ஈரான் படைத் தளபதி கொலை விவகாரம்: ஈரான்- அமெரிக்கா முறுகல் நிலை தீவிரம்

மத்திய கிழக்கில் பதற்ற நிலை; போர் மூளும் அபாயம்

0 782

ஈரானின் குத்ஸ் படை­ய­ணியின் தள­பதி ஜெனரல் காசிம் சுலை­மானி, அமெ­ரிக்­காவின் வான் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தை தொடர்ந்து இரு­நா­டு­க­ளி­டையே முறுகல் நிலை தீவி­ர­ம­டைந்­துள்­ள­துடன் மத்­திய கிழக்கில் போர் மூளும் அபா­யத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது.

இந்த தாக்­கு­த­லுக்கு நிச்­சயம் பதி­லடி கொடுப்­போ­மென ஈரான் எச்­ச­ரித்­துள்ள நிலையில், அவ்­வாறு ஏதேனும் தாக்­கு­தல்கள் நடந்தால் ஈரா­னி­லுள்ள 52 இலக்­குகள் மீது தாக்­குவோம் என அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லையும் எதிர்­கொள்ள ஈரான் தயா­ராக உள்­ள­தாக ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் அப்பாஸ் மூஸாவி தெரி­வித்­துள்ளார். நாம் எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லையும் எதிர்­கொள்ளத் தயார். அமை­தி­யாக இருக்­க­மாட்டோம். போருக்குச் செல்ல நாம் விரும்­ப­வில்லை. ஆனால் அதற்குத் தயா­ரா­கவே இருக்­கிறோம் என்றும் மூஸாவி கூறி­யி­ருக்­கிறார்.

இதற்­கி­டையில் குறித்த தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட காசிம் சுலை­மா­னியின் ஜனாஸா நேற்று தெஹ்­ரானில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ஈரானின் 52 இடங்­களை குறி­வைத்­துள்ளோம், அழித்­து­வி­டுவோம்: ட்ரம்ப் எச்­ச­ரிக்கை

அமெ­ரிக்க மக்கள் மீது தாக்­குதல் நடத்­தினால், ஈரானின் 52 முக்­கி­ய­மான இடங்­களை நாங்கள் குறி­வைத்­துள்ளோம், அதி­வே­க­மாக செயற்­பட்டு அழித்­து­வி­டுவோம் என்று அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

ஈராக்­கி­லுள்ள அமெ­ரிக்க இரா­ணுவ நிலை­மீது கடந்த வாரம் நடத்­தப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­தலில், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த தனியார் பாது­காப்புப் படை வீரர் உயி­ரி­ழந்தார். அந்தத் தாக்­கு­தலை, ஈரான் ஆத­ரவு பெற்ற கதாயிப் ஹிஸ்­புல்லா படை­யினர் நடத்­தினர். இதற்குப் பதி­ல­டி­யா­கவே அந்தப் படை­யினர் மீது அமெ­ரிக்கா நடத்­திய தாக்­கு­தலில் 25 வீரர்கள் கொல்­லப்­பட்­டனர்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து காபூ­லி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் முன்பு ஏரா­ள­மான ஹிஸ்­புல்லா ஆத­ரவுப் போராட்­டக்­கா­ரர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு அலு­வ­ல­கத்தைச் சூறை­யா­டினர்.

அதற்குப் பதி­ல­டி­யாக வெள்­ளிக்­கி­ழமை பக்தாத் விமான நிலை­யத்தில் அமெ­ரிக்க இரா­ணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவு­கணைத் தாக்­குதல் நடத்­தி­யது. இதில் ஈரான் புரட்­சி­கரப் பாது­காப்புப் படையின் தள­பதி காசிம் சுலை­மானி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை இரா­ணு­வப்­ப­டையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்­திஸும் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டனர்.

இந்தத் தாக்­குதல் அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்­த­ரவின் பேரில் தற்­காப்பு நட­வ­டிக்­கைக்­கா­கவே நடாத்­தப்­பட்­ட­தாக அமெ­ரிக்கப் பாது­காப்புத் தலை­மை­ய­க­மான பெண்­டகன் தெரி­வித்­தது.

இந்த தாக்­குதல் குறித்து ஆவே­ச­மாக பேட்­டி­ய­ளித்த ஈரான் அரசு, “அமெ­ரிக்கா தனது தீவி­ர­மான முட்­டாள்­த­னத்தால், ஆபத்தை பெரி­தாக்கி இருக்­கி­றது. இந்த தாக்­கு­த­லுக்கு நாங்கள் நிச்­சயம் பதி­லடி தருவோம், பழிக்­குப்­ப­ழி­வாங்­குவோம்” எனச் சூளு­ரைத்­தது.

இதற்­கி­டையே, ஈராக்கின் தலை­நகர் பக்­தாதி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் அருகே நேற்­றி­ரவு இரு ரொக்கெட் குண்­டுகள் வீசப்­பட்­டன. குறிப்­பாக அமெ­ரிக்க இரா­ணுவம் குவிக்­கப்­பட்­டுள்ள அல்-­பாலத் விமானத் தளத்தை நோக்கி இந்த ரொக்கெட் குண்­டுகள் வீசப்­பட்­டன. ஆனால், அமெ­ரிக்க இரா­ணுவ வீரர்­க­ளுக்கு எந்­த­வி­தத்­திலும் காயம் ஏற்­ப­ட­வில்லை.

இந்த சம்­ப­வத்தைத் தொடர்ந்து அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்­கத்தில் ஈரா­னுக்கு பகி­ரங்­க­மாக எச்­ச­ரிக்கை விடுத்து பதி­விட்டார். அதில் ” ஈரானில் 52 முக்­கி­ய­மான இடங்­களை அமெ­ரிக்கா குறி­வைத்­துள்­ளது. அமெ­ரிக்­கர்­களைத் தாக்­கி­னாலோ அல்­லது அமெ­ரிக்க சொத்­துக்­களை சேதப்­ப­டுத்­தி­னாலோ ஈரா­னிய கலா­சா­ரத்­துக்கும், ஈரா­னுக்கு மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த 52 இடங்­களை அதி­வே­க­மாக செயற்­பட்டு அழித்­து­வி­டுவோம். அமெ­ரிக்­கா­வுக்கு எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­தலும் அளிக்­கா­தீர்கள்” என எச்­ச­ரிக்கை விடுத்தார்

பதற்­றத்தை தணிக்க சவூதி அரே­பியா முயற்சி

ஈரான் இரா­ணுவத் தள­பதி காசிம் சுலை­மா­னியை ஏவு­கணைத் தாக்­குதல் மூலம் கொலை செய்யும் முன் எங்­க­ளிடம் அமெ­ரிக்கா ஆலோ­சிக்­க­வில்லை என்று சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது.

வளை­குடா பகு­தி­யிலும், மேற்­கா­சி­யா­விலும் அதி­க­ரித்­து­வரும் பதற்­றத்தைத் தணிக்கும் பொருட்டு ஈரா­னி­டமும், அமெ­ரிக்­கா­வி­டமும் சவூதி அரே­பியா சமா­தானப் பேச்சு நடத்தி வரு­கி­றது.

ஈரான் எந்தப் பதில் நட­வ­டிக்­கை­யையும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக எடுத்தால், அதில் அதி­க­மாகப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யது சவூதி அரே­பியா என்­பதால், தற்­போது சமா­தான நட­வ­டிக்­கையில் அந்­நாடு இறங்­கி­யுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாமல், ஈரானின் படைத்­த­ள­பதி காசிம் சுலை­மானி கொல்­லப்­ப­டு­வ­தற்கு முன், தங்­க­ளிடம் அமெ­ரிக்கா எந்­த­வி­த­மான ஆலோ­ச­னையும் செய்­ய­வில்லை என்றும் சவூதி அரே­பியா விளக்கமளித்­துள்­ளது.

வளை­குடா பகு­தியில் அதி­க­ரித்து வரும் பதற்­றத்தைத் தணிக்கும் வகையில், சவூதி அரே­பிய மன்னர் சல்மான், ஈராக் அதிபர் பர்ஹம் சல்­லேஹ்வை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு பேசி­யுள்ளார். அதன்பின் ஈராக் பிர­தமர் அதெல் அப்தல் மஹ்­தி­யி­டமும் சவூதி மன்னர் சல்மான் தொலை­பே­சியில் சமா­தானம் பேசி­யுள்ளார்.

இப்­போ­துள்ள சூழலில் அமைதி காப்­பதே நிலை­மையை மோச­ம­டை­யாமல் இருக்­கச்­செய்யும் என்று சவூதி அரே­பிய மன்னர் சல்மான் வலி­யு­றுத்­தி­ய­தாக சவூதி அரே­பியா அரசு தெரி­வித்­துள்­ளது.

அது­மட்­டு­மல்­லாமல் மன்னர் சல்மான், தனது சகோ­த­ரரும் துணை பாது­காப்பு அமைச்­ச­ரு­மான காலித் பின் சல்­மானை அமெ­ரிக்­கா­வுக்கும், லண்­ட­னுக்கும் அனுப்ப முடிவு செய்­துள்ளார். வெள்ளை மாளி­கையில் அமெ­ரிக்க பாது­காப்பு அதி­கா­ரி­களை சந்­தித்து சவூதி அரே­பிய மன்­னரின் இளைய சகோ­தரர் காலித் பின் சல்மான் சமா­தானப் பேச்சு நடத்த உள்ளார் எனத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வுக்கு மிகவும் நட்பு நாடு­க­ளாக சவூதி அரே­பி­யாவும்,ஐக்­கிய அரபு அமீ­ர­கமும் இருந்து வரு­கின்­றன. அமெ­ரிக்­கா­வுக்குப் பதி­லடி கொடுக்க ஈரான் எந்த நட­வ­டிக்கை எடுத்­தாலும் அதில் சவூதி அரே­பியா கடு­மை­யாகப் பாதிக்­கப்­படும் என்­பதால் சமா­தான விஷ­யத்தில் சவூதி தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது.

கடந்த செப்­டம்பர் மாதம் சவூதி எண்ணெய் நிறு­வ­னங்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்­குப்பின் சவூதி அரே­பி­யாவும், ஐக்­கிய அரபு அமீ­ர­கமும் ஈரா­னுடன் இணக்­க­மாகச் செல்­லவும், எந்­த­வி­த­மான முரண்­பாடும் இல்­லாமல் தவிர்த்து வரு­கின்­றன.

ஒரு­வேளை, ஈரான் ஆத­ரவுப் படைகள் வளை­குடா நாடு­க­ளி­லுள்ள அமெ­ரிக்கத் தளங்­க­ளையும், ஹர்முஸ் நீர் வழித்­த­டங்­க­ளிலும் தாக்­குதல் நடத்தும் திறன் கொண்­டவை. அவ்­வாறு நடந்தால் சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் வர்த்­தகம் கடு­மை­யாகப் பாதிக்­கப்­படும் என்­பதால், பதற்றம் அதி­க­ரிக்­க­வி­டாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதில் சவூதி அரே­பியா ஈடு­பட்டு வரு­கி­றது.

இதே­வேளை, இந்த முறுகல் நிலை தொடர்பில், கட்டார் வெளி­வி­வ­கார அமைச்­சரும் ஈரா­னுக்கு விஜயம் செய்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டுள்ளார்.

3000 இரா­ணு­வத்­தி­னரை  அனுப்­பு­கி­றது அமெ­ரிக்கா

ஈரா­னுடன் மோதல் அதி­க­ரித்து வரு­வதைத் தொடர்ந்து சுமார் 3,000க்கும் அதி­க­மான இரா­ணுவ வீரர்­களை மத்­திய கிழக்குப் பகு­தி­க­ளுக்கு அமெ­ரிக்கா அனுப்­ப­வுள்­ளது.

ஈரான் இரா­ணுவத் தள­பதி சுலை­மானி அமெ­ரிக்கப் படையால் கொல்­லப்­பட்­டது முதல் ஈரான் – அமெ­ரிக்கா இடையே மோதல் அதி­க­ரித்து வரு­கி­றது. அமெ­ரிக்கா இதற்­காக நிச்­சயம் பழி­வாங்­கப்­படும் என்று ஈரான் சப­த­மேற்­றுள்­ளது.
பதற்றம் அதி­க­ரித்து வரு­வதைத் தொடர்ந்து மத்­திய கிழக்குப் பகு­தி­களில் கூடுதல் படை­களை அமெ­ரிக்கா அனுப்­ப­வுள்­ளது.

இது­கு­றித்து அமெ­ரிக்க அதி­கா­ரிகள் தரப்பில், “அமெ­ரிக்கா மக்­களை மிரட்ட ஈரான் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது. எனவே மத்­திய கிழக்குப் பகு­தி­களில் 3,000 வீரர்கள் கூடு­த­லாக அனுப்­பப்­பட உள்­ளனர். இது பாது­காப்­புக்­காக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஈரானின் இதயம் காயப்­பட்­டி­ருக்­கி­றது: ஹசன் ரூஹானி

ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது என்றும் அமெரிக்கா தனது கொடூர குற்றத்திற்காக பழிவாங்கப்படுமென ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

சுலைமானி கொல்லப்பட்டது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறும்போது, “அமெரிக்காவின் இந்தக் கொடூர குற்றத்திற்கு ஈரான் போன்ற சிறந்த நாடும் அதன் பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளும் பழிவாங்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா தனது குற்ற நடவடிக்கையால் ஈரானின் இதயத்தை காயப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொடுமைகளுக்கு எதிராக நிற்கவும், இஸ்லாமிய மதிப்புகளை பாதுகாக்கவும் ஈரான் தனது உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கோழைத்தனமான செயல் அதன் விரக்தி மற்றும் பலவீனத்தின் மற்றொரு அறிகுறியாகும். அமெரிக்கா அதன் செயலுக்கு நிச்சயம் பழிவாங்கப்படும்”என்றும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.