விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 02

"சம்பிரதாய முஸ்லிம்கள் - வஹாபிகள்" முஸ்லிம்களை துருவமயமாக்கும் துரோகம்

0 784

சமீ­ப­கா­ல­மாக சிங்­கள பௌத்த இன­வா­திகள் மற்றும் மத­கு­ருக்­களின் ஊடக சந்­திப்­புகள் மற்றும் மாநா­டு­களில் முழங்கும் ஒரு கோஷம் தான் பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள்/ வஹா­பிய முஸ்­லிம்கள் என்ற இரு­மை­யாகும். “இலங்கை முஸ்­லிம்­களில் இரண்டு வகைப்­பட்­ட­வர்கள் உள்­ளனர். பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் என்போர் பெளத்­தர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்கள். காலா­கா­ல­மாக சிங்­க­ள­வர்­க­ளுடன் கலந்து வாழ்­ப­வர்கள். இணங்­கியும் இணக்­கப்­பாட்­டு­டனும் வாழத்­தெ­ரிந்­த­வர்கள். அவர்கள் மத்­தியில் தீவி­ர­வா­தமோ அடிப்­ப­டை­வா­தமோ கிடை­யாது. நாங்கள் சிலை­களை வணங்­கு­வ­துபோல் சில வேளை­களில் அவர்கள் அடக்­கஸ்­த­லங்­களை வணங்­கு­கி­றார்கள். அவர்­க­ளோடு எமக்கு எவ்­விதப் பிரச்­சி­னையும் இல்லை.” இது பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் குறித்த ஞான­சா­ரரின் படிமம்.

அதே ஞான­சாரர் பாரம்­ப­ரிய முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நிலை நிறுத்தும் வஹா­பிகள் அல்­லது வஹாப்­வாத முஸ்­லிம்கள் குறித்து “இவர்கள் தீவி­ர­வா­திகள். சிங்­க­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களைப் பிரிப்­ப­வர்கள். இவர்­க­ளுக்­கென தனிப்­பள்­ளி­வா­சல்­களும் மத்­ர­ஸாக்­களும் இந்­நாட்டில் இருக்­கின்­றன. அடிப்­ப­டை­வா­தத்தை அவர்­களே போதிக்­கி­றார்கள். இவர்­க­ளுக்கு அரபு நாடு­க­ளி­லி­ருந்து பெரும்­தொகைப் பணம் இங்கு வரு­கின்­றது. குறிப்­பாக சவூதி அரே­பி­யாவே இவர்­களை வளர்க்­கின்­றது. 4/21 தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரிகள் இவர்கள் தான்” என்­கிறார். இவ்­விரு சாரா­ரையும் எப்­படி நடாத்த வேண்டும் என்றும் ஒரு சூத்­தி­ரத்தைச் சொல்­கிறார் அவர். பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் தான் ஜம்­இய்­யத்துல் உல­மாவில் இருக்க வேண்டும். அர­சியல் கட்­சி­களை அமைக்க வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு தலை­மைத்­துவம் அளிக்க வேண்டும். முக்­கிய தீர்­மா­ன­க­ர­மான இடங்­க­ளுக்கு வர­வேண்டும். அவர்­களே எங்­க­ளுக்கு வஹா­பி­களை இல்­லா­தொ­ழிக்க உத­வ­வேண்டும். பாடப்­புத்­த­கங்­களில் அவர்­க­ளது பாரம்­ப­ரிய இஸ்­லாமே இடம்­பெற வேண்டும்.

மறு­புறம் வஹா­பிகள் குறித்த அவ­ரது அர­சியல் பார்வை இப்­படி உள்­ளது.வஹாப்­வா­திகள் இந்­நாட்­டி­லி­ருந்து முற்­றாக துடைத்­த­ழிக்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள் மூடப்­பட வேண்டும். வஹாப்­வாத இயக்­கங்கள் அனைத்தும் சட்­ட­பூர்­வ­மாகத் தடை­செய்­யப்­பட வேண்டும். சவூதி அரே­பி­யாவின் நிதி மூலம் தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என்­றெல்லாம் தொடர்ச்­சி­யாகப் பிர­சாரம் செய்து வரு­கிறார்.

பிர­சா­ரத்தின் வீச்சும் விஷம் கக்கும் நாகங்­களும்

சமீபத்தில் மினு­வாங்­கொடை கல்­லொ­லு­வைக்கு செல்லும் வழியில் வெயாங்­கொடை நகரைத் தாண்டிச் செல்­கிறேன். பெருந்­தி­ர­ளான இரா­ணு­வப்­ப­டை­யினர் வீதிச்­சோ­த­னையில் ஈடு­பட்­டுள்­ளனர். வாக­னங்கள் நிறுத்­தப்­பட்டு தீவிர சோதனை நடக்­கின்­றது. நூறு மீற்றர் தாண்டிச் சென்றேன். ஞான­சா­ரரின் உரு­வப்­படம் பொறிக்­கப்­பட்ட பெரும் விளம்­பரப் பதா­கை­யொன்று அரச மரத்தின் கீழ் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அவ­தா­னித்த போது விஷ­யத்தை ஊகிப்­பது எளி­தாகி விட்­டது. அங்­குள்ள பன்­ச­லையில் ஞான­சா­ரரின் பேருரை பட்­டையைக் கிளப்பிக் கொண்­டி­ருந்­தது. காதைப் பிளக்கும் அவ­ரது உரையின் பெரும்­ப­குதி வஹா­பி­சத்தை ஒரு பூத­மாகக் காட்­டு­வ­தா­கவே இருந்­தது. முஸ்­லிம்கள் மத்­தியில் வஹா­பிஸம் வேக­மாகப் பரவி வரு­வ­தா­கவும் தாம் அல்­லாத (வஹா­பி­ய­ரல்­லாத) ஏனையோர் அனை­வ­ரையும் கொன்று குவிப்­பதே வஹா­பி­களின் நோக்கம் என்­றெல்லாம் அவர் சிங்­க­ள­வர்­களின் உதி­ரத்தைக் கொதிக்க வைக்­கிறார்.

வஹா­பிஸம் குறித்து ஞான­சாரர் மேற்­கொண்­டு­வரும் பிர­சாரம் மிகவும் குரூ­ர­மா­னவை. ஆபத்­தா­னவை. முஸ்­லிம்­களை சாதா­ரண அடி­மட்ட சிங்­க­ள­வர்கள் அனை­வ­ருமே குரோ­தத்­து­டனும் வெறி­யு­டனும் பார்க்கத் தூண்­டு­பவை என்­பதில் கிஞ்­சித்தும் ஐய­மில்லை. அப்­பாவி சிங்­கள மக்­களை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக திருப்­பு­வ­தற்கு மிக இல­கு­வாகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு ஆயு­த­மா­கவே இன்று வஹா­பிஸம் BBS இனால் கையா­ளப்­ப­டு­கின்­றது. கண்­டியில் நடந்த BBS இன் மாநாடு பெரு­ம­ளவு சோபிக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கின்­ற­போதும் அதன் பிர­தான இலக்­காக இருந்­தது வஹாபி எதிர்­பி­ர­சா­ரமே. நுகே­கொ­டையில் நடந்த ஒன்­று­கூ­டலில் இது குறித்து பரி­மா­றப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் சிங்­கள மக்­க­ளி­டையே குறிப்­பாக படித்த வர்க்­கத்­தி­ன­ரி­டையே நன்கு பதி­ய­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கலா­நிதி ரஞ்சித் தேவ­சிறி சொல்­வது போல சிங்­கள மக்­களை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக திருப்பும் சூழல் இப்­போது முன்­னெப்­போ­தையும் விட மிகச் சாத­க­மா­க­வுள்­ளது. 4/21 க்குப் பின்னர் சிங்­க­ளவர் மத்­தியில் முஸ்­லிம்கள் குறித்து உரு­வா­கி­யுள்ள இத்­த­கைய மனோ­நி­லையை இன­வா­தி­களும் மத­வா­தி­களும் மிக இலாவ­க­மாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அதில் முன்­ன­ணியில் இருப்­பவர் ஞான­சா­ரரே என்­பதில் சந்­தே­க­மில்லை.

நாளொரு மேனியும் பொழு­தொரு வண்­ண­மு­மாக வஹா­பிய பூதம் குறித்து பெரும்­பான்மை சிங்­கள பௌத்­தர்­களின் ஆழ்­ம­னதில் எதிர்­ம­றை­யான பதி­வு­களை இட்டு வரு­கின்றார் ஞான­சாரர். அரச அலு­வ­ல­கங்கள், மருத்­துவ மனைகள், பாட­சா­லைகள் என இந்தப் பிர­சாரம் காட்­டுத்தீ போல் பரவி வரு­கின்­றது. படிப்­ப­டி­யாக சிங்­கள மக்­களின் உள்­ளங்­களில் உண்­மை­க­ளா­கவே அவை பதி­கின்­றன. 2012 தம்­புள்ளை ஹைரி­யாப்­பள்ளி பிரச்­சி­னையே இன்­றைய இன­வாதப் பிர­சா­ரத்தின் துவக்­கப்­புள்ளி. 2014 இல் BBS நோர்­வேயின் நிதி­யா­த­ர­வுடன் களத்­திற்கு வந்­த­போது ஞான­சாரர் கர்ச்­சித்த கருத்­துக்கள் பெரும்­பான்மை மக்­களில் பெரும்­பா­லான வர்­க­ளி­டையே எடு­ப­ட­வில்லை என்­பது உண்­மையே. இன்று மறு­த­லை­யாக வஹா­பிச அச்சம் திட்­ட­மிட்டு நன்கு வளர்க்­கப்­ப­டு­கின்­றது. மியன்­மாரில் பான்தாய், பசூஸ் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளி­டையே ரோஹிங்­யர்கள் குறித்து மட்­டுமே சுமார் கால் நூற்­றாண்டு காலம் இவ்­வா­றான பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்­பதை நாம் ஒப்­பிட்­டுப்­பார்க்கலாம்.

களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யா­ளர்கள் சிலர் அங்கு பணி­யாற்றும் ஒரு முஸ்லிம் விரி­வு­ரை­யா­ள­ரிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த கருத்து பொது­ப­ல­சே­னாவின் பிர­சா­ரங்­களால் பல்­கலை விரி­வு­ரை­யா­ளர்­களும் காவு கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தற்கு தெளி­வான உதா­ர­ண­மாகும். அப்­பல்­கலை விரி­வு­ரை­யா­ளர்­களின் ஞான­சாரர் குறித்த புதிய படிமம் இவ்­வாறு உள்­ளது.

“ஞான­சா­ரரை தொடக்­கத்தில் நாம் ஏற்­க­வில்லை. அவர் சொன்ன கருத்­துக்­க­ளுக்கு நாம் செவி­யேற்­க­வு­மில்லை. அவர் சொன்­ன­தெல்லாம் இன்று உண்­மை­யா­கி­யுள்­ளது. அவர் சொல்லும் கருத்­துக்­களை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலை­மைக்கு நாம் தள்­ளப்­பட்­டுள்ளோம்” என்­ப­துதான் விரி­வு­ரை­யா­ளர்­களின் இன்­றைய நிலைப்­பா­டாகும்.

2014 இல் கணக்கில் எடுக்­கப்­ப­டா­தி­ருந்த ஞான­சாரர் இன்று சிங்­க­ளவர் மத்­தியில் ஒரு ஹீரோ­வாக பார்க்­கப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அவ­ருக்கு விளம்­ப­ரப்­ப­தா­கைகள் போடு­வ­தற்கும் வாழ்த்துத் தெரி­விக்கும் பதா­கை­களை ஏந்­து­வ­தற்கும் பன்­ச­லை­களில் அவ­ரது உரையை ஏற்­பாடு செய்­வ­தற்கும் பல குழுக்கள் நாடு முழு­வதும் உரு­வா­கி­விட்­டன. அர­சாங்கம் சிங்­க­ள­வர்­களின் வாக்கு வங்­கியை இழந்து விடலாம் என்ற அச்­சத்­தினால் ஞான­சா­ரரின் கூட்­டங்­க­ளுக்கு இரா­ணுவப் பாது­காப்பும் மரி­யா­தையும் வழங்கும் நிலைக்கு வந்­துள்­ளது. கிட்­டிய எதிர்­கா­லத்தில் ஞான­சா­ரரின் குற்­றச்­சாட்­டுகளும் முஸ்­லிம்கள் குறித்த விமர்­ச­னங்­களும் சிங்­கள சிவில் சமூ­கத்தின் பொது அபிப்­பி­ரா­ய­மாக மாறும் பேரா­பத்தை இந்த நாடு எதிர்­கொண்­டுள்­ளது. அச்சு இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் இந்தப் பொது அபிப்­பி­ரா­யத்தை (Mass opinion) கட்­ட­மைப்­பதில் பெரும் பங்கு வகிக்­கின்­றன. இப்­போது முஸ்­லிம்கள் மத்­தியில் ஞான­சாரர் தீவி­ர­மாகப் பரவி வரு­வ­தாக கூறி­வரும் வஹா­பி­ஸமும் அது பற்­றிய அச்­சங்­க­ளுமே சிங்­க­ள­வர்­களின் பொது அபிப்­பி­ரா­யத்தின் அடி­நா­த­மாக கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றது.

ரூப­வா­ஹினி, ITN, இலங்கை வானொலி ஆகி­ய­வற்றில் பணி­யாற்றும் முஸ்­லிம்கள் சமீ­ப­கா­ல­மாக எதிர்­கொள்ளும் பல கேள்­விகள் வஹா­பிஸம் பற்­றி­ய­தா­கவே உள்­ளன. நிகழ்ச்­சி­களில் வள­வா­ள­ராகக் கலந்து கொள்ளச் சென்ற பல சந்­தர்ப்­பங்­களில் இதை நான் தெளி­வாக அவ­தா­னித்­துள்ளேன். பணி­யாற்றும் முஸ்லிம் அறி­விப்­பா­ளர்­க­ளுக்கு பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள், வஹா­பிகள் பற்­றிய ஒரு மங்­க­லான புரி­தலே உள்­ள­தனால் அவர்­க­ளுக்கு இக்­கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க முடி­யாமல் மிகப்­பெரும் சங்­க­டத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளமை கண்­கூடு.

பிர­சா­ரத்தின் போலித்­தனம்

இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் சூபிஸம் (பாரம்­ப­ரிய) வஹா­பிஸம் (தௌஹீத்) என்ற இந்த இரண்டு எதி­ரி­டைகள் மட்­டுமே உள்­ள­தென்று மேற்­கொள்­ளப்­படும் பிர­சாரம் முதலில் மிக அப்­பட்­ட­மான பொய்­யாகும். முஸ்­லிம்கள் இப்­போ­லியை நிர்­தாட்­சண்­யமாய் நிரா­க­ரிக்க வேண்டும். சமீ­பத்தில் தெரன தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் தோன்­றிய ஒருவர் இலங்­கையில் 25% ஆன­வர்­களே பாரம்­ப­ரிய (ஸூபி) முஸ்­லிம்கள் எனவும் 75% ஆன­வர்கள் வஹா­பி­களே என்றும் எதிரில் உட்­கார்ந்­தி­ருந்த சிங்­கள அறி­விப்­பா­ள­ரிடம் புள்­ளி­வி­ப­ர­மொன்றை எடுத்­து­ரைத்தார். தொடர்ந்து பாரம்­ப­ரிய அல்­லது சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் வஹா­பிகள் இடை­யி­லான புறத்­தோற்ற வேறு­பா­டு­களை அடுக்கிச் சென்றார்.

முதலில் இந்தக் கணக்கு தப்­பா­னது. இலங்கையிலுள்ள அனைத்து தரீக்காக்களிலும் அங்கத்துவம் வசிப்­போரின் எண்­ணிக்­கையை கணக்­கிட்டால் அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் 10 சத­வீ­தத்­தையும் பிர­தி­நி­திப்­ப­டுத்த மாட்­டார்கள். இன்­னொ­ரு­புறம் வஹா­பிகள் என ஸூபி­களால் அழைக்­கப்­ப­டு­கின்ற தௌஹீத்­வா­திகள் அதன் ஆத­ர­வா­ளர்கள் என்று நோக்­கினால் அது 2 மில்­லியன் முஸ்­லிம் சனத்தொகையில் வெறும் 5 சத­வீ­தத்­தையும் தாண்­டாது. இந்­நி­லையில் இலங்­கையில் 50 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இயங்­கி­வரும் ஜமா­அத்தே இஸ்­லாமி, ஜமாஅத் தப்லிக், ஜமா­அதுஸ் ஸலாமா சமீ­பத்­திய ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற இஸ்­லா­மிய ஆன்­மிக இயக்­கங்­களில் அங்­கத்­துவம் வகிப்போர் மற்றும் ஆத­ர­வா­ளர்­களின் தொகை கூட மிகச் சொற்­ப­மா­னது என்­பதில் துளி­ய­ளவும் சந்­தே­க­மில்லை.

இக்­கு­றிப்­பிட்ட அமைப்­புக்­களால் வெளி­யி­டப்­படும் பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கைகள் எண்­ணிக்­கையைக் கணக்­கிட்­டா­லேயே அவற்றின் பரி­மாணம் எவ்­வ­ளவு என்­பதை எளி­தாக ஊகிக்­கலாம். ஒரு கணிப்­பீட்­டின்­படி ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்­களில் இயக்க அங்­கத்­த­வர்கள், ஆத­ர­வா­ளர்கள் சிந்­தனைத் தாக்கம் கொண்டோர் வெறும் 3 சத­வீ­தமே என்­பது தெளி­வா­னது. எண்­ணிக்­கையில் சில பத்­தா­யி­ரங்­க­ளாக இருக்­கலாம். ஆனால் முழு மொத்த முஸ்லிம் சமூ­கத்தில் அவர்­க­ளது விகி­தா­சாரம் மிக குறை­வாகும். ஆக தௌஹீத் இயக்கங்கள் உள்ளிட்டு நாட்டில் இயங்கும் அனைத்து  இஸ்லாமிய இயக்­கங்­க­ளையும் சேர்த்து பார்த்தால் 90 சத­வீ­த­மான முஸ்­லிம்கள் இயக்க சிந்­த­னைக்கு வெளியில் தான் வாழ்­கி­றார்கள் என்­பதை மிகத் தெளி­வாகப் புரிந்து கொள்­ளலாம். (இதற்கு மாற்று அபிப்­பி­ராயம் இருந்தால் இயக்­கங்கள் தமது புள்ளி விப­ரங்­களை முன்­வைக்­கலாம்)

இலங்கை முஸ்­லிம்கள் ஒன்றில் ஸூபிகள் (பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள்) அல்­லது வஹா­பிகள் என்று கூறு­வது மிக அப்­பட்­ட­மான பொய்­யாகும். இந்த வாதத்தை யார் முன்­வைத்­தாலும் அது உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். கள ஆய்வோ போது­மான தரவோ இல்­லாமல் இவ்­வாறு சிங்­க­ள­வர்­க­ளிடம் பிழை­யான தர­வு­களை யாரும் முன்­வைக்­கக்­கூ­டாது. அதே­வேளை இது குறித்த உண்­மை­யான தர­வு­களை சிங்­கள சிவில் சமூ­கத்­திடம் கொண்டு சேர்க்­கப்­பட வேண்டும். அதற்கு வகை கூற வேண்­டிய பொறுப்பு எமது தலை­மை­க­ளுக்கு உள்­ளது.

முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யானோர் எந்த இயக்க சிந்­தனைத் தாக்­கமும் தீவி­ர­மாகப் பற்றிக் கொள்­ளா­த­வர்கள் என்­பதே கள உண்­மை­யாகும்.

ஸூபிஸம் (பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள்) வஹா­பிஸம் (தௌஹீத்) ஆகிய சிந்­தனை பள்ளிகளுக்கிடையிலான வேறு­பா­டுகள், முரண்­பா­டுகள் மிக நிதா­ன­மா­கவும் நேர்­மை­யா­­கவும் மதிப்­பீடு செய்­யப்­பட  வேண்­டி­யவை. அதை இந்­தப்­பத்­தியில் தனி­யான ஒரு கட்­டு­ரை­யாக எழுத உத்­தே­சித்­துள்ளேன். ஏனெனில் படித்த உயர் பத­வி­களை வகிக்கும் தீர்­மா­னிக்கும் இடங்­களில் இருக்கும் பல முஸ்­லிம்­க­ளுக்கே இது குறித்த தெளிவு இல்லை என்­பதை நான் நன்­க­றிவேன்.

இப்­போது வஹா­பிகள், ஸுபிகள் உள்­ளிட்ட இலங்­கையில் உள்ள ஏனைய அனைத்து ஆன்­மிக இயக்­கங்­களும் இஸ்­லா­மிய சட்­டகத்­தி­னுள்­ளேயே செயற்­ப­டு­கின்­றன என்­பதை இலங்கை முஸ்­லிம்கள் ஏற்­றுக்­கொள்­வ­தற்கு முன்னர் குறிப்­பிட்ட இவ்­வி­யக்­கங்கள் ஏற்­க­வேண்டும். அதே­வேளை ஸூபி – வஹாபி முரண்­பா­டு­களை அவை உள்­ளக கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். புறம்­பாக இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் கரு­வ­றுக்கத் துடிக்கும் சக்­தி­க­ளுக்கு பரஸ்­பரம் காட்டிக் கொடுக்கும் கைங்­க­ரி­யத்தை கைவிட வேண்டும். தமது மார்க்கம், முஸ்லிம் சமூகம், அல்லாஹ், அவ­னு­டைய தூதர், முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு விசு­வா­ச­மாக இருப்­பது ஒரு ஈமா­னியப் பண்­பாகும்.

1990 களில் வஹா­பிகள் ஸூபி­களை கடு­மை­யாக எதிர்த்து நின்­ற­மைக்கும் அவர்­க­ளது சுதந்­திர செயற்­பா­டு­களில் தலை­யீடு செய்­த­மைக்கும் தாம் இப்­போது அவர்­களை பழி­வாங்­கு­வ­தாக ஸூபிகள் நினைத்துக் கொண்டு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் வஹா­பிகள் என காட்­டிக்­கொள்­வது எந்த வகை­யிலும் ஏற்­கத்­தக்­க­தல்ல. அதே­போன்று வஹா­பிஸம் என்­பது பயங்­க­ர­வாதம் மற்றும் தீவி­ர­வா­தத்­துடன் இணைந்த ஒரு கருத்­தியல் என்று சிங்­க­ள­வர்­களை நம்­ப­வைப்­ப­தற்கு துணை செய்­வ­தையும் இஸ்லாமியக் கண்­ணோட்­டத்தில் ஏற்க முடி­யாது.

எவ்­வா­றா­யினும் இன்­றைய கால­கட்­டத்தில் வஹா­பிஸம் குறித்து வரை­யப்­படும் படிமம் மிகவும் பயங்­க­ர­மா­னது. அது குறித்த சரி­யான விளக்­கத்­தையும் தெளி­வையும் முன்­வைப்­ப­தற்கு வஹா­பிகள் முன்­வர வேண்டும். தவிர முஸ்லிம் சிவில் சமூ­கத்­திற்கும் இது குறித்து காணப்­படும் பொறுப்பை அது நிறை­வேற்ற வேண்டும். ஏனெனில் ஒவ்­வொரு நாளும் யாரோ ஒரு சிங்­க­ளவர் வஹா­பிஸம் என்றால் என்ன? என்று கேட்­டுக்­கொண்டே இருக்­கிறார். இதற்கு ஞான­சாரர் அல்ல வஹா­பிகள் தான் பதில் அளிக்­க­வேண்டும். தவ­றினால் அது மிக ஆபத்­தான விளை­வு­க­ளையே சமூகம் மீது ஏற்­ப­டுத்தும்.

பின்னால் உள்ள அர­சியல் 

எமக்கு பாரம்­ப­ரிய முஸ்­லிம்களுடன் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. வஹாப்­வா­திகளுடன்தான் பிரச்­சினை என கூறும் ஞான­சா­ர­ருக்கோ வீர­வன்­ச­வுக்கோ வஹாபிஸம் என்றால் என்ன என்று சுத்தமாகவே தெரியாது. ஆனால் இந்த இருமைகளை (Dichotomy) அவர்கள் ஏன் கையாள்கிறார்கள் எனில் முஸ்லிம்களைத் துருவ மயமாக்குவதற்கே இந்த வகைப்பாட்டினை முன்னெடுக்கிறார்கள். தமது உத்தமத்தை பறைசாற்ற பாரம்பரிய முஸ்லிம்களுடன் பிரச்சினை இல்லை என்ற ஒரு போலி எதிரிடையையும் ( Paradox) ஞானசாரர் இலாவகமாக கையாள்கிறார்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியம் 150 ஆண்டுகள் இஸ்லாமிய உலகை காலனித்துவப்படுத்தியிருந்த காலத்தில்  ஒரு நாட்டின் விடுதலைப் போரில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதற்காக பிரித்து ஆளுதல் (Divide and Rule) என்ற சமன்பாட்டைக் கையாண்டனர். இது ஒரு சமூகத்தை பலவீனப்படுத்த ஏகாதிபத்தியம் கண்டுபிடித்த அற்புதமான மூலோபாயம். இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை துருவ மயப்படுத்தலும் (Polarization) உள்ளக முரண்பாடுகளை ஊக்குவித்து ஒரு சாராரை தமது திட்டத்திற்கு பயன்படுத்தவும் ஞானசாரர் சம்பிரதாய முஸ்லிம், வஹாபி முஸ்லிம் என்ற எதிரிடையைப் பிரசாரம் செய்து வருகிறார். முஸ்லிம் சமூகம் ஒரே சமூகமே. இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்ட அனைவரும் ஒரே உம்மத்தே என குர்ஆன் பறைச்சாற்றி நிற்க முஸ்லிம்கள் தமக்குள் பகை முரண்பாடுகளை வளர்த்து எதிரிகளுக்குப் பின்னால் அணிதிரள்வது மிக ஆபத்தான குறிகாட்டியாகும். முஸ்லிம் சமூகத்தின் தோல்விக்கும் வீழ்ச்சிக்குமான முதல் காரணம் உள்ளகப் பிளவு தான் என்ற குர்ஆனிய எச்சரிக்கையை முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணித்தே வருவது ஆரோக்கியமானதல்ல. வஹாபிஸம் என்றால் என்ன என்பதற்கு தெட்டத்தெளிவான பதிலுரையை வழங்க முஸ்லிம் தலைமைகள் தயாராக வேண்டும். இது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.