அமைச்சர் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ர­ணைக்கு இட­ம­ளியோம்

நீதி அமைச்சர் தலதா அத்துகோரள

0 2,228

அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ரணை மேற்­கொள்ள யாருக்கும் முடி­யாது. அதற்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் பிரே­ர­ணையை பிர­த­மரே அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்­தா­ரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்­ளதன் மூலம் அவர் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யுள்ளார். அவ­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் ஆசூ மார­சிங்க ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இது­தொ­டர்பில் குறிப்­பி­டு­கை­யி­லேயேஅவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

கட்­சியில் இருக்கும் யாரு­டைய தேவைக்­கா­கவும் வேறு கட்­சியின் தலை­வ­ரான அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ரணை நடத்த யாருக்கும் முடி­யாது. அதற்கு எதி­ரா­கவே நாங்கள் இருப்போம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யுள்­ள­தாகத் தெரி­வித்து அவ­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென யாரா­வது தெரி­வித்தால், அமைச்­ச­ர­வையில் நாங்கள் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் அதற்கு எதி­ராக இருப்போம்.

அத்­துடன் கடந்த ஒக்­டோபர் 26ஆம் திகதி எம்­மி­ட­மி­ருந்து பலாத்­கா­ர­மாக அர­சாங்­கத்தை எடுத்­துக்­கொண்­ட­போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனைத்து விட­யங்­க­ளையும் புறக்­க­ணித்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டவர். அதே­போன்று ஏப்ரல் 21ஆம் திக­தியும் பாரிய அர்ப்­ப­ணிப்பை செய்­தி­ருந்தார். கொள்­கையை மதித்து அர­சியல் செய்யும் தலை­வ­ரா­கவே நாங்கள் அவரை காண்­கின்றோம்.

அத்­துடன் ஆசூ மார­சிங்க தேசிய பட்­டி­யலில் வந்­தவர். 2015இல் தேசி­யப்­பட்­டி­யலில் வந்த பின்­னரே அவரை நாங்கள் அறிவோம். அமைச்சர் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ரணை நடத்­த­வேண்­டு­மெனத் தெரி­விக்கும் அள­வுக்கு கட்­சியில் அவர் எந்த பத­வி­யையும் வகிப்­ப­தில்லை. அவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு அவ­ருக்கு எந்த உரி­மையும் இல்லை.

மேலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு இது பொருத்­த­மான நேர­மல்ல. இந்த நேரத்தில் அதனை நீக்­கு­வ­தற்கு அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், மனோ­க­ணேசன், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை ஏன் முன்வைத்தார்கள் என்பதே எமது கேள்வியாகும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.