சுகா­தார அமைச்சின் விசா­ரணை இன்னும் நிறை­வ­டை­ய­வில்லை

அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா

0 548

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக சுகா­தார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் விசா­ர­ணைகள் இன்னும் நிறை­வ­டை­ய­வில்லை என சுகா­தார அமைச்சு நேற்று வியா­ழக்­கி­ழமை அறி­வித்­தது.

இதனால் குறித்த குழுவின் இறுதி அறிக்கை இன்னும் சுகா­தார அமைச்­சிற்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என அமைச்சின் செய­லாளர் திரு­மதி வசந்தா பெரேரா தெரி­வித்தார்.

சுகா­தார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக சுகா­தார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் இறுதி அறிக்­கையின் பின்­னரே குறித்த விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, இந்த குழு­விற்கு மேல­தி­க­மாக குரு­நாகல் நீதி­வானின் உத்­த­ர­விற்­க­மைய மூன்று விசேட பெண்­ணியல் நிபு­ணர்­களைக் கொண்ட குழு­வொன்றும் அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தென சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் அனில் ஜயசிங்க தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த ஐந்து வருட காலப் பகு­திக்குள் சுமார் 30,000 பேருக்கு குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் சிசே­ரியன் சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த அனைத்து சிசேரியன் சத்திர சிகிச்சைகள் தொடர்பிலும் பரந்துபட்ட விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.

(றிப்தி அலி)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.