வணாத்தவில்லு விவகார வழக்கு : தஸ்லீம் அழைப்பெடுத்தது யாருக்கு?

சஹ்ரான், ஹஸ்தூன் வணாத்துவில்லுவுக்கு அடிக்கடி சென்றனரா?

0 326

எம்.எப்.எம்.பஸீர்

புத்­தளம் – வணாத்­த­வில்லு, பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில் இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ட்ரயல் அட் பார் சிறப்பு நீதி­மன்ற அமர்வு முன்­னி­லையில், புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்­தது. நீதி­ப­தி­க­ளான ஹசித்த பொன்­னம்­பெ­ரும, நிசாந்த ஹப்பு ஆரச்சி மற்றும் நயோமி விக்­ர­ம­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதி­மன்ற அமர்வு முன்­னி­லை­யி­லேயே இவ்­வி­சா­ர­ணைகள் நடந்­தன.

அதன்­படி 4 சாட்­சி­யா­ளர்­களின் சாட்­சி­யங்கள் இது­வ­ரையில் இவ்­வ­ழக்கில் நெறிப்­ப­டுத்­தப்­பட்டு, குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
இந்த வழக்­கா­னது 14 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி சட்ட மா அதி­ப­ரினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

தற்­போதும் மர­ண­ம­டைந்­துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்­மது அஹ­மது ஹஸ்தூன் ஆகி­யோ­ருடன் இணைந்து, வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்கும் மற்றும் தயா­ரிக்கும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்து சென்­ற­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 6 பேருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி ஆகிய 6 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்­த­வாரம் விடி­வெள்ளி பிர­சு­ரித்த வழக்கு விசா­ர­ணை­களின் தொடர்ச்­சியே இது.
முதல் சாட்­சி­யா­ள­ராக சாட்­சியம் அளித்த பிர­தான விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்­க­விடம், 1,2,4 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், சஜாத், நதீஹா அப்பாஸ் ஆகி­யோ­ருடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ர­ணை­களை தொடர்ந்தார்.

இதன்­போது வெடி­பொருள் மீட்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்ட, வணாத்­து­வில்லு தோட்டம் தொடர்பில் (குற்றப் பத்­தி­ரி­கையில் லக்டோ தோட்டம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது) குறுக்கு விசா­ர­ணைகள் செய்­யப்­பட்­டன.

அந்த தோட்டம், குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள 1, 2 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்கு சொந்­த­மா­வ­தற்கு முன்னர், யாருக்கு சொந்­த­மாக இருந்­தது என முதலில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்­பினார். அதற்கு பதி­ல­ளித்த பிர­தான விசா­ரணை அதி­காரி, அது குறித்த முழு­மை­யான விசா­ர­ணை­களை பொலிஸ் அதி­காரி பாலித்­தவே முன்­னெ­டுத்­த­தாக குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து, குறித்த காணியின் 1615 எனும் இலக்­கத்தை உடைய காணி உறுதிப் பத்­தி­ரத்தை மையப்­ப­டுத்தி குறுக்கு விசா­ர­ணைகள் நடந்­தன.

Q: நீங்கள் வெடி­பொருள் மீட்­ட­தாக கூறும் குறித்த தோட்டப் பகுதி எவ்­வாறு அழைக்­கப்­பட்­டது ?
A: லக்டோ தோட்டம்
Q: அந்த தோட்­டத்தை தவிர வேறு தோட்­டங்கள் அங்கு இருந்­த­னவா?
A: ஆம்.. அதனை அண்­மித்து வேறு தோட்­டங்கள் இருந்­தன.
Q: வெடி­பொருள் மீட்­கப்­பட்ட காணிக்கு வேறு பெயர்கள் இருந்­த­னவா?
A: இல்லை… லக்டோ தோட்டம் என்றே அழைத்­தனர்.
Q: ராச­மடு காணி அல்­லது காடு என ஒரு பெயர் இருந்­ததா?
A: இல்லை… லக்டோ தோட்டம் என்றே அறிவேன்
Q: காணி உறுதிப் பத்­தி­ரத்தை பரி­சீ­லித்து பதில் தாருங்கள்… அந்த காணியின் பெயர் லக்டோ தோட்டம் தானா?
A: (அதனை பரி­சீ­லித்­த­வாறு) ஆம்… காணி உறு­தியில் காணியின் பெயர் ராச­மடு காணி என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. லக்டோ தோட்டம் என அதில் இல்லை.

Q: நீர், வெடி­பொருள் மீட்­கப்­பட்­ட­தாக கூறும் தினத்தில் குறித்த இடத்தை அடையும் போது எத்­தனை மணி இருக்கும்?
A: பிற்­பகல் 3.05 மணி இருக்கும்
Q: அப்­போது முதல் பிர­தி­வா­திக்கு தொலை­பே­சியில் அழைத்­தீரா?
A: இல்லை
Q: உங்கள் குழுவில் யாரேனும் அழைத்­தார்­களா?
A: இல்லை… நான் அறிந்து அப்­படி ஒரு­வரும் அழைக்­க­வில்லை.
Q: தஸ்லீம் எனும் ஒருவர் உங்கள் குழுவில் இருந்­தாரா?
A: ஆம்… எனது தனிப்­பட்ட உள­வாளி
Q: தஸ்லீம் ஏதும் அழைப்­பெ­டுத்­தாரா?
A: தெரி­யாது
Q: நீர் பிர­தான விசா­ரணை அதி­காரி. தஸ்லீம் என்­பவர் உங்கள் தனிப்­பட்ட உள­வாளி. அப்­படி இருக்­கையில் உங்கள் அனு­ம­தி­யில்­லாமல் அவர் அழைப்­பெ­டுத்­தி­ருக்க முடி­யாது அல்­லவா? தஸ்லீம் ஏதும் அழைப்­பினை மேற்­கொண்­டாரா?
A: சரி­யாக கூற முடி­யாது.
Q: நீங்கள் குறித்த இடத்தை அடையும் போது, 1,2 ஆம் பிர­தி­வா­திகள் அங்­கி­ருந்­த­தாக வழங்­கிய சாட்­சியம் முற்­றிலும் பொய்­யா­ன­தாகும் என நான் பரிந்­து­ரைக்­கின்றேன் ?
A: இல்லை… நான் அதனை மறுக்­கின்றேன்.
Q: நீர் அங்கு செல்லும் போது அங்கு யாரும் இருக்­க­வில்லை. ?
A: மறுக்­கின்றேன்…1,2 ஆம் பிர­தி­வா­திகள் இருந்­தனர்.
Q: 1,2 ஆம் பிர­தி­வா­திகள் இருந்­த­தாக நீர் சாட்­சி­களை சோடித்­துள்ளீர் ?
A: இல்லை… சாட்­சி­களை சோடிக்க எனக்கு எந்த தேவையும் இல்லை.
Q: 1,2 ஆம் பிர­தி­வா­தி­களை தஸ்லீம் ஊடாக அழைப்­பெ­டுத்து குறித்த குற்றப் பகு­திக்கு நீரே வர­வ­ழைத்­துள்ளீர்?
A: மறுக்­கின்றேன்… நாம் லக்டோ தோட்­டத்­துக்கு சாதிக், சாஹித்தை தேடியே சென்றோம்.
Q: 2019 ஜன­வரி 16 ஆம் திகதி பிற்­பகல் 3.05 மணிக்கு குறித்த தோட்­டத்தின் பிர­தான வாயிலை அடைந்­த­தாக நீர் சாட்­சியம் அளித்தீர். அப்­ப­டி­யானால் 1,2 ஆம் பிர­தி­வா­தி­களை எப்­போது நீர் முதன் முத­லாக கண்டீர் ?
A: முதலில் அந்த வாயிலை அடைந்த போதே அவர்­களின் தலைப் பகு­தியை மட்டும் தூரத்தில் வைத்து கண்டேன். பின்னர் அரை மணி நேரத்­துக்குள் அவர்­களை நெருங்க முடிந்­தது.
Q: முதல் பிர­தி­வாதி குறித்து சந்­தேகம் எப்­படி வந்­தது ?
A: பயாஸின் தொலை­பேசி அழைப்­பி­லி­ருந்து அந்த சந்­தேகம் எழுந்­தது. முதல் பிர­தி­வா­தி­யான முபீஸ், பொலன்­ன­றுவை பயா­ஸுடன் தொடர்பில் இருந்­தமை தொலை­பேசி பகுப்­பாய்வில் தெரி­ய­வந்­தது. பொலன்­ன­றுவை பயாஸ் சாதிக்­குடன் தொடர்பில் இருந்தார்.
Q: 0777616737 எனும் தொலை­பேசி இலக்கம் ஞாப­கமா?
A: (அறிக்­கையை பரி­சீ­லித்து) ஆம்… அது முத­லா­வது பிர­தி­வா­தியின் தொலை­பேசி இலக்கம்.

Q: அந்த இலக்கம் தொடர்பில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தொலை­பேசி அழைப்பு பகுப்­பாய்வு அறிக்கை உள்­ளதா?
A: ஆம்.. அது குறித்த அறிக்கையை பெற்று நீதிவான் நீதி­மன்ற வழக்குக் கோவையில் சேர்த்தோம்.
Q: தஸ்­லீமின் தொலை­பேசி இலக்கம் ஞாப­கமா?
A: இல்லை..
Q: நீங்கள் குறித்த தினம் தஸ்லீம் ஊடாக அழைப்­பெ­டுத்து, 1,2 ஆம் பிர­தி­வா­தி­களை அவ்­வி­டத்­துக்கு அழைத்­துள்­ளீர்கள் ?
A: இல்லை… நான் மறுக்­கின்றேன்.
Q: 1,2 ஆம் பிர­தி­வா­தி­களை அவர்கள் வேலை செய்த கோழிக் கூட்டில் வைத்து கைது செய்­துள்­ளீர்கள்… பின்னர் அவர்­களை வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­ட­தாக கூறும் பகு­திக்கு அழைத்துச்சென்று புகைப்­படம் எடுத்­துள்­ளீர்கள் ?
A: இல்லை… அப்­படிச் செய்ய எனக்கு எந்த தேவையும் இல்லை.
Q: சஹ்ரான், ஹஸ்தூன் ஆகியோர் அங்கு அடிக்­கடி வந்து சென்­ற­தாக உமக்கு தகவல் கிடைத்­த­தாக சாட்­சியம் அளித்­தீர்கள் அல்­லவா?
A: அடிக்­கடி இல்லை… வந்து சென்­றுள்­ள­தாக தகவல் கிடைத்­தது.
Q: சஹ்ரான் அங்கு வந்­த­தாக உங்­க­ளுக்கு கூறி­யவர் யார் ?
A: பரீ­சீ­லனை செய்து சொல்­கிறேன்.
Q: நீர் பொய்­யு­ரைக்­கின்றீர்… அப்­படி யாரும் உங்­க­ளுக்கு கூறவே இல்லை… சஹ்ரான், ஹஸ்தூன் அங்கு வந்து சென்­ற­தாக கூறப்­ப­டு­வது பொய்?
A: இல்லை… நான் மறுக்­கின்றேன்.
Q: முதல் பிர­தி­வா­தியை கைது செய்த பின்னர் அவ­ரது பணப் பையை கைப்­பற்­றி­னீரா?
A: ஆம்
Q: அந்த பணப் பையி­லி­ருந்து ஏதேனும் ஆவணம் ஒன்­றினை மீட்­டிரா?
A: ஆம்… ஒரு இர­சா­யன கலவை தொடர்­பி­லான சமன்­பா­டுகள் என நம்ப முடி­யு­மான குறிப்­புகள் அடங்­கிய தாள் அது
Q: சரி… அந்த குறிப்பு அடங்­கிய தாள் மீது அவ­தனம் செலுத்­துங்கள்…. அதில் முதல் பந்­தியில் சில இர­சா­யன பொருட்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன…. அதில் ‘ பிளக் பவ்டர் ‘ என கூறப்­பட்­டுள்­ளது…. அதன் பின்னர் KNo 3 + S + சா சோல்ட் என கூறப்­பட்­டுள்­ளது .
அப்­ப­டி­யானால் அந்த இடத்­தி­லி­ருந்து பிளக் பவ்டர் கைப்­பற்­றி­னீரா?
A: இல்லை
Q: KNo3 என்றால் என்ன?
A: பொற்­றா­சியம் நைற்­றேற்று
Q: அதனை அவ்­வி­டத்தில் வைத்து கைப்­பற்­றி­னீரா?
A: நைற்றிக் அமி­லத்­தையே கைப்­பற்­றினோம்… அது தொடர்பில் எனக்கு தெரி­யாது
Q: S என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது சல்பர் என கூறி­னீர்கள்… சல்பர் எனும் இர­சா­ய­னத்தை அவ்­வி­டத்தில் கைப்­பற்­றி­னீரா?
A: அது குறித்து எனக்கு சரி­யாக தெரி­யாது
Q: சா சோல்ட் என குறிப்­பி­டப்­பட்­டுள்ள இர­சா­ய­னத்தைக் கைப்­பற்­றி­னீரா?
A: அது தொடர்பில் எனக்கு தெரி­யாது

Q: சரி…குறித்த இர­சா­யன கலவை படி­முறை என நீர் கூறும் அந்த தாளின் 2 ஆவது பந்­தியை பாருங்கள்…
A: ஆம்…
Q: அது தமிழ் மொழியில் எழு­தப்­பட்­டுள்­ளது என்றால் சரியா?
A: ஆம்…
Q: அப்­ப­டி­யானால், அதன் உள்­ள­டக்­கத்தை தெரிய மொழி பெயர்ப்­பாளர் ஒரு­வரின் உத­வியை நாடி­னீரா?
A: அதனை இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்பி அவர்கள் ஊடா­கவே அறிக்கை பெறப்­பட்­டது.

Q: 3 ஆவது பந்­தியில் பிளக் பவ்டர் என கூறப்­பட்­டுள்­ளது.
A: ஆம்
Q: நான்­கா­வது பந்­தியில் கடி­காரம் ஒன்று உள்­ளது. அதன் கீழ் ஒரு கையெ­ழுத்து உள்­ள­தல்­லவா? அது யரு­டைய கையெ­ழுத்து?
A: சரி­யாக கூற முடி­யாது
Q: அதன் கீழ் 2019.01.16 என திக­தி­யி­டப்­பட்டு ஒரு கையெ­ழுத்­துள்­ளது… அது உங்கள் கையெ­ழு­துத்து தானே?
A: ஆம்…
Q: முதல் பிர­தி­வா­தியின் பணப் பையி­லி­ருந்து நீங்கள் அந்த குறிப்புத் தாளை எடுக்­க­வில்லை என நான் பரிந்­து­ரைக்­கின்றேன்
A: இல்லை… நான் மறுக்­கின்றேன்..
Q: அந்த குறிப்பில் காணப்­பட்ட கையெ­ழுத்து தொடர்பில் கையெ­ழுத்து பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­தீரா?
A: ஆம்… நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் ஊடாக கையெ­ழுத்து பரி­சோ­தனை அறிக்கை பெறப்­பட்­டது.
Q: சரி.. அந்த கையெ­ழுத்து பரி­சோ­தனை அறிக்­கையில் 2 ஆம் பிர­தி­வா­தியின் கையெ­ழுத்து ஒத்துப் போனதா?
A: ஆம்
Q: ஆனால் இந்த குறிப்புத் தாளை நீங்கள் 2 ஆம் பிர­தி­வா­தியின் உட­மை­யி­லி­ருந்து கைப்­பற்­ற­வில்லை அல்­லவா?
A: ஆம்…அப்­ப­டித்தான்…அவ­ரிடம் இருந்து கைப்­பற்­ற­வில்லை

Q: கையெ­ழுத்து பரி­சோ­த­னை­க­ளுக்­கான மாதி­ரி­களைப் பெற்­றுக்­கொண்­டீரா?
A: ஆம்… அது தொடர்பில் பாலித்த எனும் அதி­கா­ரியே செயற்­பட்டார்.
Q: 2019 ஜன­வரி 31 முதல் பெப்­ர­வரி 2 ஆம் திக­தி­ வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல ஆவ­ணங்­களை இதற்­காக பெற்­றுள்­ளீர்கள் ?
A: இல்லை… நான் மறுக்­கின்றேன்.
Q: இதன்­போது பிர­தி­வா­தி­க­ளிடம் ஒப்­புதல் வாக்கு மூலம் பெற முயற்­சித்­துள்­ளீர்கள்?
A: இல்லை… மறுக்­கின்றேன்.
Q: கையெ­ழுத்து பரி­சோ­த­னைக்கு மாதி­ரி­யொன்­றினை பெற வேண்­டிய சட்ட ரீதி­யி­லான வழி­மு­றைகள் இங்கு பின்­பற்­றப்­ப­ட­வில்லை என நான் பரிந்­து­ரைக்­கின்றேன்?
A: இல்லை நான் மறுக்­கின்றேன்…
Q: கையெ­ழுத்து மாதி­ரியை பெற்­றுக்­கொண்­டமை குறித்து தெரி­யுமா?
A: தெரியும்.
Q: எங்கு வைத்து மாதிரியைப் பெற்றுக்கொண்டார்கள் ?
A: நீதிமன்றில் வைத்து பெற்றுக்கொண்டார்களா அல்லது விசாரணையாளர்கள் முன் பெறப்பட்டதா என எனக்கு தெரியாது.

இந் நிலையில், இதன்போது மன்றில் விடயங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், முதல் பிரதிவாதியின் பணப் பையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் குறிப்பு 2 ஆம் பிரதிவாதியின் கையெழுத்துடன் கூடியது என்பதை சவாலுக்கு உட்படுத்துவதாகவும், குறித்த கையெழுத்து தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையையும் சவாலுக்கு உட்படுத்துவதாகவும் அறிவித்தார். அது தொடர்பில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாதங்களை முன் வைப்பதற்கான அனுமதியையும் நீதிபதிகளிடம் பெற்றுக்கொண்டார்.

(குறுக்கு விசாரணைகள் தொடரும் ….)

Leave A Reply

Your email address will not be published.