சிலாபம், அம்பகந்தவிலவில் நீதிமன்ற உத்தரவையடுத்து கந்தூரி வைபவம் இரத்தானது

0 737

சிலாபம் அம்­ப­கந்­த­வில பகு­தியில் அடக்­கஸ்­தலம் ஒன்றை மையப்­ப­டுத்தி முஸ்­லிம்கள் வரு­டாந்தம் நடத்­தி­வரும் கந்­தூரி வைபவத்­திற்கு சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தடை­யுத்­த­ர­வினைப் பிறப்­பித்­த­தை­ய­டுத்து நேற்று நடை­பெ­ற­வி­ருந்த கந்­தூரி வைபவம் இரத்துச் செய்யப்பட்டது.

சிலாபம் அம்­ப­கந்­த­வில பகுதி கத்­தோ­லிக்க மக்­களும் கத்­தோ­லிக்­க­ தே­வா­லய அருட் தந்­தையும் தெரி­வித்த எதிர்ப்­பி­னை­ய­டுத்தே இக்­கந்­தூரி வைபவம் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் ஜே. பயிஸ்­தீ­னுக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார்.

குறிப்­பிட்ட கந்­தூரி வைபவம் இடம்­பெற்றால் கிரா­ம­வா­சி­க­ளுக்கு இடையில் கல­வரம் ஏற்­படும் நிலை உரு­வாகும். அதனால் அமை­திக்கும் சமா­தா­னத்­துக்கும் பாதிப்பு ஏற்­படும் என சிலாபம் பொலிஸார் சிலாபம் நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் சட்டக் கோவை 106 (1) பிரிவின் கீழ் இத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கு அறி­வித்­துள்ளார்.

குறிப்­பிட்ட அடக்­கஸ்­த­லத்தில் நூறு வரு­டங்­க­ளுக்கும் மேலாக கந்­தூரி வைபவம் இடம்­பெற்று வரு­கி­றது. சிலாபம் பஸார் பள்­ளி­வா­சலின் பரி­பா­ல­னத்தின் கீழேயே இந்த அடக்­கஸ்­தலம் இருக்­கி­றது. கந்­தூரி வைப­வத்தில் வரு­டாந்தம் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொள்­வது வழ­மை­யாகும்.

நூற்­றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த அடக்­கஸ்த­லத்தில் நடை­பெற்று வந்த கந்­தூரி வைப­வத்­திற்கு கத்­தோ­லிக்க மக்­களும் கத்­தோ­லிக்க தேவா­லய அருட் தந்­தையும் எதிர்ப்புத் தெரி­வித்து தடை செய்­துள்­ளமை தொடர்பில் தரீக்கா கவுன்ஸில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை அவர்­களை நேரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் சட்ட ஆலோ­ச­கரும் சிலாபம் நகர சபையின் உப தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி சாதிகுல் அமீனை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.
அம்­ப­கந்­த­வி­லயில் குறிப்­பிட்ட அடக்­கஸ்­த­லத்­துக்கு சுமார் 2 ஏக்கர் பெறு­ம­தி­யான காணி சொந்­த­மாக உள்­ளது. இந்தக் காணியை அப­க­ரித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே இதனைக் கரு­து­கிறேன். ஈஸ்டர் தாக்­கு­த­லுக்கு முன்­பி­ருந்தே இதற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்பு கிறிஸ்­த­வர்கள் அக்­கா­ணியில் அடக்­கஸ்­த­லத்­துக்கு 10 அடிகள் அருகில் சிலை­யொன்­றி­னையும் வைத்­துள்­ளனர். இது தொடர்பில் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தக் காணிக்கு வேலி­யொன்று இல்லை.

முஸ்­லிம்கள் குழப்­பங்­களில் ஈடு­பட விரும்­ப­வில்லை. பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணி இது. சமா­தா­ன­மா­கவே இதற்குத் தீர்­வு­காண விரும்­பு­கிறோம் என்றார்.

சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தலைவர் ஜே. பயிஸ்தீன் கருத்து தெரிவிக்கையில்; ‘நீதிமன்ற உத்தரவினையடுத்து நாம் இன்று (நேற்று) கந்தூரி வைபவத்தை நடத்தவில்லை என்றாலும் கந்தூரி நிறுத்தப்பட்டுள்ளதை அறியாது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தரும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிலாபம் பொலிஸாரிடம் கோரியுள்ளோம்’ என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.