும் பயன்­ப­டலாம். அதனை அவர்­களின் கற்­கை­நெ­றி­களுள் ஒரு பகு­தி­யா­கவும் மேற்­கொள்­ளப்­ப­டுதல் இன்னும் சிறந்­தது. பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வௌியே அமைந்­துள்ள முஸ்லிம் பொது ஸ்தாப­னங்­களும் அவற்றின் பொதுப்­ப­ணி­களுள் ஒன்­றாக இத­னையும் மேற்­கொள்­ளலாம். அதற்­கு­ரிய செல­வு­களை முஸ்லிம் தன­வந்­தர்கள் பொறுப்­பேற்க வேண்டும். இன்­றைய நிலையில் இது முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு கட்­டாய தேவை­யா­கின்­றது. புலம்­பெ­யர்ந்து வாழும் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் இந்தத் தக­வல்கள் தேவைப்­ப­டு­கின்­றன.

இன­வாத அர­சியல் தலை­வி­ரித்­தா­டு­கின்ற இலங்­கையில் அர­சாங்­கமும் அந்தச் சக்­தி­க­ளா­லேயே இயக்­கப்­ப­டு­வதால் எல்லா இனங்­களும் சம­மா­கக்­க­வ­னிக்­கப்­படும் என எதிர்­பார்க்க முடி­யாது. அமைச்­சர்கள் தொடக்கம் நீதி அர­சர்கள் ஊடாக அலுவலகக் குமாஸ்தாக்கள்வரை சம்பளத்தைவிட கிம்பளத்திலேதான் செல்வம் திரட்டுகிறார்கள்.
இந்த நிலையிலேதான் அதன் பாதகங்களை உணர்ந்த சிங்கள பௌத்த இளம் சந்ததியொன்று இந்த அமைப்பையே மாற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் அறப்போராட்டத்தில் குதித்துள்ளதை உலகமே அறிந்துள்ளது. அந்தப்போராட்ட இளவல்களை இன்றைய ஜனாதிபதி சிறையில் அடைக்க முன்வந்துள்ளதையும் மனித உரிமை ஸ்தாபனங்கள் கண்டிக்கின்றன. ஜனாதிபதியின் இந்த மூர்க்கத்தனமான செயலை முஸ்லிம்கள் கண்டிக்க வேண்டும். ஏனெனில், அந்த இளவல்களின் போராட்டமும் கோரிக்கையும் வெற்றியடைந்து உண்மையான ஜனநாயக அரசியல் இந்த நாட்டில் மலருமானால் தகவல் திரட்டும் வேலையை முஸ்லிம்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே முஸ்லிம்கள் இரண்டில் ஒன்றைச் செய்வது கட்டாயம். ஒன்றில் தாமாகவே விபரங்களைத் திரட்ட வேண்டும் அல்லது இளவல்களின் போராட்டத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். முஸ்லிம் புத்திஜீவிகளே! இதனை உணர்ந்து மக்களை வழிநடத்துங்கள்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.