நிர்க்கதிக்குள்ளான யாத்திரிகர்கள் : 115 பேர் நேற்று பயணம்; 8 பேர் ஹஜ் வாய்ப்பை இழந்தனர்

0 577

ஹஜ் முக­வர்­களால் இறுதி நேரத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் 115 பேர் நேற்றுக் காலை சவூதி விமான சேவை­யூ­டாக ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பியா நோக்கிப் பய­ண­மா­னார்கள்.

ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முகவர் ஒரு­வ­ருக்கு செலுத்­திய ஹஜ் கட்­டணம் தொடர்­பான பிரச்­சினை குறிப்­பிட்ட ஹஜ் முக­வ­ரினால் தீர்க்­கப்­ப­டா­மை­யினால் அவர்கள் 8 பேரும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு தடை­யேற்­பட்­டது.

இறுதி நேரத்தில் ஹஜ் முக­வர்­களால் கைவி­டப்­பட்­டி­ருந்த ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் விவ­காரம் நேற்று முன்­தினம் இரவு 11 மணி வரை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் உத­விப்­ப­ணிப்­பாளர் அன்வர் அலியின் தலை­மையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள் பாதிக்­கப்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் ஒரு தொகு­தி­யினர் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வர்கள் கலந்து கொண்­டனர்.

115 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான சவூதி அரே­பிய விமான சேவையின் பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கு­ரிய கட்­ட­ணத்தை செலுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முகவர் உடன்­பட்டார். அதற்­கி­ணங்க 115 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் நேற்றுக் காலை சவூதி நோக்கி பய­ண­மா­கினர்.

ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முக­வ­ரொ­ரு­வ­ருக்குச் செலுத்­திய கட்­ட­ணங்கள் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்கு உரித்­தான ஹஜ் முக­வ­ருக்கு செலுத்­து­வதில் தீர்­வொன்று எட்­டப்­ப­டா­மை­யினால் அவர்­க­ளது ஹஜ் பய­ணத்தில் தடை­யேற்­பட்­டது.

குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆலோ­சனை வழங்­கி­னார்கள்.

இதே­வேளை, இவ்­வி­வ­காரம் ஹஜ் கடமையில் தற்போது ஈடுபட்டிருக்கும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ஹலீம் சவூதியிலிருந்து தேவையான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.