ஏப்ரல் 21 தாக்குதல் : சுயாதீன ஆணைக்குழு கோருகிறார் மஹிந்த

0 632

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்­ன­ணி­யி­லி­ருந்த சக்­தி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக விரைவில் சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார்.

சுயா­தீன ஆணைக்­குழு நிய­மனம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்டு தற்­போது மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் அது தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தாகத் தெரி­ய­வில்லை.

அதனால் இந்த விவ­கா­ரத்தில் தவ­றி­ழைத்­த­வர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­வது தொடர்பில் விரை­வாக தீர்­மானம் மேற்­கொள்ள வேண்டும். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. கொழும்பு விஜே­ராம மாவத்­தையில் உள்ள எதிர்க்­கட்சித் தலை­வரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் பாரா­ளு­மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.