தனியார் சட்ட விவகாரம் : பிர­த­மரை சந்­திக்க அவ­காசம் கோரு­கி­றது உலமா சபை

0 654

முஸ்லிம் விவாகம், விவாக ரத்துச் சட்டம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­திப்பதற்கு அகில இலங்கை ஜம்­இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்­ளது.

இது­கு­றித்த கடிதம் நேற்­றைய தினம் உலமா சபை­யினால் பிர­த­ம­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­வித்த உலமா சபையின் பொதுச் செய­லாளர் முபாரக் மௌலவி, முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து இரு அறிக்­கைகள் நீதி அமைச்­ச­ரிடம் நாம் சமர்ப்­பித்­துள்ளோம்.

இதன்­போது, முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­ளும்­போது உல­மாக்­களின் வழி­காட்­ட­லு­ட­னேயே முன்­னெ­டுக்­கப்­படும் என முஸ்லிம் எம்.பி.க்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் தற்­போது அவ­ச­ரப்­பட்டு குறித்த சட்டத் திருத்­தத்தை மேற்­கொள்­கின்­றனர்.

குறித்த திருத்­தத்­தின்­போது வய­தெல்லை ஒரு பிரச்­சி­னையே கிடை­யாது. சிறு வயது திரு­ம­ணங்கள் இப்­போது இடம்­பெ­று­வ­தில்லை. அதற்கு நாம் எந்த ஆட்­சே­ப­னை­யையும் தெரி­விக்­க­வில்லை. எனினும், திரு­மணப் பதி­வின்­போது பெண் ஒப்­ப­மிட்­டால்தான் நிகாஹ் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­மென அறிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அது இஸ்­லா­மிய ஷரீ­ஆ­வுக்கு முரண் என்­பதை நாம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறோம். அது மட்­டு­மல்­லாது, திரு­ம­ணத்­தின்­போது பெண்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­த­வ­கையில் இந்­திய முஸ்லிம் தனியார் சட்­டத்தில் இருக்கும் ஏற்­பா­டுபோல் நாமும் ஒரு யோச­னையை முன்­வைத்­தி­ருக்­கிறோம். அது குறித்து கவனம் செலுத்­தப்­பட வேண்டும். இவ்­வாறு ஒரு­சில விட­யங்கள் பேச வேண்­டி­யி­ருக்­கி­றது. இதற்கமைய உலமாசபையுடன் பேச்சுவார்த்தைக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்து நேற்றைய தினம் நாம் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

(எஸ்.என்.எம்.ஸுஹைல்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.