மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் : பல்கலையாக அங்கீகரிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது

உயர் கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

0 1,351

பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வ­னத்­தினால் தனித்து இயங்க முடி­யாத நிலையில் அவர்­க­ளுக்கு சர்­வ­தேச நிதி உத­வி­களே தேவைப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் சர்­வ­தேச நிதிகள் முறை­யாக திரட்ட முடி­யாத கார­ணத்­தினால் பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வனம் முறை­யாக இயங்க முடி­யாது என்­பதைக் கருத்தில் கொண்டு பட்­டிக்­களோ கம்பஸ் நிறு­வ­னத்தை பல்­க­லைக்­க­ழ­க­மாக அங்­கீ­க­ரிக்கும் கோரிக்­கையை உயர்­கல்வி அமைச்சு நிரா­க­ரித்­துள்­ளது என உயர்­கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் சபையில் தெரி­வித்தார். இந்த நிறு­வ­னத்தை அர­சாங்கம் கைய­கப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய்ந்து அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வனம் குறித்து ஜே.வி.பியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளிந்த ஜெய­திஸ்ஸ கொண்­டு­வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் பதில் உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வனம் குறித்து பலர் உணர்­வு­பூ­ர்வ­மான கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். உயர்­கல்வி அமைச்சு இதனை எவ்­வாறு கையாள்­கின்­றது என்­பதை நான் கூறி­யாக வேண்டும். பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வனம் குறித்து அமைச்­ச­ரவை உப­குழு ஒன்றும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதில் நான்கு அமைச்­சர்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் கீழ் தான் முத­லீட்­டு­சபை விட­யங்­களும் வரு­கின்­றன. குறித்த நிறு­வ­னத்தை ஒரு பட்டம் வழங்கும் நிறு­வ­ன­மாக கருதி இதனை பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்றும் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளனர். இது குறித்து ஆரா­யப்­பட்டு இறுதிக் கூட்­டத்தில் இந்த நிறு­வ­னத்தை பட்டம் வழங்கும் நிறு­வ­ன­மாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது என்ற முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. சுய­மாக இயங்க முடி­யாத நிலையில் வெளி­நாட்டு நிதி உத­வி­யுடன் இது இயங்க வேண்­டி­யுள்ள நிலையில் இதற்­கான நிதியை திரட்­டு­வது சாத்­தி­ய­மற்­றது என்­பதை கருத்தில் கொண்டு இதனை நாம் நிரா­க­ரித்­துள்ளோம். அமைச்­ச­ர­வை­யிலும் இதனை நாம் கூறி­யுள்ளோம். அமைச்­ச­ரவை இது குறித்து ஆராய்ந்து வரு­கின்­றது. குறிப்­பாக இந்த கட்­டி­டத்­தொ­கு­தியை என்ன செய்­வது என்­பது குறித்தும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. 

மேலும் இந்த நிறு­வ­னத்­திற்கு எவ்­வாறு பணம் வரு­கின்­றது என்ற கேள்வி உள்­ளது. அத்­துடன் இந்த நிறு­வ­னத்தின் கட்­ட­டத்தை என்ன செய்­வது என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது. ஆகவே இது குறித்து கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஏற்­க­னவே சைட்டம் குறித்தும் இவ்­வா­றான பிரச்­சினை எழுந்­தது. பட்­டிக்­கலோ கம்பஸ் நிறு­வன உரி­மை­யாளர் இதனை அர­சாங்கம் பங்­கு­தா­ர­ராக ஏற்­று­கொள்ள வேண்டும் என கேட்­டுக்­கொண்­டுள்ளார். ஆகவே இது குறித்து அமைச்­ச­ரவை தீர்­மானம் ஒன்றும் எடுக்­கப்­பட வேண்டும்.

எதிர்­கா­லத்தில் தனியார் பல்­க­லைக்­க­ழகம் ஒன்று உரு­வாக்­கப்­படும் வேளையில் அவை குறித்தும் ஆராய வேண்­டிய நிலைமை உரு­வா­கின்­றது. ஹிஸ்­புல்லாஹ் மற்றும் முத­லீட்டு சபை அதிகாரிகள், இலங்கை வங்கி அதிகாரிகள் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்பட்டனர். இது குறித்து இறுதி அறிக்கை வரும் வரையில் காத்திருக்க வேண்டும். அத்துடன் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் நிலையில் இந்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.