தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முஸ்லிம் இளைஞரை கைது செய்தோம்
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்தவகையிலேயே முஸ்லிம் இளைஞர் ஒருவரின் கைது இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை. நாட்டில் இன மத மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்றுவித்துள்ளோம். ஆனால் தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.