வைத்தியர் ஷாபி பிணையில் விடுதலை

சொத்துக்குவிப்பு விவகாரம் குறித்து விசாரிக்க பிரத்தியேக சீ.ஐ.டி குழு, பிணைமறுக்க காரணிகள் இல்லை என நீதவான் திட்டவட்டமாக அறிவிப்பு

0 607

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு குரு­நாகல் நீதி­மன்றம் நேற்று பிணை அளித்­தது. 250000 ருபாய் ரொக்கப் பிணை­யிலும் 2.5 மில்­லியன் பெறு­ம­தி­யான நான்கு சரீர பிணை­க­ளிலும் செல்ல அனு­ம­தித்த குரு­நா­கலை பிர­தான நீதவான் சம்பத் ஹேவா­வசம் பிணை­யா­ளர்­களை தமது வதி­வி­டத்தை உறுதி செய்­ய­வேண்டும் எனவும் ஒவ்­வொரு ஞாயிறு தினத்­திலும் முற்­பகல் 9 மணிக்கும் , நண்­பகல் 12 மணிக்கும் இடையே குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட வேண்டும் எனவும் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

வைத்­தியர் ஷாபிக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று குரு­நாகல் பிர­தான நீதவான் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த வைத்­தியர் ஷாபி சிறை அதி­கா­ரி­க­ளினால் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார் .இதன்­போது குரு­நாகல் நகர் எங்கும் பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

முற்­பகல் வேளையில் குரு­நாகல் கண்டி வீதி­யி­லுள்ள சுற்­று­வட்டம் அருகே வைத்­தியர் சாபிக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­ட­மொன்றும் இடம் பெற்ற நிலை­யி­லேயே பிற்­பகல் 1.30 மணிக்கு வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது குரு­நாகல் நீதி­மன்றில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்டு கலகம் அடக்கும் பொலிசார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இந்த நிலை­யி­லேயே வழக்கு விசா­ரிக்­கப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது முறைப்­பாட்­டா­ளர்கள் சார்பில் சீ.ஐ.டியின் பொலிஸ் அத்­தி­யச்சர் நுவன் அசங்க , உதவி பொலிஸ் அத்­தி­யச்சர் பீ.எஸ். திசேரா , பொலிஸ் பரி­சோ­தகர் இலங்க சிங்க, சார்ஜன் ராஜ­பக்ஷ, கான்ஸ்­டபிள் சில்வா உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர் . அவர்­க­ளுக்கு கூடுதல் பலம் சேர்க்க சட்­டமா அதிபர் சார்பில் சிசேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துசித முத­லிகே மன்றில் பிர­சன்­ன­மானார். வைத்­தியர் சாபி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி வசந்த நவ­ரத்ன பண்­டார தலை­மையில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் , பிரேம ரத்ன தென்­னக்கோன் , சப்ராஸ் ஹம்ஸா , பசன் வீர­சிங்க , ஸைனாஸ் மொஹமட் , மகேஷ் பேரு­கொட , ஆர். சேனா­தீர உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர்.

கருத்­தடை செய்­த­தாக முறைப்­பாடு அளித்­துள்ள தாய்­மார்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான் வீர­சே­கர இந்­தி­ர­சிறி சேகா­ரத்ன , சானக்க உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர்.

வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்பம் முதலே சந்­தேக நப­ரான வைத்­தியர் சாபியின் சட்­டத்­த­ரணி நவ­ரத்ன பண்­டா­ர­வுக்கும் முறைப்­பா­ட­ளித்த தாய்மார் சார்­பி­லான சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடையே கடும் வாத­பி­ர­தி­வா­தங்கள் இடம் பெற்­றன. உயர் தொனியில் அவை வாய்த்­தர்க்கம் போன்று வழக்கு நெடு­கிலும் நீடித்­தன.

முதலில் பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்­பாக மன்றில் ஆஜ­ரா­வ­தாக காட்­டிக்­கொண்டு சம்­மந்தம் இல்­லாத தரப்­பினர் இவ்­வ­ழக்கில் ஆஜ­ரா­வ­தா­கவும் அதனால் தனது சேவை பெறு­ன­ருக்கு நியா­யத்தை நிலை­நி­றுத்­து­வதில் கடும் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

அதனால் வழக்­குடன் தொடர்­பு­ப­டாத தரப்­பி­னரை மன்­றி­லி­ருந்து வெளி­யேற்­றவும் அவர் கோரினார்.எனினும் சிசேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துசித் முத­லி­கேவின் கருத்­தையும் பதிவு செய்த நீதி­மன்றம் அவ்­வா­றான உத்­த­ர­வொன்றை பிறப்­பிக்க மறுத்­தது.

அத­னை­ய­டுத்து சிசேஷ்ட சொலி­சிட்டர் ஜெனரல் பிரதீப் முத­லிகே விசா­ர­ணை­களின் தற்­பே­தைய நிலை­மையை மன்­றுக்கு தெரி­வித்தார்.

‘சந்­தேக நப­ருக்கு எதி­ராக குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு விசேட விசா­ர­ணை­களை நடத்­து­கி­றது. கருத்­தடை விவ­கா­ரத்தில் 615 முறைப்­பா­டுகள் சீ.ஐ.டிக்கு கிடைத்த நிலையில் அதில் கால எல்­லையை கருத்தில் கொண்டு 147 முறைப்­பா­டு­களன் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் நடத்­து­கின்­றது. குறித்த 147 முறைப்­பா­டு­க­ளையும் தனித்­த­னி­யாக ஆராயும் போது வைத்­தியர் சாபிக்கு எதி­ராக குற்­ற­வியல் சட்­டத்தின் 32 (1)அ அத்­தி­யா­யத்தின் கீழ் நியா­ய­மான சந்­தே­கத்தை தோற்­று­விக்கும் கார­ணிகள் எவை­யு­மில்லை. எனினும் தண்­டனை சட்­டக்­கோ­வையின் 311ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் கடும் காயம் ஏற்­ப­டுத்தல் தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை நடத்­து­கின்றோம். 147 முறைப்­பா­டு­க­ளையும் ஒன்­றாக சேர்த்து நோக்­கு­கின்ற பொழுது இவ்­வாறு கடும் காயம் ஏற்­ப­டுத்­துதல் தொடர்பில் நியா­ய­மான சந்­தே­க­மொன்று எழு­கின்­றது. அத­னா­லேயே தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் 311ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ரணை செய்­கின்றோம். எனினும் இந்த விசா­ர­ணைகள் அறி­வியல் ரீதி­யான சோத­னை­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. எனினும் எச்.எஸ்.ஜி சோத­னைகள் உள்­ளிட்ட அறி­வியல் ரீதி­யான பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நீதி­மன்றம் தடை­வி­தித்­துள்ள நிலையில் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது உள்­ளது.

இதே­நேரம் சந்­தே­க­நபர் வைத்­தியர் சாபிக்கு எதி­ராக சொத்துக் குவிப்பு தொடர்பில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. சொத்து குவிப்பு விவ­காரம் தொடர்பில் கறுப்பு பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இவ்­வாறு சொத்துக் குவிப்பு விவ­கா­ரத்தில் விசா­ரணை செய்ய தேர்ச்­சி­ய­டைந்த மத்­திய வங்­கியின் உள­வுப்­பி­ரி­வுடன் நேரடி தொடர்பு உள்ள சி.ஐ.டி யின் நிதி குற்ற விசா­ரணை அறையின் மூன்றாம் இலக்க பொறுப்பு அதி­கா­ரி­யிடம் இந்த பொறுப்பு தற்­போது ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் மேற்­பார்­வையில் இனிமேல் இந்த விவ­காரம் தனி­யான விட­ய­மாக விசா­ரிக்­கப்­படும். எனினும் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் அந்த விடயம் தொடர்­பிலும் நியா­ய­மான சந்­தே­கத்தை தோற்­று­விக்க கார­ணிகள் எதுவும் வெளிப்­பட வில்லை என சுட்­டிக்­காட்­டினார்.
அதனை அடுத்த வைத்­தியர் சாபியின் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நவ­ரத்ண பண்­டார பிணை கோரிக்­கையை முன்­வைத்தார். சாபிக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டு மீளப்­பெ­றப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழான தடுப்பு காவல் உத்­த­ரவு மீளப்­பெ­றப்­பட்­டது. இந்­நி­லையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் கூற்­றுப்­படி எனது சேவை பெறு­ன­ருக்கு எதி­ராக தண்­டனைச் சட்டக் கோவையின் வரை­வி­லக்­கண பிரி­வான 311 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ரணை இடம்­பெ­று­கி­றது. இப்­ப­டி­யான பார­தூ­ர­மான காயம் ஏற்­பட்­ட­தாக ஒரு வைத்­தியர் உறுதி செய்ய வேண்டும். அப்­படி அந்த வைத்­தியர் அறிக்கை கொடுத்­தி­ருக்­கிறார். இக்­குற்­றச்­சாட்டின் அடிப்­படை என்ன? இது பிணை வழங்க முடி­யு­மான குற்­றச்­சாட்டு. குற்­றச்­சாட்டு தொடர்பில் ஒரு­வரை அதி­க­பட்சம் 14 நாட்கள் மட்­டுமே விளக்­க­ம­றி­யலில் வைக்­கலாம். எனினும் எனது சேவை பெறுனர் அத­னையும் தாண்டி அனு­ப­வித்து விட்டார். எனவே அவரை எந்­த­வொரு நிபந்­த­னையின் கீழும் பிணையில் விடு­விக்க கோரு­கிறேன் என்றார்.

அதனை அடுத்து விசா­ர­ணைக்கு தேவை­யான நான்கு உத்­த­ர­வுகள் சி.ஐ.டி.யில் பெறப்பட்டது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரசேகர , இந்திர சிறி சேனாரத்ன , சானக மற்றும் பெனி பெர்ணான்டோ ஆகியோர் தமது கருத்துக்களை பதிவு செய்தனர். அவர்கள் வைத்தியர் சாபிக்கு பிணை வழங்க கூடாது என கோரினர். சாபிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் இச் சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சந்தேக நபருக்கு ஒருவருக்கு பிணையளிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லை எனவும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதங்களை செவிமடுத்த பின்னரே நீதிவான் மேற்படி நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப்.எம்.பஸீர், யூ.எல். முஸம்மில்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.