முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : எம்.பி.க்கள் அங்கீகாரம்

இறுதி அறிக்கையை நீதியமைச்சரிடம் கையளித்தார் ஹலீம்

0 759

நீண்­ட­கா­ல­மாக இழு­பறி நிலை­யி­லி­ருந்த முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட திருத்த சிபா­ரி­சு­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் நேற்று இறுதி அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையை நேற்று அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ ளித்தார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 11 ஆம் திகதி அங்­கீ­க­ரித்­தி­ருந்த சிபா­ரி­சு­களில் ‘பெண் காதி நிய­மனம்’ தவிர்ந்த ஏனை­ய­வற்­றுக்கு நேற்று அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஹஜ் கட­மைக்­காக நேற்று மாலை மக்கா நோக்கிப் பய­ண­மா­னதால் அவர் நாடு திரும்­பி­யதும் நீதி மற்றும் சிறைச்­சாலை அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவும், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் இணைந்து சட்­ட­வ­ரைபு அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

நேற்றுக் காலை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் குழுத் தலை­வ­ரு­மான ஏ.எச்.எம்.பௌசியின் இல்­லத்தில் நடை­பெற்ற கூட்­டத்­திலே இச்­சி­பார்­சு­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­குழு தனது திருத்­தங்கள் அடங்­கிய அறிக்­கையை கடந்த வருடம் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் வழங்­கி­யது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட திருத்த சிபா­ரிசு குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு நீதி­ய­மைச்­ச­ரிடம் இரு வேறு அறிக்­கை­களை சமர்ப்­பித்­தி­ருந்­தது. இதனால் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­வினால் இறு­தி­யான தீர்­மானம் ஒன்­றினை எடுக்க இய­லாத நிலையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சிபா­ரி­சு­க­ளா­வன:-

· திரு­மண வய­தெல்லை – முஸ்லிம் ஆண், பெண்­க­ளுக்கு 18

· திரு­மண பதிவும், நிக்­காஹ்வும் திரு­ம­ணத்தை வலி­தாக்கும்.

· மத்தாஹ் (நஷ்ட ஈடு), தலாக், குலா மற்றும் பஸ்ஹ் விவா­க­ரத்­தின்­போது வழங்­கப்­பட வேண்டும். கணவன் தான் மத்தாஹ் வழங்க வேண்­டி­யேற்­படும் என்­ப­தற்­காக மனை­வியை பஸ்ஹ் விவா­க­ரத்து பெற்றுக் கொள்­ளு­மாறு நிர்ப்­பந்­தித்­த­தாக உறுதி செய்­யப்­பட்­டாலே பஸ்ஹ் விவா­க­ரத்தின் போது மத்தாஹ் வழங்­கப்­படும்.

· மத்­ஹப்கள் – முஸ்லிம் விவா­கத்தில் தரப்­பினர் இரு வேறு­பட்ட மத்­ஹப்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாயின் அவர்கள் இரு­வரும் ஒரு குறிப்­பிட்ட மத்­ஹ­பினால் ஆளப்­ப­டு­வ­தற்கு இணக்­கப்­பாட்­டினைத் தெரி­விக்க வேண்டும்.

· ஒரு தரப்பு அல்­லது இரு தரப்­பி­னரும் முஸ்லிம் விவா­கத்தில் எந்த மத்­ஹபைச் சார்ந்­த­வர்­க­ளாகவும் இல்­லா­தி­ருந்தால் அல்­லது அவர்­க­ளது திரு­மணம் இரு­வேறு மத்­ஹ­பு­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருந்து அவர்கள் மத்ஹப் தொடர்பில் இணக்­கப்­பா­டொன்­றினை எட்­டா­த­வி­டத்து அவர்­க­ளது திரு­மணம் தொடர்­பான அனைத்து விட­யங்­களும் இஸ்­லா­மிய சட்ட விதி­க­ளுக்கு அமை­யவே கையா­ளப்­ப­டுமே தவிர எந்­த­வொரு மத்­ஹபின் அடிப்­ப­டை­யிலும் கையா­ளப்­பட மாட்­டது.

· காதி நீதி­ப­தி­களின் தகை­மையும் காதி நீதி­மன்­றங்­களும்

காதி நீதி­மன்­றங்­களின் தரம் மேம்­ப­டுத்­தப்­படும். இலங்கை நீதித்­து­றைக்கு அமை­வாக காதி நீதி­ப­தி­களின் பதவி மேம்­ப­டுத்­தப்­படும். காதி­நீ­தி­ப­திகள் நிரந்­தர முழு­நேர நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். அவர்­க­ளது தரம், வகுப்பு என்­பன நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் நிர்­ண­யிக்­கப்­படும்.
காதி நீதி­ப­தி­க­ளாக இஸ்­லா­மிய சட்ட அறி­வுடன் கூடிய சட்­டத்­த­ர­ணிகள் நிய­மிக்­கப்­ப­டுவர்.

· காதி நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ராக இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது.

· பல­தார திரு­மணம் நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­படும். பின்­வரும் விட­யங்­களில் காதி நீதி­ப­தியின் அனு­மதி பெறப்­பட வேண்டும்.
மனை­வி­யர்­களை போது­மா­ன­ளவு பரா­ம­ரித்தல், பிள்­ளை­களை போது­மா­ன­ளவு கவ­னித்தல், மனை­வி­யர்­களை பரா­ம­ரிக்க போதிய நிதி­நி­லைமை இருத்தல், தற்­போ­தைய மனை­விக்கும் எதிர்­கால மனை­விக்கும் திரு­மணம் தொடர்பில் அறி­வித்தல். காதி நீதி­ப­தியின் அனு­மதி பெறாமல் செய்து கொள்ளும் பல­தார மணம் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.
காதியின் அனு­ம­தி­யில்­லாமல் நடை­பெறும் திருமணப்பதிவு வலிதற்றதாகும்.

· திருமண அத்தாட்சிப் பத்திரத்தில் ‘வொலி’ கையொப்பமிடுவதுடன் மணமகளும் கையொப்பமிட வேண்டும்.

· கைக்கூலியை திருப்பிப் பெற்றுக் கொள்ளுவது போன்று அசையாத சொத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

· முஸ்லிம் விவாக விவாகரத்து ஆலோசனை சபை மற்றும் காதிகள் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படும். பெண்கள் விவாக பதிவாளர்களாக நியமிக்கப்படுவர்.

· தாபரிப்பு தொடர்பான சட்ட அதிகாரம் காதி நீதிமன்றத்திடமிருந்து மாவட்ட நீதிமன்றுக்கு வழங்கப்படும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.