ரமழான் விடுமுறையில் சென்ற 57 கபூரியா மாணவர்களை மீளவும் இணைக்கவில்லை
கபூரியா அரபுக்கல்லூரி அதனைத் தோற்றுவித்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் அதன் உறுதியில் கூறப்பட்ட பிரகாரமும் அப்துல்கபூர் அறக்கட்டளையின் படியும் தொடர்ந்து அதன் சேவையினை சமூகத்திற்கு வழங்கும் அதேவேளை அதன் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கல்வியையும் உறுதி செய்யும் என நம்பிக்கையாளர் சபை அறிவித்தல் வெளியிட்டபோதும் நோன்புகால விடுமுறையில் அனுப்பப்பட்ட 57 மாணவர்கள் இதுவரை கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.