இனங்களை மையப்படுத்திய கட்சிகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதன் மூலமே ஒற்றுமையை ஏற்படுத்தலாம்

பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர் பி.எச்.பியசேன

0 603

இந்­நாட்டில் இனங்­களை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்­டுள்ள கட்­சிகள் அனைத்­தையும் இல்­லா­தொ­ழிப்­பதன் மூலமே இலங்­கையில் உள்ள அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் நிம்­ம­தி­யு­டனும் வாழ முடியும் என முன்னாள் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், பொது­ஜன பெர­முன கட்­சியின் பொத்­துவில் தொகுதி அமைப்­பா­ள­ரு­மான பி.எச்.பிய­சேன தெரி­வித்தார்.

சம­கால அர­சியல் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிக்­கும்­போதே அவர் இக்­க­ருத்­தினைத் தெரி­வித்தார்.
இதன்­போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் இந்­நாட்டில் பல்­வே­றான துன்­பங்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளனர். இழக்க முடி­யாத பல்­வே­றா­ன­வற்­றை­யெல்லாம் இழந்­தி­ருக்­கின்­றார்கள். அது­போன்று அண்­மையில் இடம்­பெற்ற ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் பல்­வே­றான இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ள­துடன், சொல்­லொணா துய­ரங்­க­ளையும் அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

இவற்­றுக்­கெல்லாம் இந்­நாட்டில் உள்ள ஜாதிக் கட்­சியே மூல கார­ண­மாகும். இவ்­வா­றான ஜாதிக் கட்­சி­களை நாம் ஆத­ரிக்கக் கூடாது.

மக்கள் இவ்­வா­றான கட்­சி­களை ஆத­ரிக்­காது எம்­ம­தி­யி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்கும் பட்­சத்தில் தேசி­யத்­து­வத்­துடன் நாம் இணைந்து செயற்­ப­டும்­போது நாம் அனை­வரும் நிம்­ம­தி­யாக இந்­நாட்டில் வாழ முடியும்.
சுதந்­திர தினத்­தின்­போது தேசிய கீதத்­தினை தமிழில் பாட முடி­யா­தென்று ஒரு வதந்­தி­யினை ஒரு தரப்­பினர் பரப்பி வரு­கின்­றனர். அர­சாங்கம் அவ்­வா­றான எந்­த­வொரு முடி­வி­னையும் எடுக்­க­வில்லை என மிகத் தெளி­வாக சொல்­லி­யி­ருக்­கின்­ற­து. இவ்­வா­றான குழப்­ப­மு­டைய கருத்­துக்­களை மக்கள் மத்­தியில் பரப்பி மக்­களின் மனங்­களை குழப்பும் முயற்­சியில் சில தீய சக்­திகள் முனைந்து கொண்­டி­ருக்­கின்­றன. தற்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்கள் மீது வெறுப்­பினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சூழ்ச்­சிக்­கா­ரர்­களின் சதிச் செயற்­பா­டா­கவே இது உள்­ளது.

பல முனை­க­ளிலும் இருந்து இவ்­வாட்­சியில் வெறுப்­பினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்கில் தீய சக்­திகள் முயன்று கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான சக்­தி­களின் வலை­களில் மக்கள் வீழ்ந்து விடாமல் தெளி­வாக இருக்க வேண்டும்.

இலங்கை நாட்டில் உள்ள தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்­ளைகள் போல் நிம்­ம­தி­யா­கவும் மகிழ்­வா­கவும் வாழ வேண்­டு­மாக இருந்தால் இந்­நாட்டில் சாதி மத பேதங்களை உண்டு பண்ணக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கும் கட்சிகளும், பாகுபாடுகளையும் பேதங்களையும் தூண்டி உணர்வுகளை மேலோங்கச் செய்து பிணக்குகளை ஏற்படுத்தக் கூடிய கட்சிகள் எம்மத்தியில் இருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றார்.-Vidivelli

  • எம்.ஏ.றமீஸ்

Leave A Reply

Your email address will not be published.