முஹர்ரம் தலைப்பிறை மாநாடு நாளை

0 1,100

ஹிஜ்ரி 1441 இஸ்­லா­மிய புத்­தாண்டு பிறப்­புக்­கான முஹர்ரம் மாதத் தலைப்­பிறை பற்றித் தீர்­மா­னிக்கும் மாநாடு நாளை சனிக்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மௌலவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் நடை­பெறும் மேற்­படி மாநாட்டில், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் பிர­தி­நி­திகள் ஆகியோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

குறித்த தினத்தில் தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய தொலை­பே­சிகள் ஒன்­றுடன் தொடர்பு கொண்டு அறி­விக்­கும்­படி கேட்­கப்­ப­டு­கின்­றனர்.

மேற்­படி மாநாட்டில் தலைப்­பிறை குறித்து ஏக­ம­ன­தாக எடுக்­கப்­படும் தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யிலும் இதர ஊட­கங்­க­ளிலும் மாநாட்டுத் தலை­வ­ரினால் உத்­தி­யோக பூர்­வ­மாக வெளி­யி­டப்­படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச்செயலாளர் பாரிஸ் பஹ்மி தெரிவித்துள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.