ஜனாதிபதியும் ஐ.தே.க.வும் “சுயவிசாரணை செய்ய வேண்டும்”

0 591

சிங்­கள பௌத்த வாக்­குகள் பெரு­வா­ரி­யாக கிடைக்­கா­தது குறித்து ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறு­பான்மை வாக்­குகள் குறிப்­பிட்­ட­ளவு கிடைக்­கா­தமை தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் சுய­வி­சா­ரணை செய்­து­கொள்ள வேண்­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணையில் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை பிரதிநி­தித்­து­வப்­ப­டுத்தி போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு சிங்­கள மக்­களின் பெரும்­பான்­மை­யாக கிடைக்­க­வேண்­டி­யி­ருந்த வாக்­குகள் ஏன் கிடைக்­கப்­பெ­ற­வில்லை என்­பதை ஐக்­கிய தேசிய கட்சி திரும்­பிப்­பார்க்க வேண்டும். அதேபோல் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜபக் ஷவுக்கு குறிப்­பி­டத்­தக்க சிறு­பான்மை மக்­களின் வாக்கு கிடைக்­கா­தமை தொடர்­பா­கவும் சுய­வி­சா­ரணை செய்­து­பார்க்­கப்­பட வேண்டும். அவ்­வா­றில்­லாமல் குறிப்­பிட்ட ஒரு அணிக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­வர்­களை அடிப்­ப­டை­வா­தி­க­ளாக சுட்­டிக்­காட்ட முற்­ப­டு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை.

மேலும் ஸ்திர­மற்ற அர­சுகள் உரு­வா­வதை தடுக்க விகி­தா­சார தேர்தல் முறையை மாற்ற வேண்­டு­மென அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்­தி­ருந்தார். பாரா­ளு­மன்­றத்தில் எண்­ணிக்­கையில் சிறிய வேறு­பா­டுகள் ஏற்­ப­டும்­போது இணக்­கப்­பாட்டு அர­சுகள் உரு­வா­வது பாத­க­மா­ன­வை­யல்ல. அதே­வேளை, அதி­பெ­ரும்­பான்­மை­யுடன் அமைக்­கப்­பட்ட அர­சு­களால் நாட்­டுக்கு பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருப்­ப­தையும் மறக்­க­மு­டி­யாது.

அத்­துடன் நானும் தற்­போது ராஜாங்க அமைச்­ச­ராக இருக்கும் வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் ஒரே அமைச்­ச­ர­வையில் இருக்­கும்­போது, அன்று தேசிய கீதத்தை தமிழில் இசைப்­பதை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­போது அதற்கு எதி­ராக குரல்­கொ­டுப்­ப­தற்கு எங்கள் இரு­வ­ருக்கும் ஏற்­பட்­டது. ஆனால் அந்தப் பிரச்­சினை மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

அத்­துடன் இன­வாத அடிப்­ப­டை­யி­லான அர­சியல் கட்­சி­களை நிரா­க­ரிக்­க­வேண்­டு­மென ஜனா­தி­ப­தியின் உரையில் தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தியின் உரையில் உள்­ள­டக்­கத்தின் உண்­மை­யான விட­யங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­கின்றோம். அதே­நேரம் ஒரு கட்­சியின் பெயரில் தனது இனத்தின் பெயர் இருப்­பதன் மூலம் அந்தக் கட்சி இன­வாதக் கட்­சி­யெனத் தெரி­விக்க முற்­ப­டு­மாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
அத்­துடன் சிங்­களம் மாத்­திரம் நிலைப்­பாட்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க கட்சி உரு­வாக்கி வெற்­றி­பெற்றார். சிங்­களம் மட்டும் என்ற பிர­சாரம் விகாரை தோறும் அன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்­டது மொழியின் மீதி­ருந்த ஆர்­வத்­திலா?. அல்­லது அதி­கா­ரத்­துக்கு இருந்த மோகத்­திலா? என்­பது வர­லாற்றை திரும்பிப் பார்ப்­ப­வர்­க­ளுக்குத் தெரியும். அதனால் நாங்கள் மீண்டும் கடந்த காலத்­துக்கு செல்­ல­வேண்­டி­ய­தில்லை.

அத்­துடன் சிங்­கள பெளத்த மக்­களின் வாக்­கு­களால் வெற்­றி­பெறும் நிலை ஏற்­பட்­ட­தென ஜனாதிபதி தெரிவித்த கருத்து உண்மையாகும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று இனவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாமென அக்கிராசன உரையில் ஜனாதிபதி கோரியிருந்தார். ஆனாலும் எந்த அரசியல் கொள்கையை பெரும்பான்மை சிங்கள மக்கள் மீது பிரசாரம் செய்து ஜனாதிபதி வெற்றிபெற்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்றார்.-Vidivelli

  • ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.