சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 பேர் கைது

0 867

சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தா­லும்­கூட இவர்­களை விடு­தலை செய்ய முடி­யாது.

அவ்­வாறு விடு­வ­தென்­றாலும் இவர்­க­ளை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தியே விடு­தலை செய்ய முடி­யு­மென பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு­மாத காலத்­திற்கு நீடிக்கும் விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தலை தொடர்ந்தே மீண்டும் அவ­ச­ர­கால சட்­டத்தை கொண்­டு­வர வேண்­டி­யேற்­பட்­டது. இது தொடர்­பாக முப்­ப­டை­யி­னரும் மற்றும் பொலி­ஸாரும் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவ­ச­ர­கால சட்டம் முக்­கி­ய­மா­னது. அவ­ச­ர­கால சட்­டத்தில் பொலிசார் மட்டும் அல்ல முப்­ப­டை­களும் தமது பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடிந்­துள்­ளது.

இது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். ஏனெனில் நாட்டின் நிலை­மையில் பொலி­சாரால் மட்­டுமே நிலை­மை­களை கட்­டு­ப்­ப­டுத்த முடி­யாது. ஆகவே அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் இரா­ணுவம் மற்றும் ஏனைய பாது­காப்புப் படை­க­ளுக்கும் அதி­காரம் வழங்­கப்­பட்டு அவர்­க­ளுக்கும் தேசிய பாது­காப்பு விட­யத்தில் பாரிய பொறுப்பை கொடுத்­தி­ருப்­பது நல்ல விடயம் என்றே கரு­து­கின்றோம்.

அதேபோல் இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து இது­வ­ரையில் 2389 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 236 பேர் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் 189 தடுப்பு காவ­லிலும் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

3 பேர் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழும் 186 பேர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக இவர்­களில் 263 பேருக்கு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­தோடு 94 பேர் தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன் 7 பேர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் கைதா­கி­ய­வர்­களில் 79 பேர் பிர­தான சந்­தேக நபர்­க­ளாகும். குற்றப் புல­னாய்வு பிரிவின் பொறுப்பில் 29 பேரும் பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவின் பொறுப்பில் 29 பேரும் கொழும்பு குற்­ற­வியல் விசா­ரணை பிரிவில் பொறுப்பில் 29 பேரும் இருக்­கின்­றனர்.

இந்தப் பின்­ன­ணி­களில் நாட்டின் பாது­காப்பு தொடர்­பாக உறு­தியை வழங்க முடி­ய­மாக இருக்­கின்ற போதும் மேலும் இது தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­தவும் தக­வல்­களை சேக­ரிக்­கவும் வேண்­டி­யுள்­ளது. கடந்த காலங்­களில் சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட பின்னர் அதி­லி­ருந்து இடையில் வெளி­யேறிச் சென்­ற­வர்கள் தொடர்­பா­கவும் ஆராய வேண்­டி­யுள்­ளது.

இரா­ணுவம் மற்றும் பொலி­சாரின் மூல­மாக தேடுதல் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் சஹ்­ரானின் போத­னையில் கலந்­து­கொண்ட 51 பேர் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யா­துள்­ளது. ஏனெனில், இவர்கள் போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­ட­வர்கள். இதனால் இவர்­களை விடு­தலை செய்­யும்­போது எந்த முறையில் விடு­தலை செய்­வது என்ற பிரச்­சினை இருக்­கின்­றது. குறைந்­தது புனர்­வாழ்­வ­ளிக்கும் வகை­யி­லா­வது நட­வ­டிக்­கை­களை எடுத்தே விடு­தலை செய்ய முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் பொலி­ஸாரும் முப்­ப­டை­யி­னரும் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக திருப்­தி­ய­டைய முடி­யு­மாக இருக்­கின்­றது. குண்டுத் தாக்­கு­தலின் பின்­ன­ரான சம்­ப­வங்கள் தொடர்­பா­கவும் நட­வ­டிக்­கை­யெ­டுக்க முடி­யு­மாக இருந்­துள்­ளது. துரித நட­வ­டிக்­கைகள் மூலம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய முடிந்­துள்­ளது. இவர்­களை கைது செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் அதிக பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளனர். அவர்கள் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்­டுள்­ளனர். இதற்­காக அவர்­க­ளுக்கு நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்ள வேண்டும். இதே­வேளை சம்­ப­வத்­தின்பின் இன வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ளன.

இது தொடர்­பாக 151 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தொடர்­பா­கவும் சட்­டத்தை செயற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் இந்த சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு அர­சியல் நோக்கில் செயற்­ப­டு­ப­வர்­களும் இருக்­கின்­றனர். மேலும் ஸ்திர­மற்ற நிலை­மை­களை உரு­வாக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களும் இடம்­பெ­று­கின்­றன. மீண்டும் மக்­களின் அன்­றாட வாழ்வை சீர்­கு­லைக்க முயற்­சிக்­கின்­றனர்.
இதனால் அவ­ச­ர­கால சட்­டத்தை தொடர வேண்­டிய தேவை­யுள்­ளது. அதன் மூலமே தேவை­யான பாது­காப்பை ஏற்­ப­டுத்த முடியும். பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு போது­மா­ன­ள­வுக்கு பொலிஸார் இல்­லா­மை­யினால் அவ­ச­ர­கால சட்­டத்தின் ஊடாக இரா­ணு­வத்­தி­னரின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மாக இருக்கும். இதனால் அதற்­கான தேவை­யுள்­ளது.

எவ்­வா­ற­ாயினும் நாட்டில் இனங்கள், மதங்­களை இலக்­கு­வைத்து முன்­னெ­டுக்கும் கீழ்த்­த­ர­மான அர­சியல் செயற்­பா­டுகள் பொருத்­த­மற்­றது என்பதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். 1983இல் நாங்கள் இழைத்த தவறுகள் காரணமாகவே விடுதலைப் புலிகள் பலமடைந்தனர். அவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தன. இந்தியாவின் உதவிகளும் கிடைத்தது.

இதுபோன்ற நிலைமை மீண்டும் உருவாகிவிடக்கூடாது. தற்போது இனவாத கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தமையானது நாம் பெற்ற வெற்றியாகும். இனியும் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன். மீண்டும் சஹ்ரான் போன்றோர் உருவாக இடமளித்துவிடக் கூடாதென அவர் தெரிவித்தார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.